Jump to content

எப்படி இருக்கிறது ஜெர்மனி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது என்பதும் புரியும்.

989.jpegகரோனா தொற்றில் ஜெர்மனி நான்காம் படிநிலையை அடைந்திருக்கிறது. ஜெர்மனி மட்டுமல்ல; ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அனைத்தும் நான்காம் நிலையில்தான் இருக்கின்றன. ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் மக்கள் நடந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளைத் தொலைக்காட்சி மூலமாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதன்படி, வீடுகளை விட்டு எவரும் வெளியே போக முடியாது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் ஒருவர் வெளியே சென்றுவரலாம். மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. வெளியே நடமாடும் மனிதர்களுக்கிடையில் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்; மீறுபவர்கள் அதிகபட்ச அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இந்த விதிகள் வெளியிட்ட அடுத்த நாள்தான் அந்த மனிதரின் இறுதிக் கிரியைகள் நடந்தன.

990-2-1024x682.jpg

தேவாலயத்தில் பணிபுரியும் ஒருவர் தூபத்தைப் பிடித்தபடி முன்னால் செல்கிறார். ஐந்து மீட்டர் இடைவெளியில் பாதிரியார் வருகிறார். பத்து மீட்டர் பின்னால் இறந்தவரின் உடல் இருக்கும் பெட்டியானது சாதாரண வண்டி போன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை இருவர் தள்ளுகிறார்கள். பின்னால் குடும்ப உறுப்பினர்களில் மூவர் மட்டும் வருகிறார்கள். வேறு யாருக்கும் அங்கு அனுமதியில்லை. வெறும் மூன்று குடும்ப உறுப்பினருடன் அந்த மனிதரின் இறுதி யாத்திரை நடந்து முடிந்தது. ஏனையவர்கள் தேவாலயத்தில் பணிபுரிபவர்கள். இப்படியானதொரு இறுதிப் பயணம் ஜெர்மனியில் இதுவரை நடந்ததே இல்லை என்றார்கள்.

 

இப்படியான விஷயங்கள் ஜெர்மானியர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. கூடவே, கரோனா வைரஸ் தரும் இன்னொரு நெருக்கடி பொருளாதார இழப்பு. கரோனா பாதிப்பைத் தாண்டி இந்த உபவிளைவுதான் ஒவ்வொரு நாட்டையும், ஒவ்வொரு நபரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கரோனா வைரஸின் அட்டகாசம் சீனாவிலிருந்து, பிறகு ஓரிரு நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்த சமயத்தில், “இந்த வைரஸ் இயற்கையாய் வந்ததல்ல; பெருமுதலாளிகள் செயற்கையாக உருவாக்கி வெளியிட்டது” என்பன போன்ற பேச்சுகள் உலவின. ஆனால், கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அதிகமாக அடிபட்டவர்களுள் பெருமுதலாளிகளும் அதிக அளவில் இருந்தனர்.

ஒரு நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநிலை மூன்றாம் கட்டத்தை அடைய ஆரம்பிக்கும்போது அந்நாடு தன்னைத் தனிமைப்படுத்த ஆரம்பிக்கும். அதனால், பிற நாடுகளுக்கிடையில் நடக்கும் போக்குவரத்துகள் ரத்துசெய்யப்படும். இதனால், விமான நிறுவனங்கள் நஷ்டமடையத் தொடங்கும். பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் நிறுவனத்தையே விற்கும் நிலை ஏற்படும். நான்காம் நிலைக்கு நாடுகள் வரும்போது சிறு, பெரு வணிக நிலையங்களும் தொழிற்சாலைகளும் மூட வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பே இவர்கள்தான். ஜெர்மனி போன்ற தொழிற்சாலை நாடுகளுக்கு இந்த வணிகர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். சென்னை போன்ற பெருநகரமொன்றில் இருக்கும் அனைத்துக் கடைகளும் தொழிற்சாலைகளும் மூடப்படுவதால் எத்தனை பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்!

பல வணிகர்கள் தொழிலைக் கைவிடும்போது நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குப் போகும். ஜெர்மனியில் ஒருவர் எந்தக் காரணத்துக்காகக் கடையைப் பூட்டினாலும் அங்கே பணிபுரிபவர்களுக்கு ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது விதி. மறுக்கவே முடியாது. ‘இனி முடியவே முடியாது’ என அவர் இரு கரங்களைத் தூக்கும் வரை கொடுத்தாக வேண்டும். அப்படி இரு கைகளையும் உயர்த்தும் நிலை இன்று பலருக்கு உருவாகிவருகிறது. ‘பிட்ஸா ஹட்’ போன்று ஜெர்மனியில் இயங்கும் மிகப் பெரிய உணவகமான ‘வப்பியானோ’ தன் அனைத்துக் கிளைகளையும் மூடிவிடுவதாகவும், தாங்கள் பணமில்லா நிலைக்குச் சென்று வணிகத்தை முற்றாகக் கைவிடுவதாகவும் அறிவித்தது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம், ‘வப்பியானோ’ ஜெர்மன் முழுவதும் பல கிளைகளுடன் ஜேஜேயென வியாபாரம் நடைபெற்றுவந்த ஒரு வணிகச் சங்கிலி.

இன்று கரோனாவால் அந்தச் சங்கிலி அறுந்து தொங்கிவிட்டது. இந்த அறிவிப்பானது பல வணிகர்களைப் பீதியடைய வைத்திருக்கிறது. ஜெர்மன் அரசு உடனடியாகப் பல சலுகைகள் அளித்தது. யாரையும் நஷ்டமடைய அனுமதிப்பதில்லை என ஜெர்மன் அரசு முடிவுசெய்தது. முதல் கட்டமாக, 600 பில்லியன் யூரோக்களை வணிகர்களுக்கு வழங்குவதற்கான ஆரம்பக் கட்ட நிதியாக ஒதுக்கிக்கொண்டது. இது தவிர்த்து, ஐரோப்பிய மத்திய வங்கியானது 750 பில்லியன் யூரோ பெறுமதியான புதிய பணத்தை அச்சடிக்கவும் தயாராகியது. இதன் மூலம் யூரோவின் பெறுமதி கீழ்நோக்கிச் செல்லும் என்றாலும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் உண்டாக்கும் பொருளாதார நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பது இன்றைய உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகக் கோரமான கேள்வி. மீண்டுவிடலாம் என்று நம்பிக்கை தருகிறது ஜெர்மனி. எப்படி என்றால், அரசாங்கம் இங்கே எங்களுடன் கை கோத்து நிற்கிறது!

நன்றி: இந்து

http://thinakkural.lk/article/37276

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.