Jump to content

மருத்துவர்கள் உயிர் களத்தின் போராளிகள் - தீபச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர்கள் உயிர்களத்தின் போராளிகள்: தீபச்செல்வன்

doctors.jpg

கொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு. யுத்தங்களின் போதும், கொள்ளை நோய்களின் போதும் மருத்துவர்கள் ஆற்றும் உயிர்காக்கும் பணி என்பது மிகவும் மகத்துவமானது. கொரோனாவின் அச்சுறுத்தல் உலகை மிரட்டுகின்ற தருணத்தில், மருத்துவர்களின் இடையறாத பணிகள் இப் பூமியை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.

உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்தபடியிருக்கும் சூழலில் நமக்கு முள்ளிவாய்க்கால் யுத்தம் கண் முன்னே வருகின்றது. இலங்கை அரசு யுத்த்தின்போது காற்றில் விஷத்தை கலந்தது போல, மூச்சுக் காற்றின் ஊடே நோய் பரவுகின்றது. கொட்டும் குருதியை தடுக்க கைகளால் காயங்களை பொத்திக் கொண்ட மருத்துவர்களும் அறுக்கப்பட்ட உடற்பாகங்களை கைகளில் ஏந்திய மருத்துவர்களும் நினைவில் வந்து செல்கின்றனர். அப்படி முள்ளிவாய்க்காலில் போராளிகளும் மருத்துவர்களும் மனித உயிர்களை காக்கச் செய்த களப் பணிகள் மனதில் தோன்றுவது தவிர்க்க முடியாது.

ஊரடங்கிய நகரத்தில் இருந்து இந்த பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன். குறுக்கும் நெடுக்குமாக இராணுவ வண்டிகள்தான் அதிகம் உலாவுகின்றன. இதற்கிடையில் மருத்துவர்களும் தாதியர்களும் மூடிக் கட்டிய முகங்களுடன் உலாவுகின்றனர். மருத்துவமனைகளை நோக்கி பணிக்குச் செல்பவர்களும் பணி முடித்து மங்கற் பொழுதில் வீடு செல்லுபவர்களுமாய் இருக்கிறது கிளிநொச்சி. உயிர்களை காத்துக்கொள்ளுவதற்காக உலகமே வீடுகளாய் கதவுகளை அடைத்து முடங்கியிருக்கும் இந்த அபாயத் தருணத்திலும் இவர்கள் உலவுகின்றனர்.

உலகம் எங்குமிருந்து வரும் மருத்துவர்களின் கதைகளைக் கேட்க மனம் கசிந்துருகுகிறது. கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஒன்பது மருத்துவர்கள் அந்த நோய் தாக்கி உயிரிழந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. உயிர்காக்கும் பணியில் தம்மை போராளிகளாக்கி தமது உயிரை ஈர்ந்த இவர்களைப் பற்றிக் கேட்கையில் எம் மண்ணின் மருத்துவப் போராளிகள் நினைவுக்கு வருகின்றனர். இப்போது அந்த நாடு மருத்துவத்திற்காக பெரும் அலைக்கழிவிலுள்ளது.

இந்துனேசியா நாட்டில் கொரோனா தடுப்பு மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் ஹாதியோ அலி. மருத்துவப் பணியிலிருந்து வீடு திரும்பிய இவர், தனியாக உணவெடுத்துவிட்டு, வாசலில் நின்று தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் கையசைத்து விடைபெறும் வேளையில் அவரது மனைவி அதனைப் புகைப்படம் பிடித்தார். கர்ப்பணியான அந்த மனைவி பதிவு செய்த இந்த புன்னகை இறுதிப் புன்னகையானது. மருத்துவர் ஹாதியோ அலி கொரோனா களத்தில் தன்னை அர்ப்பணித்துவிட்டார்.

இதைப்போல சீனாவில் கொரோனா தடுப்பு மருத்துவப் பணி புரிந்த 29 வயதான மருத்துவர், பெங் யூன்ஹூவா இப் பணியின் போது உயிரிழந்த சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆற்ற வேண்டியதால் தனது திருணமத்தை தள்ளி வைத்த பெங், இந்தப் பணியின் போது நோய்தான் உயிரிழந்திருக்கிறார். உண்மையான மருத்துவப் போராளியாக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

ஈரான் நாட்டிலும் கொரோனாவின் அச்சுறுத்தல் மிகவும் கடுமையாக உள்ளது. அங்கும் பலத்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த மருத்துவர் ஷிரீன் ரூகானிராத் ராத், கொரோனா நோய் தாக்கி மரணித்துள்ளார். தன்னுடைய ஒப்பற்ற மருத்துவப் பணியினால் சுமார் 6400பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் இந்த நாயகன். சரியான ஓய்வு, உணவு, அதிகமான வேலை நேரம் போன்ற சூழ்நிலைகளுடன் கொரோனாவின் தாக்கமும் ரூகானிராத் ராத்தின் உயிரை பறித்திருக்கிறது.

இதைப்போல பாகிஸ்தான் நாட்டிலும் கொரோனாவின் தாக்குதலுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார். பாகிஸ்தான் ஹீரோ எனப்பட்ட, உசாமா ரியாஸ் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மிகவும் இளைய வயதைக் கொண்ட இவரது மரணம் அந்நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய இளமையான மருத்துவப் பணிகளின் ஊடாக  தன்நாட்டு மக்களுக்கு அளப்பெரிய பணியை அவர் ஆற்றினார்.

முகக்கவசங்களை கட்டி காயங்களும் வடுக்களும் நிறைந்த முகங்களை மிகவும் நன்றியுடன் நாம் நினைவு கூர வேண்டும். ஓய்வற்ற கடும்பணியில் உறங்க கூட நேரமில்லாமல் நோயாளிகளின் கால்மாட்டுக்களில் அவர்கள் உறங்குகின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். சேர்த்து வைத்த சொத்துமில்லை, சொந்தமும் இல்லை. இப்போது மருத்துவர்களும் தாதியர்களும் மாத்திரமே கொரோனா நோயாளிகளின் அருகில் உள்ளனர். கொரோனாவால் உயிரிழக்கும் அத்தனை பேரின் இறுதி வார்த்தைகளையும் கேட்டு இறுதி யாத்திரைக்கு விடைபெற்று அனுப்பி வைப்பது இவர்களே.

இந்த மருத்துவர்களும் தாதியர்களும் ஒப்பற்ற பணியை ஆற்றுகின்றனர். முகப்புத்தகத்தில் பலரும் பகிரும் ஒரு வாசகம் இது, “தெய்வங்கள் மருத்துவமனைகளில் பணி புரிவதால் கோயில்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன…”. ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் வாடகை்கு குடியிருக்கும் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேறிச் செல்லுமாறு வீட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளதாக செய்திகளும் இப்போதும் வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த மருத்துவர்களாலும் தாதியர்களாலும் தமக்கு கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படும் என வீட்டு உரிமையாளர்கள் அஞ்சுகின்றனராம். தமிழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலும் இந்த பிரச்சினை கவனம் பெற்று வருகின்றத. தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்று இவர்களுக்கு தங்குமிடமாக தமது விடுதியை வழங்கவும் முன்வந்திருப்பது நல்ல செய்தியாகும்.

ஈழ மண் உயிர் காக்கும் உன்னதமான மருத்துவர்களின் பணிகளை கண்டிருக்கிறது. போர்க்காலத்தில் போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் ஆற்றிய உயிர்காக்கும் பணிகள் வரலாற்று சாதனைகள். இலங்கை அரசின் கடுமையான போருக்குள், கடுமையான மருத்துவ தடைகளுக்கு மத்தியில், மருத்துவமனைகள்மீது கிபீர் தாக்குதல்களும் கொத்துக் குண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்ட சூழலில் அவர்கள் ஆற்றிய மருத்துவ பணிகளை ஈழத் தமிழினம் ஒருபோதும் மறவாது.

உயிர்களோடும் காயங்களோடும் இழப்புக்களோடும் மிகவும் நெருங்கிய சாட்சிகளாக, உண்மைச் சாட்சிகளாக, மரணங்களை பற்றிய வாக்குமூலங்களை வழங்குபவர்களாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த சாட்சியங்களாகவும் ஈழத்து மருத்துவர்கள் மாறியுள்ளனர். துப்பாக்கி ஏந்தாமல், மருத்துவ சாதனங்களை ஏந்தி, கழுத்தில் சைனைட் குப்பிகளுக்குப் பதிலாக வைத்திய பரிசோதனைக் கருவியை தாங்கி உயிர்களை காத்து, இன்று அழிக்கப்பட்ட உயிர்களின் நீதிக்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கொண்ட ஈழ மண், உலகின் ஒப்பற்ற மருத்துவ களத்தில் மாண்டவர்களுக்காய் அஞ்சலிக்கிறது.

http://www.vanakkamlondon.com/theepachelvan-29-03-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில்..... மிக அதிகமான மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும்.... 
இந்த நோய் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.