Jump to content

சீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...!


Recommended Posts

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

 கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது.

முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர்.

ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

 

சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார்.

latest tamil news

கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

PeacefulPaleCockatoo-size_restricted.gif

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

 

புரட்சி...  "தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்" 
என்ற.... பழமொழியை நீங்க கேள்விப்படவில்லையா? 
இதை...  உலகம், அனுபவித்து தான் ஆக வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

நண்பா,
ஆந்தைகள் இயற்கையாகவே வொளவால்களை சாப்பிடுமாம். 

சீனாவிற்கு ஆந்தைகளை அனுப்ப வேண்டும் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால ஒவ்வொரு நாட்டுக்காரனும்  ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு வீட்டுக்குள்ள  உக்காந்த்திருகாங்க..

மறுபடியுமா?? ஏண்டா படுத்துறீங்க ..🤦🏻‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

கூப்பிட்டீங்களா எசமான்?

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

ஆளுக்கு ஆந்த கண் போல 😅

ஆந்தைக்கு  வொளவாலையும் பிடிக்குமாம் 😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

7 hours ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்
இறைச்சி சந்தைகளில் விற்கப்படும் வவ்வால், தேள், முயல் - கோப்புப்படம்
 

வுகான்: 

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. 

கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய இந்த வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகையான போக்குவரத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

அதே நேரம் சீனாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வவ்வால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்

https://www.maalaimalar.com/news/topnews/2020/03/31133254/1383494/Chinese-Markets-Reopen-Selling-Bats-Dogs-and-Cats.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

வன்னியர் சப்பாத்தி சாப்பிட பிளான் பண்ணுறார்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

நான் சாப்பிடுவதில்லை. சாப்பிடுபவர்களின் மேல் உள்ள  நல்லெண்ணத்தில் அதை எழுதினேன்.😁
அவையும் பாவமெல்லே:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பொருளாதார வளம், கடின உழைப்பால், மலர்ந்தாலும், அடிப்படையில் 1.5 பில்லியன் சனத்தொகை. கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவன்ஓடி வருவதற்கு முன்னர் கையில் கிடைத்ததை, வேகவைக்காமலே உண்ணும் கடும் பசியால் வந்த பழக்கம்.

இப்போது எதுவாக இருந்தாலும் வேக வைத்துண்ணுமாறு அரசு சொல்லிவிட்டது.

பசி வந்தால் பத்தும், கொரோணாவாவும், பறந்து போகும்.

கொரோணா தொடர்பில், இந்திய அரசின், அவசர பொறப்பற்ற நடவடிக்கைகள், பசிப்போராட்டங்களை உருவாக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.