Jump to content

லண்டனில் இலங்கையைர் பலி


Recommended Posts

லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Feltham  பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

corona_death_main.jpg

 

லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/78850

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் 2 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி ; வெளிநாடுகளில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற ஓய்வுபெற்ற வைத்தியர் ஆவார்.

இதேவேளை, நேற்றையதினம் லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்ஷான் விஜேரத்ன என்பவர் லண்டனின் ஃபெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வைரஸினால் பீடிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இங்கிலாந்தில் மரணமடைந்த ஓய்வுபெற்ற வைத்தியருடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் 2 மரணங்களும் சுவிற்சர்லாந்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த 59 வயதான நபரே இவ்வாறு கொரோனா வைரஸ் காரணமாக சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

https://www.virakesari.lk/article/78855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

இங்கிலாந்தில் 2 மரணங்களும் சுவிற்சர்லாந்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பிரான்சில் இருவர் மரணமானதாக எங்கோ பார்த்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

corona-dead-2.jpg

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் இலங்கையர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்றுவந்த பெல்தம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களில் சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளில் மேலும் 260 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது வெள்ளிக்கிழமை 759 ஆக இருந்தது என்றும் தற்போது 1,019 ஐ எட்டியுள்ளது என பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது 17,089 பேர் கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்று-காரண/

###############    ##############   ###############   #############

Corona-Virus-Medicine.jpg

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 2ஆவது இலங்கையர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் பெல்தம் பகுதியில் நேற்று உயிரிழந்தார்.

மேலும் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ். புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிஸிற்கு சென்ற 59 வயதான நபரே கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் மரணமடைந்த ஓய்வுபெற்ற வைத்தியருடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸினால்-பிரித்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் இலங்கையர், கொரோனாவுக்கு மரணம்

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg

 

நோர்வேயில் இலங்கையைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர் கோரோனா தாக்கி உயிரிந்துள்ளார்

 

இவர் யாப்பாணம் - காங்கேசன்துறையைச் சேர்ந்தவரென அறிய வருகிறது

 

http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_603.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

ஆத்மா சாந்தியடையட்டும் ...தமிழாக்கள் சும்மா காசு ,காசு என்று ஓடாமல் வீட்டில் இருங்கோ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.