Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert.jpg

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert-2.jpg

http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம் அவர்கள் மதம் மாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். 

வேறுபாடு பெரிதாக இல்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம்

எனக்கு விளங்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு விளங்கவில்லை ?

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

சைவர்களும் இந்துக்களும் தட்டில் போடுகின்றனர். சைவ சமயத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தி மதம் மாறியோர் கொமிசனாகக் கொடுக்கினம் என்று நினைக்கிறன். ஆனால் ஐயரும் போதகரும் தங்கள் பொக்கற்றில் போடுகின்றனர். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லையே ? 

10% தான் கண்ணுக்குக் குத்துதென்றால் நீங்களும்  போதகராக வேண்டியதுதானே. மதம் மாறுதல் உங்களுக்கென்ன புதுசா ? இல்லையே ? 😂😂😂😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்த கொடிய வைரஸ் மதவைரஸ்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்தது மதவைரஸ்.. 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

நான் ஒரு நீச்சல் தடாகத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கின்றேன்

என் கால்கள் அந்த ஆழமான தொட்டி நீரை அடித்து விளையாடிக் கொண்டிருகின்றன

அங்கே வந்து யாரோ ஒருவர் - என்னைத் தண்ணீரில் தள்ளி விடுகிறார் !

எனக்கு நீச்சல் தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் !

நான் நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றேன் . . . .

அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால்

சிலவேளை என்னைத் தள்ளியிருக்க மாட்டாரோ

மூழ்கும் நேரத்திலும் என் சிந்தனை பலமாய் வேலை செய்கிறது

என் கால்கள் அடி நிலத்தைத் தொட்ட பின் மேலெழுந்து மீண்டு வருகின்றேன்

எனக்குத் தெரியும் ,

என் தலை வெளிப்பட்டு மீண்டும்

நீரில் அமிழும் முன்

உதவி கோரிக்காப்பற்றுங்கள்

என்று கத்தவேண்டும்

ஆனாலும் அந்தக் கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்

எந்தக்கடவுளிடம் மன்றாடவேண்டும் என்பதையும்

எந்தநாட்டில் இருக்கின்றேன் என்பதையும்

நான் எந்த மொழியில் உதவி குரல் கொடுக்க வேண்டும் என்பதையும்

Tal Nitzán(இஸ்ரேல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

சாத்தான்

குறைகூறுவதல்ல என் நோக்கம். பிரசிசனையை அடையாளம் காண்பதும் அதனைத் தீர்த்து வைத்தலும்தான் சரியான தலைமைத்துவம் செய்யும். அதனை தெடர்ச்சியாகச் செய்யுமிடத்து மக்கள் பதற்றப்டவேண்டிய தேவை ஏற்படாது. ஆறுமுக நாவலரின் பின்னர் (சர்ச்சைகளைத் தவிர்த்து), சரியான தலமைத்துவம் சைவர்களுக்கில்லை என்பது பெருங்குறைபாடு. எமது போராட்டத்தில் சைவ சமய ரீதியிதியிலான பங்களிப்பு இன்மையை பெருங் குறைபாடாகப் பார்க்கிறேன். 

சரியான தலைமை எப்போதும் மக்களை ஒன்று சேர்க்குமே தவிர பிரிக்காது. 

அந்தப் பெருங் குறைபாடுதான் எம்மவர்கள் சமய ரீதியாக சாதி அடிப்படையில் பிரதேச வாதமாக பிரிந்துனின்று அடிபடக்  காரணமாகிறது என்று நம்புகிறேன்.

 

வணங்காமுடியிடமும் மற்றைய கிறீத்துவ எதிர்ப்பாளர்களிடமும் ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

இதய சுத்தியான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

ஐஆம் வெய்ரிங். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

 

1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

 

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 

13 hours ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

12 hours ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

16 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

முடியாது.. போராட்டத்தில் அதிகமாக உயிரிழந்தது எங்க ஊர்க்காறனுங்கதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.