Jump to content

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !

கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. 

இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும்  மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போது இலகுவானதல்ல. 

அரசு அவ்வப்போது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு ஊரடங்கு தளர்த்தினாலும், சில இடங்களில் விவசாயிகள் தம் விளைபொருட்களை விற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்தபோதும் சில முட்டாள்கள் தேவையற்ற வகையில் கூட்டம் கூடி அதனைக் கெடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. 

தக்காளி போன்ற சில விவசாய விளைபொருட்கள் ஒரு சில நாட்களுக்குள் சந்தைப்படுத்தி விடவேண்டும். வெங்காயம் போன்ற சில பொருட்களைத்தான் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும். 

ஏற்கனவே பல்வேறு சிரமங்களின் மத்தியில்தான் விவசாயிகள் பலரும் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பொருட்களை விற்கமுடியாமல் போனால் அது அவர்களுக்குப் பெரும் நட்டமாகிவிடும். மறுபுறம் மக்களுக்கும் தமக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாது போய்விடும்.

இதற்கான தீர்வு என்ன? அரசை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் உரிய தீர்வு உரிய நேரத்தில் கிடைக்குமா? உங்கள் பதில் “இல்லை”யென்றால் உடனடித் தீர்வுதான் என்ன?

பலரும் பின்வரும் இரண்டு தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

தெரிவு 1: அரசு மானிய விலை அடிப்படையில் இப்பொருட்களை கிராமமட்ட அமைப்புக்கள் ஊடாக கொள்வனவு செய்து சதொசா போன்ற அரச வணிக கடைகள் ஊடாக விற்பனை செய்யலாம்.

தெரிவு 2: தனியார் பல்பொருள் அங்காடிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு விற்பனை செய்தல். 

ஆனால் இந்த இரண்டு தெரிவுகளும் தற்போதய சூழலில் உடனடித் தீர்வை தரக் கூடியவை அல்ல. 

அப்படியானால் எமக்கு உள்ள உடனடித் தீர்வு என்ன?

இலங்கையின் கிராமங்களில் கிராம மட்ட அமைப்புகள் பல உள்ளன. கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. இதுதவிர மதத் தளங்களின் நிர்வாக சபை மற்றும் தொண்டர்களும் ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். 

இந்த அமைப்புக்கள் இந்த சூழ்நிலையில் மிக முக்கிய பங்காற்ற முடியும். அவர்களோடு இதனை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு ஊரில் உள்ள இளைஞர்களும் ஆர்வமுள்ள ஏனையவர்களும் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் பிரதேசத்தில் விவசாயப் பொருட்களை வாங்கி விற்க கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது வேறு அமைப்புகள் முன்வராத இடத்து, ஒவ்வொரு கிராமத்திலும் பத்திலிருந்து பதினைந்து பேர் இணைந்து இதற்காக WhatsApp group ஒன்றை உருவாக்கலாம். Facebook இனையும் இந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  (அல்லது வேறு பொருத்தமான சமூக ஊடகத்தை தெரிவு செய்யலாம்). 

அடுத்ததாக அந்த ஊரில் உள்ள விவசாயிகளை தொடர்புகொண்டு அவர்களையும் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளலாம். அல்லது, விசாயிகளுக்கான சங்கம் இருக்குமாயின் அதன் நிர்வாகிகளை இணைத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் யாரிடம் என்ன விளைபொருள்கள் உண்டென்பதை பகிர்ந்து கொள்ளலாம். இளைஞர்கள் வேறு Whatsapp குழுக்களின் ஊடாக ஊரில் யார் யாருக்கு பொருட்கள் தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் எந்த விவசாயியிடம் என்ன விலைபொருள் உள்ளது, அதன் தொகை, என்பதையும் எந்த குடுமபத்துக்கு என்னென்ன விளைபொருட்கள் தேவை என்ற ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ள முடியும். 

அடுத்ததாக இளைஞர்கள் அந்த பட்டியலுக்கு ஏற்ப தங்களுக்குள் சுழற்சிமுறையில் சிறு குழுக்களாக விவசாயிகளிடம் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பொதி செய்துகொண்டு தேவைப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உள்ளூரில் பொருட்கள் விற்று மிகுதியாக இருந்தால் அயல் கிராமத்தினைத் தொடர்பு கொண்டு அந்த ஊர் குழுவின் ஊடாக அங்கு விற்பனை செய்யலாம். 

இதற்கு அந்தந்த கிராமசேவகர்களையும் இணைத்துக் கொள்ளமுடியும். இவ்வாறு கிராமசேவகர்களையும் கிராமமட்ட சங்கங்களையும் இணைத்துக் கொள்வது இதில் ஈடுபடும் ஒவ்வொருவரின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்.

இவ்வாறான ஒரு பொறிமுறை தயாரானதும் உங்கள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் கலந்துரையாடி அவர்கள் அனுமதியுடன் ஊரடங்குவேளையிலும் விவசாயப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யக்கூடிய ஒழுங்குகளை செய்யமுடியும்.  

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் ஆள் நடமாட்டத்தை பெருமளவு குறைத்து அதேநேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடியும். ஒரு நேரத்தில் கிராமத்தில் மக்கள் நடமாடித் திரியவேண்டிய தேவையும் குறைக்கப்படும். 

எதிர்காலத்தில் இதே ஒழுங்குமுறையை விவசாயிகளும் கிராமமட்ட அமைப்புகளும் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும். அல்லது வேறு ஒரு பொருத்தமான முறையையும் பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு நியாயமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். 

இது ஒரு வழிமுறை மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் தத்தமக்கு ஏற்றமாதிரியான ஒரு பொறிமுறையை அவர்கள் தெரிவு செய்துகொள்ள முடியும். எப்போதுமே வேறு யாரோ வந்து உதவவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நெருக்கடியான நேரத்தில் நம் கையே நமக்குதவி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.