Jump to content

சீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...!


Recommended Posts

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

 கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது.

முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர்.

ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

 

சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார்.

latest tamil news

கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

PeacefulPaleCockatoo-size_restricted.gif

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

 

புரட்சி...  "தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்" 
என்ற.... பழமொழியை நீங்க கேள்விப்படவில்லையா? 
இதை...  உலகம், அனுபவித்து தான் ஆக வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️

அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢

நண்பா,
ஆந்தைகள் இயற்கையாகவே வொளவால்களை சாப்பிடுமாம். 

சீனாவிற்கு ஆந்தைகளை அனுப்ப வேண்டும் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால ஒவ்வொரு நாட்டுக்காரனும்  ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு வீட்டுக்குள்ள  உக்காந்த்திருகாங்க..

மறுபடியுமா?? ஏண்டா படுத்துறீங்க ..🤦🏻‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

கூப்பிட்டீங்களா எசமான்?

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪
அம்பனை, மெதுவா... சொல்லுங்க, நிழலிக்கு... கேட்டிட போகுது. 😝
இங்காலையும்,  ஒரு பார்சல் அனுப்புங்க. 🤣

ஆளுக்கு ஆந்த கண் போல 😅

ஆந்தைக்கு  வொளவாலையும் பிடிக்குமாம் 😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

எங்கள் ஊரிலும் கூட வெளவால் சாப்பிடுவது உண்டே? எமது அடிவளவில் பின்புற எல்லை ஓரமாக நிக்கும் தேக்கில் வெளவால்கள் தூங்கும். 

அடிக்கடி ஒரு மனிதன் வந்து அவற்றை வலை போட்டு பிடித்துச் செல்வார்.

தொய்வுக்கு நல்லம் எண்டு சில்லாலை பரியாரி தனக்கு சொன்னதாயும் ஆனால் தான் சாப்பிடுவதில்லை எனவும் என் பெரியப்பா சொல்லக் கேள்வி.

பிகு: வெளாவல் ஒரு முலையூட்டி. பழங்களை மட்டுமே உண்ணும் என நினக்கிறேன். சேற்றுப் பன்றியை உண்பதை விட இது ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

வன்னியில் குரங்கு இறைச்சியை தூங்குமான் இறைச்சி என்றும் வெளவாலை தொங்குமான் இறைச்சி என்றும் சொல்வர்.

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வௌவால் இறைச்சி சாப்பிடுபவர்களை நானும் பார்த்திருக்கின்றேன்.எதையும் நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் விக்கனம் இல்லை  என நான் நினைக்கின்றேன்.

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

7 hours ago, தமிழ் சிறி said:

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, bats

"வவ்வால்... 65" ஐ பார்க்க  வாயூறுது.  🤪

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம்
இறைச்சி சந்தைகளில் விற்கப்படும் வவ்வால், தேள், முயல் - கோப்புப்படம்
 

வுகான்: 

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. 

கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய இந்த வைரஸ் தற்போது மற்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகையான போக்குவரத்தும் அடியோடு முடங்கி உள்ளது.

அதே நேரம் சீனாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   ஹூபே மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் வுகான் நகரில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சீனாவில் மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன. பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வவ்வால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்

https://www.maalaimalar.com/news/topnews/2020/03/31133254/1383494/Chinese-Markets-Reopen-Selling-Bats-Dogs-and-Cats.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

வன்னியர் சப்பாத்தி சாப்பிட பிளான் பண்ணுறார்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

கடவுள் நம்பிக்கையிலும், அதனால் வழிவந்த நெறிமுறைகளிலும் ஊறிப்போன 'சாமி'களா இப்படி சொல்வது..? boucheoh.gif

நம்ப முடியவில்லை..!

உவ்வே..

இந்த படத்தை பார்த்த பின், நாலு நாளைக்கு சோறு சாப்பிட முடியாது போலிக்கே..:(

நான் சாப்பிடுவதில்லை. சாப்பிடுபவர்களின் மேல் உள்ள  நல்லெண்ணத்தில் அதை எழுதினேன்.😁
அவையும் பாவமெல்லே:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பொருளாதார வளம், கடின உழைப்பால், மலர்ந்தாலும், அடிப்படையில் 1.5 பில்லியன் சனத்தொகை. கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவன்ஓடி வருவதற்கு முன்னர் கையில் கிடைத்ததை, வேகவைக்காமலே உண்ணும் கடும் பசியால் வந்த பழக்கம்.

இப்போது எதுவாக இருந்தாலும் வேக வைத்துண்ணுமாறு அரசு சொல்லிவிட்டது.

பசி வந்தால் பத்தும், கொரோணாவாவும், பறந்து போகும்.

கொரோணா தொடர்பில், இந்திய அரசின், அவசர பொறப்பற்ற நடவடிக்கைகள், பசிப்போராட்டங்களை உருவாக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.