Jump to content

கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன்

1-5.jpg

 

கொள்ளை நோய் அகதிகள்

மனுஷ்ய புத்திரன்

அங்கு கைவிடப்பட்டவர்களின்
மிகப்பெரிய ஊர்வலமொன்று
சென்றுகொண்டிருக்கிறது

போர்கள் வருவதற்கு முன்பு
அகதிகள் வந்து விடுகிறார்கள்
கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு
கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள்

பெரியவர்கள் குழந்தைகளையும்
முதியவர்களையும் சுமந்துகொண்டு
அவர்கள் கடக்க முடியாத
விதியின் தொலைவொன்றைக்
கடந்துகொண்டிருக்கிறார்கள்

சிறுவர்களும் சிறுமிகளும்
தட்டு முட்டுச் சாமான்களை
சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள்
கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு
ஒருவன் நடக்கும் புகைப்படத்தைக்கூடக் கண்டேன்

அவர்கள் சுமக்க முடிந்த அளவு
உடமைகளுடன் மட்டும் வெளியேற
அந்த நகரம்
அந்தக் காலம் அவர்களை அனுமதித்திருக்கிறது

அவர்கள் தலையில் இருந்துதான்
மாநகரங்கள் எழுந்தன
அந்த நகரங்கள் அவர்களைக் கைவிட்டன

அவர்கள் கைகள்தான்
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான
வீடுகளைக் கட்டின
அவர்கள் ஒரே இரவில்
இருப்பிடமற்றவர்களானார்கள்

அவர்கள் கால்கள்தான்
வாகனங்கள் அற்ற தார்ச்சாலைகளை போட்டன
அந்த சாலையில்தான் அவர்கள்
அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்

அவர்களைப்பற்றி யாருக்கும் சிந்திக்க நேரமில்லை
நள்ளிரவுக்குள் நாட்டையே மூடுமாறு
முன்னிரவில் சொன்ன அரசருக்கு
அவர்களைப் பற்றி
வழக்கம் போல் எந்த நினைவும் வரவில்லை
அவர் யாருக்கும் எந்த அவகாசமும் தராமல் இருப்பதில்
எப்போதும் எல்லையற்ற இன்பம் அடைகிறார்

ஒரு பேரிடர் காலத்தில்
பிராணிகள் பூகம்பத்தை முன்னுணர்வதுபோல
அவர்கள் இந்த நகரம் தன்னைக் கைவிடும் என்று
உள்ளுணர்வால் அறிந்திருந்திருந்தார்கள்
பறவைகளும் மீன்களும் இடம்மாறிச் செல்வதுபோல்
அவர்கள் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

கொரோனொவுக்கு மருந்து உருவாக்குவதற்கு முன்பு
நாம் கொரோனோ அகதிகளை உருவாக்கியிருக்கிறோம்
அகராதிக்கு அது நம் புதிய கொடை
’கொரோனோ அகதிகள்’

இப்படித்தான் இந்த நாடு முழுக்க
ஒவ்வொரு நகரத்தின் பேருந்து நிலையங்களும்
வெளியூர்காரர்களான
கொரோனோ அகதிகளால்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன
செத்துக்கிடக்கும் பேருந்துகளின் மீதும் ரயில்களின்மீதும்
அவர்கள் தலைகளை முட்டிக்கொண்டு அழுகிறார்கள்
’எப்படியாவது எங்களை ஊருக்குப் போகவிடு’ என்ற கதறல்
ஒரு சித்ரவதை முகாம்களின் குரல்கள் போலவே இருக்கிறது

india-1-2-300x200.jpg

ஏன் வெளியூர்காரர்கள் ஒருவர்கூட
நமது நகரங்களை நம்பவில்லை?
இந்த நகரங்கள் தங்களை பட்டினியால் கொன்றுவிடும்
என்று ஏன் அத்தனை உறுதியாக நம்புகிறார்கள்?
இறந்துவிட்டால் தங்கள் பிணங்கள் இழிவாக நடத்தப்படும்
என்று ஏன் அத்தனை பயத்துடன் நினைக்கிறார்கள்?

நாம் அசாதாரணக் காலங்களில் மட்டுமல்ல
சாதாரணக் காலங்களிலும் அவர்களை
அப்படித்தான் நடந்தியிருக்கிறோம்
நம்மிடயே வேறொரு கிருமி நிரந்தரமாகக் குடியிருக்கிறது
அது எளியவர்களை எப்போதும் வேட்டையாடுகிறது
அவர்களின் குருதியில் நமக்கான ஒயினை
அது உற்பத்தி செய்கிறது
ஒருபோதும் நம்மால் கொல்லமுடியாத கிருமி அது
எங்குமே மருந்தில்லாத கொள்ளை நோய் அது

அவர்களுக்குத் தெரியும்
நமது கைகள் அவர்களுக்காகத் தட்டப்படுவது
ஒரு குரூர நகைச்சுவையின் அங்கமென்று
நமது நன்றியறிவித்தல்கள்
நமது போலி மனச்சாட்சியின் ஆபரணங்களென்று
அவர்கள் இதையெல்லாம் ஒருபோதும் நம்புவதில்லை

இந்த நகரவாசிகளை மட்டுமல்ல
இந்த நகரத்தின் தலைவர்களை மட்டுமல்ல
தங்கள் கடவுள்களையும் கூட
ஆபத்துக் காலங்களில் அவர்கள் நம்புவது இல்லை
அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளும்
தமது கரங்களையே நம்புகிறார்கள்
வெளியேறும் தங்கள் கால்களையே நம்புகிறார்கள்

அந்த ஊர்வலம் முடிவற்றுச் சென்றுகொண்டிருக்கிறது
இயங்காத பேருந்து நிலையங்களில் கூட்டம் குறையவில்லை
யாரும் அவர்களைத் தடுக்கவில்லை
யாரும் ’இங்கிருங்கள் நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம்’
என்று சொல்லவில்லை
ஒருபோதும் அவர்கள்
அந்த வார்த்தையைக் கேட்டதில்லை
அது அப்படித்தான் நிகழ முடியும்
அது அப்படித்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

தலை நகரம் இப்போது
வெளியூர் தொழிலாளிகள் இல்லாத நகரமாகிவிட்டது
ஒவ்வொரு நகரமுமே அப்படித்தான் சுத்தமாகிருக்கிறது
அவர்கள்தான் நோய்களைப் பரப்புகிறவர்கள்
என்று நம்பும் நகரவாசிகள்
ரகசியப் பெருமூச்சு விடுகின்றனர்
நகரத்தின் சுமை குறைக்கப்பட்டிருப்பதாக
அதிகாரிகள் நிம்மதியடைகின்றனர்

Migrant-770x433-300x169.jpg

அந்த நெடும் பயணத்தில்
யார் ஊர் போய் சேர்ந்தார்கள்
எனபதற்கு எந்தத் தகவலும் இருக்கப்போவதில்லை
யார் பட்னியால் இறந்தார்கள் என்பதற்கோ
யார் கொள்ளை நோயால் இறந்தார்கள் என்பதற்கோ
ஒருபோதும் தகவல்கள் வரப்போவதில்லை

எஞ்சியவர்கள் மறுபடி நகரங்களுக்கு
திரும்பி வருவார்கள்
கொள்ளை நோய் வெளியேறிய பிறகு
சாலைகள் திறக்கப்படும்
வாகனங்கள் ஓடத் தொடங்கும்
பசி அவர்களை அங்கே அழைத்து வரும்

அவர்கள் வராவிட்டால்
பாராளுமன்றக் கட்டிடத்தை
யார் புதுப்பிப்பது?
ராமருக்கு யார்
கோயில் கட்டுவது?

அடுத்த கொள்ளை நோய்க்கு
வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கான
வீடுகளை யார் கட்டித்தருவது?

29.3.2020
பகல் 2.34
மனுஷ்ய புத்திரன்
 

https://uyirmmai.com/இலக்கியம்/கொள்ளை-நோய்-அகதிகள்-மனுஷ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.