Jump to content

நேர்மையாக இல்லாததால் பொருளாதார சிக்கலில் தமிழ் வணிகர்கள், தற்தொழில் செய்பவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

Bankruptcy and Insolvency செய்வதற்குரிய  Licences உடையோர் தமது வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் தரவுகளை வைத்துத்தான் Filing செய்வர். இவர்களை Fraud க்கு அனுசரணையாக இருந்தார்கள் என நடைமுறையில் நிரூபிப்பது கடினம். ஆனால் மிகவும் காத்திரமான நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் Fraud ஏமாற்று செய்கின்றனர் என அடையாளம் காணுமிடத்து அவர்களுக்கு தமது சேவையை வழங்காது விடலாம். 

ஆனால் மிகவும் அதிக சிறு நிறுவனங்கள் பெரிதளவு இவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

புத்தகவியல் துறை அல்லது நூலகவியல் (?) ஒன்றும் சீர்தனம் அள்ளித்தரும் துறையல்லவே 😀 நாங்கள் படிப்பதற்கு. ☹️

நான் சொன்னது அடிப்படை அறிவு பற்றியது

 

8 minutes ago, tulpen said:

அதே தான். அதை விட இன்னுமொன்றும் உண்டு. அது அதை விட அனுபவஸ்தர்கள். ஆனால் அதுவும் தமிழ் முறைபடி தான் புத்தகங்களை அலங்கோலமாக வைத்திருந்தார்கள். 

பிரான்சில் இன்னொரு புத்தக கடையும் இருக்குதா?...நான் இங்கு போயிருந்த போது பின்னறைக்கு போய் பார்த்து எடுக்க சொன்னார் 😅
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

Bankruptcy and Insolvency செய்வதற்குரிய  Licences உடையோர் தமது வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் தரவுகளை வைத்துத்தான் Filing செய்வர். இவர்களை Fraud க்கு அனுசரணையாக இருந்தார்கள் என நடைமுறையில் நிரூபிப்பது கடினம். ஆனால் மிகவும் காத்திரமான நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் Fraud ஏமாற்று செய்கின்றனர் என அடையாளம் காணுமிடத்து அவர்களுக்கு தமது சேவையை வழங்காது விடலாம். 

ஆனால் மிகவும் அதிக சிறு நிறுவனங்கள் பெரிதளவு இவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

நடைமுறைச்சிக்கல் திவால் அடிப்பதில் தான் உள்ளது.

முதலாவதாக, நீங்கள் திவால் அடிக்கபோவதன் நோக்கம் என்ன என்ற கேள்வியை தான் அந்த முகவர் கேட்பார்.

அதிலே, உங்கள் நோக்கம், துரத்தும் கடன்காரர்களிடம் இருந்து தப்ப வேண்டும் என்றால், அதுக்கு திவால் தேவையில்லை. இடத்தை மாத்தி கம் என்று இருந்து கொள் என்பார்கள். முக்கியமாக அவர்களுக்கு தேவையான கட்டணம் கொடுக்க கூடிய நிலையில் இல்லாதவர்களுக்கு திவால் நடைமுறை செய்வதே வேஸ்ட்.

பெரும்பாலும், ஆரம்ப ஆலோசனை சந்திப்புக்கே பணம் பல ஆயிரங்களில் இருக்கும் போது.... எப்படி முடியும்?

அவருக்கு பணம் கொடுக்க கூடிய நிலையில் இருந்தால், அதிலேயே கடனை அடைத்து விடலாமே.

இரண்டாவதாக, வங்கியில் பெரும் பணம் எடுத்து, அல்லது ஒரு நிறுவனத்தில் கடனுக்கு பொருட்கள் வாங்கி தொப்பி போட விரும்புபவர்கள்.

உதாரணமாக சிறிலங்கன் அரச விமான சேவையின் குறித்த ஒரு நாட்டின் பொது வியாபார முகாமையினை ஒரு அரசியல்வாதியின் துணையுடன் எடுத்துக் கொள்ளுதல்.

அந்த நாட்டின் சகல விமான சீட்டுகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே விலைப்படும். கொமிசன் பணத்தில் கொழுப்பார்கள்.

குறித்த தருணம் வந்ததும், ஒரு மாதம் பணத்தினை கொடுக்காமல் இழுப்பார்கள். அடுத்தமாதம் சேர்த்து கொடுப்பார்கள். அரசியல்வாதியும் ஆதரவு கொடுப்பார். உள்ளேயும் லஞ்சம் பூந்து விளையாடும் ஆகவே, எச்சரிக்கை மணி அடிக்கப்பட்ட மாட்டாது.

இது போல செய்து, பழக்கப்படுத்தி பின்னர், இரண்டு மாத தாமதம், மூன்று மாத தாமதம் எனப் போய் ஒரு கட்டத்தில் பல மில்லியன்களுடன் திவால் நோட்டீஸ் கொடுப்பார்கள்.

இப்படியானவர்களுக்கே மேல சொன்ன முகவர்கள் சேவை உள்ளது. உண்மையில் அவர்களே, இந்த திட்டத்தினை வடிவமைத்துக் கொடுப்பவர்கள்.

முதலில் Kenton என்னுமிடத்திலும், பின்னர் Rayners lane என்னுமிடத்திலும் ட்ராவல் ஏஜென்ட் வைத்திருந்த ஒருவர் இவ்வாறு சிறிலங்கன் அரச விமான நிறுவனத்துக்கு மஞ்சள் துண்டு போட்டார். இவர் தொப்பி போட்டது, பல மில்லியன்கள். ஆனாலும் முதலை மாதிரி என்னத்தே கன்னையா போல கதை சொல்லிக்  கொண்டு இருப்பார். இவர் அங்குள்ள அரசியல்வாதிக்கும், பங்கு கொடாமல் கடுக்காய் கொடுத்தார் என்று பின்னர் வந்த கதை.

இன்னுமொருவர் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு, லண்டனில் (சீசர என்று பெயர் என்று நினைக்கிறேன்) போன் காட்டுகளை விற்பனை செய்தவகையில் பெரும் பணம் உழைத்தார்.

அது மெகா சுத்து. உதாரணமாக, வாட்ஸ்அப், ஸ்கேய்ப் வருமுன்னர், ஒருவர், BT ஊடாக இலங்கைக்கு போன் செய்தால், BT இங்கு அறவிடும் பணத்தில், ஒரு பகுதியினை இலங்கையினுள் வழங்கப்படும் சேவைக்காக SLTC க்கு கொடுக்க வேண்டும். 

அதேபோல மறுவளமாகவும் கட்டணம் உண்டு. ஆனால் அந்த நேரத்தில், அங்கே இருந்து போன் பண்ண மாட்டார்கள், இங்கிருந்து தான் கால் போகும். ஆகவே BT தான் SLTC கொடுக்கவேண்டி இருக்கும்.

திலங்க சுமதிபாலா என்ற மெகா ஊழல் பேர்வழி SLTC தலைவர் ஆக இருக்கும் போது, இந்த கட்டணத்துக்கு பதிலாக, லண்டனில் SLTC இலச்சினை பொறித்த போன் அட்டைகளாக,  BT இடம் வாங்கி, இலங்கைக்கு மலிவு விலையில் கால் செய்ய, அந்த அட்டைகளை, (இன்று லைக்கா விற்பது போல) தமிழர் கடைகளில் விற்றரர்கள். 

கடைசியில் அந்த லண்டன் கம்பனி, மஞ்சள் துண்டு போட்டு, நஷடம் SLTC க்கு தான்.

ஆகவே, இந்த ஜுஜுபி தமிழ்க்கடைக்காரர்கள், திவால் வரை போவார்கள் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

அதாவது குறைந்தது 2 மில்லியன் ஆவது தேறாவிடில், முகவர்கள் மினக்கட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

இதை எல்லாவற்றையும் விட கொடுமைகள் திகதி முடிந்த குளிருட்டிய கடலுணவு (depresser) இறைச்சிவகை பால்மா இரண்டு வருடங்கள் முடிந்த பின்பு விசேட திரவத்தாலும் புதிய அடையாளப்பையுடமுனும் மாற்றப்பட்டு (அதை செய்ய புதிதாக வந்த முகாமில இருக்கும் பொடியங்கள கூப்பிட்டு குறைந்த சம்பளத்தில திகதி மாற்றப்பட்டு) கடைகளுக்கு வரும் அந்த உண்மைகளை செய்த பொடியங்களை கேட்டால் அண்ணை எங்களுக்கு கடன் என்ன எண்டாலும் வேலை தானே என்று அவர்கள் நிலை அப்படி நிறைய நடக்குது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.