Jump to content
  • 0

கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?


குமாரசாமி

கோவிட் 19 குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Question

  • கருத்துக்கள உறவுகள்


கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? 

கொரோனா இந்த உலகையே பிரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாடுகளும் நாளைய பொழுது எப்படியிருக்குமென்ற நிலை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா குணமாகிய பின் உலகம் எப்படியிருக்குமென வாக்களித்து கருத்துக்களையும் வையுங்கள். 

Link to comment
Share on other sites

12 answers to this question

Recommended Posts

இயற்கையின் படைப்பில் உயிர்கள் அனைத்தும் இத்யாதி குணம் கொண்டிருந்தாலும் தங்கள் சந்ததிகள் நலமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறைகொள்வதைக் காணலாம். கோத்தபாயவின் சித்தமும் தன்பிள்ளைகள் நலமே வாழவேண்டும் என்பதில்தான் அக்கறை கொள்ளும். ஆகவே....

நான் முதல் இரண்டையும் தெரிவு செய்தேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி இருந்ததை  விட  கொஞ்சம் திருந்தி இருப்பார்கள்... குறைந்தது கை கழுவும் பழக்கமாவது  ஒட்டிக் கொள்ளும்...ஒவ்வொரு நிறுவனங்களும் சுத்தம் ,சுகாதாரம் ,தூய்மை போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுப்பார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்..

இவர்களை, குறிப்பாக 'ஆசியக் கண்டத்தவர்'களை ஆயிரம் கொரானா வந்தாலும் திருத்த முடியாது. tw_glasses:

(அது சரி, என்ன ஓட்டெடுப்புகளில் இறங்கிவிட்டீர்கள்..? பொழுது போகலை..? :))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் அமெரிக்கா முழுவதையும் உள்ள கொரோனா நோயாளர்களை விட கூடுதலானவர்கள் ஏன் மூன்றில் ஒரு பகுதியானவர்கள் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
நாளாந்தம் விழிப்புணர்வைப் பற்றி தொலைக்காட்சி வானொலி பத்திரிக்கைகள் என்று மாறிமாறி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
முதியவர்கள் ஆடிப்போய் வீட்டில் இருக்கிறார்களே தவிர அனேகமான இளையோர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டே திரிகிறார்கள்.
இதனாலேயே அமெரிக்கா மிகவும் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

கண்ணுக்கு முன்னாலேயே ஒவ்வொரு நாளும் சனம் மடிவதைப் பார்த்தும் அடங்கி இருக்காதவர்கள் நாளை இயல்புநிலை வந்த பின் கொரோனாவைப் பற்றியா யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே எனது வாக்கு
முன்பு இருந்தது போல பழைய நிலைக்கு திரும்புவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

இதையே எங்கடை சனம் செய்திருந்தால் கழுவி ஊத்தியிருப்பம்.
வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டால் சனம் எங்க கேக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்.

தக்கன பிழைக்கும்!!

கொலோரா, பிளேக் கொள்ளை நோய், தொழுநோய், காசநோய்: பாக்டீரியா மனிதர்களை கொன்றொழித்த காலமும் இருந்தது. 

அது கொன்ற தொகைக்கு அருகில் கூட வைரசு ஒருபோதும் வரவில்லை.

மனிதன் இறுதியில் வென்றான். இன்று பாக்டீரியாவினால் பயம் இல்லை. பிராங்கிளினின் பென்சிலினும், பாஸ்டரின் நுண்ணுயிரிலும் மனிதனின் பெரு வெற்றி.

அடிக்கடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வதால், மனிதனின் பிடிக்குள் வைரஸ் இன்னும் சிக்கவில்லை.

ஆனாலும் இந்த மாத்தி அமைத்துக் கொள்ளும் தன்மையினாலேயே மனிதனும் தப்பித் பிழைக்கின்றான். 

எத்தனை வித்தியாசமான வடிவங்கள் எடுக்கும் என்பதே மனிதனின் பொறுமையான அவதானிப்பு. 

அது முடிந்தால், வைரசுவும் அடக்கப்படும்.

Link to comment
Share on other sites

"" முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்."" 

மனிதர்கள் இயல்பாகவே மறக்கும் குணத்தையும், அதிகளவு ஆசையும் கொண்டவர்கள். 

ஆகையால். அடுத்தே வைரஸ் வரும் வரை, அதி அடுத்த 20-50 வருடங்களும் எடுக்கலாம், மனிதன் மீண்டும் ஆசை என்ற மரத்தில் ஏறிவிடுவான். 

Link to comment
Share on other sites

ஒன்றும் நாலும் எனது தெரிவு. 
சனத்தை திருத்த முடியாது. மேலே  சிலர் சொன்னது போல்  அரசு எவ்வளவு சொல்லியும் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்து போயும் உள்ள நிலையில் பல மக்கள் உதாசீனம் செய்ததால் தான் இன்று அமெரிக்காவில் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

முதலாவது தெரிவு சட்டத்தை போட்டு மருந்தை கண்டு பிடித்து ( சில வேளை அரசின் அனுசரணையுடன் தனியார்) அதனை மக்களை போட ( பெரும்பாலும் ஊசி மருந்து)  சொல்வார்கள். இதன் மூலம் பல  பில்லியன் களை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும்  தமது பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக சுகாதாரம், மருத்துவம்  மற்றும் உணவுப் பதார்த்தங்களைக் கையாள்வதில் புதிய நடைமுறைகள் ஏற்படும்.இவை சட்டமாகவும் அமுல்படுத்தப் படும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் சந்தித்தவுடன்...  கை கொடுக்கும் பழக்கம் மறைந்து,
ஹலோ... சொல்லும் பழக்கம் ஆரம்பித்து இருக்கும்.

அநேகமானவர்கள் முகமூடியுடன் திரிவதால்....
தெரிந்தவர்களை கூட...  யாரோ என்று நினைத்து, கடந்து சென்று விடுவோம்.:grin:

Link to comment
Share on other sites

முதலாளித்துவ பொருளாதராத்தில் மருத்துவத்தை பொது மக்கள் சார்பாக அரசுகள் மேம் படுத்த வாய்ப்பில்லை. தற்போது கூட  இருக்கும் சுவாச கருவிகளையும் வசதிகளையும் யாருக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவது என்றே முதலில் சிந்திக்கின்றார்கள். இதன் பொருள் வயதானவர்களை சாக விடுவதுதான். இதனால் அரசுகளுக்கு லாபம் தான் பாராமரிப்பு செலவும் மிச்சம் அவர்கள் சேமித்த பென்சன் பணமும்  அரசுக்குதான். இவ்வாறான அனுகூலத்தால்  எதிர்காலத்தில் வயதானவர்களை கொல்லக் கூடிய கிருமிகளை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இவ்வளவு காலமும் அணுகுண்டுகள்  அதிவேக விமானங்கள் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் பெரும் ராணுவக் கட்டமைப்புகள் என்று பெரும் பணத்தை  செலவளித்த அரசுகளுக்கும் சரி அவர்களின் எதிரிகளுக்கும்  சரி இந்த கொரோன புதியதொரு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது  அதுவனது  ஒரு நாட்டை  அடக்க முடக்க பொருளாதராத்தை நிரமூலமாக்க இதுவரை இருப்பதில் இதுவே பலமான ஆயுதம்..

கொரொனாவிடம் மனிதன் சிக்கி கொண்டானா இல்ல மனிதனிடம் கொரொனா சிக்கிக்கொள்ள போகின்றதா  என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.  

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.