Jump to content

கொரோனா நோயாளியின் உடல் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!


Recommended Posts

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்கு அவசர அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.

குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.

எங்களது சமய ரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கொரோனா-நோயாளியின்-உடல்-எ/

Link to comment
Share on other sites

நீர்கொழும்பில் உயிரிழந்த நபரின் உடல் தகனம்! மத ரீதியில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை!

நீர்கொழும்பில் கொரோனா தொற்றால் முஹம்மத் ஜமால் என்ற 64 வயதுடைய நபர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இவரது உடல் தகனம் செய்யப்பட்டமையால் அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த முஹம்மத் ஜமாலின் உடல் நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் பலவேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் ஊடாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருகையில்,

நேற்றைய தினம் நீர்கொழும்பில் உயிரிழந்த சகோதரனை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென தான் பிரார்த்திப்பதோடு, இவருக்காக அனைத்து உறவுகளும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றினால் உலக அளவில் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர், அவர்கள் உரிய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் எமது நாட்டில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளர்.

இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இது தொடர்பில் முஸ்லிம் மார்க்க தலைமைகள் அரசாங்கத்தோடு பேசி தக்க முடிவை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140244

Link to comment
Share on other sites

22 minutes ago, Rajesh said:

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

தேவையில்லாத அரசியல் நோக்கம் மட்டுமே கொண்ட இந்த வெற்று அறிக்கையால் தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவை தட்டி எழுப்பிவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

அண்ணை.. ஊரே என்னை பத்தி கதைக்கணும் .. நியூஸ்ல என்ர பேர் வரணும் .. அதுக்கு வழி சொல்லுங்கன்னை..👍(படம்:பூவரசன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள மற்றைய மதத்தவர் எல்லாம்......
இந்த நோய் தாக்கத்தின் அச்சம்  கருதி, 
அரசு வெளியிடும் நடைமுறைகளை அமைதியாக பின்பற்றும் போது...

முஸ்லீம் மதத்தவர்களுக்கு... மட்டும், ஏதோ  வானத்தில் இருந்து குதித்தவர்கள் மாதிரி...
எல்லாத்திலும்... நொட்டை  சொல்லிக் கொண்டிருக்கிறதே வேலையாய் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் உடலை அமைச்சரிடமே கையளித்து அவரே நேரில்வந்து உடலைப் பொறுப்பெடுத்து அவருடனே கொண்டுசெல்லும்ப (சில நிபந்தனைகளுடன்) கூறிவிட்டால் போச்சு. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் அல்லாரும் ஒண்னு சேர்ந்து, ஒண்ணுக்கு இருக்கோணும் எண்ட விஷயத்தில உறுதியா இருக்கிறதால இவர்களது பகுதிகளில் தான் கோரோனோ அதிகமாக உள்ளது. 

மனிசன், கொரோனா வைரசு பயத்தில இருக்கிறான். இந்தாள் உடலை தாக்குறதில கவலை படுது...

Link to comment
Share on other sites

அனேகமாக முசுலீம்கள் பாலைவன வாசிகள், அங்கு மரங்கள் பெரியளவில் இல்லை. அதனால் இறந்தவரின் உடலை மண்ணுக்குள் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இலங்கைபோன்ற நாடுகளில் மரங்களுக்குப் பஞ்சமில்லை போதிய விறகும் உண்டு அதனால் இறந்தபின் எரிக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் மனித  மனங்களை மாசற்று நடக்கவைக்கும் ஒரு ஊடகமாக உள்ளபோதிலும், அரசுகள் முதல் அரசியல்வாதிகள்வரை தமது தேவைக்கேற்பபாவிக்கும் கருவியாகவே இன்று அது பரிணமித்துள்ளது. ஆனால், உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வேளையில்  ஒரு நடைமுறைச் சூழலைப் பின்பற்றவும் மதம்பிடித்து நிற்கும் இவர்களை என்னவென்று சொல்வது.  ஒருபோதும் இவர்கள் மாறப்போவதில்லை. 

நோய்தொற்றின் பேரிடரை எதிர்கொள்ள வேண்டின் மதங்களைக் கடந்து சில இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவது தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

தேர்தல் வருவதால் ஹக்கீம் இதை மதவெறியைக் கிளப்பும் ஒரு ஆயுதமாக எடுத்திருக்கிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மனிசன், கொரோனா வைரசு பயத்தில இருக்கிறான். இந்தாள் உடலை தாக்குறதில கவலை படுது...

முஸ்லிம்கள் தமது வழக்கப்படி புதைக்க அனுமதி கொரோனா வந்த எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இருக்கின்றதுதானே.
 

நாதம்ஸ் தனது அக்கவுண்ட்டனுக்கு கொரோனா வந்ததுடன் பயந்துதான் போட்டார்.

 மூன்று கிழமைக்கு முன்னால் இப்படி எழுதியவரை கொரோனா உண்மையில மாத்திவிட்டது!

நானும் ஒருத்தரையும் அண்டவிடாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறன். நடக்கப் போகும்போதும், ஞாயிறு ஷொப்பிங் போகும்போது மட்டும்தான் வெளியாக்களை காண்பது. ஆனால் 2 மீற்றர் இடைவெளியை விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வருவது சொல்லிக்கொண்டா வரும்!

 

Link to comment
Share on other sites

14 minutes ago, கிருபன் said:

2 மீற்றர் இடைவெளியை விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வருவது சொல்லிக்கொண்டா வரும்!

காற்றில் வைரஸ்கள் பரவும் விதத்தை பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் தரும் எச்சரிக்கை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் தமது வழக்கப்படி புதைக்க அனுமதி கொரோனா வந்த எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இருக்கின்றதுதானே.

இலங்கை பௌத்த நாடு எண்டு இன்னும் விளப்பமா சொல்லவேண்டும் எண்டு, சோம்பல் முறித்து ஞானசேர தேரர் கிளப்புறார், பொறுங்கோ.

முஸ்லீம் நாடுகளில் அரசே தொற்று நீக்கி கலவை அடித்து புதைக்கினறது, குடும்பத்திடம் கையளிக்கவில்லை.

தொற்று நோயினால் இறந்த நபர்களின் உடல்களை, அந்த உடல்களில் இருக்கக் கூடிய கொலைக் கிருமிகள் ஏனையவர்களுக்கு தொற்றி விடாமல் இருக்க வேண்டும் என்பதால், அரசே பாதுகாப்பாக அழிக்க வேண்டும்  என்பது சட்டவிதி.

முஸ்லிம் மக்கள், தமது இறந்த உடல்களை பெட்டியில் அடக்கம் செய்வதில்லை. திறந்த வகையில் வைத்திருந்து, உடலை கழுவிய புதைப்பார்கள். அது அவர்களது மார்க்கம்.

சாதாரணமா ஒருவர் சொன்னால் பரவாயில்லை. ஒரு சட்டம் உருவாக்குபவர் இதுகுறித்து புரிதல் இல்லாமலா பேசுவது?🤨

uk யில் madcow நோயினால் இறந்தவர்களின் உடலை சீல் பண்ணப்பட்ட பெட்டிகளில் வைத்தே கொடுத்தார்கள். எக்காரணம் கொண்டும் பெட்டி உடைக்க கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு.

உடைத்து, யாருக்கும் நோய்த் தொற்று உண்டானால், மரண தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

*****

கணக்காளருக்கு, இன்னும் நிலைமை சரியாகவில்லை. இன்னும் வைத்தியசாலையில் தான்.🙄
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அனேகமாக முசுலீம்கள் பாலைவன வாசிகள்

இலங்கை முஸ்லிம்கள் இனம்,  பாலைவன முஸ்லிம்களின் இனத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது.

இலங்கை முஸ்லிம்கள், இன்றைய கேரளம் மற்றும் தமிழ் நாட்டின் அன்றைய ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகும்.

பாலைவனத்தை படத்திலேயே 99.9% இலங்க முஸ்லிம்கள் பார்த்து இருக்கமாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கக்கீமு உப்பிடித்தான்...தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போனநேரம் ஹாலல் சாப்பாடு இல்லை சாப்பிடமாட்டன் என்று அடம்பிடித்தவராம்....அப்ப தலைவர்  ..சாப்பாடு சமைத்தவரை கூப்பிட்டு காட்டினாராம்....அது முன்னாள் முசுலிம் போராளியின் தாயாராம்...அந்த இடத்திலும் அரசியல் விளையாட  வெளிக்கிட்டு மூக்குடைபட்டவராம்.....ஆனால்  சீனாப் பாட்டியென்றால்..ஹலாலை கவனியாராம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, alvayan said:

உந்த கக்கீமு உப்பிடித்தான்...தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போனநேரம் ஹாலல் சாப்பாடு இல்லை சாப்பிடமாட்டன் என்று அடம்பிடித்தவராம்....அப்ப தலைவர்  ..சாப்பாடு சமைத்தவரை கூப்பிட்டு காட்டினாராம்....அது முன்னாள் முசுலிம் போராளியின் தாயாராம்...அந்த இடத்திலும் அரசியல் விளையாட  வெளிக்கிட்டு மூக்குடைபட்டவராம்.....ஆனால்  சீனாப் பாட்டியென்றால்..ஹலாலை கவனியாராம்..

பாட்டியா குமரியா ? 🤔.......😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பாட்டியா குமரியா ? 🤔.......😂

எந்தவொரு வித்தியாசமும் பார்க்கமாட்டாரு....நல்ல கவனிப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கொரோனா எல்லாம் தற்காலிக உயிர்கொல்லி நோய்தான்,

இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்த உலகில் மனித இனம் வாழும்வரைஅனைத்து இனத்தின்  நிம்மதியையும் கெடுக்க காத்திருக்கும் நிரந்தர  உயிர்கொல்லி நோய்கள்.

அந்த உயிர்கொல்லி கொரோனாவை சமாளிக்கும் மருந்து  சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவார்கள், 

இந்த உயிர் கொல்லி இனத்தை சமாளிக்கும் மருந்து ஒருகாலமும் கண்டுபிடிக்கபடமாட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

 கொரோனா எல்லாம் தற்காலிக உயிர்கொல்லி நோய்தான்,

இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்த உலகில் மனித இனம் வாழும்வரைஅனைத்து இனத்தின்  நிம்மதியையும் கெடுக்க காத்திருக்கும் நிரந்தர  உயிர்கொல்லி நோய்கள்.

அந்த உயிர்கொல்லி கொரோனாவை சமாளிக்கும் மருந்து  சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவார்கள், 

இந்த உயிர் கொல்லி இனத்தை சமாளிக்கும் மருந்து ஒருகாலமும் கண்டுபிடிக்கபடமாட்டாது.

எனக்குப் புரிந்த மட்டில் சுனி (வஹாபிசம்)முசிலிம்கள்தான் பிரச்சனையான கொள்கையுடையவர்கள். சியா முசிலிம்கள் கடும்போக்கானவர்களல்ல. 🙂

Link to comment
Share on other sites

On 3/31/2020 at 8:11 PM, Kadancha said:

இலங்கை முஸ்லிம்கள் இனம்,  பாலைவன முஸ்லிம்களின் இனத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது.

இலங்கை முஸ்லிம்கள், இன்றைய கேரளம் மற்றும் தமிழ் நாட்டின் அன்றைய ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகும்.

பாலைவனத்தை படத்திலேயே 99.9% இலங்க முஸ்லிம்கள் பார்த்து இருக்கமாட்டார்கள்.

 

இலங்கை முஸ்லீம்கள் மீது பாரசீக மற்றும் அரேபிய வணிகர்களின் தாக்கம் அன்றும் இன்றும் உள்ளது. 
அத்துடன். மக்கா மற்றும் மதீனா செல்பவர்கள், அந்த அரேபிய நாடுகளின் கலாச்சாரம் பற்றிய தகவல்களை பெறுபவர்கள் மத்தியில் தாமும் அவ்வாறான கலாச்சாரத்தை பின்பற்றல் வேண்டும் என்பது ஆழமாக பதிந்து விட்ட ஒன்று. 

Link to comment
Share on other sites

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

http://eelamurasu.com.au/?p=26461

 

Link to comment
Share on other sites

ஜனாஸாவை வைத்து அரசியல் செய்து மீண்டும் இனவாத ஊடகங்களுக்கு தீனி போட்டு விடாதீர்கள். தயவுசெய்து சமூகத்திற்காக சிந்தியுங்கள். (முகவலை ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

http://eelamurasu.com.au/?p=26461

 

சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும், ஒழுங்குகளுக்கும், தேவைக்கும்  மேலாக மதத்தை முன்னிறுத்தும் சமூகம்.  

இவர்களைப் பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். 😂

(தொடர்ச்சியாக வீட்டிலிருந்த பிறஸ்றேசனால வந்தது 🤥)

 

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

உங்க பேச்சுவார்த்தைகளை கொஞ்சம் கெதியாவே செய்யுங்கோ அடுத்த சாவு நடக்க முன்னர்.

இல்லை என்டா அதையும் எரிச்சு கொஞ்ச ஆட்களை காப்பாத்தி போடுவாங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.