Jump to content

அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி


Recommended Posts

அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி

 

 

     by : Litharsan

Trump-And-America-Flag.jpg

அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப் பெறுவதாக கூறினார். பல இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் மரண எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் அறிவித்தார்.

இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்ச நிலைக்குச் செல்லும் எனக் கூறிய அவர், ஜூன் முதலாம் திகதிக்கு பின்னர் விடிவு பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையிலானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது.

மேலும், நேற்று மட்டும் 264 பேர் மரணித்த நிலையில் மொத்த மரணம் 2 ஆயிரத்து 484 ஆகக் கூடியுள்ளதுடன் தீவிர சிகிச்சையில் மூவாயிரம் பேர் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவில்-இரண்டு-இலட/

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப் பெறுவதாக கூறினார். பல இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. 

இப்படி சொல்லிவிட்டு அதை விட குறைவானர்கள் பாதிக்கப்பட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் தம்மட்டம் அடிக்கலாம் தங்கள் திறமையை சொல்லி. 

அதிகம் பேர் பாதிக்கப்பட்டால் ஒருவாறு எதிர்த்தரப்பில் உள்ளவர்களை குறை கூறலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் - 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை... அதிரும் அமெரிக்கா

ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் - 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை... அதிரும் அமெரிக்கா

நியூயார்க்:
 
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.
 
உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

இந்த ஆள் தானாக  வாயை திறப்பது சிக்கலை தருவதாய் உள்ளது. 

மருத்துவ ஆலோசகர்களை உதாசீனம் செய்வதை வழமையான நாளாந்த விடயமாகி விட்டது. 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 வாரங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அடுத்த மாதம் 30 வரை சமூக விலகல் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்,  மார்ச் 31: அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா தொற்று பலி  எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க கூடும் என்பதால், சமூக விலகலை ஏப்ரல் 30ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ்  பாதிப்பினால், வளர்ந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவும் மிகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 1.43 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,509 பேர் பலியாகி  உள்ளனர். 4,700க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில்,  இங்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும்  இன்னும் 2 வாரங்களில் இறப்பு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும்  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 16ம் தேதி சமூக விலகல் அறிவிக்கப்பட்டது. அப்போது 15 நாட்கள் இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே,  வெள்ளை மாளிகையில் காணொலி மூலம் செய்தியாளர்களுடன் உரையாடிய டிரம்ப்,  `‘அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் கொரோனா சிறப்பு குழுவின் ஆலோசகர்கள்  டாக்டர் டெபோரா பிக்ஸ், அந்தோனி பவுசியின் அறிவுரைப்படி வரும் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகல் உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

ஜூன் 1ம் தேதி முதல்  அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கும்’’ என்று கூறினார். அதன்  பின்னர், ரோஸ் கார்டனில் கொரோனா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில்,  ‘‘இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அமெரிக்க மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் மூலம் பலி எண்ணிக்கையை  ஓரளவாவது குறைக்க முடியும். இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பு  அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தால் இதுவரை 22 லட்சம் பேர் வரை பலியாகி  இருப்பார்கள்’’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

வெளியே வந்தால் 14,000-28,000 அபராதம்:
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. ஆனால் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்தபோது, 12 மாகாணங்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருந்தன. பெரும்பாலான  நகரங்களில் ஊரடங்கை மக்கள் ஒழுங்காக கடைபிடித்தாலும் சில பகுதிகளில்  அத்துமீறல் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து நியூயார்க் உள்ளிட்ட முக்கிய  நகரங்களில் ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 14,000 முதல் 28,000 வரை அபராதம்  விதிக்கப்படுகிறது.

தவிக்கும் நியூயார்க்  :
நியூயார்க் நகரில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை  கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 237 பேர் உயிரிழந்ததால் பலியானோர்  எண்ணிக்கை 728ல் இருந்து 965 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில்  இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது 8,000 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,000 பேர் தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,500 பேர் வீடு  திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும் 846 பேர் குணமடைந்து வீட்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். அவசர தேவை கருதி 1,000 படுக்கைகள் கொண்ட  மருத்துவமனையும் 1,200 மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575615

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.