Jump to content

சீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...!


Recommended Posts

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

 கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது.

முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர்.

ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

 

சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார்.

latest tamil news

கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

PeacefulPaleCockatoo-size_restricted.gif

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

 

புரட்சி...  "தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்" 
என்ற.... பழமொழியை நீங்க கேள்விப்படவில்லையா? 
இதை...  உலகம், அனுபவித்து தான் ஆக வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

நண்பா,
ஆந்தைகள் இயற்கையாகவே வொளவால்களை சாப்பிடுமாம். 

சீனாவிற்கு ஆந்தைகளை அனுப்ப வேண்டும் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால ஒவ்வொரு நாட்டுக்காரனும்  ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு வீட்டுக்குள்ள  உக்காந்த்திருகாங்க..

மறுபடியுமா?? ஏண்டா படுத்துறீங்க ..🤦🏻‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

கூப்பிட்டீங்களா எசமான்?

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

ஆளுக்கு ஆந்த கண் போல 😅

ஆந்தைக்கு  வொளவாலையும் பிடிக்குமாம் 😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

7 hours ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்
இறைச்சி சந்தைகளில் விற்கப்படும் வவ்வால், தேள், முயல் - கோப்புப்படம்
 

வுகான்: 

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. 

கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய இந்த வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகையான போக்குவரத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

அதே நேரம் சீனாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வவ்வால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்

https://www.maalaimalar.com/news/topnews/2020/03/31133254/1383494/Chinese-Markets-Reopen-Selling-Bats-Dogs-and-Cats.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

வன்னியர் சப்பாத்தி சாப்பிட பிளான் பண்ணுறார்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

நான் சாப்பிடுவதில்லை. சாப்பிடுபவர்களின் மேல் உள்ள  நல்லெண்ணத்தில் அதை எழுதினேன்.😁
அவையும் பாவமெல்லே:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பொருளாதார வளம், கடின உழைப்பால், மலர்ந்தாலும், அடிப்படையில் 1.5 பில்லியன் சனத்தொகை. கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவன்ஓடி வருவதற்கு முன்னர் கையில் கிடைத்ததை, வேகவைக்காமலே உண்ணும் கடும் பசியால் வந்த பழக்கம்.

இப்போது எதுவாக இருந்தாலும் வேக வைத்துண்ணுமாறு அரசு சொல்லிவிட்டது.

பசி வந்தால் பத்தும், கொரோணாவாவும், பறந்து போகும்.

கொரோணா தொடர்பில், இந்திய அரசின், அவசர பொறப்பற்ற நடவடிக்கைகள், பசிப்போராட்டங்களை உருவாக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.