Jump to content

அறியாமையென்னும் கொடிய கிருமி - இலங்கையின் வடபுலத்தில் கொரானா தொற்றின் ஆபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - பகுதி 1

இலங்கையின் வடபுலமும் கொடிய கொரானா தொற்றின் ஆபத்தை தொட்டு நிற்கிறது. எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எவையாவது இயல்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மாறாக இருக்கின்றபோது, சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் சமூகத்தின் இயல்பற்ற நடத்தைகளை சரியான முறையில் கையாள முன்வர வேண்டும்.

உலகில் கொரானா தொற்று அதிகரித்த நேரம் சுவிஸும் பெப்ரவரி 25 தொடக்கம் அதன் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்ச் 10  காலப்பகுதியில் குறித்த போதகர் இலங்கைக்கு வருகிறார். 

மார்ச் 9ம் திகதி இத்தாலி, தென்கொரியா, மற்றும் இரானிலிருந்து வந்தவர்களை இலங்கை அரசு தனிமைப்படுத்த தீர்மானித்திருந்தது. அடுத்த நாள் சுவிஸிலிருந்து வந்தவர் என்பதால் எந்தத் தடையுமின்றி நாட்டிற்குள் நுழைகிறார்.  

நாட்டு மக்கள் கொரோனாபற்றி பயந்து கொண்டிருந்த சூழ்நிலையில் எத்தகைய நோய்த்தொற்று சோதனைகளுக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகாமல் மார்ச் 13 அன்று யாழ்ப்பாணம் செல்கிறார். மார்ச் 14 ந் திகதி மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூட அரசால் தடை அறிவிக்கப்படுகிறது. ஆனால் அடுத்த நாள் (மார்ச் 15) எந்தப் பிரச்சினையும் இன்றி அவர் மத பிரச்சார கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த அனுமதிக்கப்படுகிறார். 

அதே நாளில் அசம்பிளி ஒப் கோட் என்ற சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனை யாழ் பிரதேசச் செயலாளரினால் தடுத்து நிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த வடமாகாண ஆளுநரும் அந்த விசேட வழிபாட்டுக் கூட்டம் நடைபெறவிட்டது பொலிசாரின் தவறு என கூறியுள்ளார். பொலிசார்தான் போதகரை பாதுகாத்து பத்திரமாக வழியனுப்பி வைத்ததென்றும் ஆளுநர் கூறியிருந்தார். 

அதே ஆளுநர் சொன்ன வேறு தகவல்தான் முரண்பாடானது. மார்ச் முதலாம் திகதியிலிருந்து அரசு வெளிநாட்டவரை முழுமையாக பரிசோதித்ததாக அவர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால் இவர் முறையான பரிசோதனைக்குட்படாது யாழ்ப்பாணம் சென்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 

ஆனால் மார்ச் மூன்றாம் திகதியிலிருந்து மேலே கூறிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் ஏனைய நாடுகளிலிருந்து வந்தவர்கள் முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்பதே உண்மை. மேலும் விமான நிலையத்தில் அவர்கள் வைத்திருந்தது thermal detector தான். அது காய்ச்சல் இருந்தால்தான் காட்டிக் கொடுக்கும். 

மறுபக்கமோ மக்களாகிய நாமோ அது அரசின் பிரச்சனையென்று புறந்தள்ளிவிட்டு உள்ளூர் அரசியல் பேசிக்கொண்டும் தமிழ் அரசியல்வாதிகளைக் கேலி செய்து கொண்டும் இருந்தோம். ஆமாம், மார்ச் 12 வரை நாம் உள்ளூர் அரசியல்தான் பேசிக் கொண்டிருந்தோம்.

குறித்த மதபோதகர் யாழ் மக்கள் கேட்காமலேயே தானாகவே மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி யாழ் சென்று வெற்றிகரமாக நோயைப் பரிசளித்துவிட்டு சுவீஸ் திரும்பிய பின்னர் அவருக்கு,  நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இலங்கையில் இருந்தபோதே அவருக்கு COVID-19 நோயின் அறிகுறிகள் இருந்துள்ளதாக இப்போது கூறுகிறார்கள். 

பின்னர் அந்தப் போதகர் நோயாளி என்பதை அறிந்த வட மாகாண சுகாதார பணிப்பாளர், குறித்த மதபோதகருடன் பூசையில் கலந்துகொண்ட மக்களை சுயதனிமைப்படுதலுக்கு உட்படும்படி தொடர்பூடகங்கள் மூலம் அறிவுறுத்தியதை அடுத்து யாழ் பொலிஸ் தலைமையகம் வடமாகாண சுகாதார பணிப்பாளரை எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக இதனையும் புறந்தள்ளி விடமுடியுமா என்று தமிழ் மக்கள் மத்தியில் இப்போது எழுப்படும் சந்தேகங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாவது,
நோய்த்தொற்று வேகமாக உலகம் பூராக பரவிய காலத்தில் அதுவும் நாட்டில் கூட்டம் கூட்ட தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில், வேறு ஒரு மதக்கூட்டம் அதேநாளில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இவருக்கு மட்டும் கூட்டம் நடாத்த பொலிசார் அனுமதி வழங்கியது, 

இரண்டாவது, 
மதபோதகர் சுவீஸ் திரும்பிய பின்னர் அவர் கொரானோ நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் எனத் தெரிந்த நிலையில் மக்களை எச்சரித்தமைக்காக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறிலங்கா பொலிசாரால்  எச்சரிக்கப்பட்டமை. 

மூன்றாவது, 
யாழ்ப்பாணத்தில் நோய்த்தொற்றை அடுத்து  வடமாகாணம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டமை. 

கடந்த 70 வருடங்களாக இன ஒதுக்கல்கள், தொடர் திட்டமிடப்பட்ட இன  அழிவுகளைச் சந்தித்த இனம் என்ற வகையில் நாம் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. இம்முறையும் வடமாகாணத்தின் வாசல் மூடப்பட்டதைப் பார்க்கும்போது கடந்த வருட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் வடக்குக் கிழக்கில் தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

இதே நேரம் சுவீஸில் இருந்து யாழ் வந்த மதபோதகரின் தவறான செயல்பாட்டிற்காக ஒருவர் பின்பற்றும் மதத்தை நிந்திப்பது தவறு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவது அவரவர் உரிமை. 

இந்தப் போதகரை நம்புவோருக்கு அவர் சாமியாகத் தெரிந்தாலும், தான்  உண்மையில் ஆசாமிதான் என்பது அவருக்குத் தெரியும். நோயின் அறிகுறிகள் தனக்கு இருந்ததும் தெரியும். ஆனால் கொஞ்சம்கூட சமூகப் பொறுப்புணர்வு இன்றி  நோயைக் காவி வந்து, தன்னை  நம்பி வந்த மக்களுக்கு நோயைக் கொடுத்துவிட்டுச் சென்ற இவரை யார் தண்டிப்பது? எப்படித் தண்டிப்பது? 

அதே நேரம்  இந்த மத போதகரின் தவறான செயற்பாடுகளை மூன்று வருடங்களுக்கு முன்னரே சுவீஸ் தேசிய தொலைகாட்சியில் அம்பலப்படுத்திய பின்னரும் அவரை பின்பற்றும் மக்களை என்ன சொல்வது?

RG
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - 2

மீண்டும் சுவிஸ் போதகர் விவகாரத்தை யாழ்ப்பாண ஊடகங்களும் சமூக வலைதள போராளிகளும் கையில் எடுத்துள்ளனர். அவற்றுள் எவை உண்மையாக இருக்கலாம். அரசு இதனை எவ்வாறும் கையாண்டது என கொஞ்சம் பார்ப்போம்.

நாம் முன்பு கூறியதுபோலவே  சுவிஸ் போதகர் இலங்கைக்குள் வந்த தினத்தில் உண்மையிலேயே இலங்கை அரசு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் செய்திருக்கவில்லை. அவர் மார்ச் 10ம் திகதி வந்தாக சொல்லப்படுகிறது. 

ஆனால் மார்ச் 13 அன்றுதான் ஐரோப்பியர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆக, அவரை இலங்கை வர அனுமதித்தது அரசின் தவறு என்று சொல்லுவது முட்டாள்தனமானதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த குற்றச்சாட்டு  - போதகர் நோயைக் காவி வந்தார் என்பது. துரதிஸ்டவசமாக COVID-19 நோயாளிகள் பலருக்கு தமக்கு நோய் இருப்பதே தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் இரு தவறுகள் உள்ளன.

1. மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பிரார்த்தனையை ஒழுங்கு செய்தது.
2. அரசு மார்ச் 14 ம் திகதியே இவ்வாறான கூட்டங்களைத் தடை செய்த நிலையில் சமூகப் பொறுப்பின்றி அவர் கூட்டம் நடாத்தியது. கூட்டத்தை தடை செய்யாததில் பொலிசாரின் பங்கும் இருக்கிறது.

அவருக்கு நாடு திரும்பும் முன்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரியாலையில் மருந்து எடுத்ததாகவும் தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே பிறபொருள் எதிரிக் குறைபாட்டுநோய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த வடமாகாண ஆளுநரும் அந்த விசேட வழிபாட்டுக் கூட்டம் நடைபெறவிட்டது பொலிசாரின் தவறு என கூறியுள்ளார். போலீசார்தான் போதகரை பாதுகாத்து பத்திரமாக வழியனுப்பி வைத்ததென்றும் ஆளுநர் கூறியிருந்தார். 

உண்மையில் நாட்டில் இப்போது இருப்பது அவரசகால நிலையே. எனவே மேற்படி சூழலில் வடக்கின் ஆளுநருக்கும் சரியான முறையில் செயற்படவேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால் அவர் போலீசாரைக் குற்றவாளியாக்கிவிட்டு தப்பிக் கொள்ளப் பார்க்கிறாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த சந்தேகத்தைத் தருவது அவர் தனது பேட்டியில் அவர் கூறிய இன்னொரு விடயம். ஆளுநர் அதே பேட்டியில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து அரசு வெளிநாட்டவரை முழுமையாக பரிசோதித்ததாக அவர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால் போதகர் எப்படி முறையான பரிசோதனைக்குட்படாது யாழ்ப்பாணம் சென்றது எப்படி என்ற கேள்வி மக்கள் மத்தியில் இயல்பாக எழுகிறது. 

ஆனால் ஆளுநர் சொன்ன அந்தத் தகவல் உண்மையில்லை என்றே தெரிகிறது. மார்ச் மூன்றாம் திகதியிலிருந்து ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் ஏனைய நாடுகளிலிருந்து வந்தவர்கள் முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்பதே உண்மை. 

மேலும் விமான நிலையத்தில் அவர்கள் வைத்திருந்தது thermal detector தான். அது காய்ச்சல் இருந்தால்தான் காட்டிக் கொடுக்கும். (அரசு COVID-19 தொடர்பாக விடுத்த அறிவுறுத்தல்கள், நடவடிக்கைகளின் தொகுப்பை இணைப்பில் பார்க்கவும்.)

அப்படியானால் ஏன் ஆளுநர் மார்ச் முதலாம் திகதியிலிருந்து முறையான நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லுகிறார்? இதன்மூலம் அரசு சரியாகத்தான் இயங்குகிறது. பொலிசார்தான் சரியில்லை என்கிறாரா? பொலிசார் அரசின் அங்கம் இல்லையா? 

இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அண்மைக்காலமாக பொலிசாரின் பல கடமைகளுக்குள் இராணுவப் பொலிசாரும் இராணுவத்தினரும் உட்செல்லுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலும், நடந்த சம்பவங்களைப் பயன்படுத்தி பொலிசாரின் பலவீனங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் கைகளில் மீண்டும் வடக்கு கிழக்கை ஒப்படைக்க அரசு காய் நகர்த்துகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்னொரு விடயம் சுகாதாரப் பணிப்பாளர் சம்பந்தப்பட்டது. சுவிஸ் போதகர்  நோயாளி என்பதை அறிந்த வட மாகாண சுகாதார பணிப்பாளர், குறித்த மதபோதகருடன் பூசையில் கலந்துகொண்ட மக்களை சுயதனிமைப்படுதலுக்கு உட்படும்படி தொடர்பூடகங்கள் மூலம் அறிவுறுத்தியதை அடுத்து யாழ் பொலிஸ் தலைமையகம் வடமாகாண சுகாதார பணிப்பாளரை எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக சிங்கள தொலைகாட்சியில் நேரலையில் வந்த வடமாகாண பொலிஸ் அதிகாரி சுவிஸ் போதகருக்கு நோய்த் தொற்று இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். இதில் முரண்பாடான விடயம் என்னவென்றால் இவ்வாறு ஊடகங்களுக்கு போலீஸ் ஊடகப் பேச்சாளர்தான் கருத்து தெரிவிக்க முடியும். இவர் ஊடகங்களுக்கு பேட்டி தர எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்? 

இதில் வேடிக்கை என்னவென்றால் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுவிஸ் போதகருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மார்ச் 23ம் திகதி கூறியதாக ஆசியா நெட் தெரிவித்திருக்கிறது. ஆம், இதனை ஒரு தமிழர் சொல்லவில்லை, ஒரு சிங்களவர் அதுவும் இலங்கையின் இராணுவத் தளபதி கூறியிருக்கிறார். அப்படியானால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்??

அதுதவிர அவருக்காகப் பிரார்த்திக்கும்படி அவருடைய சபையின் துணைப் போதகர், போதகர் போல் சற்குணராஜா கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அவருக்காகப் பிரார்த்திக்கும்படியும் சமூக வலைத் தளங்களில் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் COVID-19 தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அப்படியென்றால் முன்பு வந்த செய்திகள் பொய்யா? அது பொய் என்றால் பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்மீது வதந்தி பரப்பியதாக ஏன் அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வாறு இந்த ஒருவிடயத்தையே தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக்கிவிட்டு சத்தமில்லாமல், மிருசுவிலில் குழந்தைகள் உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களை கழுத்தறுத்து கொலைசெய்து தூக்குத் தண்டனை பெற்ற கைதியான முன்னர் ராணுவவீரர் நாட்டின் தலைவரால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதற்காகத்தான் சுவிஸ் போகதர் விடயத்தில் தமிழ் மக்களைத் திசைதிருப்பி குழப்பி விட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 

மொத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து பலவாறாக மக்களைக் குழப்பி தமக்குத் தேவையானவற்றை அரசு செய்துகொள்வது போலவே தெரிகிறது. ஏற்கனவே COVID-19 கட்டுப்பாடு நிர்வாகம் இராணுவத்தின் கட்டுப்பாடுக்குள் சென்றுள்ளது.  

இவ்வாறான தந்திரங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்திலும் தமக்குத் தேவையான வகையில் வடக்குக் கிழக்கை நிர்வகிப்பதற்கான ஆயத்த வேலையும் நடக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. மறுபுறம் வடக்கில் இயங்கும் சில ஊடகங்களும் தனிமனிதர்களும் எதனையும் சரியாக ஆராயாது கண்டபடி வார்த்தைகளால் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - 3

அண்மைக் காலமாக இயேசுவின் பெயரால் பல சபைகள் புதிது புதிதாக முளைத்து பைபிளின் அடிப்படைத் தத்துவங்களையும் தமக்கேற்றவாறு மாற்றி எழுதி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன. அவற்றுள் சில நீண்டகாலமாகவே இலங்கையில் இயங்குகின்றன. 

அதற்கு நிகராக பக்கத்து நாடான இந்தியாவில் இயங்கும் பல புதிய இந்து அமைப்புக்களின் செல்வாக்கு இலங்கையிலும் அவற்றின் கிளைகள் உருவாக வழி சமைத்துள்ளது. 

இவ்வாறான புதிய அமைப்புக்கள் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவித் தமிழ் மக்களைப் பிறழ்ந்த சமூகமாக அல்லது திசைமாறிய சமூகமாக மாற்ற முற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றன.

இவ்வாறான அமைப்புகள் அல்லது தனிமனிதர்களின் பின்னால் மக்கள் மந்தைகளாக செல்வதற்கு அவர்களின் வறுமை மற்றும் இயலாமையினால் ஏற்பட்ட கையறுநிலை, அறியாமை என்பன பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. அதைத் தவிர தாம் பின்பற்றிய சமயத்தைப்பற்றி ஆழமான அறிவின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.

சில புதிய கிறிஸ்தவ அமைப்புக்கள் மக்களை மதம் மாற்றுவதில் குறியாக இருக்க, அவர்கள் மதம் மாற்றுவதை தடுக்கிறேன் என்று சில இந்து அமைப்புக்கள் கிளம்பி தமிழ் மக்களிடையே மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கின்றன. அதிலும் குறிப்பாக மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட சிவசேனை அமைப்பு தமிழ் கட்சிகளுக்குள்ளும் ஊடுருவி கட்சிக்குள் மதவாதம் பேசமுனைவது மிகவும் ஆபத்தானது. 

இவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றைத்தான். அது – என் பின்னே நின்று நான் சொல்வதைக் கேட்டால், நான் சொல்வதைச் செய்தால் மட்டுமே நீங்கள் கடவுளை அடையமுடியும் என்பதுதான். இதுவே இவ்வாறான தலைவர்களை பலமிக்கவர்களாக மாற்றிவிடுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இப்படியான சில இந்து கிறீஸ்தவ அமைப்புகளின் செயற்பாடுகள் அசாதாரணமாக அமைந்திருப்பதும் தமிழ் மக்களின் ஒற்றுமையைத் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கி வருவதும் கவலை தருகிறது.

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.