Jump to content

கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? 


Recommended Posts

கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? 

சில நாடுகள், குறிப்பாக இன்னும் மோசமாக பாதிக்கப்படாத, ஆனால் பாதிக்கப்படுவோம் என எண்ணும் நாடுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி. 

வேகமாகாப்பரவி கோவிட்  19 தொற்று பரவி வரும்பொழுது பல நாடுகளில் உயிர்கள் காவு கொல்லப்படுகின்றன. அவ்வாறு நடந்த நாடுகளில், வைத்தியர்கள் அறிந்து கொண்ட ஒன்று : எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவரை சுவாசிக்க உதவவும் இயந்திரத்துடன் ( வெண்டிலேட்டர் ) இணைக்கின்றோமோ அவ்வளவிற்கு அவர் உயிர் தப்பாது சாத்தியங்கள் அதிகம் என்பதே. 

ஆனால், சுவாசிக்க உதவவும் இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளில் உள்ளன. பொதுவாக இவை அவசர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும்.

நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடையே, மாகாணங்களுக்கு இடையே என இந்த சுவாசிக்க உதவவும் இயந்திரங்களை தர மறுக்கிறார்கள். நாடுகள், உற்பத்தியாளர்களிடம் சுவாசிக்க உதவவும் இயந்திரங்களுக்கு போட்டி போடுகின்றன.

Ventilators_feat.jpg?w=475

 

அதிகளவு இவ்வாறான நோயாளர்கள் வரும்பொழுது, வைத்தியர்கள் ஒரு சடுதியான ஆனால், மறுத்து தர்மங்களுக்கு அமைய முடிவுகளை எடுக்கவேண்டியவராகிறார்கள். சில நாடுகளில் இதற்கென வழிகாட்டிகள் வழங்கப்படுகின்றன. 

கீழே வைத்தியர்கள் பார்க்கும் சில தரவுகளை பார்க்கலாம்:

- அதிகளவு உயிர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும், மாறாக இவரை என்றில்லாமல் 

- இத்தாலியில் வயது, வேறு எந்த வருத்தங்கள் உள்ளன, நோயாளிக்கு உறவுகள் உள்ளார்களா? என்பன கருத்தில் கொள்ளப்பட்டன 

- அமெரிக்காவின் சில மாநிலங்களில், நோயாளியின் அறிவியல் குணாதியசம்களும்  ( intellectual ability) கருத்தில் எடுக்கப்படுகின்றன 

- நோயாளியின் குணமடையும் ஆற்றல் மட்டுமே உள்வாங்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டல் வேண்டும் என்பவர்களும் உள்ளார்கள் 

======== அம்பனை =========== 

BMCMeth_Word_Cloud-620x342.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தோழர்களின் மனசாட்சிக்கு : சீனாவில் எப்படி எதிர்கொண்டார்கள் அல்லது எதிர்கொள்கிறார்கள் என்று ஊடகங்களுக்குத் திறந்து காட்டினார்களா? மற்ற நாட்களில்  உன் இரும்புத் திரையைப் போட்டுத் தொலை. இப்போது மனித குலத்தின் உயிர் காக்க "எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார்" என்ற வாய் ஜாலம் தவிர வேறு என்ன வந்தது? கடவுள் இல்லையென்ற கார்ல் மார்க்ஸே கடவுள் என வாழும் என் போன்றோராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் தோழர்கள் சீனாவைப் பற்றி வாய் திறப்பதில்லை. முதலாளித்துவத்தை இறுதி மூச்சு வரை எதிர்ப்பதில் உறுதி கொண்டவன்தான் நான். அமெரிக்க நகரிலிருந்து இந்த வைரஸ் கிளம்பியிருந்தால், அமெரிக்காவை நார் நாராகக் கிழித்திருக்க மாட்டோமா? இப்போது அரசியல் பேசும் நேரமல்ல, உலகமே எழுந்து நின்று மனித குலத்தைக் காக்கும் போரில் கைகோர்க்க வேண்டிய நேரம் என்று ஏன் நழுவ வேண்டும் ? இந்த ஊழிக் கூத்தில் பிழைத்தால், மீண்டும் தோழர்களிடம் பேசுவோம்.

Link to comment
Share on other sites

33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

உலகமே எழுந்து நின்று மனித குலத்தைக் காக்கும் போரில் கைகோர்க்க வேண்டிய நேரம் என்று ஏன் நழுவ வேண்டும்

முதலில், நன்றிகள் தங்கள் பின்னூட்தத்திற்கு. 

அடுத்து, ஆம், முதலில் இந்த உலகமும் நாமும் இந்த கொடிய தொற்றில் இருந்து மீள்வோம். 
அந்த புதிய உலகத்தில் பல புதிய உலக ஒழுங்குகள் எழுதப்படலாம். 

Link to comment
Share on other sites

இன்று காலை செய்திகளின் படி, இத்தாலியில் பல செவிலியர்களுக்கும் தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது மிகவும் கவலைக்குரியதும், அரசுகளால் அவற்றின் நவீன மருத்துவ வசதிகளால் இந்த உன்னத பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதும், அதுவும் ஒரு உலகின் அதி உயர் பணக்கார நாட்டில் இந்த நிலை என்பதும் அச்சத்தை தருவதாக உள்ளது. 

ஆகவே, கைகளை அடிக்கடி கழுவி, எம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தூரத்தை பேணி உலகத்தை காப்போம்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.