Jump to content

உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத்தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா!


Recommended Posts

சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது.

சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், முகக்கவசங்களையும், காற்றோட்ட சாதனங்களையும், மருந்துப்பொருட்களையும் சீனா அனுப்பிக்கொண்டிருக்கிறது.

அது மாத்திரமல்ல, தமது சுகாதாரத்துறை நிபுணர்களையும் சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிகறது. லைபீரியா மற்றும் கம்போடியா போன்ற வறிய, வளர்முக நாடுகுள் மாத்திமல்ல, பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளும், குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற ஜி-8 உறுப்பு நாடுகளும் இதிலடங்கும்.

கடந்த காலத்தில் உதவிக்காக வொஷிங்டனை நம்பியிருந்த வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இப்பொழுது ஆதரவிற்காக பெய்ஜிங்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலக ஒழுங்கை சீனா இப்போது மீள வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

மண்டலமும், பாதையும் செயற்திட்டம் சீனாவின் உலகளாவிய பொருளாதார வலிமையை வெளிக்காட்டுகின்றதென்றால், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுடன் அந்நாடு உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.

சீனா அவ்வாறு செய்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதையும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார். தற்போதைய உலக சுகாதார நெருக்கடியில் தனக்கிருக்கின்ற பொறுப்பு வாய்ந்ததும், மற்றவர்களின் நெருக்கடி மீது அனுதாபம் கொண்டதுமான தலைமைத்துவப் பாத்திரத்தை ட்ரம்ப் வகிக்கத் தவறுவதால் சீனாவின் வளர்ச்சி சாத்தியமாகிறது.

அவரது ‘அமெரிக்கா முதலில்” என்ற கொள்கை உலகளாவிய பல்வேறு செயற்திட்டங்களிலும், நிறுவனங்களிலும் அமெரிக்காவின் பங்கேற்பைக் குறைத்துவிட்டது. அமெரிக்கா அதன் சொந்த நலன்களிலேயே முற்றுமுழுதாக மூழ்கியிருக்கும் போக்கு தற்போது முன்னெப்போதும் இல்லாத மட்டங்களுக்குச் சென்றுவிட்டது. ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஐரோப்பிய நேச நாடுகளைக் கூட அலட்சியம் செய்வது மாத்திரமல்ல, தனது சொந்த மக்களுக்கு உதவுவதில் கூட மிகவும் காலந்தாழ்த்தியே செயற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்” என்று அவர் அழைத்தார். அதன்மூலம் அவரது தந்திரோபாயம் தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு சீனா மீது பழியைப்போடுவதும், நையாண்டி செய்வதுமாகவே இருந்தது. இது உலகத் தலைமைத்துவத்திற்கான ஒரு செயற்பாடல்ல.

கொவிட் – 19 சீனாவிலிருந்தே தோன்றியது என்பது உண்மையே. தொற்றுப்பரவலை சீனா ஆரம்பத்தில் கையாண்ட விதம் பொருத்தமற்றதாகவும், குறைபாடுடையதாகவும் இருந்தது. புதிய வைரஸ் தொற்று அபாயமிருப்பதாக எச்சரிக்கை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, நெருக்கடியின் பாரதூரத்தன்மையைக் குறைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. தகவல்கள் மற்றும் எண்ணிக்கை விபரங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் இரண்டகமான முறையிலும், ஒழிவுமறைவாகவும் செயற்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் தவறாக நடந்துகொண்ட பிறகு சீ ஜின்பிங் அரசாங்கம் தம்மை முழுமையாகத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து செம்மைப்படுத்திக்கொண்டது. தனிமைப்படுத்தல் நிலையங்களும், வைத்தியசாலைகளும் குறிப்பிடத்தக்க வேகத்தில் நிர்மாணிக்கப்பட்டன. தொற்றுத்தடுப்பிற்கா நகரங்களை மூடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை சற்றுக் கடுமையானவையாக இருந்தன. ஆனால் பல வாரங்கள் கழித்து உள்நாட்டு நிலவரம் மேம்படத் தொடங்கியதும் சீனா ஏனைய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டத்தொடங்கியது.

பாரதூரமான நிச்சயமற்ற தன்மையும், நெருக்கடியுமான சூழ்நிலையில் உலகிற்கு உறுதிவாய்ந்த தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அதை உலகளாவிய ரீதியில் எல்லை கடந்த செயற்பாடுகள் மூலம் சீனா அந்தத் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. சீனா தனது பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவே பலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கை ஏனைய நாடுகளுக்கு சாதகமான வழியில் உதவுகின்றது. நண்பர்களை வென்றெடுத்து, செல்வாக்கை அதிகரிப்பதற்குச் சீனா அதன் மென்சக்தியைப் பயன்படுத்துவதை உலகளாவிய தலைமைத்துவம் பற்றிய பாசாங்கைக் கொண்ட அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ஏளனம் செய்யவோ அல்லது விளையாட்டகவோ கருதக்கூடாது.

டெக்கான் ஹெரால்ட் ஆசிரியர் தலையங்கம்

http://eelamurasu.com.au/?p=26379

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா....  வேண்டுமென்றே, இந்த வைரஸை உலகிற்கு பரப்பி...
தன்னை வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தது போல் உள்ளது.

Link to comment
Share on other sites

மனிதாபிமான வல்லரசாக மட்டுமல்ல, பொருளாதார வல்லரசாகாவும். 
உருசியாவுடன் இணைந்தால் - இராணுவ வல்லரசாகவும் மாறலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.