Jump to content

ராஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு சரக்கு திருட்டு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை.!

1585625837-4162.jpg

தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதை அடுத்து அனைத்து மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் அனைத்து ராஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்
 
ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு மர்ம கும்பல் திருடி சென்று விட்டது என்பதும் இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ராஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம கும்பல் ஒன்று திருடி உள்ளதாக  போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை செய்ததில் ராஸ்மாக் கடையில் திருடிய மூவரை கண்டுபிடித்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை ரூ.11,500 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் ராஸ்மாக் கடைகளில் திருடும் கும்பல் அதிகரித்து வருவதன் காரணமாக ராஸ்மாக் கடையில் உள்ள சரக்குகளை உடனடியாக பாதுகாப்பான குடோனுக்கு மாற்ற வேண்டும் என ராஸ்மாக் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்

https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/a-theft-in-tasmac-stor-at-thiruthurai-poondi-120033100019_1.html

டிஸ்கி

"சுவதுல ஓட்டை.."  லலிதா ஜிவ்வலரி திருடன்ற கசின் போல கிடக்கு .. திருடனீங்க சரி ; 1 மாதமோ 3 மாதமோ வெளிய விட்றுவான் ..👌

tenor.gif

ஆனா ஊரே பிளாக்கில் சரக்குக்கு அலையுற நேரத்துல 45,000 ரூபாய் சரக்குகளை வெறும் 11,500 ரூபாய்க்கு வித்தீங்க பாருங்க.. உங்க மனசாட்சிய பாராட்டியே ஆகணும்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

tenor.gif

ஆனா ஊரே பிளாக்கில் சரக்குக்கு அலையுற நேரத்துல 45,000 ரூபாய் சரக்குகளை வெறும் 11,500 ரூபாய்க்கு வித்தீங்க பாருங்க.. உங்க மனசாட்சிய பாராட்டியே ஆகணும்..👍

இவர்கள் செய்த சமூக சேவைக்காக... இவர்களுக்கு தண்டனை கொடுக்காமல்,
பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவிக்க வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பட்டத்தை வாங்கிற அளவுக்கு இன்னும் அவர்கள் பணம் சேர்க்கவில்லை போல ......!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.