Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

1) நான் வலது கையை வெறுக்கவில்லை இடதுகையைத்தான் வெறுக்கிறேன் 😂

அம்மா தாயே , போதும் உங்கள் விளக்கம். உடம்பு புல்லரிக்குது.🤥

பிராமணரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்ன சாதியில் இத்தனைபேர் போராட்டத்தில் பங்களிப்புச் செய்திருந்தனர் என புள்ளிவிபரமே தருவீர்கள் போல. 😀

என்னுடைய கேள்வி சோ சிம்பிள். ஏன் இத்தனை வெறுப்பு கிறீத்துவத்தின் மீது ?

நோ ஆண்ஸ்ச ? தற்ஸ் பைன். 🙂

நோ குளப்புறது 😅. ஓகே 👍

 

2) மக்கள் இயலாமையால், வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்கிறீர்கள். கோடி புண்ணியம் கண்டுபிடித்துச் சொன்னதற்கு. 

இதுதான் பிரச்சனை என்றால் அந்தச் சூழலை மாற்றுங்கோ. இதைத்தானே திரும்பத் திரும்பத் திரும்ப கூ......றுகிறோம்.

அம்மக்களின் பலவீனத்தை பயன்படுத்துகின்றனர் என்றால் அந்த மக்களை பலப்படுத்துங்கோ. பிரச்சனை முடிந்தது.  👍 குட் லக். 👏

 

1 hour ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

எனது கேள்வி "ஏன் கிறீத்துவத்தின் மீது இத்துணை வெறுப்பு ?"

எந்த சாதியினர், எந்த ஊரவன் அதிகம் போராடினான் என்று பதில் தராதேயுங்கோ மீரா. ஓகே👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:


 

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

1) கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

2)யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. 3) ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

4) ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, ஆமத்துறு (புத்த பிக்கு)... பர்மா, சீனா, ஜப்பான், நேபாளம்... 
போன்ற நாடுகளில் இருந்து வந்து...
ஸ்ரீலங்காவில் உள்ள.. புத்த விகாரையில்... பிரித் ஓதியிருந்தால்...
அதே...  விகாரையில் வைத்து, அந்த வெளிநாட்டு புத்த பிக்குவை....
தனிமைப் படுத்த, சிங்கள அரசாங்கம் முன் வருமா?

இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என.... 
சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா?

பிக்குமார் திருந்தி இருப்பார்கள் என... நான் கனவிலும் நினைக்க வில்லை.

Link to comment
Share on other sites

யாழ்.களம்  இன்றி 22ஆவது  அகவையில் ❤️

சாதனைகள் பல 👏
போதனைகளும் சில 😅

திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது தளம் 👍
பலருக்கு பல பட்டங்களை தரலாம் 🙏

சிலகுக்கு பட்டமளிப்பு விழாவும் எடுக்கலாம் 🤩
மதத்தில் அவ்வளவு ஆழம் தெளிவு 😛
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

1 hour ago, Kapithan said:

கட்டாய மதமாற்றம்

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

1 hour ago, Kapithan said:

உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

Link to comment
Share on other sites

அரசு தடை போட்டும் யாழில கொரோனா வைரஸை பரப்பிய சுவிஸ் பாதிரியின் நற்செய்தி கூட்டங்களுக்கு சொறிலங்கா போலீஸ் ஆதரவா இருந்ததா ஆளுநரே குற்றம் சாட்டியுள்ளார்.

அது போல சிலரது பித்தலாட்டங்களுக்கு பின்னால சிலர் இருக்கிறதால சிலரது கொட்டம் யாழில தலைவிரிச்சு ஆடுது.

அது போல வாள்வெட்டு கும்பலும் ஊரடங்கு நேரத்துல கைவரிசையை காட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

 

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

2 hours ago, Kapithan said:

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

1) தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

2) வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

1) பதினாறு வருடங்கள் குப்பை கொட்டும் உங்களுக்கு அல்லவா தெரிய வேண்டும் யாருக்கு வகுப்பெடுக்க வேண்டுமென்று. நான் இங்கு யாருடைய மதத்தையும் இழிவுபடுத்தினேனா ? இழிவுபடுத்துபவர்களுக்கு வகுபெடுக்காமல் ஏன் எனக்கு வகுப்பெடுக்கிறீர்கள். 

அவர்கள் எந்த பிரிவினரை எந்த வகுப்பினரை திட்டுகின்றனர் என்று மூக்குச் சாத்திரம் பார்க்கவா முடியும். 

சோற்றுக்கு மதம் மாறியோர் என கூறுவது நானல்ல. தெரியாதென நடிக்காதீர்கள். இவ்வாறு கூறுபவர்களை இழிவுபடுத்த மற்றவர்களுக்கு எவ்வளவு நேரமெடுக்கும் என எண்ணுகிறீர்கள் ? 😡

2) பற்றவைத்தவர்களை விட்டுவிட்டு, ஏன் எனக் கேட்கும் என்னிடம் குறை பிடிப்பது சரியா ?🤔

42 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

 

ரதி அக்கோய்...🙂

பிரச்சாரத்திற்கும் கட்டாய மத மாற்றத்திற்கும் இடையே வேறுபாடு தெரியாத ஆளா நீங்கள். 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

இவற்றை வெறுப்புணர்வை விதப்போருக்கெல்லா சொல்ல வேண்டும். யான் எந்த சமயத்தவர் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கிறேன். காட்டுங்கள் பார்க்கலாம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

 

 

ஆம் எனது வாசிப்பில் தவறு உள்ளது

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது ... அதுக்காக அந்த இழிவுகளை எமது மதத்தின் புனிதம் என்பது 
எவ்ளவு தரக்குறைவான செயல்பாடு. என்னுடைய வாதங்களின் அடிப்படையே ... நாம் மதம் இல்லாமல் இருப்பதுதான் இன்னொருவன் வந்து தனது மதத்தை பரப்ப வழிவகுக்கிறது.
முதலில் பகவத்கீதை எமது மத நூல் இல்லை என்பது தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாதவனுக்குதான்  பிரச்சனை ........பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும். எறியவேண்டியதில்லை அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் தமிழ் மொழியை கவிதை நடையில் வாசிக்க கம்பராமாயணம் ஒரு சிறந்த புத்தகம். 

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பொய்களை புரட்டுகளை நாம் கைவிட தொடங்கினால்தான் 
அடுத்த்துவரும் சந்ததிக்கு அதில் ஒரு நாட்டம் வரும். 

1 hour ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர். தவறான விஷயம் என்றால் என்ன கரணுத்துக்கு ஆக என்றாலும் அதி வெறுப்பது தகும்தானே? 

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும்.

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

6 hours ago, ரதி said:

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

அருமையான கேள்வியும் கருத்தும்!

9 hours ago, கிருபன் said:

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.

அருமையான பதிவு!

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

.ராஜேஸ் குறிப்பிட்டபடி தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக திருக்குறள்.👏

பைபிளை பின்பற்ற வேண்டுமென்கின்ற கட்டாயம் யாருக்கும்  இல்லை. யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.👍

பைபிள்/விவிலியம் என்பன கற்பனை புரட்டு, மூடநம்பிக்கைளின் தொகுப்பு என நம்பும் யாரும் அதனை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் தங்களிடம் திணிக்கப்படும் விவிலியத்தை தூக்கி சாக்கடைக்குள் தாராளமாக எறியலாம். அது அவரவர் விருப்பம். 🙂

ஆனால் சமயம் மாறுபவர்களது உரிமையை மறுக்கவும் அவர்களை இழிவுபடுத்துவதற்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.!😡 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

1) இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

2) இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

3)தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

4) இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

1) பிரபாகரனையும் அவனின் பிள்ளைகளையும் மறந்த தமிழர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்.☹️

2) உண்மைதான். இவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது.

3) உங்கள் பயம் நியாயமானது. 

4) இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

உண்மைதான். சுதந்திர தமிழீழத்தில் (  அப்படி அமைந்தால்) இரண்டாம்தர பிரசையாக இருக்க யார்தான் விரும்புவர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

க்கிறீத்துவர்கள் மட்டும்தான் உதவ வேண்டும் என்கின்ற கட்டாயமில்லையே. தமிழர் புனர்வாழ்வுக்  கழகம் போன்று நம்பிக்கையான அமைப்பொன்றை உருவாக்கினால் புலம்பெயர் தமிழர் தாராளமாக உதவுவர்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

இதுதான் சனநாயகம். அவர் உங்கெளுக்கு வகுப்பெடுத்தார், நீங்களும் அவருக்கு வகுப்பெடுத்தீர்கள். அவரால் உங்கள் வாதத்திற்கு மறுப்புக் கூற முடியவில்லை. அமைதியாகிவிட்டா.  இதுதான் நாகரீகமடைந்தவர்கள் கல்வி அறிவுள்ளவர்கள் செய்வது.👍

நீங்கள் எந்த இடத்திலும் அவரை இழிவுபடுத்தவில்லையே ? 

ஆனால் மதம் மாறுகின்றனர் என்கின்ற காரணத்திற்காக அவர்களை  இழிவுபடுத்துபவர்களை அவர்கள் நாகரீகமடையவில்லை அல்லது கல்வி அறிவில்லை என்று சொல்லி அப்படியே விடலாமா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 3:54 AM, Maruthankerny said:

 

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

அது நாம்  அடுத்தடுத்த சந்ததிகளுக்கு என்னென்ன சொல்லி வளர்க்கிறோம் என்பதை பொறுத்தது.

On 3/29/2020 at 9:43 PM, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

 

எமக்கு கிறீஸ்தவ மதத்தின்மீதோ கிறீஸ்தவர்களின்மீதோ எந்தவித கோபதாபங்களும் இல்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றும் நாதாரிகளிடம்தான் கோபம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.