Jump to content

`ஊர் எல்லையில் செக்போஸ்ட்; கை கழுவிய பிறகே அனுமதி!' - கொரோனாவைத் தடுக்கக் களமிறங்கிய தஞ்சை கிராமம்


Recommended Posts

எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம்.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் உள்ள நுழைவாயில்களில் செக் போஸ்ட் அமைத்து அதில் இரண்டு பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், யார் ஊருக்குள் வந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

vikatan%2F2020-03%2Fe1318c41-f602-4b16-9a07-14658117d362%2F3aa4c1ed_35d9_492c_9d58_48272b277566.jpg?rect=0%2C113%2C1276%2C718&w=480&auto=format%2Ccompress

 

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் என்ற கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்தக் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் வரும் நபர்களிடம், எப்படி இருந்தால் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்றும் எடுத்துக் கூறி அசத்துகின்றனர்.

இதுகுறித்து புதூர் மக்கள் சிலரிடம் பேசினோம், `` உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது. இதைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களாகிய நாம் அதற்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்த வகையில் எங்கள் ஊரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கொரோனா பரவாமல் காக்கும் விதமான செயல்களைச் செய்ய முடிவெடுத்தோம். அதன்படி முதலில் எங்கள் ஊரில் உள்ள நான்கு நுழைவாயில்களில் செக்போஸ்ட் அமைத்து அதில் எப்போதும் இரண்டு பேர் வீதம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வைத்தோம்.

அத்துடன் செக்போஸ்ட்டிலேயே மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்த தண்ணீர் ஒரு கேனில் வைக்கப்பட்டிருக்கும். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம்.

ஒரு சிலர், `ஏங்க இங்கெல்லாம் கொரோனா வருமா?' எனக் கேட்கின்றனர். அவர்களிடம் அதன் விபரீதத்தை எடுத்துக் கூறி எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவோம். வெளியூரிலிருந்து வரும் நபர்களிடம், `எதற்காக இங்கு வர்றீங்க யார் வீட்டுக்குப் போறீங்க?' என்கிற விவரத்தைக் கேட்டு அவர்களின் முகவரி மற்றும் செல் நம்பர் ஆகியவற்றையும் நோட்டில் குறித்து வைக்கிறோம்.

எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஊரின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னலத்தோடு ஆர்வமுடன் இதைச் செய்து வருகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வருமுன் காப்பதுதான் சிறந்த தீர்வு, வந்தபின் புலம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து செய்து வருகிறோம்.

விவசாயிகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு என்பது அதிகமாக இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில், கொரோனா பரவாமல் காக்கும் வகையில் இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் எங்களின் இந்தச் செயலைப் பாராட்டி வருவதாகத் தெரிவித்தனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-village-people-awareness-work-against-corona

 

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஊரின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னலத்தோடு ஆர்வமுடன் இதைச் செய்து வருகின்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வருமுன் காப்பதுதான் சிறந்த தீர்வு, வந்தபின் புலம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நாளிலிருந்து செய்து வருகிறோம்.

தமிழக, தமிழீழ கிராமங்கள் இப்படி இந்த முன்மாதிரியை பின்பற்றவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.