Jump to content

இலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு.

 
 
நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது.
 
இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர்.
 
மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது .
 

இலங்கையில் பரவிய, போலி செய்தி - மஞ்சள் நீரில் குளித்து அல்லல்பட்ட ஆண்கள்

 
இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
 
சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.
 
நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.
 
இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.
 
சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
 
 
பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவமானது, இன்று அதிகாலை முதல் பாரிய பரபரப்பை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
 
அதனைத்தொடர்ந்து, உள்நாட்டு ஊடகங்கள் சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி, இன்று அதிகாலை செய்திகளில் உண்மை தன்மையை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
போலீஸார் பதில்
 
நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் இறக்குமதி செய்யும் முதலாலியை பிடித்தால் தொரியும்,யார் இதை பரப்பினார்களென்று😀

Link to comment
Share on other sites

அப்படியே விழுந்திருந்தாலும் அதுக்கு என்ன இப்ப. ஒரு சிறந்த கட்டிட ஒப்பந்தகாரரிடம்   கொடுத்தால் திரும்பவும் இருந்ததை விட அழகாக நவீன தொழில்நுட்பத்துடன்  கட்டித்தருவார் தானே.  

Link to comment
Share on other sites

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

இந்த தரங்கெட்ட ஊடகங்கள் சொல்ற மாதிரி அப்பிடி யாரும் பதட்டப்படவும் இல்லையாம் மஞ்சள் நீரில் குளிக்கவும் இல்லையாம்.
அதைவிட ஜோக் என்னென்டா மஞ்சள் நீரில் குளிச்ச ஆட்களுக்கு பாதிப்பு என்டு தரங்கெட்ட ஊடகங்கள் விடுற ரீல்.

இதுவும் கடந்து போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

அப்படியே விழுந்திருந்தாலும் அதுக்கு என்ன இப்ப. ஒரு சிறந்த கட்டிட ஒப்பந்தகாரரிடம்   கொடுத்தால் திரும்பவும் இருந்ததை விட அழகாக நவீன தொழில்நுட்பத்துடன்  கட்டித்தருவார் தானே.  

அப்படி ஓர் சம்பவமும் நடக்கவில்லை அதற்குள் ஓப்பந்தக்காரர் வரை போயாச்சு

40 minutes ago, Rajesh said:

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

இந்த தரங்கெட்ட ஊடகங்கள் சொல்ற மாதிரி அப்பிடி யாரும் பதட்டப்படவும் இல்லையாம் மஞ்சள் நீரில் குளிக்கவும் இல்லையாம்.
அதைவிட ஜோக் என்னென்டா மஞ்சள் நீரில் குளிச்ச ஆட்களுக்கு பாதிப்பு என்டு தரங்கெட்ட ஊடகங்கள் விடுற ரீல்.

இதுவும் கடந்து போகும்.

ஊரில் மஞ்சள் வைத்து குளிப்பது வழைமையே, இதனால் என்ன பாதிப்பு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

எப்பிடி இந்த செய்தி போலியோ அதுபோலத் தான் மடவல, ஜப்னாமுஸ்லீம் செய்திகளும் போலியாம்.
இந்த இரண்டு ஊடகங்களும் தரங்கெட்ட ஆட்களால நடத்தப்படுற தரங்கெட்ட ஊடகங்கள் என்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.

வதந்திகள்தான்.

ஆனால் பிபிசி தமிழில் வந்ததை சுட்டு நன்றி கூட போடாமல் தமது செய்தியாக மடவல, ஜப்னாமுஸ்லீம் தளங்கள் போட்டுள்ளன. 

 

கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்

கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Getty Images சித்தரிப்புக்காக

இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது. 

நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது. 

இந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் தமது வீடுகளிலுள்ள ஆண்களை அதிகாலையில் எழுப்பி, நீராடச் செய்து வீட்டு முற்றத்திற்கு மஞ்சள் நீர் தெளித்து, வீட்டு ஆண்களை ஆர்த்தி எடுத்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. 

சில ஆண்களை மஞ்சள் நீரில் நீராடச் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

பல ஆண்கள் அதிகாலை வேளையிலேயே குளித்து வீட்டுக்குள் பூஜைகளை நடத்தி வரவழைக்கப்பட்டதாக இதனால் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவமானது, இன்று அதிகாலை முதல் பாரிய பரபரப்பை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. 

கொரோனாவுக்கு மத்தியில் இப்படியும் வதந்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Facebook

அதனைத்தொடர்ந்து, உள்நாட்டு ஊடகங்கள் சம்பவம் தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையிடம் விடயங்களை வினவி, இன்று அதிகாலை செய்திகளில் உண்மை தன்மையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கையில் பகிரப்பட்ட மீம்கள் இலங்கையில் பகிரப்பட்ட மீம்கள்

குறித்த சம்பவம் வதந்தி என அறிந்துகொண்ட மக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதனை கேலி செய்து பகிர்ந்து வருகின்றனர். 

கொரோனாவுக்கு மத்தியில் இப்படியும் வதந்தி - இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்Vikcy Facebook

போலீஸார் பதில் 

நாட்டில் குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலி வதந்திகளைப் பரப்புவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. 

 

 

https://www.bbc.com/tamil/sri-lanka-52074059

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

பிபிசி தமிழில் வந்ததை

பிபிசி தமிழும் ஒரு தரங்கெட்ட ஊடகமாக மாறி சில வருடங்கள் ஆகுது.
அவங்கட 95% ஆன தமிழ் செய்திகளும் தலைப்புகளும் பதியப்படும் விதம் பல தரங்கெட்ட ஊடகங்களை விட கேவலமான நிலைல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் போலியாக இருந்தாலும் மஞ்சள் என்பது நல்லவிடயம்தானே.அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும்  மருத்துவர்களும் மஞ்சளை சிறந்த நோய் நிவாரணியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
மஞ்சளை எமது சைவ/இந்து சமயயத்திலும் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.அதன் தார்ப்பரியங்களை மத ரீதியாக எமது முன்னோர்கள் அறிந்து  எமக்கு விட்டுச்சென்றது இவ்வுலகிற்கு பெரும் கொடை.

Kurkuma - Herkunft und Verwendung | Suppenhandel.de

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எமது சைவ/இந்து சமயயத்திலும்

சைவ சமயம் எமது.

இந்து மதம் எமதல்ல. 

சைவ சமயம் இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை பல ஆராச்சியாளர்கள் கண்டறிந்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர். பல நூற்றாண்டு காலங்களாக இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பல அரசர்களும் தமிழர்களை ஆண்டு வந்ததால்.... அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பதற்கிணங்க தமிழ் குடிகளும் தங்களை இந்துக்களாகவே கருதி அதனைத் தங்கள் மரபுவழியாக்கிக் கொண்டனர்.

அரசன் ஆட்சிமாறி மக்களாட்சி வந்ததும் தமிழ்குடிகளும் தாங்கள் இந்துமதத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை அறிந்து உணரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு, அதனின்றும் வெளிவரத் தொடங்கவே, அதனைத் தடுப்பதற்கு, இந்துமதவாதிகள், தங்களாலான அனைத்தையும் மேற்கொண்டு வருவது கண்கூடு. மேற்கண்ட தரங்கெட்ட வேலைகளை இவர்கள் மேற்கொள்வதற்கு, தமிழர்களிலிருந்து வேற்று மதங்களுக்கு மாறிய ஒருசிலரின் செயற்பாடுகளும் உதவிநிற்பதால் இத்தகய கேவலங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.    

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

சைவ சமயம் எமது.

இந்து மதம் எமதல்ல. 

சைவ சமயம் இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை பல ஆராச்சியாளர்கள் கண்டறிந்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றனர். பல நூற்றாண்டு காலங்களாக இந்து மதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பல அரசர்களும் தமிழர்களை ஆண்டு வந்ததால்.... அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்பதற்கிணங்க தமிழ் குடிகளும் தங்களை இந்துக்களாகவே கருதி அதனைத் தங்கள் மரபுவழியாக்கிக் கொண்டனர்.

அரசன் ஆட்சிமாறி மக்களாட்சி வந்ததும் தமிழ்குடிகளும் தாங்கள் இந்துமதத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதை அறிந்து உணரக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு, அதனின்றும் வெளிவரத் தொடங்கவே, அதனைத் தடுப்பதற்கு, இந்துமதவாதிகள், தங்களாலான அனைத்தையும் மேற்கொண்டு வருவது கண்கூடு. மேற்கண்ட தரங்கெட்ட வேலைகளை இவர்கள் மேற்கொள்வதற்கு, தமிழர்களிலிருந்து வேற்று மதங்களுக்கு மாறிய ஒருசிலரின் செயற்பாடுகளும் உதவிநிற்பதால் இத்தகய கேவலங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.    

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

சைவ சமயத்தவர்கள்தான் தெளிவான விளக்கத்தைத் தர முடியும்.🙂

Link to comment
Share on other sites

இவ்வாறான வதந்திகள் பின்விளைவுகளை சிந்திக்கும் வலுவற்ற நபர்களால் பொறுப்பற்ற விதத்தில் உருவாக்கப்படுகின்றன *****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

மதத்தை மட்டும் மாற்றவில்லை ......
ஒரு கிருமி போல கூடவே இருந்து 
எமது செம்மொழியான தமிழுக்குள் சம்ஸ்கிருதத்தை கலந்தது 
முன்னைய நாளில் ஏடுகள் ஓலைகளை கோவிலில் வைத்தே காத்து வந்துள்ளனர் 
கி.பி 600-1000 பகுதியில்தான் இந்த பார்ப்பான் வந்து எமது கோவில்களை கைப்பற்றி இருக்கிறான் 
அப்போது கோவிலில் இருந்த தமிழ் ஓலைகள் எல்லாவற்றையும் திருடி அழித்து இருக்கிறான் 
பின்பு ஓலைகளில் இருந் கதைகளை புனைந்துதான் இந்த கேவலமான கதைகளை 
உருவாக்கி இருக்கிறான்.அப்படிதான் முருகன் சுப்ரமணியாகி இருக்கிறார் 
முருகனுக்கு இரண்டு மனைவிகள் இல்லை 
ஒவையார்களில் ஒருவர் முருகன் ஆடசிகாலத்தில் வாழ்ந்து  அவனது ஆடசியை போற்றி பாடிக்கொண்டு 
இருக்கும்போதே இரண்டாம் முருகன் சிறுவனாகவும் இருக்கிறான் 
இரண்டாம் முருகனின் மனைவிதான் வள்ளி..... இவர்கள் ஒரு காலத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஆட்ச்சியை இழந்து வனங்களில் வாழ்கிறார்கள் ......... பின்புதான் இரண்டாம் முருகன் போர் புரிந்து 
மீண்டும் தமிழர்களின் ஆடசியை நிலைநாட்டி இருக்கிறான். 
வள்ளியை குறத்தி ஆகியது பார்ப்பான்தான் ........ இவர்கள் வனத்தில் இருக்கும்போதுதான் இந்த திருமணம் நடந்து இருந்ததால்  அவளை குறத்தி ஆக்கி இருக்கிறார்கள் 

1 minute ago, putthan said:

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

நான் இந்த பக்க விளைவுகளுடனேயே வாழ பழகி கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:
10 hours ago, Paanch said:

சைவ சமயம் எமது.

இந்து மதம் எமதல்ல. 

 

8 hours ago, tulpen said:

உண்மைதான் பாஞ்ச். மருதங்கேணி அடிக்கடி இங்கு  சொல்வது போல சைவமதம் என்றால் என்ன என்றே யாருக்கும்  தெரியாத அளவுக்கு இந்து  மதம் என்ற நச்சு மதம் அதனை விழுங்கி அறிவுக்கு சற்றும்  ஒவ்வாத கேவலமான  பழக்கங்களை மக்களுக்கு பரப்பி சைவமதத்தையும்  கேவலப்படுத்தி விட்டது.  

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள் ? 

கிறீத்தவம், இசுலாம், யூதாயிசம் என்பன மத்திய கிழக்கு நாடுகளுக்குரியது. பெளத்தமும் , சைவமும் தென் இந்திய கண்டத்திற்குரியது. இந்து மதம் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப் பட்டது.

தமிழர்களின் சமயங்கள் என சைவம் வைணவம் என சிலவற்றைச் சொல்லலாம். எல்லாக் கண்டங்களிலும் ஒவ்வொரு நாகரீகங்களும் தமக்கேயுரித்தான சிறப்பம்சங்களுடன் தமக்கென சமய வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. 

ஆனால் ஏறக் குறைய எல்லா நாகரீகங்களிலும் சூரியனை வழிபட்டனர். 🌞

Link to comment
Share on other sites

10 hours ago, putthan said:

பரிகாரம் சிவப்பு நீரை அருந்த வேண்டும் தொடர்ந்து 108 நாள்

சிவப்பு நீர் என்று நீங்கள் கூறுவது ரெட் வைனைத் தானே புத்தன். 

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

நான் இங்கு கூற வந்த விடயம் சைவ மதத்தில் என்ன தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது என்பது தெரியாத அளவுக்கு இந்து மதத்தின் அடிமூடத்தனங்கள் அதன் மீது  பார்பனத் திருடர்களல்  திணிக்கப்பட்டு விட்டது.  அதனால் தான் சைவ/இந்து என்று இந்து மத அடிமூடத்தனங்களை எமது பாரம்பரியங்களக காட்ட முனைகின்றனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

சிவப்பு நீர் என்று நீங்கள் கூறுவது ரெட் வைனைத் தானே புத்தன். 

 

ரெட் வைன் உக்கிரம் குறைவானது, "சிவா"ஸ்  உக்கிரம்  அதிகம்

Link to comment
Share on other sites

11 hours ago, Maruthankerny said:

மிகுந்த தாமதம் ......
குளிர் என்றும் பாராமல் நான் ஏற்கனவே மஞ்சள் நீர் ஆடிவிட்டேன் 

ஆண்கள் மஞ்சள் நீர் ஆடுவதால் ஏதும் பக்க விளைவு இருப்பின் 
அதுக்கு ஏதும் பரிகாரம் உண்டோ? 

அடிக்கடி டாக்டரிடம் சென்று  கருவுற்று  உள்ளீர்களா என்று செக் பண்ணி பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

😕,
உங்கள் கருத்துபடி சைவ மதம் உயர்ந்த மதம். கெட்ட இந்து மதம் அதனை கெடுத்துவிட்டது. முன்பு தமிழர்கள்  சமண மதத்தை பெரிதும் பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்றும், பவுத்த மதத்தை பின்பற்றினார்கள் சைவ சமயம் அதனை விழுங்கிவிட்டது என்று நம்புகிறவவர்கள் தமிழ்நாட்டில் இலங்கையிலும் உள்ளார்கள். அதே போல் கிறிஸ்தவ மதம் எமது. இந்து மதம் எமதல்ல
இஸ்லாம் மதம் எமது இந்து மதம் எமதல்ல என்றும் சொல்கிறார்கள்.

இந்து மதம் என்றால் என்ன?
உங்களால் அல்லது அதுக்கு முண்டு கொடுக்கும் யாராலும் 
கொஞ்சம் விளக்கமாக எழுதமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே சிவம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.