Jump to content
  • 0

கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?


குமாரசாமி

கோவிட் 19 குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Question

  • கருத்துக்கள உறவுகள்


கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? 

கொரோனா இந்த உலகையே பிரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாடுகளும் நாளைய பொழுது எப்படியிருக்குமென்ற நிலை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா குணமாகிய பின் உலகம் எப்படியிருக்குமென வாக்களித்து கருத்துக்களையும் வையுங்கள். 

Link to comment
Share on other sites

12 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்..

இவர்களை, குறிப்பாக 'ஆசியக் கண்டத்தவர்'களை ஆயிரம் கொரானா வந்தாலும் திருத்த முடியாது. tw_glasses:

(அது சரி, என்ன ஓட்டெடுப்புகளில் இறங்கிவிட்டீர்கள்..? பொழுது போகலை..? :))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் அமெரிக்கா முழுவதையும் உள்ள கொரோனா நோயாளர்களை விட கூடுதலானவர்கள் ஏன் மூன்றில் ஒரு பகுதியானவர்கள் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
நாளாந்தம் விழிப்புணர்வைப் பற்றி தொலைக்காட்சி வானொலி பத்திரிக்கைகள் என்று மாறிமாறி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
முதியவர்கள் ஆடிப்போய் வீட்டில் இருக்கிறார்களே தவிர அனேகமான இளையோர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டே திரிகிறார்கள்.
இதனாலேயே அமெரிக்கா மிகவும் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

கண்ணுக்கு முன்னாலேயே ஒவ்வொரு நாளும் சனம் மடிவதைப் பார்த்தும் அடங்கி இருக்காதவர்கள் நாளை இயல்புநிலை வந்த பின் கொரோனாவைப் பற்றியா யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே எனது வாக்கு
முன்பு இருந்தது போல பழைய நிலைக்கு திரும்புவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக சுகாதாரம், மருத்துவம்  மற்றும் உணவுப் பதார்த்தங்களைக் கையாள்வதில் புதிய நடைமுறைகள் ஏற்படும்.இவை சட்டமாகவும் அமுல்படுத்தப் படும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் சந்தித்தவுடன்...  கை கொடுக்கும் பழக்கம் மறைந்து,
ஹலோ... சொல்லும் பழக்கம் ஆரம்பித்து இருக்கும்.

அநேகமானவர்கள் முகமூடியுடன் திரிவதால்....
தெரிந்தவர்களை கூட...  யாரோ என்று நினைத்து, கடந்து சென்று விடுவோம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

Link to comment
Share on other sites

முதலாளித்துவ பொருளாதராத்தில் மருத்துவத்தை பொது மக்கள் சார்பாக அரசுகள் மேம் படுத்த வாய்ப்பில்லை. தற்போது கூட  இருக்கும் சுவாச கருவிகளையும் வசதிகளையும் யாருக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவது என்றே முதலில் சிந்திக்கின்றார்கள். இதன் பொருள் வயதானவர்களை சாக விடுவதுதான். இதனால் அரசுகளுக்கு லாபம் தான் பாராமரிப்பு செலவும் மிச்சம் அவர்கள் சேமித்த பென்சன் பணமும்  அரசுக்குதான். இவ்வாறான அனுகூலத்தால்  எதிர்காலத்தில் வயதானவர்களை கொல்லக் கூடிய கிருமிகளை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இவ்வளவு காலமும் அணுகுண்டுகள்  அதிவேக விமானங்கள் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் பெரும் ராணுவக் கட்டமைப்புகள் என்று பெரும் பணத்தை  செலவளித்த அரசுகளுக்கும் சரி அவர்களின் எதிரிகளுக்கும்  சரி இந்த கொரோன புதியதொரு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது  அதுவனது  ஒரு நாட்டை  அடக்க முடக்க பொருளாதராத்தை நிரமூலமாக்க இதுவரை இருப்பதில் இதுவே பலமான ஆயுதம்..

கொரொனாவிடம் மனிதன் சிக்கி கொண்டானா இல்ல மனிதனிடம் கொரொனா சிக்கிக்கொள்ள போகின்றதா  என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.  

 

 

 

 

Link to comment
Share on other sites

இயற்கையின் படைப்பில் உயிர்கள் அனைத்தும் இத்யாதி குணம் கொண்டிருந்தாலும் தங்கள் சந்ததிகள் நலமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறைகொள்வதைக் காணலாம். கோத்தபாயவின் சித்தமும் தன்பிள்ளைகள் நலமே வாழவேண்டும் என்பதில்தான் அக்கறை கொள்ளும். ஆகவே....

நான் முதல் இரண்டையும் தெரிவு செய்தேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

21-F9-CD92-BD37-4-F53-9048-A6-C0-B141829

இன்று நியூயோர்க் வந்த நேவி ஆஸ்பத்திரி கப்பலைப் பார்க்க படமெடுக்க கூடியுள்ள கூட்டம்.

திருந்துமா அமெரிக்கா?

இதையே எங்கடை சனம் செய்திருந்தால் கழுவி ஊத்தியிருப்பம்.
வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டால் சனம் எங்க கேக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்.

தக்கன பிழைக்கும்!!

கொலோரா, பிளேக் கொள்ளை நோய், தொழுநோய், காசநோய்: பாக்டீரியா மனிதர்களை கொன்றொழித்த காலமும் இருந்தது. 

அது கொன்ற தொகைக்கு அருகில் கூட வைரசு ஒருபோதும் வரவில்லை.

மனிதன் இறுதியில் வென்றான். இன்று பாக்டீரியாவினால் பயம் இல்லை. பிராங்கிளினின் பென்சிலினும், பாஸ்டரின் நுண்ணுயிரிலும் மனிதனின் பெரு வெற்றி.

அடிக்கடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வதால், மனிதனின் பிடிக்குள் வைரஸ் இன்னும் சிக்கவில்லை.

ஆனாலும் இந்த மாத்தி அமைத்துக் கொள்ளும் தன்மையினாலேயே மனிதனும் தப்பித் பிழைக்கின்றான். 

எத்தனை வித்தியாசமான வடிவங்கள் எடுக்கும் என்பதே மனிதனின் பொறுமையான அவதானிப்பு. 

அது முடிந்தால், வைரசுவும் அடக்கப்படும்.

Link to comment
Share on other sites

"" முன்பு இருந்தது போல் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவர்."" 

மனிதர்கள் இயல்பாகவே மறக்கும் குணத்தையும், அதிகளவு ஆசையும் கொண்டவர்கள். 

ஆகையால். அடுத்தே வைரஸ் வரும் வரை, அதி அடுத்த 20-50 வருடங்களும் எடுக்கலாம், மனிதன் மீண்டும் ஆசை என்ற மரத்தில் ஏறிவிடுவான். 

Link to comment
Share on other sites

ஒன்றும் நாலும் எனது தெரிவு. 
சனத்தை திருத்த முடியாது. மேலே  சிலர் சொன்னது போல்  அரசு எவ்வளவு சொல்லியும் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்து போயும் உள்ள நிலையில் பல மக்கள் உதாசீனம் செய்ததால் தான் இன்று அமெரிக்காவில் இத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

முதலாவது தெரிவு சட்டத்தை போட்டு மருந்தை கண்டு பிடித்து ( சில வேளை அரசின் அனுசரணையுடன் தனியார்) அதனை மக்களை போட ( பெரும்பாலும் ஊசி மருந்து)  சொல்வார்கள். இதன் மூலம் பல  பில்லியன் களை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும்  தமது பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி இருந்ததை  விட  கொஞ்சம் திருந்தி இருப்பார்கள்... குறைந்தது கை கழுவும் பழக்கமாவது  ஒட்டிக் கொள்ளும்...ஒவ்வொரு நிறுவனங்களும் சுத்தம் ,சுகாதாரம் ,தூய்மை போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுப்பார்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.