Jump to content

யாரும் வெளியே வராதீர்கள்.! - கண் கலங்கும் வடிவேலு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.!

vadivel-1585241981.jpg

சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் .

இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார்.

இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று கண்கலங்கிய படி இருகரம் கூப்பி வேண்டுகொள் விடுத்துள்ளார் .

இறுதியாக யாரும் வெளிய போகாதீங்க.. அசால்ட்டா இருக்காதீங்க .. என்று மெல்லிய குரலில் வடிவேலு கேட்டிருப்பது பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்து இருக்கிறது.

அனைவரையும் எளிதாக சிரிக்க வைத்த வடிவேலு தற்போது கண்கலங்கி நிற்பது பலரை ஆடி போக வைத்து உள்ளது .வடிவேலு தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்ஸ்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் .

தற்போது வடிவேலு கண் கலங்கி வீட்டை விட்டு வெளியேறாமல் இருங்கள் என்று கேட்கும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளைஞர்களின் இதய துடிப்பு வடிவேலு என்றால் அது மிகையாகாது .

இப்போது வடிவேலு பேசியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் இளைஞர்களை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.filmibeat.com/news/coronavirus-actor-vadivel-emotional-speech-for-public-069386.html

டிஸ்கி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவின்,  மிக உருக்கமான வேண்டுகோள்.... எம்மையும் கண் கலங்க வைத்தது.
நிச்சயம் இந்த  வேண்டுகோள், தமிழருக்கு.... பலனளிக்க  வேண்டும்.

இல்லையேல்... எம் சொந்த பந்தங்களை, அன்புக்கு  உரியவர்களை  பிரிய நேரிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீம்ஸ்களின் அரசனை அழவைத்து கண்ணீருக்குள்ளாள் பார்க்க வைத்து விட்டனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

மீம்ஸ்களின் அரசனை அழவைத்து கண்ணீருக்குள்ளாள் பார்க்க வைத்து விட்டனர் .

பெருமாள்..... அந்த   மீம்ஸ் அரசனின்.... வேண்டுகோளை,  
தமிழக மக்கள்,  புறக்கணிக்க.. மாட்டார்கள் என, நம்புவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.