Jump to content

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம் ..

oil-industry-refinery-factory-sunset-260

கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக உலகம் முடங்கியதால், பெட்ரோலியப் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. உலக அளவில் அனைத்து நாடுகளிலுமே எணணெய்ப் பயன்பாடும், தேவையும் ஊரடங்கு காரணமாகக் குறைந்துள்ளன.

புதைபடிவ எண்ணெய் அடிப்படையிலான  பொருளாதார முறைமையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. முதலீட்டின் மீது கிடைக்கும்  இலாபம் என்பது (Energy Return on Investment - EROI) என்பது ஓர் ஆற்றலை ஒரு மூலத்திலிருந்து எடுப்பதற்கு எவ்வளவு ஆற்றல் (பணம்) தேவைப்படுகிறதோ, அதை எடுக்கப்பட்ட எண்ணெய்  மதிப்பிலிருந்து கழித்துக் கொண்டு, மீதி உள்ளது "உபரி மொத்த ஆற்றல்" (Surplus Net Energy ) என்று கூறுவோம். இது, சக்தி உற்பத்தி முறைமைக்கு (energy production system) வெளியே, சரக்கு உற்பத்தி மற்றும் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகே முடங்கிப்போன நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து போனது. Surplus என்று சொல்லப்படும் உபரி குறைந்து விட்டது.

இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலீட்டின் மீதான ஆற்றல் வருவாய் 100:1 என்ற அளவில் இருந்தது. இது இன்று பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. 1960-1980இல் இதன் உலக சராசரி  மதிப்பு பாதியாகக் குறைந்து, இப்போது 15:1 என்ற வீதத்தில் அமைந்து விட்டது. எண்ணெய்ப் பொருளாதாரம் நிலைத்திருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.

2020 பிப்ரவரி மாதம், பின்லாந்தின் Geological Survey of Finland என்ற அமைப்புதான் ஐரோப்பிய யூனியனின் கனிமவள மூலங்கள் அமைப்பு முறைமையைத்  தீர்மானிக்கக் கூடிய அமைப்பாக விளங்குகிறது), ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. எண்ணெய்ப் பொருளாதார விரிவு என்பது கடனால் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட குமிழிதான் என்று அந்த அறிக்கை கூறியது. ஏராளமாக எண்ணெய் வளம் இருந்தாலும் அதை அடைவதற்கு அதிக செலவு ஆகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. "உற்பத்திச் செலவு அதிகம், உற்பத்தி குறைவு" என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

உலக அளவில் ஷேல் ஆயில் கம்பெனிகள் எதிர்மறையான பண ஓட்டம் ( negative cash flow ) காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. திருப்பிக் கொடுக்க முடியாத கடன்களை பல பில்லியன் டாலர் அளவிற்குப் பெற்று என்ணெய் நிறுவனங்கள் சமாளிக்கின்றன.

இப்போது, கடனால் பெருக்கப்பட்ட குமிழியை  கொரோனா வைரஸ் தொற்று உடைத்து விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வுகள் இப்போது தெரிவிக்கின்றன.

பெட்ரோலியத் தேவையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை மேலும் 18 மாதங்கள் தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது என்பது இயலாது. எண்ணெய்த் தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். பல நாடுகளிலும் எண்ணெய்க் கிடங்குகள் பெருமளவில் சேமிக்கப்பட்டு, நிரம்பி வழிகின்றன. ஆகவே எண்ணெய்ச் சேமிப்பு என்பதும் ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆகவே, பல்வேறு காரணங்களால் புதிய எரிசக்தி முறை நோக்கி உலகம் தள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல் வரம்புகளை மீறாத, புதிய எரிசக்திப் பயன்பாடு நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதை (ஹைட்ரோ) கார்பனுக்குப் பின்-யுகம் (Post- Carbon Age)என்று குறிப்பிடுகிறார்கள்.

உலகமே ஒரு திசை நோக்கி நகரும் போது இந்தியா மட்டும் நிலையாக முரண்டு பிடிக்க முடியாது. உலக நலன் கருதி, எண்ணெய் எடுப்பைக் கைவிட வேண்டும்.

ஆகவே இப்போதைய தேவை பன்முகப்படுத்தப்பட்ட, மையப்படுத்தப்படாத, பரவலாக அமைக்கப்படுகின்ற, ஒரு புதிய "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறை" ஆகும். விவசாயம் மற்றும் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உயிர்ப்புள்ள ஒரு பொருளியல் கட்டுமானம் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

வழக்கமான பெட்ரோல் உற்பத்தி அடிப்படையிலான பொருளியல் அமைப்பு அடிவாங்கி விட்டதால், மாற்று இணைப்பு எரிபொருள் (alternative bridge fuels) பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மலேசியா, clean bio-fuels எனப்படும் தூய்மையான உயிரி எரிபொருள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து முன்னோடியாகத் திகழ்கிறது. அங்கே, 100 விழுக்காடு பாமாயிலிலிருந்து எரிபொருள் எடுக்கும் நுட்பத்தையும், விதிமுறைகளையும் மலேசியா வகுத்துள்ளது.

சவுதிஅரேபியா, ரஷ்யாவை விட அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. மேற்கு டெக்ஸாஸ் முதல் நியூ மெக்ஸிகோ வரை நீண்டிருப்பது மிகப்பெரும் பெர்மியன் ஷேல் எண்ணெய் வயல். அப்பகுதியின் எண்ணெய்க் கிணறுகள் இப்போது மூடப்பட இருக்கின்றன. கடன் அதிகரிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. எண்ணெய் சேமிக்கும் இடம் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் உலக அளவில், அதை வாங்கும் சூழல் பல நாடுகளுக்கும் இல்லை.

இச்சூழல் ஷேல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்குப் பேரிடியான காலமாகும். ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்குப் பல நாடுகளும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கான தேவை இல்லை.

சர்ச்சைக்குரிய "நீரியல் விரிசல்" முறையைப் பயன்படுத்தி எண்ணெய் எடுத்த நிறுவனங்களில், இன்று மூன்றில் இரண்டு பங்கு  நிறுவனங்கள் வேலையை நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளன. வட டகோட்டாவில் அதிக அளவில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த கான்டினென்டல் ரிசோர்சஸ் என்ணெய் உற்பத்தி நிறுவனம் தன் வேலையை நிறுத்திவிட்டது.

இச்சூழலில் புதுப்பிக்கத்தக்க எண்ணெய்-எரிவாயு உற்பத்தியை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. 2015- பாரிஸ் உடன்பாட்டின்படி,, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த, அனைத்து பெரும் நாடுகளும் தீர்மானித்தன. இப்போது அதை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தை கொரோனா தொற்று நோயான COVID-19 உருவாக்கிவிட்டது. 2015 -பாரிஸ் உடன்பாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் உற்பத்தி நோக்கிச் செல்வது கட்டாயமானதாகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூலம் பெறும் எரிசக்தியை விட பல மடங்கு அதிகம் பெற மாற்று எரிசக்தி மூலங்களை இந்தியா பெற்றுள்ளது. சரியான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும். தாவர எண்ணெயும், கழிவு எண்ணெயும் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப்  பயன்படுத்தப்படுவதால், இவை வற்றாத எரிபொருள் மூலங்களாகும். ஒரு இலட்சம் கோடிக்கும் குறையாமல் ஆண்டுதோறும் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தலாம்.

1980 முதல் தாய்லாந்தில் ஜெட்ரோபா எனப்படும் காட்டாமணக்கு எண்ணெயை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் ஆய்வு நடந்துவந்தது. 1993இல் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, மெக்சிகோ, இஸ்ரேல், அர்ஜெண்டைனா மற்றும் ஆப்பிரிக்க  நாடுகள் இந்த ஆய்வில் கவனம் செலுத்தின.

உணவு உற்பத்திக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், விளை நிலம், விளையா நிலங்கள் ஆகியவற்றை உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். கரும்பு, சர்க்கரைக் கிழங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

நுண்ணுயிர் எரிபொருள் என்பது நீலப்பாசி, நுண்பாசி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எரிபொருள் ஆகும். நுண்ணுயிர் எரிபொருள் தயாரிக்க, ஆமணக்கு எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான நிலப்பகுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலே போதுமானது என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

உலக நாடுகளில் பயோடீசலையும், பெட்ரோலையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். ஈஸ்ட்டு நொதியைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை நேரடியாகவோ அல்லது பெட்ரோலுடன் கலந்தோ எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். எத்தனால் அதிகம் பயன்படுத்தும் நாடு பிரேசில். அந்நாடு கரும்பிலிருந்து எத்தனால்  எடுக்கிறது.

அமெரிக்கா சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கிறது. பிரேசில்  எத்தனாலுடன் பெட்ரோலை 20% கலந்து பயன்படுத்துகிறது. எத்தனால் மூலம் ஊர்திகளை நேரடியாகவே இயக்கலாம். அமெரிக்காவில் 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் கலந்து,  E-85 தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது, நிலம் சார்ந்த எரிபொருள் உற்பத்தி முக்கியத்துவம் பெறுகிறது. புதைபடிவ எரிபொருள் உற்பத்தியிலிருந்து, கொரோனா வைரசும், COVID 19 தொற்றுநோயும் நாடுகளை விரட்டி அடித்திருக்கின்றன.

எண்ணெய் சாராத பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டிய தேவையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இந்நிலையில் சூழலை உணர்ந்து, தற்சார்புள்ள நாடாக விளங்க, இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கத் தொழில்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. மக்கள் முடக்கப்பட்டார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் சில தொழில்களுக்குத் தளர்வு அளிக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்ததில், எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள், இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி ஆகியவை செயல்பட அனுமதி அளித்துள்ளது.

எண்ணெய்-எரிவாயு உற்பத்திக்கு தமிழக அரசு இப்போது அனுமதி அளிப்பது தவறானதாகும். எண்ணெய்-எரிவாயு உற்பத்தி இத்துடன் தமிழகமெங்கும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் எண்ணெய் எடுப்பு என்ற பேரழிவிலிருந்து காக்கப்பட வேண்டும்.

கரோனாவால்  மூடப்பட்டுள்ள தொழில்கள், தொழிலகங்கள்,  கடைகள் மற்றும்  விற்பனையகங்களுள், டாஸ்மாக்கும், எண்ணெய் - எரிவாயு எடுக்கும் கிணறுகளும், சுத்திகரிப்பு ஆலைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டியவை என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

கொரோனா கொல்லத் தவறினால், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் பயன்படுத்தும் இரசாயனங்கள் அந்தக் காரியத்தைச் செய்து விடும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதில், கங்கை ஆறு தூய்மையாகி விட்டது. நாடு முழுவதும் பல ஆறுகள் தன்னியல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

இவை நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீராதாரங்களின் நிலை. நிலத்தடி நீரை எண்ணெய் நிறுவனங்கள் கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, தொடர் மழையால் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்போது, கால ஓட்டத்தில்  நிலத்தடி நீரும் மீண்டும் தன்னியல்பைப் பெறும்.    என்ணெய் நிறுவனச் செயல்பாடுகளைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

எழுத்தாளர் த.செயராமன்

உரிமை தமிழ் தேசம்.

http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-may20/40260-2020-05-29-06-57-11

Link to comment
Share on other sites

NEW DELHI (Reuters) - India launched a $6.65 billion plan on Tuesday to boost electronics manufacturing, saying it would start by offering five global smartphone makers incentives to establish or expand domestic production.

The government is offering a production-linked incentive (PLI) involving cash worth 4% to 6% of additional sales of goods made locally over five years, with 2019-2020 as the base year, technology minister Ravi Shankar Prasad told a news conference.

Names of the five companies, which would have to meet investment and sales thresholds to be eligible, were expected to be announced in the next two months, ministry officials said.

Five Indian firms would also be selected for the PLI scheme, which, along with two other related initiatives, could help India produce smartphones and components worth 10 trillion rupees ($133 billion) by 2025, Prasad said.

The smartphone industry has become a showpiece for Prime Minister Narendra Modi's 'Make In India' drive. The government now wants to make the country an export hub.

Global players such as Samsung and Taiwanese firms Foxconn and Wistron, which both supply Apple, have already ramped up local production, attracted by India's huge market of 1.3 billion people.

https://finance.yahoo.com/news/india-launches-6-7-billion-135911729.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அடித்தால் சீனனுக்கு வலிக்கும்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

கொரோனா பேரழிவு - இனி சிக்கப்போவது யார்? இந்த லாக்டவுன் விதிகளை தளர்த்துவதால் பாதுகாப்பாக இருக்கப் போவது யார்? பணக்கார்கள் ஏழைகள் இவர்களில் யாருக்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வேண்டாம் என வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு ஏன் வரவில்லை.?

960x0.jpg

1950-களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. இரண்டுமே, வளரும் நாடுகள் தான்.அதிக மக்கள் தொகை கொண்ட, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியாத நாடுகள்.

வேலை வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தால் மாரியாத்தா மகிமை. இல்லை என்றால் கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைக்க வேண்டியது தான். ஆனால் சீனா தன்னை ஒரு கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்டாக மாற்றிக் கொண்டது.

1979-ல் அமெரிக்க பயணம்

அதென்ன கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட்? சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இன்று வரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தான் சீனாவில் எல்லாமே. அவர்கள் சொல்வதை மறுப்பதற்கோ, மறிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தேசத்தின் உச்சபட்ச தலைவர் (அப்போது அதிபர் பதவி கிடையாது என்கிறது விக்கிபீடியா) 1979-ல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கோண்டார். அவர் பெயர் டெங் சவ்பிங் (Deng Xiaoping).

முதல் முறை

அவ்வளவு ஏன், ஒரு சீன தலைவர், அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது அதுவே முதல் முறையாம். அப்போது தான் சீனா, தன் சீனப் பெருஞ்சுவரைத் தாண்டி உலகத்தையும், முதலாளித்துவத்தையும், முதலாளித்துவத்தினால் கிடைக்கும் பணத்தையும் பார்த்தது. மெல்ல மேற்கத்திய நாடுகளுக்கு சீன பெருஞ்சுவரின் கதவுகளைத் திறந்தது.

சிறப்புப் பொருளாதாரம் மண்டலங்கள் (SEZ)

அந்த காலகட்டத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை சீனா ஈர்க்கத் தொடங்கியது. அதோடு SEZ மண்டலங்களையும் அறிவித்து தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், வியாபாரங்கள் என தன் பொருளாதாரத்தை கவனிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பங்குச் சந்தைகளை எல்லாம் திறந்து தன்னை ஒரு தினுசான கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் நாடாக மாற்றிக் கொண்டது.

விளைவு என்ன.?

சீனாவின் கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் முயற்சி பிரம்மாண்ட பலன்களைக் கொடுத்தது. 1960-ல் வெறும் 59 பில்லியன் டாலராக இருந்தது சீனாவின் ஜிடிபி. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜிடிபியோ 543 பில்லியன் டாலர். சீனாவை விட அமெரிக்கா சுமாராக 10 மடங்கு பெரிய பொருளாதாரம். ஆனால் இன்று சீனாவின் ஜிடிபி சுமாராக 13 ட்ரில்லியன் டாலருக்கு வளர்ந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜிடிபி சுமார் 21 ட்ரில்லியன் டாலராக வளர்ந்து இருக்கிறது. சீனாவை விட 1 மடங்கு கூட அமெரிக்கா பெரிய பொருளாதாரம் இல்லை.

சீனா முந்திவிடுவான்

2025-ல் சீனா பொருளாதாரம், ஜிடிபி அடிப்படையில் உலகின் நம்பர் 1 பொருளாதாரமாக வலம் வரலாம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். சீனாவும் அதற்கு சளைக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவை முந்த நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

வெளியேறும் கம்பெனிகள்

அப்படி என்றால் சீனாவின் அசுரத் தனமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் எப்படி இருந்து இருக்கும் எனப் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட, சீனாவை அம்போ என விட்டு விட்டுத் தான், இன்று பல கம்பெனிகள், தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ள துடித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏன் சீனா வேண்டாம்.?

சீனா உலகத்தின் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல கம்பெனிகளின் அத்தியாவசியப் பொருட்கள், சீனாவில் இருந்து வந்தால் தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும் என்கிற ரீதியில், சீனாவின் சப்ளை செயின் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக சென்னையில் இருக்கும் டிவிஎஸ் கம்பெனி கூட கடந்த பிப்ரவரியிலேயே தன் உற்பத்தி 10% குறையும், காரணம் சீனாவில் இருந்து வர வேண்டிய சரக்குகள் வரவில்லை என்றார்கள்.

அதிகம் நம்ப வேண்டாம்

கம்பெனிகள் ஒரே நாட்டை, தங்கள் வியாபாரத்துக்கு அதிகம் நம்ப வேண்டாம் என்கிற நோக்கில், சீனாவில் இருந்து வெளியேற விரும்புகிறார்களாம். அதோடு கொரோனா பரவல், மற்ற உலக நாடுகளோடு இருக்கும் உறவுகள், அமெரிக்கா சீனாவுக்கு இடையில் இருக்கும் அனையாத வர்த்தகப் போர் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகிறார்களாம். வெளியேறுவது சரி... அதன் பின் எந்த நாட்டுக்குப் போகிறார்கள்..?

எந்த நாட்டுக்கு மாற்றுகிறார்கள்

நோமுரா என்கிற ஜப்பான் கம்பெனியின் கணக்குப் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், சீனாவில் இருந்து சுமாராக 56 கம்பெனிகள் வெளியேறினார்களாம்.

அதில் 26 கம்பெனிகள் யாரும் எதிர்பார்க்காத வியட்நாமில் கடை விரித்து இருக்கிறார்களாம். தைவானில் 11 கம்பெனிகளும், தாய்லாந்தில் 08 கம்பெனிகளும், இந்தியாவில் வெறும் 03 கம்பெனிகள் மட்டுமே தங்கள் ஆலைகளைத் தொடங்கி இருக்கிறார்களாம்.

ஏன் வியட்நாமில்.?

2018 - 19 நிதி ஆண்டில் தானே போனார்கள். இப்போதும் கம்பெனிகள் வியட்நாமில் ஆர்வம் காட்டுகிறார்களா என்ன..? என கேள்வி கேட்டால் 'ஆம்' என்கிறது க்விமா (Qima) என்கிற சப்ளை செயின் ஆய்வுக் கம்பெனி. தற்போது கம்பெனிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடுகிறார்களாம். குறிப்பாக கொரோனாவை சிறப்பாக சமாளித்த நாடுகளை கவனிக்கிறார்களாம்.

வியட்நாமில் என்ன வியப்பு.?

ஒட்டு மொத்த வியட்நாமில் சுமாராக 10 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். அந்த நாட்டில் இதுவரை 350-க்கும் குறைவான மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதே போல ஒருவர் கூட வியட்நாமில் கொரோனாவால் உயிரிழக்கவில்லையாம். இந்த ஒரு காரணமே கம்பெனிகளை சுண்டி இழுக்கிறதாம்.

வியட்நாமுக்கு வரவேற்பு இருக்கா?

ஐரோப்பிய யூனியனுக்கு, வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 85 % குறைத்து இருக்கிறார்களாம். அதே போல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, வியட்நாமுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விஷயங்களையும் தளர்த்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதை விட என்ன பெரிய வரவேற்பு வேண்டும்?

நோ.. இந்தியா.!

கொரோனா வைரஸை இந்தியா சரியாக கையாளவில்லை என்பதைத் தான், கம்பெனிகள் இந்தியாவுக்கு வராத முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது.

இந்தியா மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாடாக இருந்தும், லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தர தயார் நிலையில் வைத்திருப்பதாக அரசே சொல்லியும்,  கம்பெனிகளுக்கு சாதகமான பல சலுகைகளுக் கொடுக்கின்ற போதிலும், இந்தியாவால், சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியாவுக்குள் அழைத்து வர முடியவில்லை.

தம்மா துண்டு நாடு வியட்நாமோ கொரோனாவை சூப்பராக சமாளித்து கம்பெனிகளை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

https://tamil.goodreturns.in/world/why-china-leaving-companies-are-not-coming-to-india-019302.html 

டிஸ்கி :

பொருளாதார நிபுணர் ..தோழர் அம்பனை தனி திரி திறந்து போட்டு ஆள் அட்ரஸை காணோம்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்கிட்ட மோதாதே ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் அதிரடி முடிவு.. கவலையில் இந்திய ஊழியர்கள்.. என்ன தான் செய்யப் போகிறார்.?

trumpvisa-26-1509001967-1524559396.jpg

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை. வேலை வாய்ப்புகளிலும் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஹெச் 1பி விசாவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து  கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான செய்தியில், டொனால்டு டிரம்ப் இன்னும் இரண்டு நாட்களில் ஹெச் 1 பி விசா பற்றிய விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தடை

இதன் காரணமாக அமெரிக்காவில் வேலையின்மை விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டில் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றார்.

விதிமுறைகளில் கட்டுப்பாடு

அதாவது அமெரிக்காவில் வேலை செய்ய கொடுக்கப்படும் ஹெச்1 பி விசாவில் விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாகவும், ஒரு கட்டத்தில் தற்காலிமாக தடை செய்ய உள்ளதாக கூறி வருகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் வேலையின்மை விகிதம் குறையும் என்றும் கூறி வருகின்றார்.

யாருக்கு ஹெச் 1 பி விசா?

இந்த ஹெச் 1 பி விசாவது நல்ல திறமையுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசாவாகும். குறிப்பாக ஐடி துறையில் உள்ள முக்கிய ஊழியர்களுக்கு இந்த விசாவானது அதிகளவில் வழங்கப்படுகிறது. அதிலும் ஹெச் 1 பி விசாவை பெறுவதில் இந்தியர்கள் தான் அதிகம். ஆக திங்கட்கிழமையன்று இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை பேர் பயன்.?

இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 85,000 பேர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதே போல தற்காலிகமாக குடியேற்றத்தினையும் தடை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

அமெரிக்கா அதிபர் டிரம்ப் சொல்வது போல் இந்த ஹெச் 1 பி விசா சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் முதலாவதாக பாதிக்கப்பட போவது இந்தியா தான். ஏனெனில் அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இதன் மூலம் பணிபுரிகின்றனர். மேலும் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கும் விசா காலம் முடிவடைந்தால், மீண்டும் புதுபிக்க முடியாமல் நாடு திரும்ப நேரிடும்.

பலத்த அடி தான்

இந்திய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்களுக்கும் இது பாதிப்பு தான், ஏன் சொல்லப்போனால் இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி காணலாம். இப்படி சங்கிலித் தொடர்போல இந்தியாவுக்கு டிரம்பு ஒற்றை முடிவு பலத்த அடியை கொடுக்கலாம். .

ஹெச் 1 விசா

அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியுரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. இவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.

ஊழியர்களுக்கான விசா

இந்த ஹெச்1 பி விசாக்கள் பெரு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன. H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.

ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படலாம்

ஆக இதன் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து புலம் பெயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனவு

ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.

https://tamil.goodreturns.in/world/us-president-may-order-new-restrictions-on-h-1b-visa-in-two-days-019433.html

Link to comment
Share on other sites

கோவிட்19ன் தாக்கம்  உலக நிறுவனங்களை முடக்கி விட்டுள்ளது. சரியும்  வேலைவாய்ப்புக்கள்,குறையும் நிறுவன இலாபங்கள், தடுமாறும் வங்கிகள் என அடுக்கி செல்லலாம். 

ஆனால், நாம் எந்த துறைகள் இந்த காலத்தில் வளர்ந்து வருகின்றன எனவும் பார்க்கவேண்டும். குறிப்பாக இரண்டு துறைகள் : தொழில்நுட்பம் அடுத்து மருத்துவம். 

தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த பத்து வருட வளர்ச்சியை வரும் இரண்டு வருடங்களில் காணலாம் என்கிறார்கள். அதேபோன்று, மருத்துவ துறையும் அசாதாரண வளர்ச்சியை காணும் என்கிறார்கள். 

வீட்டில் இருந்து வேலை செய்ய மற்றும் கற்க, இவை சம்பத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வைத்தியரை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன், "கிளவுட்" என்ற எங்கோ ஒரு இடத்தில் இருந்து சேவைகளை வழங்கும் தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளன. 

மருத்துவ துறைக்கு அதிகளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. மருந்துகளை கண்டுபிடித்து அவற்றுக்கான அங்கீகாரம் பெறுவது என்பது அதிக செலவீனம் கூடிய முதலீடாக இருந்தாலும், அதன் முக்கியத்தை கோவிட்டார் உணர்த்தியுள்ளார்.   

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பெருந்தொற்று ; உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப சாத்தியக்கூறுகள் இல்லை..

56222600.cms

கொரோனா பெருந்தொற்று முடிவிற்கான அருகில் கூட இன்னும் செல்லவில்லை என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், சீனாவில் 6 மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசால், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்த மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்த சூழல் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவே அனைவரும் விரும்புவதகாவும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

https://www.vanakkamlondon.com/கொரோனா-பெருந்தொற்று-இயல/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அதிரடி.! வங்கி பரிமாற்றங்களில் கூடுதல் கண்காணிப்பு.! 

vbk-pboc-

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மனிதர்களின் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம், பொருளாதாரங்களைப் பந்தாடிக் கொண்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக வங்கிகளுக்கு பெரிய தலைவலிகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். அந்த தலைவலியின் பெயர் மோசமான கடன்கள் (Bad Debts).

சீனாவில் இந்த மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்துவிடக் கூடாது என்கிற நோக்கில் ஒரு புதிய செக் வைத்து இருக்கிறது பீபில் பேங்க் ஆஃப் சீனா (PBOC - People Bank of China).

என்ன செக்

கொரோனா வைரஸ் பிரச்சனையில் மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, வியாபார கணக்கு மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பெரிய பணப் பரிவர்த்தனைகளை எல்லாம் செய்வதற்கு முன்பே தெரிவிக்குமாறு (Pre report) சொல்லி இருக்கிறது பீபிள் பேங்க் ஆஃப் சைனா. இந்தியாவுக்கு எப்படி ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு எல்லாம் வழி காட்டும் அமைப்போ, அதே போல சீனாவில் பீபில் பேங்க் ஆஃப் சீனா.

எந்த மாகாணங்களில்

சீனாவின் மத்திய வங்கி ஹெபி (Hebei) மாகாணத்தில் தான், வியாபார கணக்குகள் மற்றும் ரீடெயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரிய பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்கச் சொன்னார்கள். இந்த இரண்டு வருட திட்டத்தை மெல்ல சீனாவின் மற்ற முக்கிய மாகாணங்களான சிஜியாங் (Zhejiang) மற்றும் சென்சென் (Shenzhen) மாகாணங்களுக்கும் அக்டோபர் மாதத்துக்குள் விரிவாக்கப் போகிறார்களாம்.

ஏன் அவசரம்

அட என்னங்க, மோசமான கடன்கள் (Bad Debts) அதிகரிக்கிறது என்பதற்கு இத்தனை கடுமையான நடவடிக்கைகளா? என்று கேட்கிறீர்களா. சமீபத்தில் தான் சீனா பல வங்கிகளுக்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, போராடிக் கொண்டிருந்த பல வங்கிகளை மீட்டது. எனவே அப்படி மீண்டும் வங்கிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து மீட்க முடியாது என்பதால் தான் சினா அதிரடியாக இப்படி ஒரு செக்கை வைத்திருக்கிறது.

எவ்வளவு தொகை

வியாபார கணக்குகளை வைத்திருப்பவர்கள் 5 லட்சம் யுவானுக்கு மேல் செய்யும் பணப் பரிமாற்றங்களை முன் கூட்டியே சொல்ல வேண்டுமாம். அதே போல தனிநபர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளில் 1 - 3 லட்சம் யுவானுக்கு மேல் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுமாம். தனி நபர்கள் எந்த மாகாணத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து 1 - 3 லட்சம் யுவான்களுக்குள் அளவு தீர்மானிக்கப்படுமாம்.

எஸ் & பி குளோபல் கருத்து

சீனாவின் மத்திய வங்கியோ, சீனாவின் 41 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வங்கி சிஸ்டத்தை பாதுகாக்கவும், உதவவும் நினைக்கிறார்கள். ஆனால் எஸ் & பி குளோபல் நிறுவனத்தின் கணக்குப் படி, இந்த ஆண்டில் மட்டும், 8 ட்ரில்லியன் யுவான் மோசமான கடன்கள் ஏற்படலாம் எனக் கணித்து இருக்கிறது. இதை எல்லாம் சீனா எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை.

https://tamil.goodreturns.in/world/china-announced-a-plan-that-require-clients-to-pre-report-large-transactions-019701.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

36,000 பேருக்கு பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..!

United-Airlines-4.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேரை பணி நீக்கம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான செய்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 36,000 ஊழியர்களுக்கு பணி நீக்கம் செய்ய கூறி அறிவிப்பினை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் விமானத் துறையில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கத்தினால் விமானத் துறையானது பலமாக அடி வாங்கியுள்ள நிலையில், தற்போதைக்கு மீண்டு வருவதாகவும் தெரியவில்லை.

கொரோனா ஹாட் ஸ்பாட்

அதிலும் இன்று கொரோனாவின் ஹட் ஸ்பாட் ஆக திகழும் அமெரிக்காவில் எப்போது மீண்டும் வரும் என்பதே நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இனி பணி நீக்கம் குறையும்

இதன் காரணமாக அதன் உள்ளூர் விமான பயண சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளி நாட்டு விமான சேவையும் முடங்கியுள்ளது. இதுவே மிகப்பெரிய பணி நீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆரம்பகாலத்தில் தற்போது செய்யப்படும் இந்த பணி நீக்கத்தினால், அக்டோபரில் பணி நீக்கங்களின் எண்ணிக்கையினை இது மட்டுப்படுத்துவதாகவும் யுனைடெட் அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யார் யார் பணி நீக்கம்.

25994789_562965927387836_182422646116971

இது குறித்து இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், 60 நாட்கள் எச்சரிக்கையுடன் இணங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த மாஸ் பணி நீக்கத்தில் 15,000 விமான பணி பெண்களூம், 11,000 வாடிக்கையாளர் சேவை மற்றும் கேட் முகவர்களும், 5,500 பராமரிப்பு தொழிலாளர்களும், 2,250 விமானிகள் உள்பட பலரும் பணி நீக்கம் செய்ய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கர்கள் எவ்வளவு பேர்?

இந்த அதிரடியான அறிவிப்பானது யுனைடெட் விமானத்தின் அமெரிக்கா ஊழியர்களை 45% கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல 1,300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அக்டோபர் 1ல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதோடு சர்வதேச ஊழியர்களும் இதனுடன் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 95,000 சர்வதேச பணியாளர்களைக் கொண்டுள்ளது.

பயணம் வீழ்ச்சி

கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் பாதி வரையில் விமான சேவையானது 95 சதவீதம் சரிந்துள்ளது. இதன் பின்னர் மெதுவாக அதிகரிக்க தொடங்கினா;லும் ஜூலை 4 வார இறுதியில் சற்று விமான பயணிகளின் எண்ணிக்கையானதுசற்று அதிகரித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதம் வீழ்ச்சியாகும்.

https://tamil.goodreturns.in/world/us-airlines-sending-mass-layoff-warning-36-000-employees-amid-coronavirus-pandemic-019708.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ச்சிப்பாதையில் சீனாவின் பொருளாதாரம்..

b1b04f31ee1a419a931c2116b1031f72.jpeg

சீன பொருளாதாரம் 2020-இன் இரண்டாம் காலாண்டில் 3.2 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் பின்னர் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான முடக்கல் அமுலிலிருந்த 2020-இன் முதல் மூன்றுமாத காலப்பகுதியில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த நிலையில், நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.vanakkamlondon.com/வளர்ச்சிப்பாதையில்-சீனா/

டிஸ்கி :

சப்பயல்.! ஊரெல்லாம் பரப்பிட்டு நீ நினைச்சத சாதிச்சு முடிச்சுட்ட ..?

5gpcZMDMYBJFbFplIz8CGqUar80QTi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சிக்கலில் சீனா.. 11 நிறுவனங்களுக்கு தடை..

640x-1.jpg

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு என்று தான் முடிவு வருமோ தெரியவில்லை. ஏனெனில் தற்போது மீண்டும் இந்த நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சனையை முடித்து ஒரு சுமூகமான உடன்படிக்கையை எட்ட, சீனாவும் முயன்று வருகின்றது. ஆனால், இதுவரை அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

சொல்லப்போனால் எப்படியோ பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பாவது முதல் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது அதனை நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறது டிரம்ப் நிர்வாகம்.

11 சீன நிறுவனங்களுக்கு தடை

இதற்கிடையில் இந்த உறவுகளுக்கு இடையில் மேலும் விரிசலை உருவாகும் விதமாக, ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து, சீனாவின் பிரச்சாரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமையன்று 11 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இது இந்த நிறுவனங்கள் சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க தொழில் நுட்பம் மற்றும் தயாரிப்புகள் வாங்குவதை தடை செய்துள்ளது.

யாருக்கெல்லாம் தடை?

மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சீன அரசாங்கத்தால் ஜின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட, தடுப்புக் காவல் பிரச்சாரத்தினை ஆவணபடுத்தியுள்ளன. மேலும் சிறுபான்மை குழுவினை சேர்ந்தவர்கள் இந்த குழுவின் பெரிய முகாம்களில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சில கைதிகள், அதற்கு அருகிலுள்ள தொழில் சாலைகளில் வேலை நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பேஸ் மாஸ்க் தயாரிக்க நிர்பந்தம்

இன்னும் சிலர் பேஸ் மாஸ்க் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வாறு ஒன்பது நிறுவனங்களை கடந்த திங்கட்கிழமையன்று டிரம்ப் நிர்வாகம் மேற்கோள் காட்டியது. குறிப்பாக சீனாவின் Changji Esquel Textile Co. Ltd, Nanchang O-Film Tech, Hetian Taida Apparel Co. Ltd உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயபடுத்தி வேலை செய்வதற்காக ஆயத்தமாகி உள்ளன என்றும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உரிமம் இல்லாமல் பொருட்கள் இல்லை

இதே சீனாவின் மற்ற இரண்டு நிறுவனங்களான Xinjiang Silk Road BGI and Beijing Liuhe BGI நிறுவனங்கள் சிறுபான்மையினரின் அடக்குமுறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மரபணு பகுப்பாய்வுகளை நடத்த சேர்க்கப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக அமெரிக்காவின் இந்த தடையினால் அமெரிக்கா நிறுவனங்கள் சீன நிறுவனங்களுக்கு உரிமம் இல்லாமல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதில் இருந்து தடுக்கிறது. ஆனால் வாங்குவதில் இந்த தடை விதிக்கப்படவில்லை.

வர்த்தகம் செய்ய வாய்ப்பே இல்லை

எனினும் ஜின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு மற்றும் பிற முறைகேடுகளுக்காக அரசாங்க பட்டியலில் பெயரிடப்பட்ட, எந்தவொரு நிறுவனத்துடனும் தொடர்ந்து வர்த்தகம் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையானது, அமெரிக்கா சீனா இடையே ஏற்கனவே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வந்துள்ளது.

செல்ஃபி கேமரா உற்பத்தி

இவ்வாறு திங்கட்கிழமையன்று தடை விதித்ததாக கூறப்படும் நிறுவனங்களில் ஒன்றான, Nanchang O-Film Tech ஐபோனின் சில மாடல்களுக்கு செல்ஃபி கேமாராக்களையும், ஹூவாய் மற்றூம் சாம்சங்கிற்கான பிற கேமரா மற்றூம் டச் ஸ்கீரின்களையும் தயாரித்ததாக கூறியுள்ளது.

முக்கியப் பிராண்டுகளுடன் தொடர்பு

இதே பட்டியலில் உள்ள மற்றொரு நிறுவனமான Hefei Bitland Information Technology Co நிறுவனம் தனது இணையதளத்தில் கூகுள், ஹெச்பி, ஹையர், iFlytek மற்றும் லெனோவா ஆகியவை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே மற்றொரு நிறுவனமான Changji Esquel Textile Co. Ltd முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாருக்கு பிரச்சனை?

இப்படி சீனா நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், அதனை சில நிறுவனங்கள் மறுத்தும் கூறியுள்ளன. எனினும் பல நிறுவனங்கள் பல முக்கிய பிராண்டுகளுடன் தொடர்பில் உள்ளன. இதனால் சீன நிறுவனங்களுக்கு பிரச்சனையே என்றாலும், அமெரிக்கா நிறுவனங்களுக்கும் இதனால் பிரச்சனை தான் என்பதும் நிசப்தமான உண்மையே.

https://tamil.goodreturns.in/world/donald-trump-administration-barred-11-new-chinese-companies-019857.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கோவிட்டின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பலருக்கும் சிக்கலைகளை உருவாக்க பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில்... மத்திய வாங்கிகள் பணத்தை அச்சடிக்க, அதனால் தங்கம், வெள்ளி  மற்றும் பிட்ககொயின் பெறுமதிகள் கூடுகின்றன. 

ஆனால், பல நாடுகளின் பங்கு சந்தைகள், குறிப்பாக அமெரிக்காவின்,  தொடர்ந்தும் அதிகரிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. குறிப்பாக ஆப்பிள், அமேசான், மைக்ரோசொப்ட் மற்றும் அல்பபாட் எனப்படும் கூகிள்  ஒரு த்ரிலயனையும் தாண்டி, அதிலும் ஆப்பிள் இரண்டு த்ரிலியன்களை நோக்கி வேக படை போடுகின்றது. 

ஆக, பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுவான் என கூறுவது போன்று வழிகளை தேடி முன்னேற முடியும் என்பதை மீண்டும் உலகம் காட்டி நிற்கின்றது. 

Link to comment
Share on other sites

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் 

இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது.  

குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI 

டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. 

ஏற்கனவே  Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. 

சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் 

இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது.  

குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI 

டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. 

ஏற்கனவே  Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. 

சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்     

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி தோழர்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.