Jump to content

மரவள்ளி கிழங்கும் பூசணிக்காயும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.
         அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல்.
          மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம்.
            பூசணி வாங்க எவருக்கும் சொல்லத் தேவையில்லை.இருந்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளதை பார்த்து வாங்குங்கள்.
செய்முறை:-
மரவள்ளி  சிறிய சிறிய துண்டுகளாக வேர் வெட்டுப்படாமல் வெட்டி ஒரு சட்டியில் போடுங்கள்
இதே மாதிரி துண்டுகளாக பூசணியையும் வெட்டி இன்னொரு சட்டியில் வையுங்கள்
இரண்டையும் அருகருகே வைத்து சரியான அளவு இருக்கிறதா என்பதை பாருங்கள்.(ஒரு மரவள்ளியையும் ஒரு பூசணியையும் போட்டு கறி ஆக்கிறல்லை.
இப்போ இரண்டையும் ஒன்றாக்கி நன்றாக கழுவி எடுத்து சமைக்கும் பாத்திரத்தில் போடுங்கள்.(தனித்தனியாகவும் கழுவி எடுக்கலாம்.)
சிறிது வெண்காயம்.
3-4 பச்சை மிளகாய்.
தேவையான உப்பு
கிறிவேப்பிலை இருந்தால் இதிலும் ஒரு 10 இலைவரை போடுங்கள்.
மிளகாய்த்தூள் 1-2 தேக்கரண்டி போடலாம்.
அடுத்து தண்ணீர் விடுவது.இதிலே கொஞ்சம் கவனம் தேவை.கூட தண்ணீர் விட்டால் கறி ஒன்று சேராமல் தண்ணியாக இருக்கும்.எனவே போட்டதை மூடி நிற்குமளவுக்கு தப்புத் தண்ணீராக விடுங்கள்.
ஒரு அளவான நெருப்பில் 20-25 நிமிடங்கள் வைத்தால்ப் போதும்.சில கிழங்கு அவிய நேரமெடுக்கும் எனவே கிழங்கை அவிந்து விட்டதா என்பதை நசித்து பாருங்கள்.தண்ணீர் பற்றாவிட்டால் சிறிது சிறிதாக சேருங்கள்.
நன்றாக அவிந்த பின் கொஞ்சம் மசித்து விடுங்கள்.
கரண்டியில் எடுத்தால் தண்ணீராக ஓடவும் கூடாது.கறி முழுக்க விழவே மாட்டேன் என்று கரண்டியிலும் நிறக்கக் கூடாது.
இது இறக்கி வைத்த பின் கொஞ்சம் ஆற கறி கொஞ்சம் இறுகும்.
இதற்கு புளி எதுவும் தேவையில்லை.புளி இதன் சுவையை மாற்றி விடும்.

குறை இருப்பின் என்னிடம் சொல்லுங்கள்
நிறை இருப்பின் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மரவள்ளியும் இஞ்சியும் சேரும் போது நஞ்சு என்கிறார்கள்.எனவே அன்றைய தினம் இஞ்சியைத் தவிருங்கள்.
நன்றி.

6-C781-CB1-ACAD-4739-AAE8-AB8326010-EC7.

E1-E15-B5-A-82-F9-4-C91-99-E1-98-E918765

887-E3-C74-F947-4160-BD5-B-8-DA67-F39758

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Suchergebnis auf Amazon.de für: pfeffermahlwerk

ஈழப்பிரியன்...  பகிர்விற்கு நன்றி. :)
இதற்கு... 10 -15 மிளகு (பவுடராக இல்லாமல்) குத்திப் போட்டால்  இன்னும் சுவை கூடும்.

மரவள்ளிக் கிழங்கும், பூசணிக்காயும் சேர்த்து கறி  வைக்கும் முறையை....
திருச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் கூறியதன் பின் நாமும் செய்து பார்த்தோம். 
மிகவும் வித்தியாசமான சுவையாக இருந்தது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சிச் சம்பலும் சேர்த்து சாப்பிட்டால் துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இஞ்சிச் சம்பலும் சேர்த்து சாப்பிட்டால் துக்கும்.

சுவை என்ன விளையாட்டு இது.....சிலசமயம் ஆளையே தூக்கி விட்டுவிடும்.கவனம்.....கிழங்கு கொஞ்சம் பழுதாக இருந்தால் இஞ்சி சேரும்பொழுது நஞ்சாகி விடும்......!

பிரியன், வெறி குட் காம்பினேஷன்....கெமிஸ்ட்ரி சூப்பர்.....நாங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

Suchergebnis auf Amazon.de für: pfeffermahlwerk

ஈழப்பிரியன்...  பகிர்விற்கு நன்றி. :)
இதற்கு... 10 -15 மிளகு (பவுடராக இல்லாமல்) குத்திப் போட்டால்  இன்னும் சுவை கூடும்.

மரவள்ளிக் கிழங்கும், பூசணிக்காயும் சேர்த்து கறி  வைக்கும் முறையை....
திருச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் கூறியதன் பின் நாமும் செய்து பார்த்தோம். 
மிகவும் வித்தியாசமான சுவையாக இருந்தது. 👍

 

19 hours ago, suvy said:

பிரியன், வெறி குட் காம்பினேஷன்....கெமிஸ்ட்ரி சூப்பர்.....நாங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்....!  👍

அட நான் நினைச்சன் இப்படி ஒருவரும் சமைக்கிறதில்லை என்று.அது தான் அடித்து புரட்டி படங்களையும் போட்டு நேரத்தை வீணாக்கிப் போட்டன் போல.

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

முந்தி ஒருகாலம் சமையல் முடிந்த பின் தாழித்து எல்லா கறிக்கும் போடுறது.97 இல் நெஞ்சுக்குள் வலை வைத்த பின் எண்ணெய் சாப்பாடுகளை கண்ணிலும் காட்ட மாட்டார்கள்.

20 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்சிச் சம்பலும் சேர்த்து சாப்பிட்டால் துக்கும்.

ஓம் ஓம் ஒரேயடியாய் தூங்க வைத்தாலும் வைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.
         அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல்.
          மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம்.
            பூசணி வாங்க எவருக்கும் சொல்லத் தேவையில்லை.இருந்தாலும் மஞ்சள் நிறமாக உள்ளதை பார்த்து வாங்குங்கள்.
செய்முறை:-
மரவள்ளி  சிறிய சிறிய துண்டுகளாக வேர் வெட்டுப்படாமல் வெட்டி ஒரு சட்டியில் போடுங்கள்
இதே மாதிரி துண்டுகளாக பூசணியையும் வெட்டி இன்னொரு சட்டியில் வையுங்கள்
இரண்டையும் அருகருகே வைத்து சரியான அளவு இருக்கிறதா என்பதை பாருங்கள்.(ஒரு மரவள்ளியையும் ஒரு பூசணியையும் போட்டு கறி ஆக்கிறல்லை.
இப்போ இரண்டையும் ஒன்றாக்கி நன்றாக கழுவி எடுத்து சமைக்கும் பாத்திரத்தில் போடுங்கள்.(தனித்தனியாகவும் கழுவி எடுக்கலாம்.)
சிறிது வெண்காயம்.
3-4 பச்சை மிளகாய்.
தேவையான உப்பு
கிறிவேப்பிலை இருந்தால் இதிலும் ஒரு 10 இலைவரை போடுங்கள்.
மிளகாய்த்தூள் 1-2 தேக்கரண்டி போடலாம்.
அடுத்து தண்ணீர் விடுவது.இதிலே கொஞ்சம் கவனம் தேவை.கூட தண்ணீர் விட்டால் கறி ஒன்று சேராமல் தண்ணியாக இருக்கும்.எனவே போட்டதை மூடி நிற்குமளவுக்கு தப்புத் தண்ணீராக விடுங்கள்.
ஒரு அளவான நெருப்பில் 20-25 நிமிடங்கள் வைத்தால்ப் போதும்.சில கிழங்கு அவிய நேரமெடுக்கும் எனவே கிழங்கை அவிந்து விட்டதா என்பதை நசித்து பாருங்கள்.தண்ணீர் பற்றாவிட்டால் சிறிது சிறிதாக சேருங்கள்.
நன்றாக அவிந்த பின் கொஞ்சம் மசித்து விடுங்கள்.
கரண்டியில் எடுத்தால் தண்ணீராக ஓடவும் கூடாது.கறி முழுக்க விழவே மாட்டேன் என்று கரண்டியிலும் நிறக்கக் கூடாது.
இது இறக்கி வைத்த பின் கொஞ்சம் ஆற கறி கொஞ்சம் இறுகும்.
இதற்கு புளி எதுவும் தேவையில்லை.புளி இதன் சுவையை மாற்றி விடும்.

குறை இருப்பின் என்னிடம் சொல்லுங்கள்
நிறை இருப்பின் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மரவள்ளியும் இஞ்சியும் சேரும் போது நஞ்சு என்கிறார்கள்.எனவே அன்றைய தினம் இஞ்சியைத் தவிருங்கள்.
நன்றி.

6-C781-CB1-ACAD-4739-AAE8-AB8326010-EC7.

E1-E15-B5-A-82-F9-4-C91-99-E1-98-E918765

887-E3-C74-F947-4160-BD5-B-8-DA67-F39758

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

நிறைய எழுதியிருக்கே தவிர செய்முறை வெகு சுலபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nilmini said:

செய்முறையும்  படமும் நல்லா இருக்கு.கேள்விபட்டுருக்கிறன்  ஆனால் ஒருநாளும் சமைக்கவில்லை. பூசணிக்காயும் frozen மரவள்ளியும் இருக்கு. செய்துவிட்டு பதிவேற்றுகிறேன். 

 frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.
அதனை பூசணிக்காயுடன்  சேர்க்கும் போது, நீங்கள் எதிர்பார்த்த சுவை வராமல் போகலாம்.
இயலுமானால்.... உடன் வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பாவியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.

ஓரிரு மணி நேரம் முதலே எடுத்து வைத்தால் சரியாக வரலாம்.
எல்லா இடங்களிலும் மரவள்ளி வாங்குவது கஸ்டம்.அதுவும் இந்த நேரம்.கடைக்கு போய்
பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகவும் முடியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.
அங்காலை ஒராள் இஞ்சிச்சம்பல் எண்டுறார். பகிடிக்கும் உதுகளை சொல்லாதிங்கப்பு 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

ஈழப்பிரியன்,  உங்கள் செய்முறைக்கு நன்றி.

அடுத்த முறை சிறிது வித்தியாசமாக செய்து பாருங்கள்.

வெங்காயத்தினையும், வழக்கமான வாசனை பொருட்களை போட்டு தாளித்து, அதனுள் இந்த இரண்டையும் சேர்த்து, கொஞ்சம் மாசிக் கருவாடும் எறிஞ்சு, வெந்து வந்ததும் எப்பன் (கொஞ்சம்) தேங்காய் பால் ஊத்தி இறக்கி, லைட்டா தேசிக்காய் புளியும் விட்டு அடிச்சு பாருங்கோ...

பிறகு வந்து சொல்லுங்கோவன்... ருசியை...

Link to comment
Share on other sites

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட அன்றே இஞ்சி தேநீரும் குடித்திருக்கேன்.

நீலம் பெயர்ந்த கிழங்கை சாப்பிட்டால் தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

அடுத்தமுறை நாதமுனி அண்ணா சொன்ன விதத்தில் செய்து பாக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட சமையல் வித்துவாங்களிடம் ஒரு கேள்வி.

சமையலில் பல முறைகள் உண்டு. பொரித்தல், வறுத்தல், அவித்தல் (ஆவியில் - பிட்டு), கொதிக்க வைத்தல் (தண்ணியில் - சோறு), சுடுதல்.....

இந்த முறைகளில் ஆவியில் உணவு சமைத்தல் தமிழர்களுக்கே ( சிலவேளை சீனர்களுக்கும்) உரியது (இன்றல்ல - ஆதிகாலத்தில்), என்று ஒரு ஆங்கிலேயருடன் வாதித்தேன்.

முதலில் மறுத்த அவர், பின்னர், ஆய்வு செய்து வருவதாக சொல்லி உள்ளார்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

 frozen மரவள்ளி அவிய நேரம் எடுக்கும் என நினைக்கின்றேன்.
அதனை பூசணிக்காயுடன்  சேர்க்கும் போது, நீங்கள் எதிர்பார்த்த சுவை வராமல் போகலாம்.
இயலுமானால்.... உடன் வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பாவியுங்கள். 

நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் சிறி. இங்க பிரெஷ்ஷா விக்கிறாங்கள் . வாங்கி சமைப்பம் . 

9 hours ago, ஈழப்பிரியன் said:

நிறைய எழுதியிருக்கே தவிர செய்முறை வெகு சுலபம்.

செய்முறை விளக்கமாக போட்டதால் தான் செய்து பார்க்க நினைத்தேன். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 12:58 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முக்கியமாக இதற்கு வெங்காயமும் செத்தல் மிளகாயும் வதக்கிப் போட்டால் தனி சுவை அண்ணா.

 

1 hour ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
 

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

கூனி இராலின் வாசம் நாவூற வைக்கிறது. இதைக் கத்தரிக்காய் கறியிலும் தேங்காய்ச் சம்பலிலும் சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

அவர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லையே? ஏதோ ஒன்று இருப்பதால் தானே சொல்லியிருக்கின்றார்கள்.:)
உயிராபத்து இல்லாத படியால் தான் கண்டது எல்லாவற்றையும் மனிதம் உண்ன ஆரம்பித்ததின் விளைவு இன்று ஒட்டுமொத்த உலகமே வீட்டுக்குள் முடங்கி விட்டது.:(

விதண்டாவாதம் செய்யலாம். ஆனால் எங்கும் எதிலும் விதண்டாவாதம் செய்தால் அது ஒருவகை மனநோய்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

கூனி றால்கருவாடு எதுக்கு போட்டாலும் பட்டைய கிளப்பும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

விதண்டாவாதம் செய்யலாம். ஆனால் எங்கும் எதிலும் விதண்டாவாதம் செய்தால் அது ஒருவகை மனநோய்.:cool:

ஏஞ்சாமி, நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டா, இல்லையா?

நான் பார்த்ததை, கேட்டதை சொன்னால் விதண்டாவாதமா?

விஞ்ஞான விளக்கமும் தரமுடியும்.... இஞ்சியின் எந்த மூலக்கூறு, நீலம் பெயர்ந்த மரவள்ளியின் எந்த மூலக்கூறுடன் சேர்த்து எத்தகைய நஞ்சினை உருவாக்குகின்றது என்பதை தந்து இருக்கிற கொரோன  பீதிக்கு மேலால கிளப்ப வேண்டாம் என்கிறேன். 🤨

Linamarase enzyme in ginger catalyze the conversion of cyanide containing compounds into Hydrogen Cyanide that can be lethal to the eater. Manioc that has not been properly cooked can contain cyanide compounds. 

It must be properly prepared before consumption, as improper preparation of cassava can leave enough residual cyanide to cause acute cyanide intoxication, goiters, and even ataxia, partial paralysis, or death.

இத்தகைய ஆபத்தான மரவள்ளி வகைகளை, விஞ்ஞான விளக்கம் இல்லாத காலத்தில், அனுபவம் மூலம், நீலம் பாய்ந்த மரவள்ளி என விலத்தி வைத்தார்கள் முன்னோர்கள்.

மரவள்ளி, போர்த்துக்கேயரால் பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. அரசி, சோளம், கோதுமை பின்னர்  உலகின் நான்காவது முக்கிய உணவுப்பொருள். இதில் இனிப்பான, கசப்பான என இரு முக்கிய வகைகள் உண்டு. பெரும்பாலும் கசப்பானதே நாம் விளைவித்து உண்பது. காரணம் இனிப்பானதை எலிகள், முயல்கள் ஆட்டையை போட்டு விடும் என்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

ஏஞ்சாமி, நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டா, இல்லையா?

நான் பார்த்ததை, கேட்டதை சொன்னால் விதண்டாவாதமா?

விஞ்ஞான விளக்கமும் தரமுடியும்.... இஞ்சியின் எந்த மூலக்கூறு, நீலம் பெயர்ந்த மரவள்ளியின் எந்த மூலக்கூறுடன் சேர்த்து எத்தகைய நஞ்சினை உருவாக்குகின்றது என்பதை தந்து இருக்கிற கொரோன  பீதிக்கு மேலால கிளப்ப வேண்டாம் என்கிறேன். 🤨

எங்கடை பழசுகள் முன் எச்சரிக்கையாய் மரவள்ளிக்கு இஞ்சியே போடாதேங்கோ எண்டு சொல்லியிருக்கலாம் எல்லோ
ஊரிலை பிள்ளைத்தாச்சிமார் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது எண்டு சொல்லுவினம்.....ஆனால் இஞ்சை வெளிநாடுகளிலை எதுக்கும் தடை இல்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

எங்கடை பழசுகள் முன் எச்சரிக்கையாய் மரவள்ளிக்கு இஞ்சியே போடாதேங்கோ எண்டு சொல்லியிருக்கலாம் எல்லோ
ஊரிலை பிள்ளைத்தாச்சிமார் அன்னாசிப்பழம் சாப்பிடக்கூடாது எண்டு சொல்லுவினம்.....ஆனால் இஞ்சை வெளிநாடுகளிலை எதுக்கும் தடை இல்லை 😁

கொழும்பின் முஸ்லீம் பகுதிகளில், வீதி ஓரங்களில், மாலை வேளைகளில் அச்சாறு, மரவள்ளி பொரியல் யாவாரம் செய்வார்கள். இங்கே வருவது போல மெல்லியதாக சீவியது (machine cut) அல்ல. கத்தரிக்காய் பொரியலுக்கு நீளவாக்கில் வெட்டுவது போலவே, மரவள்ளியை அங்கேயே உரித்து, வெட்டி, பொரித்து, உப்பு, தூள், மிளகு தூள் கலந்து போட்டு தருவார்கள். சலீம் பாய் இடம் தான் நம்ம வாடிக்கை.

ஒரு பாக்கெட் வாங்கி, பக்கத்தில் இருக்கும் அன்வர் நானா கடைல அந்த மாதிரி இஞ்சி போட்டு மசாலா டி குடிச்சா.... சொர்க்கம்...மாங்காய், அன்னாசி, வெட்டி, உப்பு தூள் போட்டு தருவார்கள். வெருளு (சிலோன் ஒலிவ்) அச்சாறு அந்த மாதிரி இருக்கும்.

சலீம் பாய், தோலை சீவியபின், பாவிக்காமல் வீச என்று ஒரு பக்கத்தில் போட்டு வைத்திருந்த காரணத்தினை கேட்ட போது  சொன்ன விளக்கம் தான் இந்த நீலம் பாய்ந்த  விசயம்.

ஆனாலும் சின்ன வயதில் அம்மம்மா நீலம் பாய்ந்த கிழங்கு பற்றி சொல்லி இருக்கிறார். மாட்டுக்கோ, ஆட்டுக்கோ போடவும் கூடாது என்பார்.

****

நம்ம பிரகிராசியார் என்னமோ பிஸியாய் இருக்கிறார். அதாலை நம்ம சாமியாருக்கு பயம் விட்டு போட்டுது. விதண்டாவாதம் என்று இன்னுமொருக்கா சொன்னா, தலைவனை கூட்டிக்கொண்டு வந்திருவன்... 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.

குமாரசாமி ஐயா கூறியதுபோல்  உண்மை.  எனது துணைவியார் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இந்தக்கறியைச் சமைப்பார். தமிழ்சிறியவர்கள் கூறியதுபோல் மிளகும் போட்டுத்தான் செய்திருப்பா சுவையோ தனி. ஆனால் மிளகு இறக்குவதுக்கு முன் போடவேண்டும்.  கூனிஇறால் மாசிக்கருவாட்டை தூளாக்கிப் போடுதல் போன்றன மேலும் சுவையாக இருக்கும்.  நல்லதொரு சுவையான கறி. கறியை சமைத்து ஒரு திரியைத் தொடக்கிய ஈழப்பிரியனவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கூனி றால்கருவாடு எதுக்கு போட்டாலும் பட்டைய கிளப்பும். 😁

ம்ம் உன்மைதான்  அங்க கிடைக்குமா கூனி றால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உன்மைதான்  அங்க கிடைக்குமா கூனி றால் 

தமிழ் கடையள்ளை அப்பப்ப கிடைக்கும். அது அவங்களிட்டை வாங்கிறதெண்டால் காணி பூமி தான் விக்கோணும்.தாய்லாந்து சைனிஸ் கடையள்ள கிடக்கு.ஒருக்கால் வாங்கி கத்தரிக்காய் கறிக்கு போட்டு சமைச்சு பாத்தம்.ஏழு வீடு தூரத்துக்கு நாத்தல் மணம். அப்பிடியெண்டால் என்ரை வீடு எப்பிடி நாறியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ.  செற்றி சோபா கேட்டின் எல்லாம் நாற வெளிக்கிட்டுது.  அண்டையோடை கூனிறால் ஆசையே போட்டுது.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.