Jump to content

தாயகத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்


Recommended Posts

கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர் அந்த வகையில்  முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆகிய  கிருஷ்ணமீனன்  அவர்கள் இளைஞர்களை இணைத்து   மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" -
என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் கவி வரிகளை முன்நிறுத்தி தமது நிவாரண பணியை முழு வீச்சாக வடக்கு கிழக்கு எங்கும் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மக்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது என்று இளைஞர்கள் அவா கொள்கின்றனர்.

அன்றாட கூலி வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை நடத்திய மக்களின் பட்டினியை போக்க ஒருவாய் கஞ்சி குடிக்க ஆவது ஒருபிடி அரிசி கொடுப்போம். என்று இராணுவ பொலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் துணையோடு இந்த நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினமும் இன்றைய தினமும்  இளையோரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணிகளின் பதிவுகள் இவை.

ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவித்த இந்த தினக்கூலி செய்யும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை கிராமபுற மக்களுக்குஉதவி வழங்கப்பட்டது அந்த வகையில்....

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பத்தினருக்கும் நாவற்குழியில் புதிய குடியேற்ற திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட 100 குடும்பங்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது .

பயனாளிகள் அனைவரும் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தமது ஜீவனோபாயம் மேற்பட்டவர்கள் இவ்வாறு பலர் பட்டினியால் தவிக்கின்றனர் உங்களால் முடிந்தால் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள்.

தொடர்புகளுக்கு
Krishnameenan   +94 770706691
மயூரதன் +94 717108412

IMG-20200330-WA0021.jpg
IMG-20200330-WA0014.jpg
IMG-20200330-WA0015.jpg
IMG-20200330-WA0016.jpg
IMG-20200330-WA0017.jpg
IMG-20200330-WA0018.jpg
IMG-20200330-WA0019.jpg
IMG-20200330-WA0020.jpg
IMG-20200330-WA0022.jpg
Link to comment
Share on other sites

நெருக்கடி நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இளைஞன்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினமும் நாள் கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு - கிழக்கில் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பூநகரி வடக்கு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நாளாகவும் இந்த மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தனால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் ஒரு அங்கவீனமுடையவர் என்பதுடன், தனக்கு முடியாத நிலையிலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த சூழலில் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/140171

Link to comment
Share on other sites

ஒரு இக்கட்டான நிலையில் இவ்வாறான இளையவர்கள் மற்றைய இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். 

போதைப்பொருள் என பல சமூக சிதைவுகளை இனவழிப்பாளர்களுடன் இணைந்து நடாத்தும் காலத்திலும் இவ்வாறான இளையவர்களின் செயல்பாடுகள் நம்பிக்கை தருவதாய் உள்ளது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

நல்லதொரு புத்திமதி!

Link to comment
Share on other sites

22 hours ago, Rajesh said:

தொடர்புகளுக்கு
Krishnameenan   +94 770706691
மயூரதன் +94 717108412

இந்த இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

பல சமூக விழிப்புணர்வுத் திட்டங்களை செய்து வருபவர்கள்.

இவர்களுக்கு உதவ ஆர்வமுள்ளவர்கள் இவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கதைத்து உதவலாமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறப்பான பணி , பாராட்டுக்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டத்தக்கது. God bless him.

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தாக்கம்! வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.

இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஒரு உயிரையாவது காவு கொடுத்திருந்தன.

இதனால் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் இந்த குடும்பங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

என்றபோதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட இலங்கையர்களாகிய நாமும், எமது உறவுகளாகிய புலம்பெயர்ந்த மக்களும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வருவது அவசியமாகும்.

அந்த வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத இந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவது கட்டாயமாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/140341?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 11:27 AM, Rajesh said:

நல்லதொரு புத்திமதி!

என்னுடன் பல்கலைகழகத்தில் படித்தவர்கள்தான் இந்த சாவகச்சேரி சம்பவத்தில் தொடர்புடையவர்கள், அவர்கள் இதனை பகிர்ந்துகொண்டதால்தான் எனக்கும் இதைப்பற்றி தெரிந்தது. முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது என்பதால் இதனை பகிர்ந்து கொண்டேன்

Link to comment
Share on other sites

இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

On 3/30/2020 at 6:26 PM, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

நிச்சயம். இனவாத இராணுவ மற்றும் காவல்துறையினர் எமது இளையவரக்ளை கொல்லவும் தயங்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ம்ம் மிக அருமையான சித்திரம்!

உண்மைல சொறிலங்கா அரசு வடகிழக்குக்கு எந்தவொரு நிவாரப்பொருளையுமோ, நிவாரண நிதியையோ இதுவரை உருப்படியா அனுப்பவில்லை.

கட்சிக் கூட்டம் என்டு இந்த அரச கொலைகாரக் கோஷ்டியை சந்திக்கப்போற தமிழ் கட்சி பிரதிநிதிகளும் குடுக்குறதை மிச்சம் விடாம சாப்பிட்டுடு சைலன்ட்டா இருக்கினமாம்.

Link to comment
Share on other sites

வறிய நிலையில் உள்ள மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரணப்பணி!

In இலங்கை     April 4, 2020 4:12 am GMT     0 Comments     1081     by : Benitlas

IMG_4637.jpg

ஊரடங்கு சட்டம் காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக அமைப்புகள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல்வேறு நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு தொகுதி நிவாரணப்பொருட்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை வழங்கிவைக்கப்பட்டன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனிடம் பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் தலைவி ரஜனி ஜெயப்பிரகாஸின் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

திராய்மடு, பனிச்சையடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த 130 குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஷ்ட நிலையினை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியிலும் தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொள்ளும் நூறு குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 

IMG_4662.jpg

IMG_4624.jpg

Link to comment
Share on other sites

உறவுகளை வீடுகளுக்குள் முடக்கிய கொரோனா! களமிறங்கிய இளைஞர்கள்

நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் நெருக்கடியான கால கட்டங்களில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுவது இன்று நேற்று நடப்பது அல்ல. நாம் பல காலமாக இடம்பெயர்ந்து உணவின்றி தவித்த போது ஏற்பட்ட பண்பாடு.

அதன் தொடர்ச்சியாக எல்லா காலகட்டத்திலும் நமது இளைஞர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வதற்குப் பின்நின்றது இல்லை என்பது வரலாறு. இடப்பெயர்வுகள், வெள்ள அனர்த்தங்கள், மண் சரிவுகள் என்று எத்தனை இடர்கள் வந்தாலும் உறவுகளை வீழ்ந்துவிடாது கைகோர்த்து தாங்கி நிற்கும் மகத்தான சேவையை செய்கிறார்கள் எமது இளைஞர்கள்.

இன்று கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. வல்லரசு தேசங்களே பொருளாதாரத்தில் சரிந்து கொண்டிருக்கிறது. நமது தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில், பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உடனடியாக கொண்டு சேர்ப்பதும், அவர்களின் வயிற்றுப் பசியாறுவதும் அவசரத் தேவையாக இருக்கிறது.

நமது இளைஞர்கள் அதற்காக முழு மூச்சோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் பல பகுதிகளில் அன்றாடத் தேவைகளுக்காக பொது மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போக முடியாத சூழ்நிலை.

இந்நிலையில், உஷாந்தன் தலைமையிலான இளைஞர்கள் குழுவும் தாங்களாகவே ஒன்றிணைந்து இச்சேவையினை செய்திருக்கிறார்கள். பொது மக்களுக்காக இணைந்த இளைஞர்களின் இந்த முயற்சிகளை நமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140534

Link to comment
Share on other sites

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலட்டி அம்மன் இளைஞர் கழகம் உதவி!

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for-people.jpg

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து யாழில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 135 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கலட்டி அம்மன் இளைஞர் கழக இளைஞர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கலட்டி அம்மன் ஆலய மணிமண்டபத்தில் வைத்து இன்று (சனிக்கிழமை) குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஜே/100 கிராம சேவகரினால் குறித்த இளைஞர் கழகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து நல்லூர் பிரதேச செயலரினால் பரிந்துரைக்கப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள். உங்கள் செயற்பாடு ஒருவித நம்பிக்கையை அளிக்கிறது. இளையோரே சரியான நேரத்தில் சரியான பணி. நன்றி. நலமோடு வாழ்க.

Link to comment
Share on other sites

யாழில் வறிய மக்களுக்கு உதவிய கண்ணகி விளையாட்டுக் கழகம்

In இலங்கை     April 6, 2020 11:26 am GMT     0 Comments     1122     by : Litharsan

Jaffna-Kannaki-Sports-Club-People-Help.jpg

கொரோனா வைரஸ் பரவலையடுத்து யாழில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்ட நாளாந்த கூலி தொழிலாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், ஏழாலையூர் நண்பர்களின் அனுசரணையில் இவ்வாறு உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

குறித்த உணவுப் பொதியில் அரிசி 3 கிலோ, மா 5 கிலோ, ஒரு கிலோ சீனி, பருப்பு ஒரு கிலோ மற்றும் கடலை 1/2 கிலோ என்பன உள்ளிட்ட உணவு பொதியே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவித் திட்டமானது முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அடுத்தடுத்த கட்டங்களாக புலம்பெயர் நாட்டு நண்பர்களின் அனுசரணையுடன் உதவித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

Jaffna-Kannaki-Sports-Club-People-Help-1

Jaffna-Kannaki-Sports-Club-People-Help-2

Link to comment
Share on other sites

மக்களால் மக்களுக்கு உதவி! இன்றும் உயிர்ப்புடன் மனிதம்!

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மூன்று வாரங்களாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக நாளாந்தம் கூலி வேலை செய்து வாழும் சாதாரண குடிமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த வகையில், மன்னார் மாவட்டம் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தின் கிழக்கு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி இன்றைய தினம் வழங்கப்பட்டது.

இந்த வாழ்வாதார உதவி அபிவிருத்தி சங்க தலைவர் கி.பிரான்சிஸ் பெரேரா மற்றும் செயலாளர் கிங்ஸ்லி சில்வா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியபண்டிவிரிச்சான் கிராம மக்களுக்கு அபிவிருத்தி சங்கத்தினரால் அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் இன்றைய தினம் அரிசி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உதவியை கடந்த போகத்தில் நெற்செய்கை மேற்கொண்ட பெரியபண்டிவிரிச்சான் மக்கள் அனைவரும் சேகரித்த நெல்லினை குற்றி அரிசியாக்கி நெற்செய்கை மேற்கொள்ளாத வறிய மக்களுக்கு கிராம சேவகரின் உதவியுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140753

Link to comment
Share on other sites

கரைதுறைப்பற்றில் தமிழரசு வாலிபர் முன்னணியால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் உணவு பொதிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது covid 19 வைரஸ் தொற்று நோயினால் மக்கள் பெரும் பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் 28,31.03.2020 ம் திகதியில் இரண்டு இலட்ஷத்தி எழுவதாயிரம் ரூபாய் (270000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகளை 225 குடும்பங்களுக்கு வழங்கி வைத்திருந்தனர்.

தற்போது தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளதினால் பல பகுதியில் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை போக்கும் 2,3 வயது சிறுவர்கள் அடங்கிய குடும்பத்திற்கும் விசேட தேவையுடையோருக்குக்கும் அவர்களது நலன் கருதி நான்கு இலட்ஷத்தி பதினேட்டு ஆயிரம் ரூபாய் (418000.00) பெறுமதியான 380 உலர் உணவு (பிஸ்கட்) பொதிகளை 02,03,04,05.04.2020 "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உலர் உணவு பொதிகள் கொக்கு தொடுவாய் மேற்கு, கொக்கு தொடுவாய் மத்தி, கொக்கு தொடுவாய் வடக்கு, செம்மலை, நாயறு (செம்மலை கிழக்கு), உப்புமாவெளி, அளம்பில் வடக்கு, அளம்பில் தெற்கு, சிலாவத்தை, சிலாவத்தை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, முல்லைத்தீவு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு, வலைஞர்மடம், அம்பலவன் பொக்கனை , மாத்தளன், செம்மண்குன்று, நீராவிப்பிட்டி கிழக்கு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்து உலர்உணவு பொருட்கள் வழங்கிவக்கப்பட உள்ளதாக அறக்கட்டளையின் இஸ்தாபகர் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

மேற்படி பொதிகளை மாவட்ட மேலதிக செயலாளரின் அனுமதியுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவகர்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140741

 
Link to comment
Share on other sites

தமிழரசுக் கட்சியால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

In இலங்கை     April 8, 2020 11:13 am GMT     0 Comments     1149     by : Litharsan

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தாயகப் பகுதியில் அவசரகால நிலைமையில் வறுமையை மக்கள் அன்றாடம் எதிர்கொண்டுவரும் நிலையில், தமிழரசு கட்சியினரால், மாற்றுத் திறனாளிகளிக் தேனீ அமைப்பினரிடம் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 500 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொதிகள் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Mannar-People-Help-Ilankai-Tamil-Arasu-KMannar-People-Help-Ilankai-Tamil-Arasu-K

Link to comment
Share on other sites

ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டு்ம் ஐபிசி தமிழ்!

அன்றாடம் உழைத்து ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருந்த பொது மக்களை தற்போது பொருளாதார ரீதியில் முடக்கியிருக்கிறது கொரோனா வைரஸ்.

பொருளாதாரத்தில் நிமிர்ந்து நின்ற பலர் தற்போது, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதிலும் பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி, அன்றாடம் உழைத்து தினக்கூலிகளாக இருக்கும் பல மக்கள் உணவுக்காக ஏங்கும் நிலைக்கும், பொருளாதாரத்தில் சரிவு நிலையினையும் சந்தித்துள்ளார்கள்.

அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய பல இளைஞர்கள் தன்னார்வமாக இணைந்துள்ளதுடன், எமது ஐபிசி வலையமைப்பினரும் பொது மக்களை தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் மூளாயில் உள்ள J/165 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு 204 பொதிகள் எமது ஐபிசி தமிழ் குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவகர் பிரிவில் 400 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் இன்றை தினம் 204 பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் எமது ஐபிசி தமிழ் குழுமம் எமது மக்களுக்காக இந்த நிவாரண பணியை முன்னெடுத்துவருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140820

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.