Jump to content

தலைகீழாய் மாறும் வரலாறு: அமெரிக்கர் நுழையக்கூடாதென மெக்சிகோவில் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெக்சிகோ: சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாக பிற நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிற நாட்டு மக்களை அனுமதிக்கக் கூடாது' என, மெக்சிகோ அரசைக் கடுமையாக கண்டித்தார். மேலும், பிற நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்க, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், மிக நீண்ட சுவரை கட்டும் பணியையும் துவக்கினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.


 

latest tamil news


 

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உலகிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அரசின் மெத்தனமே வைரஸ் வேகமாகப் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


latest tamil news


 

 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில், மெக்சிகோ மக்கள், கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மெக்சிகோவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வந்தால், இங்குள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களை மெக்சிகோவிற்குள் நுழையவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்' என்றனர்.


latest tamil news


 

மேலும், 'மெக்சிகோ எல்லையை மூடுங்கள்... அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்' என்ற பதாகைகளை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அமெரிக்கர்கள் நுழைய முடியாத படி, மெக்சிகோவின் எல்லைகளை மூடும் பணிகள் துவங்கியுள்ளன.

 

 

Southbound traffic into Mexico is closed at the DeConcini Port of Entry. Please use Mariposa Port of Entry. NPD is conducting traffic control, please be patient as officers direct traffic.

 
 
 
 

 


 


latest tamil news


 

 

அமெரிக்கா எல்லையை மூடிய நிலை அப்படியே தலைகீழாக மாறி, 'அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்குள் நுழையக்கூடாது' என, மெக்சிகோ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, உலகளவில் அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2511110

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZஅந்த கோட்ட தாண்டி நீயும் வரப்படாது ; நானும் வரமாட்டன் 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.