Jump to content

மூன்று ஊர்கள் முடக்கம்


Recommended Posts

புத்தளம் கடையன் குளம் மற்றும் கண்டி அக்குரணை பகுதியில் உள்ள இரண்டு ஊர்களையும் முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனற-ஊரகள-மடககம/150-247573

 

Link to comment
Share on other sites

 

புத்தளத்தில் 100 பேரை தனிமைப்படுத்த தீர்மானம்
Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 08:37 - 0      - 6

புத்தளம்- கடையங்குளம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புத்தளம் மாவட்டச் செயலாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

image_c37b042632.jpg

இதற்கமைய, புத்தளம்- சாஹிரா தேசிய பாடசாலையின் ஒரு பகுதியை தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்த நடவடிககை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பததளததல-100-பர-தனமபபடதத-தரமனம/175-247579

Link to comment
Share on other sites

ஆறு கிராமங்கள் முற்றாக முடக்கம்

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமங்களுக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

image_70df0c5978.jpg

நேற்று (28) இரவு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீள அறிவித்தல் வழங்கப்படும் வரை இத்தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 60 வயதுடைய நபர் மாரவில-ஆல்பன்வில பகுதியைச் நேர்ந்தவர் என்பதால், அப்பகுதிக்குள் பிரவேசிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஆறு-கிராமங்கள்-முற்றாக-முடக்கம்/175-247577

Link to comment
Share on other sites

பேருவளை-பன்னில கிராமம் முடக்கம்

பேருவளை-பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், களுத்துறை –நாகொடை வைத்தியசாலையில் இன்று (29)  அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

இதனையடுத்து, இனங்காணப்பட்ட குறித்த நபர் வசிக்கும் பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்பட்ட பன்னில கிராமத்தை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேருவளை பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளை-பன்னில-கிராமம்-முடக்கம்/175-247614

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.