Jump to content

மிருசுவில் படுகொலை குற்றவாளியினை விடுதலை செய்த இலங்கை ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவித்த - ஹரி ஆனந்தசங்கரி..!!


Recommended Posts

5e82bee4ea578.jpg

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது.

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று ஒண்டாரியோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ஸ்ரீலங்கா இராணுத்தில் கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க என்னும் இராணுவ உறுப்பினர் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 8 தமிழ் பொது மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தார் என்னும் குற்றத்திற்காக மேற்படி குற்றவாளிக்கு 2015 ம் ஆண்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.சாதாரண பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத படுகொலைகள் போன்ற பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் விடுதலை செய்வது ஆகிவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம். அத்தகைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு எதிரானதாகும்.

ஏற்கனவே 2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்டு அரங்கெற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறாத நிலையிலும், ஜ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் மீதும் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இன்னமும் உரிய முறையில் பொறுப்புக்கூறாமல் காலத்தை இழுத்தடிக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இருந்து அரசாங்கம் விலகியது மற்றும்  தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரூ இராணுவ வீரர் மன்னிக்கப்பட்டுள்ளார்.குற்றவாளியான சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ உறுப்பினரை விடுதலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடிவருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது குறிப்பாக வெறுக்கத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிக்கான ஒரு செயல்முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகளையாவது குறைந்தபட்சம் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் . இலங்கை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். நானும், கனடாவிலுள்ள சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நீதிக்காக தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர்களுடன் இணைந்து குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

https://eyetamil.ca/news-story/365/gary#news#srilanka#march.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.