Jump to content

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்

on March 25, 2020

20200307_FBD001_0.jpg?resize=1200,550&ss

பட மூலம், THE ECONOMIST

(சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB.

புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும் பிழையான தகவல்கள் மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இது தொற்றுநோய் கொள்கை முயற்சிகள் மற்றும் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான ஏழு வழிமுறைகள் அடங்கிய சுருக்கமான வழிக்காட்டுதலாகும்.

கொவிட் 19 என்றால் என்ன?

இது கொரோனா வைரஸின் ஒரு புதிய வடிவம் – பொதுவாக சளியையும் அதனை விட பாரதூரமான நோய்களையும் உருவாக்ககூடிய பாரிய வைரஸ் குழுவே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

2003 இன் சார்ஸ் வைரஸும் (Severe Acute Respiratory Syndrome) 2012 இன் மேர்சும் (Middle East Respiratory Syndrome) கொரோனா வைரஸின் வெவ்வேறு வடிவங்களால் உருவானவையே.

இந்த வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் தெரியவரவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டியது முக்கியமான விடயமாகும். எதிர்காலத்தில் புதிய தகவல்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும் நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள 4 நிமிட வீடியோவில் வைரஸ் குறித்த பல அடிப்படை விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

 

கொரோனா வைரஸ், உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்ட COVID-19 முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதுடன்  தற்போது உலகளாவிய நோய் தொற்றாக மாறியுள்ளது.

தொற்றுநோய் – உலகளாவிய தொற்று என்றால் என்ன?

குறிப்பிட்ட  சனத்தொகையினர் மத்தியில் எதிர்பார்த்த அளவினை விட திடீர் என அதிகளவு நோய் தாக்கம் காணப்படுவதே தொற்றுநோய் என அழைக்கப்படுகின்றது. உலகளாவிய தொற்று என்பது பல நாடுகளில் கண்டங்களில் பரவியுள்ள மிகப்பெருமளவானவர்களை தாக்கும் நோயை குறிக்கும்.

உதாரணத்திற்கு மேர்ஸ், சார்ஸ் ஆகிய இரண்டும் பிராந்திய அளவில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தினை ஏற்படுத்தியதால் தொற்றுநோய்கள் என அழைக்கப்படுகின்றன. அதேவேளை கொரோனா வைரஸ் அதன் உலகளாவிய தாக்கம் காரணமாக உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார ஸ்தாபனம் என அறிவித்துள்ளது.

தொற்றுநோய், உலகலாவிய தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவது குறித்த பல விடயங்களை இங்கே பார்க்கலாம்.

உங்களை எப்படி பாதுகாப்பது?

கொவிட் 19 சுவாத்சதுளிகள் மூலமாக பரவுகின்றது. கைகுலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்ற நெருக்கமான தொடர்புகள் மூலமும் – இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமும் இது பரவுகின்றது.

நாங்கள் பயன்படுத்தக்கூடிய இலகுவான நடைமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

  1. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அல்லது கைகள் கழுவுவதற்காக உள்ள அல்கஹோல் கலந்த திரவத்தைப் பயன்படுத்தி கிருமிகளை கொல்லுங்கள். உங்கள் தனிப்பட்ட பொருட்களை (கையடக்கத் தொலைப்பேசி) அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளை எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்பதற்கான வீடியோ இது.

ஆங்கிலம்: https://www.youtube.com/watch?v=3PmVJQUCm4E&feature=youtu.be

சிங்களம்: https://www.facebook.com/hpbsrilanka/videos/123749012212887/

தமிழ்: hthttps://www.youtube.com/watch?v=Dzt30CuOP8E&feature=emb_title

  1. உங்கள் பழக்கவழக்கங்கள் குறித்து அவதானமாக இருங்கள். உங்கள் முகத்தினை கைகளினால் தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் (கண், மூக்கு, வாய்).
  2. இருமும்போது அல்லது தும்மும்போது உங்கள் முகத்தினையும் வாயையும் கையால் மூடிக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள். (அல்லது டிசுவினால் மூடிய பின்னர் அதனை உடனடியாக குப்பையில் போடுங்கள்.
  3. சமூக விலக்கல்களை (social distancing) பின்பற்றுங்கள், (உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு மீற்றர் அல்லது 3 அடியை பரிந்துரை செய்துள்ளது.) குறிப்பாக இருமும், தும்மும் நபரிடமிருந்து சமூக விலக்கல்களை மேற்கொள்ளுங்கள் .
  4. உங்களுக்கு இருமல் – சளி – சுவாசிப்பதில் பிரச்சினைகள் போன்றவை இருப்பதாக நீங்கள் நினைத்தால் இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். 1999 இலக்கத்தின் மூலம் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தினை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். எந்த வலையமைப்பிலிருந்தும் அதனை அணுகலாம்.
  5. இந்த நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றினால் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அல்லது நோயைக் குறைப்பதற்கு உதவுவீர்கள்.

நோய் பரவும் வேகத்தை குறைப்பது (flattening the curve) என்றால் என்ன?

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் பாதிக்கப்படாதவர்களிடமிருந்து தனிமைப்படுத்துல் சாத்தியமில்லை என்பதால் சமூக விலக்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான எங்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமலிருப்பதற்கு அவசியமானவையாக உள்ளன.

நோய் தாக்கத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் எங்களால் சுகாதார துறை மற்றும் சுகாதார பணியாளர்கள் மீதான அழுத்தங்களை குறைக்க முடியும். மேலும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவாகும் பணத்தை சேமிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். கொவிட்-19 தற்போது எங்களையே அதிகம் தாக்கி வருகின்ற அதேவேளை ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை எங்களது சுகாதார துறையினரும் சுகாதார பணியாளர்களும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நோய் பரவும் வேகத்தை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயமாக உதவபோகின்றீர்கள்.

flattening-the-curve-V7-04.jpg?resize=66

நோயை துணிச்சலுடன் எதிர்கொள்வதாக கருதுவதன் மூலம் – Big Match சென்றால் எப்படி எனக்கு நோய் தொற்று வரும் என நினைப்பதன் மூலம் – அரசாங்க கட்டளைகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அல்லது புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் ஏனைய பொதுமக்களை, சுகாதார பணியாளர்களை, படையினரை (இந்த முயற்சிக்கு உதவுபவர்கள்) நெருக்கடிக்கு உள்ளாக்குவதுடன் தேசிய வளங்களை வீணடிக்கின்றீர்கள். இவை நோயை கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் உதவக்கூடிய கூடிய வளங்கள் .

நோய் பரவும் வேகத்தை குறைப்பது குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்கள் என்றால் நோய் பரவுவது குறித்து மேலும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும் என்றால் இந்த கட்டுரையை படியுங்கள்.

சர்வதேச முயற்சிகள் – இடைவெளிகள் – இலங்கை

கொவிட்-19 னை எதிர்கொள்வதற்கு உலக வங்கி 12 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ள போதிலும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு 8 மில்லியன் டொலர் பற்றாக்குறை உள்ளதாக சர்வதேச தயார்படுத்தல் மற்றும் கண்காணிப்பு சபை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனமும் உலக வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தயார்படுத்தல் மற்றும் கண்காணிப்பு சபை,  ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் இந்த இடைவெளியை நிரப்பவேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிதி இடைவெளியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை உருவாக்குவதற்கு அவசியமான 2 பில்லியன் டொலரும் காணப்படுகின்றது. இந்த நிதி இடைவெளி குறித்த மேலதிக விபரங்களை இங்கே பார்க்கலாம்.

கொவிட்-19ற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தின் பலம் பலவீனங்களை அடிப்படையாக வைத்து வெவ்வேறுவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. சீனா கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஹுபெய் மாகாணத்தை முடக்கியுள்ளது. வாகனங்களில் பயணிக்கும் போது பரிசோதிக்கும் புதிய முறையிலான பரிசோதனையை தென்கொரியா ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தேசிய இடர் நிலையை அறிவித்துள்ளதுடன் சமூக தனிமைப்படுத்தலை முன்னிறுத்தி வருகின்றது. பிரிட்டன் தொற்றுநோய்களுக்கான மறைமுக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை உருவாக்கும் சர்ச்சைக்குரிய முயற்சியை மேற்கொண்டது. எனினும், புதிய தரவுகளின் அடிப்படையில் அந்த நாடு சமூக தனிமைப்படுத்தலை ஊக்குவிக்க முயல்கின்றது. இலங்கை பாடசாலைகளையும் பல்கலைகழகங்களையும் மூடியுள்ளதுடன் 16ஆம் திகதி பொது விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மூன்று நாட்களுக்கு அதனை நீடித்தது. கொவிட் 19 ற்கு எதிரான நிதியமொன்றை உருவாக்கும் சார்க் நாடுகளின் முயற்சியில் இலங்கை தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

நாங்கள் என்ன செய்யலாம்?

சர்வதேச மற்றும் உள்நாட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் – கொரோன வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் பரிசிலீக்கக் கூடிய  ஏழு நடவடிக்கைகள் பின்வருமாறு:

  1. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் (#Followhealthguidelines)

நபர் என்ற அடிப்படையில் நீங்கள் சமூக தனிமைப்படுத்துதல், சுகாதார நடைமுறைகள், உங்களினதும் உங்களின் அன்புக்குரியவர்களினதும் உடல்நலத்தை கண்காணித்தல் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.

  1. தொலைவிலிருந்து பணிபுரிதல் (#workremotely)

நீங்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றால், தொலைவிலிருந்து அதனை நிர்வகிக்க முடியுமென்றால் தயவுசெய்து அவர்கள் தொலைவிலிருந்து பணிபுரிவதற்கு அனுமதியுங்கள். இரண்டு வாரங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறையையை வழங்குங்கள்.

  1. பொதுநிகழ்வுகளை இரத்துச்செய்யுங்கள் (#cancelgatherings)

நீங்கள் Big Match, கூட்டம், பெருமளவானவர்கள் கூடும் நிகழ்வு ஆகியவற்றின் ஏற்பாட்டாளர்கள் என்றால் பொது மக்களின் சுகாதார நலனை அடிப்படையாகக் கொண்டு அவற்றினை இரத்துச்செய்யுங்கள். உங்களால் கொரோனா வைரஸுடன் மோத முடியாது, நீங்கள் ஏனையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவீர்கள்.

  1. கொவிட்-19 குறித்த பிழையான செய்திகளுக்கு எதிராகப் போராடுங்கள் (#fightCOVIDmisinformation)

நீங்கள் சமூக ஊடங்களில் செல்வாக்கு செலுத்துபவர் என்றால், பத்திரிகையாளர் என்றால், நீங்கள் பகிர்ந்து கொள்பவைகள் மற்றும் உங்கள் தகவல்கள் குறித்து பொறுப்புணர்வுடன் இருங்கள். இதனை செய்வதற்கு நீங்கள் உத்தியோகபூர்வ செய்திகளை ஆராயலாம்,

உங்கள் டுவிட்கள், கட்டுரைகள், பதிவுகள் போன்றவற்றில் காணப்படும் தகவல் மூலங்கள் குறித்து ஆராயுங்கள். முன்னைய பதிவுகளின் மேலதிக தகவல்களை ஆராயுங்கள். ஆதாரமற்ற கொள்கைகளுக்காக குரல்கொடுக்காதீர்கள். அரசாங்க சுகாதார உத்தியோகத்தர்களுடன் முரண்படாதீர்கள். முரண்படவேண்டும் என்பதற்காக முரண்படாதீர்கள். சரியான விடயங்களை உள்ளடக்காத டுவிட் அல்லது கட்டுரைகளால் இடர் மிகுந்த தருணங்களில் நீங்கள் நினைப்பதை விட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

  1. கொவிட் கொள்கைகளை தெளிவுபடுத்துங்கள் (#explainCOVIDpolicies)

விடுமுறைகள், அலுவலகங்களை மூடுதல் போன்ற எங்களால் பொது சுகாதார கொள்கைள் குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். உதாரணத்திற்கு இலங்கையில் தேசிய விடுமுறைக்கான காரணத்தை வைத்தியர் பிரசன்ன குணசேனவும், போக்குவரத்து தடைகள் ஏன் பலனளிக்காதுஎன கனடாவின் சுகாதார அமைச்சர் படி ஹட்சுவும் தெளிவுபடுத்துவதை இங்கே பார்க்கலாம்.

  1. கொவிட் – உளநலம் (#COVIDmentalhealthcare)

இது பதற்றமான நிச்சயமற்ற நேரம். எங்களை சமூகரீதியில் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். பதற்றத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் மூலம் எங்களினதும் ஏனையவர்களினதும் உளநலம் குறித்து ஆராய்வது சிறந்த விடயமாகும். தனித்து வாழ்பவர்கள் அல்லது ஆதரவுள்ளவர்களை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களது உளநலத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி சிறந்ததாக அமையும். முதிய உறவினர்கள், உட்பட உங்கள் உறவினர்களை நண்பர்களை உங்களுக்கு தெரியும் என்றால் அவர்களுக்குப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலம் உதவுங்கள்.

  1. கொவிட்டின் போது இரக்கத்துடன் காணப்படுங்கள்

இது சர்வதேச தரத்திலான நெருக்கடி. எங்களிடம் அனைத்து விடைகளும் இல்லை. இணைந்து செயற்படுவதன் மூலமும் ஒருவருக்கொருவர் இரக்கத்துடன இருப்பதன் மூலமும் இதனை வெற்றிகொள்ள முடியும். இரக்கமாகயிருப்பது என்பது – சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது, தவறான தகவல்களை உருவாக்காமலிருப்பது, நோயாளிகளாக இருக்கக்கூடியவர்களை தாக்காமலிருப்பது, ஒருக்கொருவர் பாரபட்சம் காட்டாமலிருப்பது, ஏனையவர்களை புறக்கணிக்காமலிருப்பது, ஏனையவர்களின் உளநலம் குறித்து அறிந்திருப்பதாகும்.

இந்த பட்டியல் முழுமையானது இல்லை, இது ஒரு ஆரம்பமே.

தொடர்ந்தும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களா (தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லையா)

கொவிட்-19 தொடர்பான சர்வதேச நடவடிக்கைகள், கொள்கைள் குறித்து தொடர்ந்தும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்கள் என்றால் தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில இணையத்தளங்களும், டுவிட்டரில் பின்பற்றக்கூடிய சில நபர்களும்.

இணையத்தளங்கள்

டுவிட்டர்

  • இலங்கையின் சுகாதாரா மேம்பாட்டு பணியகம் – @HPBSriLanka
  • உலக சுகாதார ஸ்தாபனம் – @WHO மற்றும் @WHOSriLanka
  • டெட்ரோஸ் அட்ஹனோம் ஜெப்ரெயோசெஸ் (இயக்குநர் உலக சுகாதார ஸ்தாபனம்) – @DrTedros
  • சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி – @doctorsoumya
  • லோரன்ஸ் கொஸ்டின், பொது சுகதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் – @LawrenceGostin
  • டேவி ஶ்ரீதர் (பேராசிரியர் எடின்பேர்க் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @devisridhar
  • கெவின் யாம்னே – (பேராசிரியர் டியுக் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @gyamey
  • அலெக்சான்டிரா பெலென் (பேராசிரியர் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @alexandraphelan

A brief guide to the coronavirus pandemic, its implications and what you can do to help” என்ற தலைப்பில்  Groundviews வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.

 

https://maatram.org/?p=8382

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.