Jump to content

எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய  மரண பயம். - தமிழ் சிறி.- 

2019´ம்  ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 
2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம்.

இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்....
எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. 
அவர்களுக்கும், எனக்கும்..  உற்சாகமாக இருப்பதற்காக,
நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம்.

இப்பிடி,  "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும்,   
வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு  காதால், வெளியே விட்டு விடுவேன்.
அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்)

ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு
படிப்பில்... கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்த, ஆசையே வரவில்லை.

2020 பிறக்கும் போது.....   எனக்கு, இன்ப அதிர்ச்சி  ஊட்டுவதற்காக...
மூன்று  பிள்ளைகளும், "அப்பா.... வாங்கோ... வெடி கொளுத்துவோம்" என்றார்கள் 
அண்டைக்கு..... சரியான குளிராக இருந்த படியால்...

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

வெடி கொழுத்தப் போன... ஆட்களுக்கு, சாம்பிராணி குச்சி 

மனைவியின் அனுமதி இல்லாமல், அங்கு இருந்து...
ஒரு பொருளும்.... நகர முடியாது. என்பது.. நமக்கு... நன்கு தெரியும். 
அப்படி இருந்தும்....

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

அன்று வெள்ளிக்கிழமை என்றபடியால் சிறிக்கு எழும்பி போக இயலாமல் இருந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள்  படித்து,  சென்ற ஆண்டில்.... இருந்து வேலை செய்யத் தொடங்கியவர்கள்.
தகப்பனாக, இருந்து.... அதைப் பார்க்க சந்தோசமாக இருந்து 
அந்த நேரம்....
மகனும், இளைய  மகளும்.... சென்ற  மாசி மாதம்   20 ம் திகதி, (20.02.20)
இத்தாலி நாட்டில், நான்கு நாள்..... 
சரித்தர பூர்வமான இடங்களை பார்க்க போய் இருந்த போது,
சீனாவில்..... தொடங்கிய "கொரோனா" 
இத்தாலி மட்டும்... வரும் என்று, யாருமே எதிர் பார்க்கவில்லை. 

வடக்கு இத்தாலியில் ஆரம்பித்த  கொரோனா....
மத்திய, தெற்கு  இத்தாலி வரை, வந்து  கொண்டிருப்பதை....
உலகத்தில், ஒருத்தரத்தாலும்  ..... ஊகிக்க  முடியவில்லை.

ஒரு, அருந்தப்பில், தப்பிய பிள்ளைகள் வீட்டிற்கு  வந்த திகதி.(24.02.20)
சாமம்... 10 மணி.  

அடுத்த... ஆறுமணித்தியாலத்தில், எனது மகள்.....  வேலை நிமித்தமாக 
இந்தியாவில்  உள்ள பெங்களூர் நகரத்திற்கு செல்ல.....
அதே... விமான நிலையத்திற்கு... செல்ல வேண்டும்.

ஏற்கெனவே... என்ன உடுப்புகளை, 
எந்த நாட்டில் பாவிப்பது என்ற விபரம் தெரிந்த படியால்....  
பெட்டியை மாத்திக்.... கொண்டு, 
அம்மாவுக்கு.... ஒரு முத்தம்,  அப்பாவுக்கு.... ஒரு முத்தம்  தந்து ..
விடை பெறும்  போது... கண்ணீர் வந்தது. 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில்  இருந்து, இந்தியா செல்பவர்கள்,
குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.
மிக கவனமாக இருக்க வேண்டும்.. என்று... 
ஏற்கெனவே... மகளுக்கு கூறி, இருக்கின்றேன்   

அதனால்..... அவ, பல்லு  விளக்குவதும், போத்தில் தண்ணீரில் தான் என்ற போது,
மனம்... பதை பதைத்தது.   

இது, அவவின், இரண்டாவது பயணம்...
ஏற்கெனவே.... நாங்கள் கூறிய புத்தி மதிகள் இருந்திருக்கும்.

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

 

2 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ.

ஈழப்பிரியன், ஏராளன் ....
அங்கு தான்..... கொரோனா என்ற வைரஸ்,  பரவ ஆரம்பித்த நேரம்.

மகள்.... பெங்களூரிந்து , தொலைபேசி ... எடுத்து, 
தனக்கு... மூச்சு  எடுக்க கஸ்ரமாய் இருக்கு,  வயித்ததாலை போகுது...எண்டும், 
அங்குள்ள.... இந்தியா, மருத்துவர்களிடம் , 
"பொடி  செக்கப்"  செய்யப் போகின்றேன். என்றா.....

அதுக்கு.... நான், உனக்கு என்ன.... விசரோ...
பல்லைக்  கடிக்சுக் கொண்டு,   ஜேர்மனிக்கு, வாடி...
இங்கு வைத்தியம் செய்யலாம்... உறுக்கமாக, சொல்லி விட்டேன்.

எனது.... செல்ல மகளும்,  இங்கு வந்து....
தனது  குடும்ப வைத்தியருடன் கலந்து... ஆலோசித்து,
அவவுக்கு.... கொரோனா இல்லையாம். :)

மனப் பயம் என்கிறார்கள். 
நாம் தைரியமாக இருப்போம்.

Link to comment
Share on other sites

பெற்றோராக எங்களுக்கு உள்ள பயம் தான் தமிழ்சிறி. ஆனால் பிள்ளைகள் உங்களோடு அருகில் இருப்பது ஆறுதலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு தெரிந்த எதிரி என்றால் மோதிப்பார்க்கலாம் அல்லது ஓடித்தப்பலாம்..... கொரோனாவுக்கு என்ன செய்வது..... அவர்கள் நலமாக வந்தது நல்லதே.....!  

தொடருங்கள் தமிழ்சிறி......!

Link to comment
Share on other sites

இது கதையா தொடர சொல்ல ஒரு தகப்பனின் நெருப்பு தவிப்புக்கள் என்ன இருந்தாலும் என்னருகில வா மகளே என்று துடிக்கும்மனதை புரிகிறது நண்பா அதே தவிப்பில இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும்... ஊக்கமும் தந்த,
பெருமாள், நில்மினி, ஏராளன், ஈழப்பிரியன், சாந்தி,  
கவி அருணாசலம், சுவி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா, குமாரசாமி அண்ணா, 
மார்த்தாண்டன்.... ஆகியோரின் அக்கறைக்கு நன்றி.

உண்மையில்... எனக்கு, இதனை மீட்டிப் பார்க்கவே... ஒருவித பயமாக உள்ளது.
ஆனாலும்... சென்ற வெள்ளிக்கிழமை எழுத ஆரம்பித்ததை...
இடையில்... நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக... தொடர்கின்றேன்.

இந்த விடயத்தை... நண்பர் பாஞ்ச்  அண்ணைக்கோ...
வீட்டிற்கு அருகில் இருக்கும், நண்பர்களுக்கோ.. தெரிவிக்காமல்...
எம்மை... நாமே தனிமைப் படுத்திக் கொண்டோம்.
நிச்சயம்... அவர்கள் கோவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள்.... வேலை செய்யும் இடம், 
வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில்  இருந்தாலும்....
அவர், பிரயாணம் செய்யும்,  பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா.... 
எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில்,
பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும்,
மலைப்  பிரதேசம்  என்பதாலும்... வாகன நெரிசல்  அதிகமாக இருக்கும்.

அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட  (15 கி. மீ . தொலைவில்)
ஓரு,  தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர்.
அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும்.  ஒரு படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை.
ஒரு தனிக்  குசினி, பல்கனி. அதற்கு... 750  €  வாடகை.

அதில்  படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்...  வேலை அறையும்... 
வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும்.

வேலை நாட்களில்...  எமது  வீட்டிலிருந்து, அந்த  35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு...
இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக..
அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார்.  

கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம்?
என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு  தெரியும்.

அந்தக்  கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள்.
அவர்கள்... ஏற்கெனவே, மகள்  வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.
அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும்.

ஜேர்மனியில்....  பென்ஷன், எடுத்த... கிழவன்/ கிழவிகள்  சும்மா.... இருக்க மாட்டாதுகள்.
சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து,  கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள்.
(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

மகள், கடந்த இரண்டு கிழமையாக...  வீட்டில் இருந்து தான்... வேலை செய்கிறார்.

பகிடி விடாதேங்கோ... நில்மினி.
ஜேர்மன் கிழவன், கிழவிகளுக்கு.... 
ஜன்னலில் நின்று, விடுப்பு பார்ப்பது தான்... முழு உத்தியோகம்.
எந்தக் கார்க்காரன், ஆரிண்டை காருக்கு இடிச்சு.... பெயிண்ட் கழண்டது...
அந்த இருவரின்... இலக்கத்தையும்... 110 க்கு அடித்து விட்டு,
அமுசடக்கமாக... இருந்து விடுவார்கள். :grin:

சிலதுகள்... அந்த இடத்தைப் பார்க்க,  நாய்🦮/ பூனையுடன்🐈... 
"வாக்கிங்"  வந்து,  நோட்டமிடுவார்கள்.     😎

இதனால்... பல, போலீஸ்காரனுக்கு... வேலை  குறைவு. 🤣

பாவம்... "பென்ஷன்"  எடுத்தவர்களுக்கும்... பொழுது போக வேணுமே.....  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavallur Kanmani said:

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

கண்மணி அக்கா... பென்சன் எடுத்தவர்களுக்கு, 
அப்படி போட்டுக் கொடுக்க வேண்டிய... அவசியமோ, அதனால் லாபமோ  இல்லை.

ஆனால்... கொரோனா பயம்,  தங்களையும் பீடித்து விடுமோ என்று, யோசித்திருக்கலாம்.
ஆனால்... அதனை, உறுதியாக சொல்ல முடியவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி  

Link to comment
Share on other sites

சிறித்தம்பி கட்டுரைகள் எழுதுவார், பயணக் கட்டுரைகள் எழுதுவார். பயக் கட்டுரையும் வாசகர்களைக் கவரும்படி எழுவார் என்று இன்றுதான் கண்டறிந்தேன். வாசித்ததும் அவரைத் தொடர்புகொள்ள எண்ணினேன், ஆயினும் அவர் பயமின்றி இருக்கும் அந்த ஒருநாள் இன்றில்லாதபடியால் பொறுமைகாக்கிறேன். 😌

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்தில் பெங்களூர் போய் திரும்பி வந்ததே போதும். கொஞ்சம் பிந்தியிருந்தாலும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க காத்திருக்கிறேன்...தொடருங்கள்

Link to comment
Share on other sites

On 27/3/2020 at 10:17, தமிழ் சிறி said:

குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் மகளை இப்படியா மிரட்டுறது?
அதுசரி இது உண்மையோ?

வாசிக்க ஒரு திரில்லா இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.