Jump to content

நேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.


Recommended Posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது.

அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும்.

ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இம்முயற்சி மூலம் உருவாக்கியுள்ளோம்.

இயற்கையோடு இணைந்த வாழ்வும் அதன் அவசியமும் இந்நிலம் மூலம் உருவாக வேண்டுமென்ற நம்பிக்கையோடு நகர்கிறோம்.

முதற்கட்டம் தேவைப்பட்ட நிதியுதவி - 436000.00ரூபா.
மூலிகைத் தோட்ட உருவாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை நல்கியவர்கள்:-
பேரம்பலம் - 600யூரோ.
பிரித்தானிய
Tamil Community Centre Hillingdon   நிறுவனத்தினர் 52310.00 ரூபா
யாழ்கவி 33780.00 ரூபா
கொக்குவிலான் 560யூரோ.
கனடாவிலிருந்து சுரேஸ் , ரவி - 157350.00ரூபா

ஆரம்பகட்ட உதவிகளின் பின்னர் உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அதன் பின்னர் பிரித்தானியாவில் வாழும் உறவு பேரம்பலம் ஐயா அவர்களது பங்களிப்பும் எனது பங்களிப்போடும் தொடர்ந்து மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வந்தது. இக்கால இடைவெளியில்  ஒரு வைத்தியரை உருவாக்கத் தேவையான நிதியுதவியில் ஒரு பகுதியை பேரம்பலம் ஐயா அவர்கள் தந்துதவினார். குறித்த வைத்தியத்தின் மேலதிக கற்கைக்கு குறித்த நபரை 3மாதம் இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியிருந்தோம்.

2017ம் ஆண்டு வசதிகள் பெருமளவு இல்லாத நிலையில் எம்மால் உருவாக்கப்பட்ட  மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்யத் தொடங்கினோம். தற்போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. எனினும் சிகிச்சை பெற வருவோருக்கான தங்கிடம் மலசலகூடம் வைத்தியம் செய்வதற்கான கட்டட வசதிகள் இல்லாத போதிலும் மரங்களின் கீழ் பயனாளிகளை வைத்து வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் 60பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிகிச்சை வழங்கப்படும் நோய்கள் வரிசை வருமாறு :-
நீரிழிவு , கொலஸ்ரோல்    
வாதங்கள்    80 வாதங்கள், (முடக்கு வாதம், திமிர் வாதம், கிரந்திவாதம் )
இதயக்கோளாறுகள்    இதய இரத்தக்குளாய் அடைப்புகள், இதய பலவீனம்
கிரந்தி வகைகள்    புடர்தாமரை, சோரியாசிஸ்,வாரி,ஆறாத காயங்கள். ஓவ்வாமை
முறிவு தறிவு    எலும்பு முறிவுகள், முள்ளந்தண்டு கோளாறுகள், சில்லு விலகல்கள்
கண்நோய்    கண் கிரந்தி, பார்வை குறைவு
சுவாச நோய்கள்    ஆஸ்மா, காசம், வறட்டு இருமல்
தலை நோய்கள்    தலை வலி, ஒற்றை தலைவலி, தலையில் நரம்பு அடைப்புக்கள்
உன்மந்தம்    16வகையான மனநோய்களுக்கான வைத்தியம்.
புற்றுநோய் .

ஏழுவருட முயற்சியின் வளர்ச்சியை இவ்வளவே எம்மால் கொண்டுவர முடிந்துள்ளது. இதுவொரு நீண்டகால திட்டமாகும். சித்தஆயுர்வேத நிலத்தில் மலசலகூடம் , தண்ணீர் வசதி , மருத்துவக் கொட்டகை , தூரத்திலிருந்து சிகிச்சைக்கு வருவோருக்கான தங்கிடம் போன்றவற்றை அமைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

அத்தோடு 10மாணவர்களை ஆயுர்வேத கற்கையை கற்பதற்காக தெரிவு செய்துள்ளோம். இம்மாணவர்கள் பாடசாலைக்கல்வியை தொடர்ந்தபடி ஆயுர்வேத மருத்துவத்தையும் கற்கவுள்ளனர். இரண்டுவருட கற்றல் நெறிக்கான கற்றலில் இணையும் ஒரு மாணவருக்கான மாதாந்தம் செலவு 8ஆயிரம் இலங்கை ரூபாய்.

இவர்களது குடும்ப பொருளாதார நிலமையானது வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதால் கல்வியில் கெட்டிக்காரர்களாக இருந்தும் குடும்ப நிலமை இவர்களை கூலித்தொழிலாளர்களாக மாற்றும் நிலமையே காணப்படுகிறது. இம்மாணவர்களுக்கான சிறந்த கல்வியைக் கொடுக்கும் சமநேரம் ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்பிக்க விரும்புகிறோம். ஓரு பிள்ளையைப் பொறுப்பேற்று கல்விக்காக நீங்கள் உதவும் உதவியானது ஒரு சந்ததியின் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.


உதவ விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
சாந்தி நேசக்கரம் யேர்மனி
தொலைபேசியிலக்கம் 0049 1521 6758149 (whatsapp & viber)

Email : - nesakkaram@gmal.com

ஆயுர்வேத மூலிகைத்தோட்டம் உருவாக்கம் தொடக்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்.

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

இதுவா....

இதுவே தான் இதன் இணைப்பை தேடினேன். எடுக்க முடியாமல் இருந்தது. இணைப்பை தந்தமைக்கு நன்றி மீரா.

2 hours ago, பையன்26 said:

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

நன்றி பையா, உங்கள் உதவி மலசலகூடம் கட்ட பயன்படுத்தப்படும். விபரங்கள் தனிமடலில் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்களாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் இங்கு நான் நீக்கியதை மீண்டும் இணைக் முடியுமா,,,,?

 

(சில விளக்கம் குறைந்தவர்களுக்காக)

என்ன எழுதினேன் என்று எனக்கு தெரியும்

Link to comment
Share on other sites

On 3/28/2020 at 12:18 PM, பையன்26 said:

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.

On 3/28/2020 at 3:14 PM, nilmini said:

உங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்களாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் 

வணக்கம் நில்மினி,
பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால்  வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

சித்த ஆயுர்வேதம் மட்டக்களப்பு அறிமுகம். 2019ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளி இது.

https://youtu.be/QVNlnqtfz90

https://youtu.be/QVNlnqtfz90

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.

வணக்கம் நில்மினி,
பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால்  வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.

xoom.com மூலமாக வங்கிக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன் சாந்தி . whatsApp க்கு விபரத்தை அனுப்பவும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.