Jump to content

சிறப்புக் கட்டுரை: கொரோனா - அச்சம் தவிர், ஐயம் களை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: கொரோனா - அச்சம் தவிர், ஐயம் களை!

5.jpg

-நிலவளம் கு.கதிரவன்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகள், நாளும் சமூக ஊடகங்கள், இணையங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகின்றன. இப்புனைவிலிருந்து உண்மை பிரித்தறிவது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், இத்தகைய புனைவுகள் உலகெங்கிலும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் இதர மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இப்போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.

முகமூடி அணிந்து கொண்டால் வைரஸின் பாதிப்பிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது முழுதான உண்மையல்ல. காரணம், அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் முகமூடிகள் வைரஸ் துகள்களைத் தடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஆனால் இதன் ஒரே பயன் பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சுவாசக் கிருமிகள், மேலும் பரவாமல் தடுத்துக் கொள்ள பயன்படுகிறது.

 

அதே போன்று சாதாரண காய்ச்சலைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்க் கிருமி தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்பதான ஒரு தகவல். ஆனால், சாதாரண சாய்ச்சலால் ஒரு நபர் சராசரியாக 1.3 நபருக்கு தொற்றுக் கிருமிகளைக் கடத்துகிறார் என்றால், கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சராசரியாக 2.2 நபருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறார். என்றாலும், கொரோனாவைத் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை என்றாலும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இவ் வைரஸை ஒப்பீட்டளவில் நன்றாக தடுப்பதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் (Centers for Disease Control and Prevention - CDC) கூறுகிறார்கள்.

 

கொரோனா வைரஸ் என்பது பல்வேறு நோய்களை உள்ளடக்கிய வைரஸ்களின் பெரிய குடும்பமாகும். இது சாதாரணமாக நமக்குப் பிடிக்கும் ஜலதோஷத்தின் பிறழ்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு முன்பு இடைநிலை விலங்குகள் வழியாக நம்மை வந்தடைந்த வைரஸாகும்.

மேலும் ஒரு வதந்தியாக, இக் கொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வகங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது மேற்குலகத்தால் சொல்லப்படுகிறது. சுமார் பத்தாண்டுகளில் SARS-CoV, MERS-CoV மற்றும் SARS-CoV-2 ஆகியவை வௌவால்களில் இருந்து தோன்றியதாகத்தான் CDC ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் மரணம் உறுதி என்பதும் கடுமையாகப் பரவும் வதந்தி. சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 81% பேருக்கு லேசான பாதிப்பும், 13.8% பேர் கடுமையான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன. கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியோருக்கு மூச்சுத் திணறல் அல்லது கூடுதலான ஆக்சிஜன் தேவை என்ற நிலைமையில் உள்ளதாகவும், 4.7% பேருக்கு மட்டுமே சுவாசக் கோளாறு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2.3% பேர் மட்டுமே உயிரிழப்புக்கு ஆளாவதாகவும், அவ்வாய்வறிக்கை கூறுகிறது. உயிரிழப்புகள்கூட வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அடிப்படை சுகாதாரத்தைப் பேணத் தவறியவர்கள் போன்றோருக்கே ஏற்படுகிறது.

நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வழியே கொரோனா வைரஸ் பரவும் என்பது அடுத்த வதந்தி. ஆனால், இது உண்மையில்லை. சீனாவில் COVID-19ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நாயின் உரிமையாளர் வழியாக அவர் வளர்க்கும் நாய்க்குக் குறைந்த அளவிலான தொற்று ஏற்பட்டபோது, பரிசோதனையின் முடிவில் அந்த செல்ல பிராணிக்கு எவ்வித நோயும், பாதிப்பும் இல்லை என ஆய்வக முடிவு இருந்ததாகவும், எனவே செல்லப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட வாய்ப்பில்லையென்றும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 2003இல் ஏற்பட்ட SARS-CoV வைரஸ் தொற்றால் நாய்களும், பூனைகளும் எவ்வித நோய்த் தொற்றுக்கும் ஆளாகவில்லையென்றும், அந்த பிராணிகள் வழியே மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறது.

 

கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்பதற்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட தரவுகள் மருத்துவர்களிடையே இல்லை. இருப்பினும் பெரியவர்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவானதே. சீனாவின் ஹுபே மாநிலத்திலிருந்து வந்த ஒரு ஆய்வு முடிவின்படி COVID-19 பாதிப்புக்குள்ளான 44000 நபர்களில், 19 வயதிற்குட்பட்ட பிரிவினரில் 2.2%பேர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக முடிவு கூறுகிறது. இவ்வகையான கருத்தையே நேச்சர் நியூஸ் இதழும் தெரிவித்துள்ளது.

COVID-19 நோய்த் தொற்றுக்கு வைட்டமின் சி மாத்திரைகளை உட்கொள்வதால் தடுக்கலாம் என்ற தவறான கருத்து பரவி வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வைட்டமின் சி என்பது நமது உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது உடல் ஹார்மோன்களை ஒருங்கிணைக்கவும், நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடி நம்மை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் வைட்டமின் சி உப பொருட்களை எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பது அறியாமையாகும். மாறாக நமது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க விரும்பினால் வைட்டமின் சி அன்றாட உணவில் சீராக எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழிமுறையாகும். எனவே புதிய கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகள் என விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போன்று கடித உறைகள், பார்சல்கள் கொடுப்பது அல்லது பெற்றுக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதற்கும் எவ்வித ஆதாரமோ, ஆய்வு முடிவுகளோ இல்லை. காரணம் ஒரு வைரஸ் உயிரோடு இருக்க குறிப்பிட்ட வெப்பநிலை, ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் வெளிப்பாடு போன்ற அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், தொற்றுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை நாம் நம்பலாம்.

மேலும் பள்ளிகளை மூடுவதாலோ, அனைத்து மக்களையும் தனிமைப்படுத்துவதாலோ இந்த வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழித்துவிட முடியுமா? மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் செயலையே மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன என்பது சிலரின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், பள்ளி, கல்லூரிகள் மூடப்படுதல் என்பது ஒரு பொதுவான வழிமுறையாகும். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. ஆனால் வைரஸ் பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம். தனிமைப்படுத்துதல் என்பது ஒரு உபாயமாகவே பின்பற்றப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒரு வித்தியாசமான நோய்ப் பரவல் என்பதால், அவ்வைரஸின் இனப் பெருக்க கால அளவை கணக்கில் கொண்டும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்தும் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பரவலின்போது சுமார் 1,300 பள்ளிகள் மூடப்பட்டது. நமது நாட்டிலும் அபாயகரமான தொற்று நோய் பரவும் காலங்களில், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளின், அபாயகரமான தொற்று நோய் பரவல் சட்டம், பொது சுகாதார சட்டங்கள் வழி வகை செய்கிறது.

இன்றைய சூழலில் நிச்சயமற்ற, நம்பகத்தன்மையற்ற வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல், நம் அளவில் சுகாதாரத்திற்கான தடுப்பு வழிகளைப் பின்பற்றினாலே இவ்வாபத்திலிருந்து தப்பிக்கலாம். பொதுவாக கொரோனா அறிகுறிகளை நம்மாலேயே நன்கு உணர முடியும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், அரிதாக தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று நம்மை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தன்னளவில் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிடலாம்.

ஆதார சுட்டிகள்:

http://weekly.chinacdc.cn/en/article/id/e53946e2-c6c4-41e9-9a9b-fea8db1a8f51

https://www.scmp.com/news/hong-kong/health-

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/faq.html#animals

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5595096/

https://www.nature.com/articles/d41586-020-00154-w

https://www.statnews.com/2020/02/20/experts-say-confusion-over-coronavirus-case-coun

 

https://minnambalam.com/public/2020/03/29/5/corona-false-information-and-truth

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.