Jump to content

உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர்

131968507-960x640.jpg

ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில்  அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும்  விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும்.

capitalism-reckoning-elitism-in-america-

உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற மாற்றங்கள் நடக்கின்றன.  ஒவ்வொரு நாடாக  முதலாளித்துவப் பொருளாதார விதிகளிலிருந்து தெளிவாக விலகிச் சென்று பொது மருத்துவ சேவையையும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியையும் சமூகமயமாக்கி வருகிறது.   கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலிக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கும் ஸ்பெயின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தனியார் மருத்துவ மனைகளை நாட்டுடைமையாக்கி இருக்கிறது. அவையனைத்தும் தற்போது அரசின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட நோய்ப் பேரிடர் காலத்திற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். பொருளுற்பத்தியின் மீது அரசின் கட்டுப்பாட்டை இறுக்குவது இப்போது சீனத்தில் மட்டும் நடக்கவில்லை; அது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கொள்கையாகவே ஆகியிருக்கிறது.

உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்திலிருக்கும் உலகம் சோஷலிசத்தை நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கட்டாயமாக மக்கள் அனைவருக்கும் அறிவியல் உணர்வு தேவை என்கிற நிலைதான் அது. அறிவியல் உணர்வு என்பது சோஷலிசத்தை நோக்கி எடுத்து வைக்கப் படும் முக்கிய அடியாகும். இந்த மாதிரி நேரத்தில் கொரொன வைரசின் வீரியத்தை முறிக்கும் மருந்துகளாக பசுவின் சாணத்தையும் மூத்திரத்தையும் பரிந்துரைக்கும் இந்துத்வ வெற்றுக் ’கோட்பாடுகளை’ மக்கள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். இந்த ‘கோட்பாடுகளை’ விற்பவர்கள் இருமியவுடன் மருத்துவ மனைகளுக்கு ஓடுகிறார்கள்; அல்லது அவர்களின் உறவினர்களால் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். இத்தகைய தருணங்களில் மூட நம்பிக்கைக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால்  அணுகுமுறைகளில் கட்டாய மாற்றம் ஏற்படுகிறது; இதனால் சோஷலிசம் என்கிற கருத்துக்கு ஆதரவான சூழல் உருவாகிறது.

அறிவியல் உணர்வைக் கட்டாயமாக்குவதிலும், பொது மருத்துவ சேவையை சமூக மயமாக்குவதிலும் இந்தியா பல நாடுகளுக்கிடையே பின் தங்கியிருக்கிறது என்பது உண்மைதான். நெருக்கடி காலத்தில் கூட பகட்டுகள் மீதிருக்கும் பற்று கைவிடப் படவில்லை என்பதும் உண்மைதான். மார்ச் 22 அன்று ‘மக்கள் ஊரடங்கை அறிவித்த மோடி, பொது மருத்துவ ஊழியர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் ஐந்து நிமிடங்களுக்கு மணியொலி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். உற்சாகமடைந்த மோடி பக்தர்கள் ஐந்து நிமிடங்களை அரை மணி நேரம் வரை இழுத்தது மட்டுமின்றி, கூட்டமாகக் கூடி, கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து, சங்குகளை ஊதி ஊர்வலமாகவும் சென்றனர். இச்செயல்கள் அனைத்தும் நோய் தொற்றாமல் இருப்பதற்காக தனி மனிதர்கள் சமூகத்திலிருந்து தள்ளி நிற்பதை நடைமுறைப் படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ’ஊரடங்கின்’ நோக்கத்தையே சிதைப்பவையாக இருந்தன.

அது போலவே, அரசாங்கம் நோய்ப் பரிசோதனையில் தனியார் மருத்துவ மனைகளையும் இணைத்து  அமைப்பை விரிவு படுத்தியிருந்த போதிலும் பரிசோதனையையும், நோய்த் தொற்று இருப்பவர்களுக்குத் தேவையான சிகிச்சையையும் இந்த மருத்துவ மனைகளில் இலவசமாக்கவில்லை.

ஆனால் அறிவியல் உணர்வுக்கு எதிரான இந்துத்வப் பகட்டுகள் தொடர்வதற்கும், தனியார் மருத்துவமனைகளின் லாப நோக்கினை அரசு தொடர்ந்து அனுமதிப்பதற்கும் காரணம் இந்தியாவில் இந்த நோய் நெருக்கடி இன்னும் அதிக தீவிரமாகவில்லை என்பதால்தான். நெருக்கடி முற்றக் கூடாது என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தாலும், அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவும் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பிற நாடுகளைப் போல் சமூகமயாமாக்கும் பாதைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில், சமூகமயமாக்கலுக்கு மாற்றான, எதிரான ஒரு போக்கையும் காண முடிகிறது.  பிற நாடுகள் பாதிக்கப்பட்டாலும் கூட தன் நாடு நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக கொள்கை முடிவுகள் எடுக்கும் போக்குதான் இது. ஜெர்மானிய நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியிருக்கும் தடுப்பூசி மருந்தின் மீதான முழு உரிமையையும் வாங்க முன் வந்திருக்கும் டிரம்பின் கொள்கை இந்தப் போக்கினையே காட்டுகிறது. அதாவது அந்த மருந்து அமெரிக்காவிற்கு மட்டும் கிடைக்க வேண்டுமென்பதே டிரம்பின் நோக்கம். ஆனால் ஜெர்மானிய அரசாங்கம் அந்த உரிமையை வழங்க மறுத்து விட்டது. ஒரு மக்கள் பிரிவினரை மட்டும் பாதுகாத்து, முதியவர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் போன்ற பிரிவினர் பிரச்சினையை அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என விட்டு விட நினைப்பதுதான் இந்தப் போக்கு. கொரொனா வைரசினால் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை டிரம்ப் தொடர்வதும் இந்தப் போக்கின் இன்னொரு வெளிப்பாடுதான்.

இவையெல்லாமே, ஏழைகளையும் பிற அடித்தட்டு மக்களையும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாக்கி விட்டு, செல்வந்தர்களும், பிற வசதி படைத்தவர்களும், வலு மிக்கவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் இந்த சிந்தனை முதலாளித்துவத்திற்கே உரித்தானதாகும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஆரம்ப சுற்றுகளில், சோஷலிசத்தையும், அனைவருக்கும் மருத்துவ சேவை என்கிற கோஷத்தையும் முன் வைத்து பிரச்சாரம் செய்து வரும் பெர்னி சாண்டர்சுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, இந்தப் போக்கினை வலுவடையச் செய்யும்.

ஆனால் இந்தப் போக்கிற்கு ஒரு இயற்கையான எல்லை இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய நோய்த் தொற்றினை ஒரு நாட்டிற்குள்ளோ, உலகின் ஒரு பிரிவினருக்குள்ளோ, ஒரு நாட்டின் மக்கள் தொகையின் ஒரு பிரிவினருக்குள்ளோ அடக்கி வைப்பது இயலாது. டிரம்ப் மேற்கொண்டிருக்கும் பாமரத் தனமான இந்த முயற்சி நிச்சயம் தோற்கும்

இப்படிச் சொல்வதினால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க மனித குலம் எப்படியாவது முதலாளித்துவத்தை எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய தேவையைக் குறித்த புரிதலுக்கு வந்து விடும் என்று நாம் உணர்த்த வில்லை. உலகளாவிய நோய்த் தொற்றைத் தடுக்கப் படும் ஏராளமான முயற்சிகளுக்கிடையே, முதலாளித்துவத்தைக் கடந்து செல்லும் முயற்சி ஒரு பிரதான இடத்தை அடையும் என்றுதான் சொல்கிறோம். நீண்ட காலம் இது நீடித்தால், இது உண்மையாக வாய்ப்புகள் அதிகம் என்றுதான் சொல்கிறோம்.

தற்போது உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் தலைமையில் நடந்து கொண்டிருந்தாலும், இந்த உலகளாவிய நோய்ப் பேரிடரின் விளைவுகளை எதிர் கொள்வதற்கான வழிமுறைகள் முதலாளித்துவத்திடம் இல்லை என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. பொருட்கள் மற்றும் மூலதனத்தின் நகர்வுகள் உலகமயமாக்கப் பட்டிருக்கும் சூழலை முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ளது. அந்த நகர்வுகளுக்குள் மட்டுமே அனைத்தையும் அடக்கி விடலாம் என்று அது நம்பியது.  ஆனால் அது சாத்தியமே இல்லை. உலகமயமாக்கல் என்பது வைரஸும் உலக அளவில் வேகமாகப் பரவி, அதனால் ஏற்படும் நோயும் உலகளாவிய ஒன்றாக எழும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

மிக அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்திய ஒரு உலகளாவிய பேரிடர் முன்பு ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஜூரம்தான் அது.  ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்று பதுங்கு குழிகளிலிருந்து யுத்தம் செய்து, வீடு திரும்பும் போது வைரஸையும் சுமந்து சென்ற முதல் உலகப் போர்ச் சூழலினால் அது உலகம் முழுவதிலும் பரவியது.  சுருஙகச் சொன்னால், உக்கிரமாக நடந்த போர் தேசப் பிரிவினைகளை உடைத்தெறிந்து, உலகளாவிய நோய்ப் பேரிடருக்கு இட்டுச் சென்றது. 2003ஆம் ஆண்டில் வெடித்த சார்ஸ் தொற்று நோய் 23 நாடுகளை பாதித்தது; 800 பேர் இறந்தனர். ஆனால் கொரோனா தொற்று அதை விடப் பத்து மடங்கு அதிக உயிர்களை ஏற்கெனவே பலிவாங்கி விட்டது.

தற்போது தேசப் பிரிவினைகளின் உடைப்பு முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நாம் இப்போது காணும் உலகளாவிய வைரஸ் பரவல் போன்ற நிகழ்வுகள் முதலாளித்துவத்தின் தற்போதைய கட்டத்தின் பொது நிகழ்வுகளாக இருக்கப் போகின்றன. இதனால்தான், இந்த நெருக்கடியை சில மக்கள் பிரிவினருக்குள் கட்டி வைத்து பிறரைப் பாதுகாக்க டிரம்ப் போன்றோர் எடுக்கும் முயற்சிகள் கட்டாயமாகத் தோல்வியுறும். சுருங்கச் சொன்னால், முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளை அதன் குறிப்பான நிறுவனங்களே எதிர் கொள்ளும் திறனில்லாத ஒரு கட்டத்தை முதலாளித்துவம் அடைந்து விட்டது.

prepper-521401357-web-300x169.jpg

இந்தச் சூழலின் ஒரு வெளிப்பாடுதான் நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பேரிடர். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு பல வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், நான் இங்கு மூன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். இதில் முதலில் வருவது உலகளாவிய பொருளாதார நெருக்கடி; முதலாளித்துவத்தின் தற்போதைய நிறுவனங்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தீர்வு காண்பதற்கு குறைந்த பட்சமாக உலகிலிருக்கும் பல அரசுகளும் ஒருங்கிணைந்து நிதியாதரங்களின் வாயிலாக தேவையை (டிமாண்ட்) தூண்டி விட வேண்டும். முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா அதன் பொருளாதாரத்தை மட்டும் பாதுகாப்பதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க நினைப்பதைக் காணும் போது, நாடுகளின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கும் எனப் புரிகிறது. கொரோனா பிரச்சினையையும் அமெரிக்கா இப்படித்தான் அணுகுகிறது.

இரண்டாவதாக நாம் சுட்டிக் காட்டும் பிரச்சினை பருவநிலை மாற்றம். முதலாளித்துவம் உருவாக்கிய இந்த நெருக்கடியை அதன் அளவுகோல்களின் வாயிலாகத் தீர்க்க முடியாது. மூன்றாவது பிரச்சினை அகதிகள் நெருக்கடி என்று அழைக்கப் படுவது. அதாவது, முதலாளித்துவத்தின் போர்களாலும், அதன் அமைதியினாலும் நிலைகுலைந்து போன மக்களின் உலகளாவிய புலம் பெயர்வு.

இந்த நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் இறுதி ஆட்டம் தொடங்கி விட்டதென்பதையே காட்டுகின்றன. இவை வெறும் நிகழ்வுகளல்ல. பொருளாதார நெருக்கடி சுழற்சி முறையில் வரும் கீழிறக்கம் மட்டுமல்ல; அது நீண்டகாலமாக இருக்கும் அமைப்புரீதியான நெருக்கடியின் வெளிப்பாடுதான். அதே போல், புவி வெப்பமைடதலினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஒரு தற்காலிக நிகழ்வல்ல; அது தானாக மறைந்தும் விடாது. இப்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய கொரோனா பேரிடர் முதலாளித்துவ உலகமயமாக்கலின் யுகத்தில் இன்னும் வரப்போகும் இடர்கள் எப்படியிருக்கும் என்பதையே காட்டுகிறது; வரவிருக்கும் காலங்களில் விரைவாகப் பரவும் வைரஸ்கள் லட்சக் கணக்கான மக்களை நூற்றாண்டில் ஒரு முறை மட்டுமல்லாது, அடிக்கடி பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்தச் சவால்களை மனிதகுலம் எதிர்கொண்டு பிழைத்திருக்க வேண்டுமெனில், முதலாளித்துவ நிறுவனங்கள் போதுமானவை அல்ல. சோஷலிசத்தை நோக்கி நகர்வதே தீர்வு. கொரொனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு ”சுதந்திர சந்தையையும்” லாப நோக்கத்தையும் புறந்தள்ளி எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் (அவை தற்காலிகமனவை, அவசரத் தேவைக்கானவை என்ற போதிலும்) அவற்றை முன்னெடுப்பவர்களும் அறியாமல் இந்தப் பாதையைத்தான் காட்டுகின்றன.

(நியூஸ்கிளிக் இணைய ஊடகத்தில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் எழுதியிருக்கும் கட்டுரை. தமிழில்: ஆர். விஜயசங்கர்)
 

https://uyirmmai.com/செய்திகள்/அரசியல்/உலகளாவிய-நோய்ப்-பேரிடரும/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.