Jump to content

இலங்கையின் ஏற்றுமதி ஜனவரி, பெப்ரவரில் 3.6 சதவீதமாக சரிவு


Recommended Posts

(ஆர்.ராம்)
2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 3.6 சதவீதம் குறைந்துp;">1,931 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபைp;">தெரிவித்துள்ளது.</span></p>


நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்p;">ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கை ஏற்றுமதியாளர்கள் 174 நாடுகளுக்கு 2,429 தயாரிப்புகளைp அனுப்புவதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கைளின் ஏற்றுமதிகளை அமெரிக்கா 260 மில்லியன் டொலர்களுக்கும் இங்கிலாந்து, 95 மில்லியன் டொலர்களுக்கும், இந்தியா 73 மில்லியன் டொலர்களுக்கும், ஜெர்மனி 51 மில்லியன் டொலர்களுக்கும், இத்தாலி 40 மில்லியன் டொலர்களுக்கும் கொள்வனவு செய்கின்றன.

குறிப்பாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பெறப்படும் 939 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கொள்வனவு முக்கியமானது.

தேயிலை ஏற்றுமதி மூலம் 208 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதோடு இலங்கை தேயிலைக் கொள்வனவில், துருக்கி மற்றும் ரான் ஆகிய நாடுகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன.

தெங்கு உற்பத்திப் பொருட்கள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைப்பதோடு அமெரிக்கா,ஜெர்மனி, இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த உற்பதிகளை கொள்வனவு செய்கின்றன.

முடிவுறுத்தப்பட்ட இறப்பர் தயாரிப்புகளான டயர்கள்,கையுறைகள், முத்திரைகள், உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், வியட்நாம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

அந்த ஏற்றுமதி ஊடாக 142 மில்லியன் டொலர்கள் வருமானமான கிடைத்து வந்தபோதும்  அவ்வருமானம் 9 மில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளன.மின்சார மற்றும் மின்னணு மற்றும் இயந்திர தயாரிப்புகளை இந்தியா, மாலத்தீவு மற்றும் மெக்ஸிகோவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்வதால் 12 மில்லியன் டொலர்கள் வருமானத்தினை பெற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78924

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

தேயிலை ஏற்றுமதி மூலம் 208 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதோடு இலங்கை தேயிலைக் கொள்வனவில், துருக்கி மற்றும் ரான் ஆகிய நாடுகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன.

இதனை தரும் மலையக மக்களின் வாழ்வில் சம்பளத்தை  கூட்டித்தராமல் ஏமாறும் மக்களும் அவர்களை ஏமாற்றும் தொழில்சங்க மற்றும் சிங்கள தலைமைகளும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.