Jump to content

சற்றே நில் ! திரும்பிப் பார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 
நீரோடடத்தில் செல்லும் துரும்பாக

இயந்திரங்களோடு இயந்திரமாய்  

கால  நிலையோடும்  போட்டி போட்டு

ஓடி யோடி உணவு  உறக்கமின்றி

எந்திரமாய் உழைத்த மனிதா

 

வங்கியிலே பணம்  பகடடான  வீடு

களி த்திருக்க மனைவி பிள்ளைகள்

மதி  மயங்க  மது வகைகள்

பவனி செல்ல படகு போன்ற கார்  

என மமதை கொண்ட மானிடா


சற்றே நில் ..எல்லாம் உனக்கே

நானே ராஜா ..எனக்கே ராச்சியமென

 உண்டு களித்து  உலகை ஆண்ட மானிடா


  அறிவியல் கொண்டு ஆயுதங்கள் செய்து
 
 அணுகுண்டுகள் போர்க் கப்பல்கள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கள்

 .ஏழைகளை சுரண்டி  ஏகாதிபத்திய ஆடசி

 

 பெரியவன் என்னை விட யாரும் இல்லை

என்னால் எதையும் அழிக்க முடியும்

 என ஆயுதங்களைக்  குவித்தவனே

 எந்த ஆயுதமும் வைரசை அழி க்காது


இன்று ..வைரஸ்எனும்  கண்ணுக்கு தெரியாத

எதிரி ஒன்று  பலி  எடுக்க வந்திருக்கிறது

உறவுகளைப் பிரித்து  தனிமையில்  தவிக்க விட்டு

தனி வழியே தகனம் நோக்கி அனுப்பு கிறது

 

 தாயும் கூட வராள்  தந்தையும் கூட வரார்

கட்டிய மனைவியும் பெற்ற  பிள்ளைகளும்

 உடன் பிறந்த உறவுகளும் , ஊரவரும்

 உயிரற்ற உடலம் மண்ணு க்கு செல்லும்
 

 சற்றே நில் ...திரும்பி பார்  மமதையை அடக்கு

மன்னிப்பை கேளு படைத்த வனை நினை

தான  தர்மம் செய்  உறவுகளை மதி

மனம் வருந்து செய்த பாவங்களுக்காய்


தொடக்கம் என்று ஒரு  நிலை இருந்தால்

முடிவு என்று ஒரு நிலை இருக்கும்

ஒரு வழி அடைத்தால் மறு  வழி  திறக்க

பாவ  வழியை விட்டு பரம்பொருளை  நாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 10:19 PM, நிலாமதி said:

 
நீரோடடத்தில் செல்லும் துரும்பாக

இயந்திரங்களோடு இயந்திரமாய்  

கால  நிலையோடும்  போட்டி போட்டு

ஓடி யோடி உணவு  உறக்கமின்றி

எந்திரமாய் உழைத்த மனிதா

 

வங்கியிலே பணம்  பகடடான  வீடு

களி த்திருக்க மனைவி பிள்ளைகள்

மதி  மயங்க  மது வகைகள்

பவனி செல்ல படகு போன்ற கார்  

என மமதை கொண்ட மானிடா


சற்றே நில் ..எல்லாம் உனக்கே

நானே ராஜா ..எனக்கே ராச்சியமென

 உண்டு களித்து  உலகை ஆண்ட மானிடா


  அறிவியல் கொண்டு ஆயுதங்கள் செய்து
 
 அணுகுண்டுகள் போர்க் கப்பல்கள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கள்

 .ஏழைகளை சுரண்டி  ஏகாதிபத்திய ஆடசி

 

 பெரியவன் என்னை விட யாரும் இல்லை

என்னால் எதையும் அழிக்க முடியும்

 என ஆயுதங்களைக்  குவித்தவனே

 எந்த ஆயுதமும் வைரசை அழி க்காது


இன்று ..வைரஸ்எனும்  கண்ணுக்கு தெரியாத

எதிரி ஒன்று  பலி  எடுக்க வந்திருக்கிறது

உறவுகளைப் பிரித்து  தனிமையில்  தவிக்க விட்டு

தனி வழியே தகனம் நோக்கி அனுப்பு கிறது

 

 தாயும் கூட வராள்  தந்தையும் கூட வரார்

கட்டிய மனைவியும் பெற்ற  பிள்ளைகளும்

 உடன் பிறந்த உறவுகளும் , ஊரவரும்

 உயிரற்ற உடலம் மண்ணு க்கு செல்லும்
 

 சற்றே நில் ...திரும்பி பார்  மமதையை அடக்கு

மன்னிப்பை கேளு படைத்த வனை நினை

தான  தர்மம் செய்  உறவுகளை மதி

மனம் வருந்து செய்த பாவங்களுக்காய்


தொடக்கம் என்று ஒரு  நிலை இருந்தால்

முடிவு என்று ஒரு நிலை இருக்கும்

ஒரு வழி அடைத்தால் மறு  வழி  திறக்க

பாவ  வழியை விட்டு பரம்பொருளை  நாடு

கவிதை அருமை சகோதரி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிலாமதி said:

சற்றே நில் ...திரும்பி பார்  மமதையை அடக்கு

மன்னிப்பை கேளு படைத்த வனை நினை

தான  தர்மம் செய்  உறவுகளை மதி

மனம் வருந்து செய்த பாவங்களுக்காய்

எல்லாம் ஒரு சில மாதங்களுக்கே.

எமது விடுதலைப் போராட்டமே இதற்கு முன்உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் கூட வராள்  தந்தையும் கூட வரார்

கட்டிய மனைவியும் பெற்ற  பிள்ளைகளும்

 உடன் பிறந்த உறவுகளும் , ஊரவரும்

 உயிரற்ற உடலம் மண்ணு க்கு செல்லும்.....!

 

நிஜமான வரிகள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, இதுவும் கடந்து போகும், பாதுகாப்பாக இருங்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெரியவன் என்னை விட யாரும் இல்லை

என்னால் எதையும் அழிக்க முடியும்

 என ஆயுதங்களைக்  குவித்தவனே

 எந்த ஆயுதமும் வைரசை அழி க்காது

அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் பகிர்வுக்கும் விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் என் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை அழகான வரிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை அக்கா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2020 at 03:19, நிலாமதி said:

தொடக்கம் என்று ஒரு  நிலை இருந்தால்

முடிவு என்று ஒரு நிலை இருக்கும்

ஆம். உண்மைதான்! 

மனிதர்களின் அசுர வளர்ச்சிக்கு ஒரு வேகத்தடையை இந்தக் கொரோனா கொண்டுவந்திருந்தாலும் கொரோனாவும்கும் ஒரு முடிவு நிலை இருக்கும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.