Jump to content

பனங்கிழங்கு புட்டு மற்றும் கூல் செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் புட்டு

செய்முறை

தேவையான பொருட்கள் :

  • ஒடியல் மா
  • தேங்காய்ப் பூ
  • தண்ணீர்
  • உப்பு (சிறிதளவு )

விரும்பினால்

  • கத்தரிக்காய்
  • கீரை
  • பச்சை மிளகாய்
  • நெத்தலி

செய்முறை

  • ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
  • பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
  • இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
  • குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.
  • இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.
  • பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.
 

ஒடியல் கூழ் குடிப்போமா?

 
தேவையான பொருட்கள் :-

பொதுவானவை :
  1. ஒடியல் மா - 1 சுண்டு ( நிரப்பி )
  2. பயிற்றங் காய் - 100 கிராம் 
  3. மரவள்ளி கிழங்கு - 100 கிராம்
  4. பலா கொட்டை - 100 கிராம்
  5. செத்தல் மிளகாய் - 20
  6. மிளகு - 1 தே .  .( நிரப்பி )
  7. மஞ்சள் - 1 துண்டு ( 2" நீளம் )
  8. உள்ளி - 5 பெரிய பல்லு
  9. பழப்புளி - பாக்களவு
  10. புழுங்கல் அரிசி - 1 பிடி
  11. முசுட்டை இல்லை / முருங்கை இல்லை -  10 நெட்டு
  12. பல்லுபோல் வெட்டப்பட தேங்காய் சொட்டு - 1/2 சுண்டு
  13. உப்பு - அளவிற்கு 

சைவ கூழ்  :
  • கத்தரிக்காய் - 100 கிராம்
  • கடலை - 100 கிராம்
  • வாழை காய் - 1 ( பெரிது )

அசைவ கூழ் :-
  • முள் இல்லாத மீன்வகை ( ரால் நெத்தலி ) - 500 கிராம்
  • நண்டு - 2
  • பாரை / கூழ் மீன் தலை - 1
  • சிறிய மீன் கருவாடு - 50 கிராம்

செய்முறை :-
  • செத்தல் மிளகாய் , மிளகு , உள்ளி , மஞ்சள் என்பவற்றிட்கு ஓரளவு நேர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்து கொள்க .
 
  • மீன் வகைகள் , கருவாடு என்பவற்றை கழுவி துப்புரவு செய்து வைத்துக் கொள்க .
 
  • மரவள்ளி கிழங்கு , பயிற்ரங்காய்  , ப்ளாக் கொட்டை என்பவற்றை துப்புரவாக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்து கொள்க .
 
  • பாத்திரத்தில் பழப் புளியை இட்டு   ஒரு தம்ளர் விட்டுகரைத்து வைத்துக் கொள்க 
 
  • ஒடியல் மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு அளவிற்கு நீர் சேர்த்து கூழ் பதமாக கரைத்து அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் இட்டு பிழிந்தெடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு , அரைத்த கூட்டையும் சேர்த்து வைத்துள்ள 1 தம்ளர் பழப் புளியையும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப் பதமாக  கரைத்து வைக்குக .
 
  • ஒரு பானை ( ஒரு கொத்து அரிசி அவிய கூடிய பாத்திரம் ) அதன் அரைவாசிக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்தபின் கழுவி வைத்துள்ள மரக்கறி , முசுட்டை இல்லை / முருங்கை இலை  கழுவிய அரிசி என்பவற்றை இட்டு அவிய விடவும் . இவை முக்கல்பதமாக அவிந்த பின்பு மீன் வகை , கருவாடு என்பவற்றையும் போட்டு அவியவிடவும்.
 
  • மரக்கறி வகை நன்றாக அவிந்ததும் , ஒடியல் மா கரைசலை ஊற்றி  நன்றாக கரண்டியால் கலக்கி அளவிற்கு உப்பும் சேர்த்து தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடன் பரிமாறலாம் .

குறிப்பு :-
  • சைவக் கூழ் எனில் அசைவ பொருட்களை தவிர்த்து கடலை , கத்தரிக்காய் , வாழைக்காய் என்பவற்றை சேர்த்து மற்றைய மரக் கறி  வகைகளுடன் சேர்த்து அவிய விடவும் .
 
  • கடலையை 3 மணி நேரம் ஊறவிட வேண்டும்

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, உடையார் said:

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

அத்துடன் முதல் அவிக்கும் போது குழைந்து வரும், அதை ஆறவிட்டு சிறு துண்டுகளாக பிரித்து திரும்பவும் அவிக்கனும். பின் Food Processor இல் அடிக்கனும் மேலே உள்ள விடியோவில் உள்ள மாதிரி.

நாங்கள் சம்பலுடன்தான் சப்பிடோம், நல்லசுவை. தேங்காய் பூவை பிழிய தேவையில்லை, நான் மேலே உள்ள Youtube சமையல் முறைப்படிதான் செய்தானான்; மீன் சேர்க்கவில்லை.

இதுதான் முதல் தடவை இங்கு செய்தோம்.  ஊரில் பல வருடங்களுக்கு முன் பனங்கட்டியுடன் சாப்பிட்ட ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது,

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Odiyal-Puddu1.jpg

 

Odiyal-Puddu2.jpg

1 hour ago, ஈழப்பிரியன் said:

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

1 hour ago, nilmini said:

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

மதியம் செய்து சாப்பிட்டால் நல்லது, இரவு சமிபாடு அடைய நேரம் எடுக்கும்

2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

ஆ..ஆஆ. அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்திறியல், என்ன சுவை, அது ஒரு காலம் இனி வருமா...

மொட்டு பூரான், சீத்தை பூரான்........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

நன்றி அறிய தந்திற்கு, அப்படியா... நாளை இன்னும் மா வாங்கப்போகின்றேன், அடுத்த முறை சுடு தண்ணியில் கழவிப்பார்ப்போம், குழைந்து வராதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

Odiyal-Puddu1.jpg

 

Odiyal-Puddu2.jpg

வாவ்... படத்திலுள்ள ஒடியல் மா புட்டை  பார்க்க... வாயூறுது.
இங்குள்ள... தமிழ்க் கடைகளில் ஒடியல் மா இருக்குமோ தெரியவில்லை. 
அங்கு சென்றால்... விசாரித்து பார்க்க வேணும்.
படத்துக்கும், செய்முறைக்கும்... நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

எமது வீடுகளில் ஒடியல் புட்டை நீத்துப்பெட்டியில் அவித்து அப்படியே வெப்பார்கள்.சோறு சாப்பிடும் போது இதை எடுத்து துருவுவலையில் துருவ தேங்காய்பூ மாதிரி வரும் சோற்றுடன் சிறிது சேர்த்து சாப்பிடுவார்கள்.

34 minutes ago, உடையார் said:

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

நான் Perth இல், கடந்த 2-1/2 வருடங்கள் வீட்டிலிருந்தான் on-line இல் வேலை, இடைக்கிடை Project Site க்கு போய் வருவது , எனக்கு பெரிதாக தெரியவில்லை வீட்டிலிருப்பது தற்போதைய சூழ்நிலையில்,

பிள்ளைகள் பாடசாலைக்கு போகமல் இருப்பதால் நானும் மனைவியும் வித்தியாசமாக செய்து கொடுக்கிறோம், அல்லது அவர்களுக்கு அலுப்படிக்கும் 

நன்றி தமிழ்சிறி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்முறைகளுடன் விரிவான விளக்கமும் அசத்திட்டீங்கள் உடையார்.....அந்த கூழில் சைவ கூழுக்கும் சேர்த்து செய்முறையும் போட்டீர்களே அந்த மனசுதான் சார் கடவுள்.....!  😁

பிட்டு நீத்து பெட்டியில் அல்லது மூங்கி குழலில் அவிக்கும்போது தனி ருசி உண்டு.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

நல்ல செய்முறைகளுடன் விரிவான விளக்கமும் அசத்திட்டீங்கள் உடையார்.....அந்த கூழில் சைவ கூழுக்கும் சேர்த்து செய்முறையும் போட்டீர்களே அந்த மனசுதான் சார் கடவுள்.....!  😁

பிட்டு நீத்து பெட்டியில் அல்லது மூங்கி குழலில் அவிக்கும்போது தனி ருசி உண்டு.....!  👍

நன்றி சுவி, அது என்னுடைய செய்முறையல்ல, சுட்டது 😀

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

 

நீத்துப்பொட்டியில் அவிக்கும் புட்டிற்கு தனி சுவை 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.