Jump to content

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு


Recommended Posts

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு

 

 

     by : Jeyachandran Vithushan

Ministry-Of-Education.jpg

2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சில தரப்பினரால் வதந்திகள் பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உயர்தரப்-பரீட்சை-ஒத்திவை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பாடசாலையும் இல்லை, தனியார் கல்விநிறுவனங்களுக்கும் ஓடவேண்டிய தேவை இல்லை. வீட்டில் நிம்மதியாக பாடங்களை கற்பதற்கு மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பரீட்சை தள்ளிப்போகாமல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் வைக்கப்படுவது நல்லவிடயம்.

Link to comment
Share on other sites

சும்மா பொழுதை போக்காமல் மாணவர்கள் வீட்டில படிக்கிறதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேணும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலபஸ் முடிச்சிருப்பினமோ ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

சிலபஸ் முடிச்சிருப்பினமோ ?
 

 

12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்போது பாடசாலையும் இல்லை, தனியார் கல்விநிறுவனங்களுக்கும் ஓடவேண்டிய தேவை இல்லை. வீட்டில் நிம்மதியாக பாடங்களை கற்பதற்கு மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பரீட்சை தள்ளிப்போகாமல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் வைக்கப்படுவது நல்லவிடயம்.

வீட்டிலிருந்து நிம்மதியாக படிக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

 

வீட்டிலிருந்து நிம்மதியாக படிக்கலாம் 

சிலபஸ் முடித்திருக்க முடியாது அல்லவா ?... போன வருடத்தில் இருந்து பாடசாலை நடந்த நாட்களே குறைவு ...இப்ப ரியூசனுக்கும் போக  முடியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

சிலபஸ் முடித்திருக்க முடியாது அல்லவா ?... போன வருடத்தில் இருந்து பாடசாலை நடந்த நாட்களே குறைவு ...இப்ப ரியூசனுக்கும் போக  முடியாது 
 

 

12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்போது பாடசாலையும் இல்லை, தனியார் கல்விநிறுவனங்களுக்கும் ஓடவேண்டிய தேவை இல்லை. வீட்டில் நிம்மதியாக பாடங்களை கற்பதற்கு மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பரீட்சை தள்ளிப்போகாமல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் வைக்கப்படுவது நல்லவிடயம்.

இவரிடம் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை தேசிய அளவில் வைக்கப்படும் ஒரு போட்டிப்பரீட்சை. இங்கு அனைத்து பகுதியில் வதியும் மாணவர்களும் தற்போது ஊரடங்கு உத்தரவில் வீட்டுக்குள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். பாடதிட்டம் முழுமை அடைவது அடையாதது சம்மந்தமாக அனைவருக்கும் ஒரேமாதிரியான அளவு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை பெறுபேற்றில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு வர வாய்ப்பு இல்லை. பெறுபேறு ஒட்டுமொத்தமாக குறைந்தால் அதற்கு ஏற்றாற்போல் அனைவருக்கும் புள்ளிகளை கூட்டலாம் (bell curve).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 3:49 PM, ரதி said:

சிலபஸ் முடிச்சிருப்பினமோ ?
 

ம் சிலபஸ்  முடிஞ்சுது பாஸ் பேப்பர் மீட்டல் எனது பாடசாலையில் 2 ம் மாசமே இந்த வருடம் உயர்தரம் எழுதவிருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை ஆனால் முக்கியமான பாடங்கள் அதாவது கணித பிரிவு, உயிரியல் பிரிவுகளுக்கான சேமினார்கள் மீட்டல் பயிர்ச்சிகளுக்கு மட்டும் பாடசாலைக்கு வருவார்கள் ஆட்ஸ், கொமஸ், பாடங்களுக்கு மாணவர்கள் பெரிதாக வருவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎1‎/‎2020 at 3:27 PM, தனிக்காட்டு ராஜா said:

ம் சிலபஸ்  முடிஞ்சுது பாஸ் பேப்பர் மீட்டல் எனது பாடசாலையில் 2 ம் மாசமே இந்த வருடம் உயர்தரம் எழுதவிருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில்லை ஆனால் முக்கியமான பாடங்கள் அதாவது கணித பிரிவு, உயிரியல் பிரிவுகளுக்கான சேமினார்கள் மீட்டல் பயிர்ச்சிகளுக்கு மட்டும் பாடசாலைக்கு வருவார்கள் ஆட்ஸ், கொமஸ், பாடங்களுக்கு மாணவர்கள் பெரிதாக வருவதில்லை

ஆச்சரியமாய் இருக்கிறது ...பாடசாலை நாட்கள் குறைவாய் இருந்தும் சிலபஸ் முடித்திருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

ஆச்சரியமாய் இருக்கிறது ...பாடசாலை நாட்கள் குறைவாய் இருந்தும் சிலபஸ் முடித்திருக்கிறார்கள்

காலையிலும் பாடசாலை முடிவடைந்த பின்னரும் மேலதிக வகுப்புகள் வைத்து சிலபஸ் முடித்தார்கள் அதிபரின் பணிப்புக்கு மற்ற பாடசாலைகள் என்னமாதியென்று தெரியல எங்கள் பாடசாலை மிக முக்கியமான பாடசாலை அதுவும் பெண்கள் பாடசாலை 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காலையிலும் பாடசாலை முடிவடைந்த பின்னரும் மேலதிக வகுப்புகள் வைத்து சிலபஸ் முடித்தார்கள் அதிபரின் பணிப்புக்கு மற்ற பாடசாலைகள் என்னமாதியென்று தெரியல எங்கள் பாடசாலை மிக முக்கியமான பாடசாலை அதுவும் பெண்கள் பாடசாலை 👋

உங்கள் ஊர்ப் பாடசாலையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

உங்கள் ஊர்ப் பாடசாலையா 

இல்லை இது வேறு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை இது வேறு 

சரி...அப்படி என்றால் அநேகமான பாடசாலைகள் சிலபஸ் முடித்திருக்கும் என்று நினைக்கிறேன் ...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

சரி...அப்படி என்றால் அநேகமான பாடசாலைகள் சிலபஸ் முடித்திருக்கும் என்று நினைக்கிறேன் ...நன்றி 

ம்ம் முடித்திருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.