Jump to content

வியாபாரிகளா ? கொள்ளையர்களா ? கடைசிவரை காசு வராது !


Recommended Posts

நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்து 7 நாட்களை கடப்பதற்கு முன்னதாகவே, சென்னையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்றுவருவதாக மளிகை மொத்த மற்றும் சில்லரைவியாபரிகள் மீது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

நெருக்கடியான காலக்கட்டத்திலும் மக்கள் கையில் இருக்கும் கொஞ்ச பணத்தையும் பறிக்கும் வியாபார கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்று காய்கறி கடைகளுக்கு அரசு விலக்கு அளித்திருந்த நிலையில், ஞாயிற்று கிழமை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்தி மளிகை பொருட்கள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னையில் உள்ள பெரும்பாலான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது

சில்லரை வியாபாரத்தில் கடந்த வாரம் வரை 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட உளுந்து தற்போது 150 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு 120 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு 150 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

அதே போல 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட தனியா என்றழைக்கப்படும் மல்லி 150 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட காய்ந்த மிளகாய் 250 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட சோம்பு 280 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெந்தயம் 150 ரூபாய்க்கும் , 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு 240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பொதுவாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்கள் மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வருவதாகவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த மாநிலங்களில் இருந்து சரக்கை ஏற்றி வர லாரி ஓட்டுனர்கள் கிடைக்காததால் சரக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், தற்போதுள்ள நெருக்கடியான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள், மளிகை பொருட்களை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளை லாபத்துக்கு விற்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.</p>

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லை, லாரிகளுக்கு சுங்க கட்டணம் கிடையாது, ஆர்.டி.ஓ வசூலும் இல்லை, இந்த நிலையில் வழக்கமான விலையை குறைத்து பொருட்களை வழங்கி இருக்க வேண்டிய மொத்த வியாபாரிகள், பேராசை கொண்டு விலையை ஏற்றி விற்பதால் அவர்களிடம் பொருட்களை வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகளும் விலையை உயர்த்தி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விலையை உயர்த்தி கொடுக்க மறுக்கும் சில்லரை வியாபாரிகளுக்கு சரக்கு கொடுப்பதில்லை என்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட வியாபாரிகளே வண்டி கொண்டு வந்து எடுத்து செல்ல வேண்டிய நிலையையும் உருவாக்கி உள்ளதால், வரும் நாட்களில் மளிகை பொருட்களின் விலை இன்னும் இரு மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவை தொடர்பு கொண்டு மொத்த வியாபாரிகளின் இந்த விலை உயர்வு கொள்ளை குறித்து கேட்ட போது, அனைத்து பொருட்களுக்கும் மூட்டைக்கு 10 ரூபாய் மட்டுமே உயர்ந்திருப்பதாகவும், கூடுதலாக உயர்த்தப்பட்ட விலை நிலவரம் தனக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் மொத்த வியாபரிகளிடம் விசாரித்து விட்டு கூறுவதாக தெரிவித்தார்.

மளிகை பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாடை உருவாக்கி, பில் இல்லாமல் கொள்ளை லாபத்திற்கு விற்றுவரும் இத்தகைய வியாபார கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்கு நியாயமான விலையில் மளிகை பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

https://www.polimernews.com/dnews/105375/வியாபாரிகளா-?-கொள்ளையர்களா-?கடைசிவரை-காசு-வராது-!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.