Jump to content

ஜெர்மனியின் நிதியமைச்சர் தற்கொலை: கொரோனோ கேட்கும் தொடர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியின் நிதியமைச்சர் தற்கொலை: கொரோனோ கேட்கும் தொடர் பலி- மாயா

German-FM1.jpg

ஒரு மன்னன் கடமை தவறியதை உணரும் போது போது உயிர் துறப்பதை சிலப்பதிகாரத்தில் படித்தோம். ஆனால் கொரோனா பாதிப்பால் தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் ஜோசஃப் ஷாஃபரின் தற்கொலை, கொரோனாவின் துயரம் எத்தனை கோணங்களில் நம்மைத் தாக்கப் போகிறது என அச்சுறுத்துகிறது.

ஜெர்மனியின் நிதித் தலைநகரான ஹெஸ்ஸி மாநிலத்திலுள்ள ஃப்ராங்க்ஃபர்ட் அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் நிதியமைச்சர் ஜோசஃப். ஒரு மரணக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொள்ளை நோயின் பொருளாதார பாதிப்பிலிருந்து நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்காக அவர் இரவும் பகலும் வேலை பார்த்து வந்தார் என அல் ஜசீரா செய்தி குறிப்பிடுகிறது. கொரோனா பாதிப்பின் பொருளாதார பாதிப்புகளை எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற கையறுநிலையே அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என கூறப்படுகிறது.

கடந்த 10 வருடங்களாக பதவியில் இருக்கும் ஜோசஃப், ஹெஸ்ஸி மாநிலத்தின் அடுத்த முதல்வராவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் இந்த துயரமான முடிவை எடுத்திருக்கிறார்.

German-FM-Suicide1-300x169.jpeg

கொரோனா வெறுமனே நோய் கண்டவர்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என இந்தப் பிரச்சனையை பல்வேறு நிலைகளில் அர்ப்பணிப்புடன் கையாள நேரும் அனைவருமே ஒரு நெருக்கடியை உணர்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே “ஆரோக்கியமாக” இருந்தாலும் நோய் ஏற்படுத்தும் பீதியும் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதன் பிரச்சனைகளும் நம்மை ஏதோ வழியில் பாதிக்கப் போகின்றன.

கொரோனா நம் முன்னால் நிறுத்தும் அத்தனை பிரச்சனைகளைவிடவும் பொருளாதார பிரச்சனை மிகப் பெரியது என்பதை உணர்த்துகிறது ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சரின் தற்கொலை. நிகழ்காலத்தில் தினக் கூலிகள், வாரக் கூலிகள் பட்டினியில் கிடக்கும் நிலைக்குத் தள்ளலாம். வரும் காலத்தில் பல்வேறு நாடுகளின் வாழ்வும் வளமும் சீரழிந்து போகலாம்.

வெளிமாநில தொழிலாளர்கள் அகதிகள் போல மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்களை கால் நடையாகக் கடக்க முற்படும் செய்தியைப் படிக்கிறோம். வாரக் கூலிகளுக்கு சம்பளம் தரப்படாததால் போராட்டம் நடத்தியது பற்றி கேள்விப்படுகிறோம். கொரோனா காலத்திலும் வீட்டு வாடகையை சரியாக எடுத்து வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி செய்திகள் வருகின்றன. வியாபாரம் அல்லது தொழில் செய்து ஒரு கையில் பணத்தை வாங்கி, மறு கையில் வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுப்பவர்களால் ஊரடங்கில் எவ்வாறு சம்பளம் கொடுக்க முடியும் என கேள்வி கேட்பவர்களைப் பார்க்கிறோம்.

கொரோனா கிருமித் தொற்றில் சாகிறவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். ஆனால் கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியால் பட்டினியில் சாக நேர்ந்தால் அவர்களின் நிலை அதைவிடக் கொடிது. ஏனெனில் மரணம் உடனே வராது. மெல்ல மெல்ல குடல் ஒட்டி, கண்கள் வறண்டு சாகும்போது அந்த நபர் பல நூறு முறை செத்திருப்பார். இது போன்ற கேள்விகள் அறநெறிகளின்படி ஆட்சி செய்யும் எல்லா அரசியல் தலைவர்களையும் நடுங்கச் செய்யும்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என நமக்கு கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தவறு செய்த மகனை தேர்க்காலில் இட்டான் என அறநெறிகள் சார்ந்த நமது பண்டைய வாழ்வு முறையினைப் புகழ்கிறோம். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் அறநெறிகள் மேற்குலகில்தான் வாழ்கின்றனவா என கேள்வி எழுப்புகிறது ஜோசஃபின் தற்கொலை. ஏனென்றால் மக்களைப் பற்றியும் தங்களது நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றியும் கவலை கொள்கிறவர்கள்தான் அறநெறி சார்ந்து வாழ்பவர்கள்.

ஜெர்மனியின் இடதுசாரி கட்சியின் உறுப்பினரான புன்டேஸ்டாக் ஃபேபியோ டி மாஸி, வலது சாரி அரசியல் தலைவரான ஜோசஃபின் தற்கொலை பற்றி இவ்வாறு கூறுகிறார்: “அரசியல் தலைவர்களை ரத்தமும் சதையுமான மனிதர்களாக நாம் இப்போதெல்லாம் அங்கீகரிப்பதில்லை. அரசியல் பொறுப்புகள் அவர்கள் மீதும் சுமைகள் ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்க மறுக்கிறோம்.”

ஜேசஃப் ஸ்டாஃபர் தனது மக்களை மட்டுமல்ல, மனைவியையும் இரு குழந்தைகளையும் நிர்கதியில் விட்டுச் சென்றுள்ளார். அவரின் இறுதிப் பயணத்திலாவது அமைதி நிலவும்படியாகவும் அவரது சுற்றத்தார், நண்பர்கள், குடும்பத்தினர் மனம் ஆறும்படியும் நாம் வேண்டுவோம்.

உணர்வுரீதியாக பலவீனமாக உணர்ந்தாலோ, தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டாலோ, உதவி கேட்கத் தயங்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக புரஃபஷனல்கள் இருக்கிறார்கள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பின்வரும் இணைய அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் உதவி கோரலாம்:

https://www.befrienders.org/

அல்லது

help@snehaindia.org

ஆதாரம்:

https://www.dw.com/en/german-state-finance-minister-thomas-sch%C3%A4fer-found-dead/a-52948976

https://www.thenation.com/article/economy/corona-economy-market/

https://www.aljazeera.com/news/2020/03/german-state-minister-kills-coronavirus-hits-economy-200329165242615.html

https://economictimes.indiatimes.com/news/international/world-news/german-minister-commits-suicide-after-virus-crisis-worries/articleshow/74877039.cms
 

https://uyirmmai.com/கொரோனோ/ஜெர்மனியின்-நிதியமைச்சர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.