Jump to content

கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..!


Recommended Posts

கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..!

 

 

   by : Litharsan

coronavirus-pandemic.jpg

மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர்.

மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்துச் செல்கின்றமை பெரும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் ஸ்பெயினில் 913 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 7 ஆயிரத்து 716 பேர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயின் பெரும் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு 7 ஆயிரத்து 846 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மொத்த நோயாளர்கள் 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் அதி தீவிர சிகிச்சையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனா பாதிப்பால் பேரிழப்பைச் சந்தித்து வரும் ஸ்பெயினுக்கு சுமார் 15 தொன் அளவிலான மருத்துவப் பொருட்களை சீனா வழங்கியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ், ஸ்பெயின் இராணுவ விமானம் திங்களன்று சீனாவிலிருந்து சுமார் 15 தொன் மருத்துவப் பொருட்களுடன் நாட்டுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Coronavirus-16.jpg

இதேவேளை, தொடர்ந்தும் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துரும் இத்தாலியில் நேற்று மட்டும் 812 பேர் மரணித்துள்ளதுடன் உலக அளவில் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இந்நாட்டில் இதுவரை மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 591 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு அவசர சிகிச்சையில் நான்காயிரம் பேர்வைரை உள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 3ஆம் திகதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் இன்றியமையாதது என அந்நாட்டின் உட்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பொக்கியா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பவே விரும்புவதாகக் கூறிய அவர், எனினும், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தபிறகு படிப்படியாக ஊரடங்கு இரத்துச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்காவில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி தற்போது உயிரிழப்புக்கை பெரும் எண்ணிக்கையில் ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரை ஏற்படாத பதிவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 573 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிய நோயாளர்களும் ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து மொத்தம எண்ணிக்கை ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 844 ஆகக் காணப்படுகிறது. மொத்த உயிரிழப்பு 3ஆயிரத்து 156 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பிரான்சிலும் கடும் பாதிப்பை கோரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகின்றது. அங்கு ஒரேநாளில் 418 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக 44 ஆயிரத்து 550பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சையில் உள்ளனர். பிரான்சில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும், பிரித்தானியாவில் 180 உயிரிழப்புக்கள் நேற்று மட்டும் பதிவாகியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 408 ஆக உள்ளது. மேலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியில் நேற்று 104 உயிரிழப்புக்களும், ஈரானில் 117 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதுடன் குறித்த நாடுகள் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. ஜேர்மனியில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரைவஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதைன விட ஏனைய பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் 59 பேரும், நெதர்லாந்தில் 93 பேரும், பெல்ஜியத்தில் 82 பேரும் மரணித்துள்ளதுடன் துருக்கி, சுவீடன், ஆஸ்ரியா, கனடா, போர்த்துக்கல், பிரெஸில், ரோமானியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

http://athavannews.com/கொரோனாவின்-கோரம்-அமெரிக/

Link to comment
Share on other sites

http://www.4tamilmedia.com/special/yard/17742-rinascero-rinascerai-bergamo

 

 

" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் !

நீங்கள் முதலில் கருத்திடுங்கள்

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் நான் வசிக்கும் தென் மாநிலம் இத்தாலி மொழிபேசும் மாநிலம். சுவிற்சர்லாந்திலுள்ள பலரும், அதனை இத்தாலியின் பிராந்தியமாகவே பார்க்கும் அபத்தமான பழக்கம் இப்போதும் உண்டு. 90களின் தொடக்கத்தலிருந்து அம் மாநிலத்தில் வாழ்கின்றேன். இத்தாலிய மொழி மற்றும் கலை கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் வந்தபோது, இத்தாலி மீதான ஈர்ப்பு வந்தது.

இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக ஊழல்கள் எனக்கு ஒருபோதும் பிடிக்காது. ஆனால் அங்கு உறைந்திருக்கும் ஆன்மீகமும், நிறைந்திருக்கும் கலைகளுக்குமாக அந்த மண்ணை ஆயிரம் முறை தொட்டு வணங்குவேன் என எப்போதும் நண்பர்களிடம் சொல்லுவதுண்டு. அதே கோட்பாடுதான் இத்தாலி மீதான என் பிரியம். கலைகளின் மீதான ஈர்ப்புடையவர்களுக்கு, ஐரோப்பாவில் பிரான்சும், இத்தாலியும் எப்போதும் விருப்பத்துக்குரியவைதான்.

கலையும், புராதனமும், உறைந்து கிடக்கும் தேசம் அது. ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைவிட பொருளாதார வளம் குறைந்த நாடாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இந்தியா ஏழைநாடல்ல, ஏழைகள் வாழும் நாடு என்பது போன்றுதான் இத்தாலியின் பொருள்வளம் பெருமுதலாளிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. எது எப்படியாயினும் மக்கள் எப்போதும் கொண்டாட்ட மனநிலையில் வாழப் பழகியவர்கள்.

சுவிற்சர்லாந்துக்கு வந்த பத்து ஆண்டுகளின் பின்னர்தான் பக்கத்திலிருக்கும் இத்தாலிக்குச் செல்ல முடிந்தது. இத்தாலியின் பெரும்பாலான பிரதேசங்களிலும் பயணித்திருக்கின்றேன். எல்லாப்பிரதேசங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கு மாகாண மக்களிடம் காணும் விருந்தோம்பல் சிறப்பை இத்தாலியில் வாழும் தமிழர்களிடம் காணலாம். ஏறக்குறைய இத்தாலியர்களைப் போலவே கொண்டாட்ட மனநிலை வாய்க்கப் பெற்றவர்கள்.

90களில் எனக்குப் பிடித்தமான ஒரு கலைஞனாக இத்தாலியின் லுச்சியானோ பவரொத்தி இருந்தான். ஒபரா இசைகுறித்த பரிச்சயம் ஏதும் எனக்கு இல்லாத போதும், பவரொத்தியை ஏனோ பிடித்துப் போயிற்று. ஒருவேளை, தமிழ்திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற தோற்றம் மற்றும் அரங்காற்றுகைப் பாணி என்பனவற்றால் வந்திருக்கலாம்.

நீண்டகாலமாக பவெறொத்தியை நினைக்காதிருந்த போது, அன்மையில் இத்தாலிக்கு அவசர உதவிக்கு வந்த சீன மருத்துவர்குழு ஒன்று பவொறொத்தியின் பாடல் வரிகள் ஒன்றின் பதாகையோடு வந்திருந்தது.

 அந்தப் பாடல்;

Nessun dorma! Nessun dorma!
யாரும் துங்காதீர்கள்! யாரும் துங்காதீர்கள்!
Tu pure, oh Principessa

இளவரசி நீயும் கூட
Nella tua fredda stanza
குளிர்மையான உன் அறையில் இருந்து
Guardi le stelle che tremano
D'amore e di speranza

காதலினாலும் நம்பிக்கையினாலும் தளர்திருக்கும் நட்சத்திரங்களை பார்க்கிறாய்
Ma il mio mistero è chiuso in me
ஆனால் எனது ரகசியம் என்னுள் மூடி இருக்கும்
Il nome mio nessun saprà
எனது பெயரை யாரும் அறியார்
No, no, sulla tua bocca lo dirò
Quando la luce splenderà
Ed il mio bacio scioglierà

வெளிச்சம் தோன்றி எனது முத்தத்தை கரைய செய்யும் போது உன் வாயில் அதை சொல்வேன்.
Il silenzio che ti fa mia

மௌனத்தில் நீ என்னவளாகின்றாய்.

பாவரொத்தியின் பிரபலமான பாடல்களில் ஒன்று. அரங்கில் இதனை அவர் பாடுகையில் பல்லாயிரக் கணக்கானோர் பரவசமடைவார்கள். அதேபோல் உத்வேகம் தரும் பாடலொன்று புதிதாகப் பிறந்திருக்கிறது.

இத்தாலியை இருள் சூழ்ந்திருக்கும் தருணத்தில், அந்த மண்ணின் கலைஞர்களால் ஆர்பரித்து எழும் வகையான பாடல் ஒன்று நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. அதுதான் " Rinascerò, rinascerai "

இத்தாலியின் லொம்பார்டியாவிலுள்ள பேர்கமோ பிராந்தியத்தில்தான் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புக்கள். அந்த இழப்புக்களின் வேதனையில், அழுகையில், பிறந்திருக்கிறது இந்தப்பாடல். 1944 மே 1ல் பெர்கமோவில் பிறந்த ராபி ஃபாச்சினெட்டி (Roby Facchinetti), பிரபலமான இத்தாலிய பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் சிறந்த பியானோக் கலைஞர். அவரது இசையமைப்பில் பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ளது இப்பாடல். வலேரியா கபோனெத்தோ டெல்லேயானியின் (Valeria Caponnetto Delleani ) அற்புதமான குரலில், அழுகையும் நம்பிக்கையும் சேர்ந்து ஒலிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசரநிலைக்கு ஆதரவாக பிறந்திருக்கிறது இப் பாடல், குறிப்பாக கோவிட் -19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோ நகரத்திற்கு, இப்பாடலின் பதிவிறக்கங்கள், பதிப்புரிமை மற்றும் தலையங்க உரிமைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் முற்றிலும் நன்கொடையாகும். பெர்கமோவில் உள்ள போப் ஜியோவானி XXIII மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக அந்த நன்கொடை வழங்கப்படும் என அறிவிக்கபட்டிருக்கிறது.

பெர்காமோவில் உள்ள போப் ஜியோவானி XXIII மருத்துவமனையின் நடப்புக் கணக்கில் நேரடியான நன்கொடைகளை வழங்கவும் முடியும் - IBAN: IT75Z0569611100000008001X73 (வழங்குபவர்கள், தங்கள் பெயர் மற்றும் வரி இலக்கம் என்பவற்றுடன், Rinascerò, rinascerai திட்டத்திற்கான நன்கொடை என்னும் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பாடலைத் தோற்றுவித்த இசையமைப்பாளர் ரொபி பச்சினெத்தி பாடல் பிறந்த கதை கூறுகையில்; தொலைக்காட்சியில் என் சக குடிமக்களின் சடலங்களை ஏந்திய இராணுவ லாரிகளின் அணிவகுப்பைப் பார்த்த பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டேன், அழுகையும் கோபமும், ஆற்றாமையும், என்னை பியானோவிற்கு கொண்டு வந்தன, சில நிமிடங்களில் இசை பிறந்தது. கூடவே "நான் மறுபிறவி எடுப்பேன், நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" என்ற தலைப்பும் பிறந்தது.

இது ஒரு உத்வேகம் மற்றும் உடனடி தேவை, நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன், குறிப்பாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட எனது நகரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் ஸ்டெபனோவை அழைத்தேன், இந்த திட்டத்தில் என்னை ஆதரிக்கும்படி கேட்டு, பாடல் எழுதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். நான் உணர்ந்ததை முழுமையாக வெளிப்படுத்துகிறது அவரது வரிகள்.

இசைக்கும் சொற்களுக்கும் இடையில் ஒரு சரியான பொருத்தம். எங்களையும் அவர்களது குடும்பத்தினரையும் விட்டு வெளியேறியவர்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு இது. மற்றவர்களின் நன்மைக்காக இடைவிடாமல் உழைக்கும் இந்த நாட்களின் கதாநாயகர்கள் கதாநாயகிகளான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களும், விட்டுக் கொடுக்காத நகரத்துக்கான பிரார்த்தனையாகவும் இந்தப் பாடல்.

பாடல் வரிகளை எழுதிய ஸ்டீபனோ தொடர்கையில், சிலநாட்களின் முன்பு ராபி என்னை கண்ணீருடன் உடைத்த குரலில் அழைத்தார். ஒரு மூச்சுக்கும் மௌனத்திற்கும் இடையில் அவர் தான் கண்ட சோகமானகாட்சி பற்றி என்னிடம் சொன்னார். அரை மணி நேரம் கழித்து, அவரது இசைக்கு மிகவும் பொருத்தமான சொற்களைத் தேடிக்கொண்டிருந்தேன் அவரது இசை, வலி வார்த்தைகள், நம்பிக்கை, மீட்பின் வார்த்தைகள். பெர்கமோ எனும் காயமடைந்த எங்கள் நகரத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பாடலுக்காக, "நான் மறுபிறவி எடுப்பேன், நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள். எல்லாம் முடிந்ததும், நட்சத்திரங்களைப் பார்க்கத் திரும்புவார்" என வரிகளைத் தொடுத்தேன் என்கிறார்.

பாடலின் இறுதிகாட்சியில் பெர்காமோவின் அடையாளங்களில் ஒன்றான செங்கற்களால் கட்டப்பெற்ற Torre dei venti Bergamo கோபுரத்தைக் காண்கையில் கண்கள் கலங்கிற்று. எத்தனை தடவைகள் அதன் அடிவாரத்தில் பயணித்திருப்பேன். ஆனாலும் துயரம் சுமந்த காட்சிகள் களைந்து, உத்வேகம் தரும் காட்சிக் கலவையும், உற்சாகம் தரும் குரலும்மீண்டும் பயனிக்கும் நம்பிக்கை வளர்க்கிறது.

அந்தக் கலைஞர்களுடன் சேர்ந்து நானும் சொல்வேன் பேர்கமோ எழுந்து வா ! வெகு சீக்கிரமே எழுந்து வா !!

 இப் பதிவினை நாம் எழுதும் போது,  youtube ல் அப்பாடல் வெளியாகிய 18 மணித்தியாலங்களுள், ஒன்றரை மில்லியன் மக்கள் பார்த்த அந்தப் பாடலை நீங்களும் பாருங்கள், பகிருங்கள். அந்தக் கலைஞர்களின் நோக்கம் நிறைவேறட்டும்.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் - ஸ்பெயின் 553 பேர், பிரான்ஸ் 499 பேர், இங்கிலாந்து 381 பேர், அமெரிக்கா 360 பேர்

கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 553 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிலும் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகியுள்ளனர்.

ஒரே நாள் - ஸ்பெயின் 553 பேர், பிரான்ஸ் 499 பேர், இங்கிலாந்து  381 பேர், அமெரிக்கா 360 பேர்
மருத்துவருக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி
 
மாட்ரிட்:
 
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. 
 
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. 
 
கொரோனாவில் உயிரிழந்தவரை அடக்கம் செய்யும் காட்சி
 
மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 553 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.
 
பிரான்ஸ் நாட்டிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.
 
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.
 
அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இப்போது இருக்கும் நிலை புயலுக்கு முந்திய அமைதி என  பேசிக்கொள்கின்றார்கள். பலரின் முகங்களில் இறுக்கமான நிலையையே காணக்கூடியதாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.