Jump to content

“நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்” - கோவிட்-19 குறித்துப் பாடல் வெளியிட்ட டுவைன் பிராவோ!


Recommended Posts

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் பிராவோ, உலக அளவில் 27.000 பேரைக் கொன்ற கோவிட்-19க்கு எதிரான ஒரு புதிய பாடலை வெளியிட்டார். “நாம் விட்டுக் கொடுக்கவில்லை. தொற்றுநோயால் ஏற்பட்ட இந்த பாதிப்பில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை! ஒன்றாகப் போராடுவோம். இந்த பாதிப்பில் ஒரு நேர்மறையான பாடல்,” என்று பிராவோ அந்த மூன்று நிமிட 31 விநாடிப் பாடலுக்குத் தலைப்பிட்டார்.

பாடலில், மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர், கைகளைத் தொடர்ந்து கழுவுதல், வீட்டில் தங்கி இருத்தல், விலகி இருப்பதைப் பின்பற்றுவது போன்ற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறார்.

 

முன்னதாக, நியூசிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதி, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வித்தியாசமான யோசனை ஒன்றைக் கூறினார். சோதியின் இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட் செய்த ஒரு வீடியோவில், சோதி கொடிய தொற்றுநோயைப் பற்றி சில ராப் வசனங்களைத் தட்டிக் கொடுத்து, மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொன்னார்.

“கொரோனா வைரஸ் இன்று எனக்கு வராதே. கொரோனா வைரஸ், எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டியுள்ளது. கோவிட்-19 என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். எனது டிவி திரையில் உங்கள் பெயரைக் கேட்டு நான் சோர்ந்து விட்டேன்,” என்று சோதியின் பாடல் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு எதிரான நம் போராட்டத்தில் அரசாங்கம் மட்டுமல்ல, மருத்துவ நிபுணர்களும் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

“வணக்கம். நான் விராட் கோலி. இன்று உங்களிடம் நான் ஒரு கிரிக்கெட் வீரனாகப் பேசவில்லை. இந்தியக் குடிமகனாகப் பேசுகிறேன். கடந்த சில நாட்களாக மக்கள் கும்பலாகச் செல்வது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடப்பது, அரசை மதிக்காமல் செயல்படுவது - இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது. ஆனால், உண்மையில் இந்தப் போராட்டம் சுலபமானது கிடையாது.

எல்லோரும் தள்ளி இருத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் அரசு கொடுக்கும் வழிமுறைகள் படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நீங்கள் அசட்டுத்தனமாக வெளியே சுற்றுவதனால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். நாம் நமது கடமையைச் செய்தால் மட்டுமே, இந்தப் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியும். விதிகளை மீறுவது இந்த நாட்டின் நலனிற்கு எதிராகச் செயல்படுவதாகும். உங்களைப் போல நானும் தற்போது உள்ள சூழல் சரியாக வேண்டும் என்று விரும்புகின்றேன். அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கவும். ஹெய் ஹிந்த்!,” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க் கிழமை முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

 

https://sports.ndtv.com/tamil/cricket/dwayne-bravo-releases-new-song-on-covid-19-watch-video-2202206?pfrom=home-topstories

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.