Jump to content

மலேஷியாவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 3 குழுக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல்; ராஜகிரிய பகுதியும் கடும் கண்காணிப்பில்


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள், சென்றுவந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக இன்றுமுடக்கின.
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த நகரம் முற்றாக வெளித் தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்டதாகவும், அங்கு உள் நுழையவோ வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே டுபாய் சென்று திரும்பிய  நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவலை கருத்தில் கொண்டு களுத்துறை, பண்டாரகம பொலிஸ் பிரிவின் அட்டுலுகம பிரதேசம் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நகராமக அக்குரணை நேற்று முடக்கப்பட்டது.

கண்டி வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பரிசோதனைகளின் போது, அக்குரணையைச் சேர்ந்த தொற்றாளர் கண்டறியப்பட்டார். இந்நிலையில் அவரது நெருங்கிய தொடர்பாளர்களை சுகாதார துறையும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையும் தேடிய போது முழு அக்குரணையும் கொரோனாவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிரதேசமாக கண்டறியப்பட்டதையடுத்து, அது குறித்து ஆராய்ந்து கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையம் அக்குரணையை முடக்க ஆலோசனை முன்வைத்து நடை முறைப்படுத்தியது.

இந் நிலையில் புத்தளம் - கடையான்குளம் பகுதிஇன்று காலை முற்றாக வெளித்தொடர்புகளில் இருந்து முடக்கப்பட்ட போதும், பின்னர் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் மையத்துக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விஷேடமாக அண்மையில் மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற குழுவில் அடங்கிய ஒருவரும் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவ்வாறு சென்று திரும்பிய மூன்று குழுக்கள் கொரோன அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. மலேஷியாவில் குறித்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் கொரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுக்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில் , அக்குழுவில் உள்ளடங்கிய ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் அக்குரணை, புத்தளம், பாலாவி மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய முதல் குழுவில் அக்குரணை மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்குவதாகவும் அந்த குழு கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

2 ஆம் குழுவில் 5 பேர் உள்ளடங்குவதுடன் அவர்கள் பாலாவி மற்றும் புத்தளத்தை சேர்ந்தோர் எனவும் அவர்கள் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளதாகவும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அத்துடன் 6 பேரை உள்ளடக்கிய மூன்றாம் குழு 17 ஆம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில் அக்குழுவில் உள்ளடங்குவோர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தோர் என லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா கூறினார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அவ்வாறு சென்று வந்த அனைவருக்கும், அவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதார துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை கொழும்பு - ராஜகிரிய பகுதியின் ஒபேசேகர புர மற்றும் ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட அருனோதய மாவத்தை ஆகியவை தற்காலிகமாக இன்றுமுடக்கப்பட்ட நிலையில் மாலையாகும்போது சாதாரண ஊரடங்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் இருந்து கொரோனாதொற்று அறிகுறிகளுடன் சிறுவர்கள் உட்பட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதிகள் கடும் சுகாதார கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திறிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர்வரை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்களும் தற்போது அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகமல் இருப்போர் அது தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகப்பு அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு சுகாதார, பாதுகாப்புத் தரப்புக்கள் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.

https://www.virakesari.lk/article/78913

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

மலேஷியாவில் குறித்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் கொரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுக்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில் , அக்குழுவில் உள்ளடங்கிய ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் அக்குரணை, புத்தளம், பாலாவி மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்தோர்

கிட்டடில ஊர் சுற்றும் ஆன்மீகவாதிகளான (வியாபாரிகளான) பலரோட கொரோனா வைரஸ் ஒட்டி உறவாடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் ஆன்மீக (🤔) சுற்றுலா செல்வதாக கேள்விப்படுவது இதுதான் முதல் முறை. 

முன்பு சுற்றுலா (ஆன்மீக 😜) சென்றுவந்த யாராவது இருந்தால் எனக்கு கிளியர் பண்ணுங்கோ பிளீஸ் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் ஆன்மீக (🤔) சுற்றுலா செல்வதாக கேள்விப்படுவது இதுதான் முதல் முறை. 

முன்பு சுற்றுலா (ஆன்மீக 😜) சென்றுவந்த யாராவது இருந்தால் எனக்கு கிளியர் பண்ணுங்கோ பிளீஸ் 👏

ஆன்மீக சுற்றுலா என்றால் தாய்லாந்துதான் போக வேண்டும் என்று இல்லை 
இப்போ தெற்காசியாவில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் 
கொழும்புக்கே போயி பல புலம்பெயர் தமிழர்கள் ஞானம் அடைந்து வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கருப்பு சேட்டுக்கள் அணிந்து 
அய்யப்பன் கோவிலுக்கு நேர்த்தி கடன்வைத்து கேரளா வரை சென்று வருகிறார்கள் 
அடிக்கடி முகநூலில் அவர்கள் ஆன்மீக பயணம் பார்த்து இருக்கிறேன். 

ஆண்மீகம் என்றால் அது அப்படி ஒரு ஆண்மீகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

ஆன்மீக சுற்றுலா என்றால் தாய்லாந்துதான் போக வேண்டும் என்று இல்லை 
இப்போ தெற்காசியாவில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் 
கொழும்புக்கே போயி பல புலம்பெயர் தமிழர்கள் ஞானம் அடைந்து வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கருப்பு சேட்டுக்கள் அணிந்து 
அய்யப்பன் கோவிலுக்கு நேர்த்தி கடன்வைத்து கேரளா வரை சென்று வருகிறார்கள் 
அடிக்கடி முகநூலில் அவர்கள் ஆன்மீக பயணம் பார்த்து இருக்கிறேன். 

ஆண்மீகம் என்றால் அது அப்படி ஒரு ஆண்மீகம்!

நான் அந்தக்காலத்திலையே காவோலை வேலி பாய்ஞ்சு ஆண்மீகப்யணம் செய்தனான்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் அந்தக்காலத்திலையே காவோலை வேலி பாய்ஞ்சு ஆண்மீகப்யணம் செய்தனான்.😎

நல்ல வேளை கருக்குமட்டை உங்கள் ஆண்மீக தேடலுக்கு ஆப்பு வைக்காமல் விட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நான் அந்தக்காலத்திலையே காவோலை வேலி பாய்ஞ்சு ஆண்மீகப்யணம் செய்தனான்.😎

 

காலைமை எழும்பி  குளிச்சிட்டு துளசிய சுத்துனா நல்லது  நடக்கும் எண்டாங்க ..

அந்தப் புள்ள  விளக்க மாத்த  எடுத்து  காட்டிப்போட்டுது..

பிறகு தாமரையக் கொண்டுவா சரஸ்வதிக்கு புடிக்கும் எண்டாங்கள்,நான் அடுத்த தெருவுல தாமரையை கூப்பிட போனேன், ஊரே அடிக்க வந்துருச்சு,அப்புடியே வெளிநாட்டுக்கு ஓடியாந்துட்டேன்..

இப்பிடி என்ர ஆன்மீக பயணம் எல்லாம் பெயிலியர் மச்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

காலைமை எழும்பி  குளிச்சிட்டு துளசிய சுத்துனா நல்லது  நடக்கும் எண்டாங்க ..

அந்தப் புள்ள  விளக்க மாத்த  எடுத்து  காட்டிப்போட்டுது..

பிறகு தாமரையக் கொண்டுவா சரஸ்வதிக்கு புடிக்கும் எண்டாங்கள்,நான் அடுத்த தெருவுல தாமரையை கூப்பிட போனேன், ஊரே அடிக்க வந்துருச்சு,அப்புடியே வெளிநாட்டுக்கு ஓடியாந்துட்டேன்..

இப்பிடி என்ர ஆன்மீக பயணம் எல்லாம் பெயிலியர் மச்சி..

இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு 
அய்யப்பன் கோவிலுக்கு ஒரு நேர்த்தி கடன்வச்சு 
கேரளா போனா போச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

இப்ப என்ன பெருசா கெட்டுப்போச்சு 
அய்யப்பன் கோவிலுக்கு ஒரு நேர்த்தி கடன்வச்சு 
கேரளா போனா போச்சு 

இப்போதைக்கு போகமுடியாது..போலீஸ் அடிக்கிற அடியில கவட்டை கவந்துரும் மாம்ஸ்🤭🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 12:25 AM, Maruthankerny said:

நல்ல வேளை கருக்குமட்டை உங்கள் ஆண்மீக தேடலுக்கு ஆப்பு வைக்காமல் விட்டுது 

பதுங்கிறவையை கண்காணிக்க போனாலும் கருக்குமட்டை,முள்ளுக்கம்பி பழிவாங்கும். 😎

14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

காலைமை எழும்பி  குளிச்சிட்டு துளசிய சுத்துனா நல்லது  நடக்கும் எண்டாங்க ..

அந்தப் புள்ள  விளக்க மாத்த  எடுத்து  காட்டிப்போட்டுது..

பிறகு தாமரையக் கொண்டுவா சரஸ்வதிக்கு புடிக்கும் எண்டாங்கள்,நான் அடுத்த தெருவுல தாமரையை கூப்பிட போனேன், ஊரே அடிக்க வந்துருச்சு,அப்புடியே வெளிநாட்டுக்கு ஓடியாந்துட்டேன்..

இப்பிடி என்ர ஆன்மீக பயணம் எல்லாம் பெயிலியர் மச்சி..

முயற்சி காணாது இல்லாட்டி கூட இருந்த கூட்டுவள் சரியில்லை 🧐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.