Jump to content

இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-EB96-BE6-A63-B-467-D-97-F7-CACBDBB095-

இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் தற்போது Seattle, அமெரிக்காவில் வசிக்கிறார்.  Twentieth Wife, The Feast of Roses மற்றும் Shadow Princess என முகலாய சாம்ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட 3 நாவலகளின் தொகுப்பில், அவரது தாயார் மதுரம் சுந்தரேசனால் தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி” மற்றும் “ இதய ரோஜா” என்ற தலைப்புகளில் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். 

எப்பொழுதும் சரித்திர நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளதால், புதிய நாவலாசிரியரின் இந்த இரு நாவல்களையும் சமீபத்தில் வாசித்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடி தமிழாக்கம் செய்யப்பட்டது போன்று வசனங்கள் தோன்றினாலும் பொழுது போக்கிற்காகவும், சரித்திர நாவல்களில் விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம். 
முகாலய சாம்ராச்சியத்தின் அரசியல், அரியானை படுகொலைகள் மற்றும் கொடூரங்கள், வணிகம், கலாச்சாரம், உணவு வகைகளை, பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுமுறைகளை சான்றுகளையும் கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்ட நாவல்கள். 

நாவலாசிரியர் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளை, அக்பர், சலீம்( ஜஹாங்கீர்), மெஹ்ருன்னிஸா(நூர்ஜஹான்), சலீம்( ஷாஜஹான்) பற்றியும், வரலாற்று நிகழ்ச்சிகளை பற்றி சிறு குறிப்புகளை தருவதால் நாவல்களை வாசிக்கும் போது இலகுவாக இருந்தது. 

“இருபதாவது இல்லத்தரசியானது” பர்ஷியாவிலிருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்த சாதாரன பெண்ணான மெஹ்ருன்னிஸா  முகலாய சாம்ராச்சியத்தில் செல்வாக்கும் ஆளுமையும் பெற்று  நூர்ஜஹான்( உலகத்தின் ஒளி) என எப்படி புகழ்பெற்றாள், இந்த நிலையை அடைய யார் காரணமாக இருந்தார்கள், யாருடைய அன்பு அவளை கடும் போக்குடைய முகலாயர்களை வெற்றி கொள்ளவைத்தது என்பதுதான் இந்த இருபதாவது இல்லத்தரசி.

இவ்வளவு செல்வாக்கையும் அதிகாரத்தையும் தனது சிறுவயதில் அன்பையும் பருவ வயதில் காதலையும் வைத்திருந்த இளவரசர் சலீமின் மூலமே அடைகிறாள்.
அவள் தனது 34வது வயதில் இருபதாவது இல்லத்தரசியாக இளவரசர் சலீமை திருமணம் செய்த பின்பே அடைகிறாள். மெருஹ்ன்னிஸாவை இருபதாவது இல்லத்தரசியாக மணந்தபின்பு அவர் பின்பு யாரையும் திருமணம் செய்யவில்லை என இந்த நாவலாசிரியர் கூறுகிறார். 

மெஹ்ருன்னிஸா தனது எட்டாவது வயதில் இளவரசன் சலீம் மான்பாய் திருமணத்தைப்பார்த்து, அரச குடும்ப வசதிகள், பிரமாண்டங்களைப்பார்த்து கவரப்படுகிறாள்.. அவளது 16 வயதில் இளவரசன் சலீமின் கண்களில் பட்டு, அவரை கவருகிறாள். அக்பரிடம் அவளை தான் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சலீம் கூறிய நேரத்தில் விதி வசத்தால் அலிகுலி எனும் படைவீரனின் மனைவியாக நிச்சயக்கிப்படுகிறாள். 

அலிகுலியுடன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகினாலும் சலீமின் மீது கொண்ட காதலை மறக்கமுடியவில்லை.. அக்பரின் மறைவிற்கு பிறகு அரியானை ஏறிய சலீம் எனும் ஜஹாங்கீரிற்கும் கூட மெஹ்ருன்னிஸாவை மறக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் ஜஹாங்கீருக்கு எதிராக அவரது ஒரு மகனான குஸ்ருவின் சதியில் அலிகுலியும் உடந்தையாகி உயிரை இழக்கிறான். பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது, மெஹ்ருன்னிஸா ஜஹாங்கீரை திருமணம் செய்கிறாள்.

நூர்ஜஹானைப்பற்றிய குறிப்புகள் மாறுப்பட்டாலும், ஜஹாங்கீரின் அதி நம்பிக்கைக்குரியவளாகவும், அவரது மாறாத அன்பைப்பெற்றவளாகவும் இருந்திருக்கிறாள்.

இருபதாவது இல்லத்தரசிக்காக ஜஹாங்கீர் உருவாக்கிய சாம்ராச்சியமே இந்த “ இதய ரோஜா- நூர்ஜஹானின் சாம்ராஜ்யம்”. 

மெஹ்ருன்னிஸா, ஜஹாங்கீரை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, ஜஹாங்கீர் மரணமடையும் வரை, மிகுந்த அதிகாரம் உடையவளாகவும் இருந்திருக்கிறாள். தனது தந்தை கியாஸ்பெக், சகோதரன் அபுல் ஹாசன் மற்றும் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனும் பின்னாளில் ஷாஜஹானான இளவரசன் குர்ரம் ஆகியோரை தனது ஆலோசகர்களாக கொண்டு 16 ஆண்டுகள் முகலாய சாம்ராச்சியத்தில் வலிமைமிக்க சக்ரவர்த்தினியாக இருந்திருக்கிறாள். 

வழமை போல, அதிகாரமும் செல்வாக்கும் அதிகரிக்கும் போது அதை தக்கவைத்துக்கொள்ளவே எல்லோரும் ஆசைப்படுவார்கள், அதற்கான வழிகளை தேடுவார்கள். அதற்கு நூர்ஜஹானும் விதிவிலக்கு அல்ல. அதனாலேயே அவளது வீழ்ச்சியும் வந்தது.

முகத்திரைக்கு பின்னால் ஒளிந்திருந்த அந்த முகம், எத்தனை வரலாற்று நிகழ்ச்சிகளை செய்து முடித்திருந்தது. முகலாய மரபைமீறி, அவளது பெயரில் நாணயங்களை வெளியிட்டாள், அரசாங்க முத்திரையிட்ட அறிக்கைகளை அனுப்பினாள், வெளிநாட்டவருடன் வணிகம் செய்தாள், அவளுக்கு சொந்தமான கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்படி பல..இந்த இதய ரோஜா அவளது ஆட்சியைப்பற்றி வரலாறும் கற்பனையும் கலந்து கூறுகிறது. 
நூர்ஜஹானின் எண்ணப்டியே அவளது சகோதரனின் மகளான அர்ஜூமன்ட பானு பேகத்தை( பின்னாளில் மும்தாஜ்) இளவரசன் குர்ரம்(ஷாஜஹான்) திருமணம் செய்கிறான். 
ஆனாலும் அதிகாரமும் ஆசையும் இளவரசன் குர்ரமை மாற்ற, பொறாமை அர்ஜூமன்டின் கண்களை மறைக்க, நூர்ஜஹானின் சாம்ராஜ்யம் தடுமாற தொடங்குகிறது என்பதைதான் இந்த “ இதய ரோஜா” கற்பனை கலந்து கூறுகிறது..

அதிகாரத்தை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக தனக்கும் அலிகுலிக்கும் பிறந்த மகளான லாட்லியை இளவரசன் குர்ரமிற்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறாள், ஆனால் அர்ஜூமன்ட அதை கடுமையாக எதிர்த்தமையால் கடைசியில் ஜாஹாங்கீரின் இன்னொரு மகனான ஷஹர்யாரிற்கு  லாட்லியை திருமணம் செய்து வைக்கிறாள். அரியானைப்போட்டியில் அவனும் கொல்லப்படுகிறான்.ஆனால் அதைப்பற்றி வரலாற்று குறிப்புகள் சரியான ஆதாரத்தை கூறவில்லை என நாலாசிரியர் கூறுகிறார்.

இன்று உலகமே வியக்கும் ஏழாவது அதிசயமான தாஜ்மஹாலிற்கு கூட நூர்ஜஹான் தனது தந்தை கியாஸ் பெக்கிற்காக கட்டிய “ இதிமததுல்லா” கல்லறையே முன் உதாரணம் என இந்த புத்தகம் கூறுகிறது.  சலவைகல்லில் விலை மதிப்புள்ள கற்களைப் பதித்து செய்யப்படும் “ பியட்ரா துரா (Pietra Dura)” எனப்படும் வேலைப்பாடு இந்த இரு கல்லறைகளிலும் அதிகளவில் காணப்படுவதால் நூர்ஜஹான் தனது தந்தைக்காக வடிவமைத்திருந்ததைப்பார்த்தே ஷாஜஹான் தாஜ்மஹாலை வடிவமதைத்திருந்தான் என இந்தப்புத்தகம் கூறுகிறது..

“உலகத்தின் ஒளி” என அழைக்கப்பட்ட நூர்ஜஹானின் இறுதிக்காலம் அவளது அந்தரங்க சேவகன் ஹோஷியார் கான் என அழைக்கப்பட்ட திருநங்கை, அவளது மகளான லாட்லி மற்றும் லாட்லியின் மகளான அர்ஜனியுடன் மாளிகைசிறைவாசமாகவே இருந்திருக்கிறது. நூர்ஜஹான் யாரையும் பார்க்கவோ, பேசவோ ஷாஜஹான் அனுமதி கொடுக்கவில்லை. 

ஜஹாங்கீர் நூர்ஜஹானிற்காக எந்தவித சின்னங்களையும் அமைக்கவில்லை, ஆனால் இந்த இரு நாவல்களையும் வாசித்த பொழுது நான் உணர்ந்து கொண்டது ஷாஜஹான் - மும்தாஜை காதலைவிட அழகானதும் அழமானது இந்த ஜஹாங்கீரின் இருபதாவதும் இறுதி தேடலுமான “நூர்ஜஹான்” என அழைக்கப்பட்ட மெஹ்ருன்னிஸாவின் காதலே.. 

B2-CCA4-FE-0762-40-A2-BA62-FA01-C39-D3-A

இந்து சுந்தரேசன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.