Jump to content

கொரோனா பரவலுக்கு காரணமான டில்லி நிஜாமுதீன் மசூதி: 10 முக்கிய அம்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி,நிஜாமுதீன், கொரோனா, கொரோனாவைரஸ், Nizamuddin mosque, coronavirus, covid 19 india, india fights corona, coronavirus, corona crisis, Nizamuddin Panganawali mosque, Delhi

 

புதுடில்லி: டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.
 

 

இது குறித்த முக்கிய அம்சங்கள்


1. தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2.தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது.
3.இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இரவு அன்று சோதனை செய்யப்பட்டது. சுமார் 100 பேரிடம் நடந்த சோதனை முடிவுகள், இன்று(மார்ச் 31) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.இந்த மாநாட்டில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.


latest tamil news


 


5.மாநாட்டில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரும், 6 மாடிகள் கொண்ட மையத்தில் தங்கியிருந்தனர். அதில்,250க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர். அனைவரும், ஒரே உணவருந்தும் அறையை பயன்படுத்தினர். உணவும் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டது.
6.இதனையடுத்து, நிகழ்ச்சி நடந்த டில்லி தெற்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு போலீசார் சீல் வைக்கப்பட்டது. டில்லி போலீஸ், சி.ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.
7.இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பீஹார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக காஷ்மீரில் முதலில் உயிரிழந்தவர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்.
8. இந்த மசூதியின் ஒரு சுவர் நிஜாமுதின் போலீஸ் ஸ்டேசனுடன் இணைந்துள்ளது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் பஸ்டி நிஜாமுதீன் பகுதியுடன் இணைந்து இந்த மசூதி உள்ளது.
9.கடந்த 2 முதல், மசூதி வாசலில் பணியில் உள்ள போலீசார், அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தடுத்துள்ளனர். மார்ச் 22 வரை வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர் இந்த மசூதிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 22க்கு பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
10. டில்லி கூடுதல் கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், நிஜாமுதீன் பகுதி மக்களையும், மசூதிக்குள் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து, தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதார அமைப்புக்கு போலீசார் உதவி வருவதாக தெரிவித்தார்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512797

 

தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா: ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை

தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

 

 

பிரசங்க கூட்டம்

 


டில்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், நிஜாமுதீன் என்ற இடத்தில், கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். தப்லிக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'கொரானா அபாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் கூடும் அளவுக்கு, யாரும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது' என, டில்லி போலீசார், ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லி, நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள, 'மார்கஸ் நிஜாமுதீன்' என்ற, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தான், இந்த பிரசங்க கூட்டம் நடந்துள்ளது.

 


latest tamil news


 



கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


 

 

 

அதிர்ச்சி


இதனால், இந்த கட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர். விமானம், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும், மீண்டும் மார்கஸ் நிஜாமுதீன் கட்டடத்திற்கே திரும்ப வந்து தங்கினர். வெளியுலகத்திற்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாமல் இருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியவர்களில் ஆறு பேரும், ஸ்ரீநகர் திரும்பிய ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளது, அந்த மாநில மற்றும் நிர்வாக அரசுகளுக்கு தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் தான், கூட்டம் நடந்த இடத்தில், டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, டில்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவர்கள் பல குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.



இந்த விவகாரம் குறித்து, தப்லிக் ஜமாத் குழு செய்தி தொடர்பாளர் முகமது சோயப் அலி கூறியதாவது:திட்டமிட்டபடி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் ஏற்கனவே வந்து கூடிவிட்டனர். அதன்பின் தான், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், அனைவரும் இங்கு தங்கி விட்டனர். 'வெளியில் நடமாடக்கூடாது; அவரவர் இடங்களில் இருக்க வேண்டும்' என்ற உத்தரவை எல்லாரும் பின்பற்ற வேண்டிய தாகிவிட்டது. அதனால்தான், அலுவலகத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், இங்கு கூடியிருந்தவர்களில், 300க்கும் அதிகமானோரிடம் நேற்று முன்தினம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.



இந்நிலையில்தான், நேற்று அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்து, டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:மசூதி நிர்வாகம், மிகப்பெரிய தவறை செய்துஉள்ளது; இது, மன்னிக்க முடியாத குற்றம். மசூதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிஜாமுதீன் உட்பட அந்த பகுதி முழுதும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சுகாதாரப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு வராமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரது முகவரிகளும் பெறப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள், விமானம், பஸ், ரயில் உள்ளிட்டவற்றில், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கலாம் என்பதால், அவர்களுடன் யார் யார் பயணம் செய்தனர், அவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படலாம் என்பதால், டில்லி மத கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களை, உள்ளாட்சி மற்றும் வருவாய் நிர்வாகத்தினருடன் சேர்ந்து, நாடு முழுதும், அந்தந்த மாநில போலீசார், சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513095

 

உ.பி., மசூதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்

லக்னோ: டில்லி முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டவர்கள், உபி.,யில் உள்ள மசூதிகளில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த, தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த வெளிநாட்டவர் சிலர், உத்தர பிரதேச மாநிலம், லக்னோ, மீரட் ஆகிய மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்ததை, அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.


latest tamil news


 


''இவர்கள், இந்தோனேஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சூடான், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்,'' என, மீரட் மாவட்ட - ரூரல் - எஸ்.பி., அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். முறையான அனுமதியின்றி, வெளிநாட்டவர்களை தங்க வைத்ததாக, சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513195

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்

நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் கலந்து கொண்டவர்களில் 157 பேர் டெல்லியில் உள்ள 16 மசூதிகளில் தங்கி இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்
 
புது டெல்லி:
 
இந்தியா முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். 
 
அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 
இந்நிலையில், நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 157 பேர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
 
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 157 பேர் டெல்லியின் தென்கிழக்கு, வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 மசூதிகளில் தங்கியுள்ளனர். 
 
அவ்வாறு தங்கியவர்களில் 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா,  பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள் ஆவர்.
 
இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது. 
 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பு போலீஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு: கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி.....டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது.

102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; கொரோனா வைரஸின் சமூக பரவல் கட்டத்தில் டெல்லி நுழையவில்லை. உள்ளூர் பரிமாற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளது, அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு அதிகாரிகளிடமும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 1,548 பேர் மார்க்கஸிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. நாங்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறிகளைக் காட்டாத 1,107 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் தான் அதிகம்

டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு தமிழ்நாடு-510, அசாம் -281, உத்தரபிரதேசம் -156, மராட்டியம்-109, மத்தியபிரதேசம்-107, பீகார்-86, மேற்குவங்காளம்-73, தெலுங்கானா-55, ஜார்கண்ட்-46, உத்தரகாண்ட்-34, அரியானா-22, அந்தமான் நிகோபார்-21, ராஜஸ்தாந்19, இமாசலப்பிரதேசம், கேரளா, ஓடிசாவில் தலா 15, பஞ்சாப்-9 மேகலயா-5.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575796

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி மாநாடு:போலீசாரிடம் சிக்கிய 275 வெளிநாட்டினர்

புதுடில்லி:டில்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை போலீசார் இன்று அதிகாலை பிடித்து தனிமைபடுத்தியுள்ளனர்.


 

latest tamil news


 



டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பங்கேற்றனர்.
இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டில்லி சிறப்பு போலீசார், அரசுடன் இணைந்து இன்று அதிகாலை டில்லி முழுவதும் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையின்போது டில்லி மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை போலீசார் அதிடியாக கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21பேர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் யாருடைய பத்திரிகை என்று உடையாருக்கு தெரியாதா?

 

முஸ்லிம்கள்தான் கொரோனாவை பரப்புகிறார்களா? எங்கே போயிற்று இதழியல் அறம்? – மாயா

Nizamuddin_coronavirus_covid19_PTI_6.jpg

தில்லி நிஸாமுதீனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட தப்லீகி ஜமாத் மதக் கூட்டம் ஒட்டுமொத்த கொரோனா விவாதத்தையே திசை மாற்றிவிட்டது. ’தப்லீகி ஜமாத் செய்தது கொடிய குற்றம், அவர்கள் தாலிபான்கள் போன்றவர்கள்’ என திட்டுகிறார் பி.ஜே.பியின் மத அரவணைப்பு முகமூடியான முக்தார் அப்பாஸ் நக்வி. கடந்த பல நாட்களாக அனைத்து நாளிதழ்களின் பேனர் நியூஸ் இதுதான். டிவிக்களின் தலைப்புச் செய்தி இதுதான். அவர்கள் செய்தது தவறு, அதை எந்த வகையிலும் ஆதரிக்காதீர்கள் என்று சில நடுநிலையாளர்கள் ஆவேசப்படுகிறார்கள். எல்லா நடுநிலையாளர்களும் அதைக் கண்டிக்க வேண்டும் என அவர் அழைக்கிறார். உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல் உணர்வுகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு பிரச்சனையை புரிந்துகொள்ள முயலும் பின்மெய்யியல் (post-truth) காலத்தின் கோலம் இது.

SAVE_20200331_192200-300x161.jpeg

தப்லீகி ஜமாத் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியாவை ஆளும் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங் தள் சங் பரிவார அமைப்புகள் போல அது வெறுப்பு அரசியலை பரப்பும் இயக்கம் அல்ல.  தப்லீகி ஜமாத்திற்கு இருப்பது அமைப்புரீதியான பலம், உலகின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் நிதி பலம். ஆனால் பி.ஜே.பி நேரடியாகக ஆட்சியில் அமர்ந்திருக்கிருக்கிறது. இந்தியாவின் பல லட்சம் ராணு வீரர்களும் போலீஸ்காரர்களும் அரசு இயந்திரமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த பி.ஜே.பியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பக்கம் தப்லீகி ஜமாத் செய்த இப்படி ஒரு தவறையும் மறு பக்கம் அந்த அமைப்பின் மத அடிப்படைவாதத்திற்கு நேர் எதிர் நிற்கும் இந்து வலதுசாரி கட்சியின் நிர்வாகத்திற்குமான முரண்பாட்டில் நீங்கள் எதன் பக்கம் நிற்பீர்கள்.

வேறு சாட்சியங்கள் வேண்டாம். ஊடகங்களே சாட்சி. தப்லீகி ஜமாத் கூட்டம் மார்ச் 15 வாக்கில் நடக்கிறது. அப்போது ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. தில்லியில் பெரிய மதக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று ஒரு வழிகாட்டுதல் மட்டும் விடுக்கப்பட்டிருந்தது. அதையும் தப்லீகி ஜமாத் மதித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மார்ச் 25ஆம் தேதி, அதாவது தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமர் சிலையை வேறு இடத்திற்கு நடத்தும் அரசு விழா நடத்தப்படுகிறது.

ஊரடங்கு விதிக்கப்பட்ட 21ஆம் தேதிக்கிப் பிறகு ஒரு பி.ஜே.பி முதல்வரே அதை மீறுகிறார். அதைப் பற்றிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் ஒரு சில மூத்த தலைவர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மொத்தம் 50 பேர் அதில் கலந்துகொண்டதாக மற்ற ஊடகங்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மக்கள் கூடுகையும் கூடாது என்றும் குறிப்பாக மதக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் கூறிய பிறகும் இது நடந்தது என்பது பற்றிய சிறு தகவலோ, குறிப்போ அந்தக் கட்டுரையில் இல்லை. ஆனால் அதே குழுமத்திலிருந்து வரும் எகனாமிக் டைம்ஸ் சமூக இடைவெளி சார்ந்த பல அரசின் விதிகள் மீறப்பட்டதாக விமர்சித்து செய்தி வெளியிட்டது. அதன் தொனி சற்று கடுமையாக இருந்தது என்றாலும் இந்த விதிமீறல் பேனர் செய்தியாக வெளியிடப்படவில்லை. ஒரு சிறு ஆறுதலாக தி இந்து நாளிதழ் தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து இந்தக் கொடிய கிருமியின் தாக்குதலை வகுப்புவாத பார்வையில் திருப்பக்கூடாது என தலையங்கம் எழுதியது.

தப்லீகி ஜமாத் மட்டுமல்ல, மத அடிப்படைவாதத்தில் ஊறிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் கொரோனோ எதிர்வினைவில் சொதப்புகிறார்கள். அயோத்தியில் காவி உடை அணிந்த இந்துத்துவ முதல்வரே தடையை மீறுகிறார். அந்த விழாவில் தங்களுக்கு இடமில்லை என காங்கிரஸ், ஆம் ஆத்மி மிதவாத இந்துத்துவாளர்கள்  கவலைப்படும் அளவுக்கு அது ஒரு அரசியல் கூட்டமாக நடத்தப்படுகிறது. ராம நவமியை நடத்தியே தீர்வோம் என அடம் பிடித்து பிறகு அடங்குகிறார்கள் ஞாயிறு பூசை வைக்க வேண்டும் என அடம் பிடிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம். “கடவுள் காப்பாற்றுவார்” என்ற அடிப்படைவாத நம்பிக்கையிலிருந்து உருவாகும் நிலை இது. எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஆனால் மார்ச் 21 ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே துவங்கிவிட்ட தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து, “கொரோனா பரவுவதற்கே முஸ்லிம்கள்தான் காரணம்” என்று உருவாக்க நினைக்கும் சித்திரத்திற்கு எதிராகப் போராடுவதுதான் நமது இன்றைய கடமை.

tablighi-jamaat-300x200.jpg

தப்லீகி ஜமாத் ஜமாத் செய்தியை முதல் பக்க பேனர் செய்தியாக வெளியிட்ட தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்கள், அது பற்றிய வரலாற்று அறிஞர்கள், மிதவாத சூஃபி அறிஞர்கள் கூறியதை எல்லாம் ஒரு மூலையில் சிறிய செய்தியாக வெளியிடுகிறது. தப்லீகி ஜமாத் போல பல நாடுகளிலிருந்து வந்து, பல நாள் ஒரே இடத்தில் இருந்த எந்த பெரிய கூட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்தாலும் இவ்வாறு அதிக கொரோனா பாஸிட்டிவ் கிடைக்கும் என அவர்கள் தர்க்கபூர்வமாக கத்துவதெல்லாம் முதல் பக்க பேனர் செய்தி அல்ல. மாறாக, ஒரு உடல்நல, சுகாதார பிரச்சனையை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை வைத்து சமரசம் (!!!) செய்து முடிப்பது முதல் பக்கத்தில் வெறும் நேரடி செய்தியாக இடம் பெறும்.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் உண்மைக்கு நாங்களே சொந்தக்காரர்கள், டிஜிட்டல் ஊடகங்கள் வெறுமனே பொய்களையும் அரை உண்மைகளையுமெ சொல்லுகின்றன என பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் அதில் முன்னணியில் உள்ளது. முழுத்த உறுதி செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே வழங்கப்படும் என தங்களது கிடைச் சொந்த ஊடகங்களான (cross media ownership) மூவிஸ் நவ் போன்ற சேனல்களில் அறநெறியற்று விளம்பரம் செய்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு தப்லீகி ஜமாத் (அதாவது முஸ்லிம்கள்) காரணம் என்ற சித்திரத்தை உருவாக்கிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களின் முதல் பக்க பேனர் செய்திகள் ஒரு பக்கம். உள்ளே அதே நாளிதழ்களின் தலையங்கத்தில் சுற்றி வளைத்து கடைசி பத்தியில் சொல்கிறார்கள்: டாக்டர்களுக்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் கிடைக்கவில்லை, பெருமளவில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அது தலையங்கம் அல்ல. விமர்சனம் அல்ல. மயிலிறகால் வறுடிக் கொடுக்கும் செல்லம் கொஞ்சல்கள். இந்த அழகில் அவர்கள் டிஜிட்டல் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பொய் மூட்டை என கிண்டல் செய்கிறார்கள். எனக்கு பொய் மூட்டைகளே தேவலாம் போலிருக்கிறது.

இன்றைய பின் மெய்யியல் உலகில் எனக்கு வெறும் செய்திகள் தேவையில்லை. அதன் பல்வேறு கோணங்களை வழங்கும் கட்டுரைகளே தேவை. அதை நான் thewire.in, theprint.in, scroll.in, quint.com போன்ற இணைய தளங்களில் காண்கிறேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் அல்ல. தில்லி, மும்பை போன்ற மையங்களில் தலைமையைக் கொண்ட ஊடகங்கள் மத்திய பி.ஜே.பி அரசின் ஊதுகுழலாக மாறி பல காலமாகிறது. தி இந்து போன்ற நாளிதழ்கள் அத்தகைய மைய நீரோட்டத்தில் விலகி இருப்பதாலும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்றவற்றின் சவால்களை சமாளிப்பதற்கு தாங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ஆட்சியமைப்பின் விமர்சகர்கள் (anti-establishment) என்ற பத்திரிகை நெறியை பின்பற்றுகிறார்களோ என தோன்றுகிறது. தினத் தந்தி போன்ற நாளிதழ்கள்கூட தில்லி, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஊடகங்களைவிட கூடுதல் இதழியல் தர்மத்துடன் இயங்குவது போல் தெரிகிறது. பி.ஜே.பியின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக மாறிவிட்ட மற்ற இரு நாளிதழ்கள் பற்றியோ, கிடைச் சொந்த ஊடக உரிமையைக் கொண்ட மற்றொரு நாளிதழ் பற்றியோ பேச ஒன்றுமில்லை.

tablighi-jamaat-controversy-corona-01-30

சமூக ஊடகங்களில் துல்லியமற்ற செய்திகளும் பொய்களும் பரவுகின்றன என்பது உண்மையே. ஆனால் அதே சமூக ஊடகங்களில் நமது சமூகத்தின் சிறந்த ஆளுமைகள், விஷயம் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய பல்வேறு கோணங்களிலான பார்வைகள் மூலம் நமக்கான தனித்துவமான பார்வையை உருவாக்கிக்கொள்வதுதான் இந்த டிஜிட்டல் யுகத்தில் தேவை. அந்த வகையில், மதவாத அரசின் ஊதுகுழலாக மாறி, ஒரு மதப் பிரிவினரை வில்லனாக மாற்ற நினைக்கும் மைய நீரோட்ட ஊடகங்களைவிட டிஜிட்டல் ஊடகங்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன். குறைந்தட்சம் பொய்களின் நதியில் நீந்தி, உண்மையைக் கண்டடைய முடியும் என்ற நம்பிக்கை டிஜிட்டல் ஊடகங்களில்தான் காண முடிகிறது.

 

https://uyirmmai.com/செய்திகள்/அரசியல்/முஸ்லிம்கள்தான்-கொரோனா/

Link to comment
Share on other sites

கூடிய வரைக்கும் தினமலரின் செய்திகள் கட்டுரைகள் என்பனவற்றை தவிர்ப்பது யாழுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எங்கே போயிற்று இதழியல் அறம்? – மாயா

நடந்தது தமிழ் ஆராய்ச்சி மகாநாடு இல்லை தப்லீகி ஜமாத்தின் மதவாத கூட்டத்தை வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் கலந்து கொண்ட  கூட்டத்தை தமிழக பத்திரிக்கைகள் டெல்லி மாநாட்டில் கலந்த கொண்டவர்கள் என்று உண்மையை மறைத்து எழுதுகிறார்கள். மாயா என்பவர் முஸ்லிம் மதவாத செயற்பாடுகளை மறைப்பது போதாது என்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லியில் கரோனா பாதிப்பு 293 ஆக உயா்வு: இருவா் பலி

 

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனாவால் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தில்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 293ஆக அதிகரித்தது. இதில் 182 போ் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்கள்.

இதனிடையே, நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா் என தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் சோ்த்து தில்லியில் இதுவரை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 8 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தொற்று சந்தேகத்தால் 31,307 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கக்கூடாத குற்றம்!  தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்

உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,  கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.  தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,  இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.  

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.  அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன. 

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?

 

https://www.dinamani.com/editorial/2020/apr/04/unforgivable-crime-3394253.html

 

Link to comment
Share on other sites

கொரோனா தொற்று உருவான நாளில் இருந்து தினமலர் பல புனைவு செய்திகளையும் பித்தலாட்ட காணோளிகளையும் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளது. அறியாத அப்பாவிகளான ஈழத்தமிழரும் அந்த காணோளிகளை  சமூக வலைத்தளங்களில்  வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

 இறைவனின் கோபம் தான் கொரோனாவுக்கு காரணம்  என்று  இந்துகளிடையே பய பீதியைக்  கிளப்பிவிட்டிள்ள தினமலர் அதேவேளை  முஸ்லீம்கள்  கடவுளை தொழுததால்  தான் கொரோனா பரவுவதாக பிரச்சாரம்  செய்து வருகிறது . 

பாமர  மக்களுக்கு கடவுள் பீதியையும் மூட நம்பிக்கைகளையும் சகட்டு மேனிக்கு பரப்பிவரும் பாப்பனர்கள் தாம்  அவற்றை நம்புவதில்லை  என பது பாமர மக்களுக்கு தெரிவதில்லை.  

Link to comment
Share on other sites

On 2/4/2020 at 20:42, கிருபன் said:

தினமலர் யாருடைய பத்திரிகை என்று உடையாருக்கு தெரியாதா?

ஊயிர்மை யாருடையது கிருபன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மலையான் said:

ஊயிர்மை யாருடையது கிருபன்?

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ். மாத இதழ்களில் பேராசிரியர் ராஜன் குறை போன்ற ஆளுமைகள் கட்டுரைகள் எழுதிவருகின்றார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளான தினமலர், துக்ளக் போன்று நடுநிலை தவறிய எழுத்துக்களை உயிர்மையில் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ். மாத இதழ்களில் பேராசிரியர் ராஜன் குறை போன்ற ஆளுமைகள் கட்டுரைகள் எழுதிவருகின்றார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளான தினமலர், துக்ளக் போன்று நடுநிலை தவறிய எழுத்துக்களை உயிர்மையில் காணவில்லை.

கிருபன் பத்திரிகை யாருடைது என்று ஆரய்த்துதான் செய்திகள் இணைக்க வேண்டுமா? 

இப்பதான் சிலது விளங்குது போட்டு கொடுப்பது யாரென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

கிருபன் பத்திரிகை யாருடைது என்று ஆரய்த்துதான் செய்திகள் இணைக்க வேண்டுமா? 

இப்பதான் சிலது விளங்குது போட்டு கொடுப்பது யாரென்று

Report button இருக்கும்போது அதையும் இடைக்கிடை பாவிக்கத்தானே வேண்டும்😄

யாழ் மட்டுக்கள்தான் ஆராய்ந்து இணைக்கவேணுமா இல்லையா என்று சொல்லலாம்!

நான் சில குறிப்பிட்ட தளங்களை மட்டும்தான் எனது favourite இல் வைத்திருக்கின்றேன். யாழில் செய்திகள் ஒட்டப்படாது வெறுமையாக இருக்கும்போது நான் படித்தவற்றில் சிலவற்றை ஒட்டுவேன். பலதை ஒட்டுவதேயில்லை! இந்தியத் தளங்களில் நான் அதிகம் இலக்கியம், சமூகம் சம்பந்தமான தளங்களைத்தான் படிப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

Report button இருக்கும்போது அதையும் இடைக்கிடை பாவிக்கத்தானே வேண்டும்😄

யாழ் மட்டுக்கள்தான் ஆராய்ந்து இணைக்கவேணுமா இல்லையா என்று சொல்லலாம்!

நான் சில குறிப்பிட்ட தளங்களை மட்டும்தான் எனது favourite இல் வைத்திருக்கின்றேன். யாழில் செய்திகள் ஒட்டப்படாது வெறுமையாக இருக்கும்போது நான் படித்தவற்றில் சிலவற்றை ஒட்டுவேன். பலதை ஒட்டுவதேயில்லை! இந்தியத் தளங்களில் நான் அதிகம் இலக்கியம், சமூகம் சம்பந்தமான தளங்களைத்தான் படிப்பதுண்டு.

🤣🤣 அடுத்த முறை பாவிப்பம்

Link to comment
Share on other sites

 

1 hour ago, கிருபன் said:

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ்

மற்ற பத்திரிகை ஆசிரியரிகளின் சாதி வரை தெரியுது,  ஆனால் உயிர்மை ஆசிரியரின் புனைப்பெயரை மட்டும்தான் சொல்ல வருகுது.......;-)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மலையான் said:

 

மற்ற பத்திரிகை ஆசிரியரிகளின் சாதி வரை தெரியுது,  ஆனால் உயிர்மை ஆசிரியரின் புனைப்பெயரை மட்டும்தான் சொல்ல வருகுது.......;-)

 

 

பார்ப்பனியம் என்பது சாதி இல்லை. சிந்தனைமுறை. 😄

பார்ப்பனர்கள் இல்லாதவர்களுக்கும் பார்ப்பனியச் சிந்தனை இருக்கும். அது ஈழத்தமிழரில் சிலரிடம் இருக்கு.

சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவற்றை பரப்பும் ஊடகங்களை நான் பொதுவாகப் படிப்பதில்லை. அதனை சாதி பார்ப்பதாக நீங்கள் நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

இப்பவும் மானுஷபுத்திரனின் பெயரை சொல்ல முடியல்ல பாருக்க.....

போலி நடுநிலைவாதிகள், செக்குலர்வாதிகளின் அமைப்பு அப்படி......😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மலையான் said:

இப்பவும் மானுஷபுத்திரனின் பெயரை சொல்ல முடியல்ல பாருக்க.....

போலி நடுநிலைவாதிகள், செக்குலர்வாதிகளின் அமைப்பு அப்படி......😉

மனுஷ்யபுத்திரனின் சொந்தப் பெயரை அறிந்து அவரின் சாதி என்னவென்று தெரிந்துதான் நடுநிலைமை என்றால் என்னவென்று அறியவேண்டும் என்பது, இங்கு யாழில் என்ன கருத்து வருகின்றது என்பதைப் பாராமல் யார் வைக்கின்றார்கள் என்பதும் ஒன்றுதான்.

நீங்கள் தொடர்ந்து கேட்பதால் (அதனால் உங்களுக்கு முன்னே தெரிந்திருக்கும் என்று ஊகிக்கிறேன்) தேடிப்பார்த்தேன். இப்போது சொல்வீர்கள் அவர் முஸ்லிம் என்பதால் முண்டுகொடுக்கின்றார் என்று. 

 

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

நீங்கள் தொடர்ந்து கேட்பதால் (அதனால் உங்களுக்கு முன்னே தெரிந்திருக்கும் என்று ஊகிக்கிறேன்) தேடிப்பார்த்தேன்.

இனி உயிர்மை வாசிக்கும் போது உங்களுக்கு வேறு "சிந்தனை முறை" தெரிந்தாலும் தெரியல்லாம்........😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மலையான் said:

இனி உயிர்மை வாசிக்கும் போது உங்களுக்கு வேறு "சிந்தனை முறை" தெரிந்தாலும் தெரியல்லாம்........😀😀

அந்தளவுக்கு எனது வாசிப்புத்திறன் தாழ்ந்துபோகாது😜

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

அந்தளவுக்கு எனது வாசிப்புத்திறன் தாழ்ந்துபோகாது

பார்ப்பனிய சிந்தனைகளை இலகுவாக கண்டுகொள்ள முடியும் உங்களால், மற்றய சிந்தனை முறைகளை கண்டுகொள்ள முடியேல்லயே. ...?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மலையான் said:

பார்ப்பனிய சிந்தனைகளை இலகுவாக கண்டுகொள்ள முடியும் உங்களால், மற்றய சிந்தனை முறைகளை கண்டுகொள்ள முடியேல்லயே. ...?😀

மற்றைய சிந்தனை முறைகளை நான் கண்டுகொள்ள முடியவில்லை என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு  உங்களுக்கு அறிவார்ந்த சிந்தனை இருப்பது பெருமையாக இருக்கின்றது நண்பரே! யாழில் உங்களுடன் உரையாடக் கிடைத்ததும் பெரும் பாக்கியம்தான்😃 டொட்.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

யாழில் உங்களுடன் உரையாடக் கிடைத்ததும் பெரும் பாக்கியம்தான்😃

நன்றி😀😀

உங்களின் நடுநிலமையை குழப்ப வேண்டாம்.

👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோனாவின் ஊடாகப் பரவும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?

கரோனா ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களிடையே இருக்கும் பிளவுகளை வலுப்படுத்துகிறது. இனமத வெறுப்புகளைப் பீறிடவைக்கிறது. வெவ்வேறு நாடுகளில் மக்கள் தமது நம்பிக்கைகளை முன்னிறுத்திக் குழுமிட மதம் முக்கியக் காரணியாக உள்ளது. கரோனா பரவிட இது உகந்த சூழலாகிறது. இக்காலத்தில், மனிதர்கள் சரீர விலகலைப் பேணாமல் அறிவியலை மறுத்து ஓரிடத்தில் குழும மதம் மட்டுமே காரணமில்லை எனினும் முக்கியக் காரணம் மதம். எல்லா மதங்களிலும் பெரும்பான்மையினர் அறிவியலைப் புறந்தள்ளுபவர்கள் அல்ல எனினும் புறந்தள்ளுவோருக்கு மத நம்பிக்கைகளே முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.

இந்தியாவில் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் முஸ்லிம்களை இலக்காக்க கரோனா பயன்படுகிறது. டெல்லி நிஜாமுதீன் கூடுகை கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை கரோனா பரவுவதற்கான அதீதச் சம்பவமாக உருப்பெற்றிருக்கிறது. இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான் எனினும் ‘கரோனா ஜிகாத்’ போன்ற விஷத்தொடர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இத்தனையும் நடந்த பின்னர் மசூதியில் கூடித் தொழுவோம் என அடம்பிடிக்கும் முஸ்லிம்களில் சிறுபான்மையினர் தமது சமூகத்துக்கும் துரோகம் செய்கின்றனர்.

யாரும் விதிவிலக்கல்ல

கரோனா ஒழிப்புக்காகச் செயல்படும் சுகாதார ஊழியர்களை முழு மனதோடு வரவேற்று ஒத்துழைப்பு வழங்காமல் தடையாக நிற்பவர்கள் தமது சமூகத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மக்கள் குழுமுவதைத் தடுக்கும் அரசின் சட்டத்துக்கு எந்த மதமும் கட்சியும் குழுவும் விதிவிலக்கு வேண்டாமல் முழுவதுமாகக் கடைப்பிடிப்பதே சரி. தனிப்பட்ட நம்பிக்கைகளை, சாதி மதச் சடங்குகளை, பொதுநலத்துக்கு ஆபத்தாக இல்லாத அளவில் மட்டுமே பேண முடியும்.

சட்டத்தையும் எச்சரிக்கைகளையும் மலேசிய முன்னனுபவத்தையும் புறக்கணித்து தப்லிஹி ஜமாத்தின் தலைமை கண்மூடித்தனமாக நடந்துகொண்டதால் ஒரு மதத்தினர் அனைவரையும் சந்தேகக் கண்களோடு பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. எந்த ஒன்றிலும் தூய்மைவாதத்தை நோக்கிய பயணமானது மூடநம்பிக்கைகளுக்கும் அடிப்படைவாதத்துக்கும் இட்டுச்செல்லும் என்பதற்கு இந்த ஜமாத் இன்னொரு உதாரணம்.

கரோனாவின் தாக்கம் சீனாவிலிருந்து தொடங்கியதால் சீனர்கள் மீது சந்தேகத்தையும் இன வெறுப்பையும் பலரும் வெளிப்படுத்தக் காரணமாக அமைந்தது. பல முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மையினர் வெறுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான அணுகுமுறை கரோனா வழி வெளிப்படுகிறது. சீன வைரஸ், ஷியா வைரஸ், ஜிகாதி வைரஸ் ஆகியன இதற்குச் சூட்டப்பட்டுள்ள வெறுப்புப் பெயர்களில் சில. பிற நாடுகளில் நடப்பவை நம் நாட்டினரின் இழிசெயல்பாடுகளை இயல்பானதாக்கிவிடாது. இவை மனிதரின் பொதுவான சிறுமை குணம் என்பதை உணர்ந்து அதில் இணையாமல் உயர் பண்புகளோடு செயல்படும் விழிப்புணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

அமெரிக்கா இழைத்திருக்கும் அநீதி

இப்படி நடக்கும் பற்பல சிறுமைகளுக்கு கிரீடமாக இருப்பது அமெரிக்காவில் ட்ரம்ப்பும் அவரை ஆதரிக்கும் இன வெறுப்பையும் மத வெறுப்பையும் உமிழும் தீவிர வலதுசாரி அரசியல் குழுக்களும் கிறிஸ்துவ அடிப்படைவாதக் குழுக்களும். அமெரிக்க அதிபர் கரோனா விஷயத்தில் அந்நாட்டுக்கு இழைத்திருக்கும் அநீதி அளவிட முடியாதது. ஆனால், இக்காலத்திலும் ஒரு விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுகிறார். இனவாதியான அவர் இன வெறுப்பைப் பரப்ப இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடவில்லை. கிருமிக்கு ‘சீனரின் வைரஸ்’ என்று பெயரிட்டு சீன இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்கியிருக்கிறார். இது ஏற்கெனவே கனன்றுகொண்டிருந்த சீன இன வெறுப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல பற்றி எரிகிறது.

இப்பிரச்சினையில் சீன அரசின் அணுகுமுறை விமர்சனத்துக்கு உரியதுதான். ஆனால், இதற்கு சீன இனத்தவரை எப்படிப் பழிக்க முடியும்? சீன நாட்டு மக்கள் வழி பிற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியிருந்தாலும் அது அறியாமல் நேர்ந்ததுதான். சீன இனத்தாரில் ஒரு பகுதியினர்தான் சீனாவில் வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் உலகின் பற்பல நாடுகளில் அந்தந்த தேச அடையாளங்களை ஏற்று வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும் பிரச்சார வலுவுள்ள அமெரிக்க அதிபர், அவருடைய வானரப் படையின் தாக்குதலில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இனவாத அரசியல் மட்டும் காரணம் அல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்குச் சவாலாக உருவாகிவரும் ஆசிய நாடொன்றின் வளர்ச்சி பற்றிய அச்சமும், அவர்கள் செல்வாக்கை மட்டுப்படுத்த கரோனாவைப் பயன்படுத்தும் குயுக்தியும்கூட இதில் உண்டு.

வெறுப்பரசியலை எதிர்கொள்ளும் வழி

இந்த இனவாத முன்னெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அன்ட்ரூ யாங் எனும் சீன இன அமெரிக்கர்; இவர்கள் ஆசிய அமெரிக்கர் என அழைக்கப்படுகின்றனர். இவர் ட்ரம்ப் படையின் இனவாதப் பிரச்சாரத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் வாழும் சீன வம்சாவளியினர் பிற அமெரிக்கர்களின் சந்தேகத்துக்கும் வெறுப்புக்கும் எப்படி ஆளாகியுள்ளனர் என்பதைப் பற்றி எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாக, இதை எதிர்கொள்வது எப்படி என்பதையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருடைய பார்வையின்படி இத்தகைய வெறுப்பரசியலுக்குப் பதிலடி கொடுப்பதில் பயனில்லை. சீன இன அமெரிக்கர்கள் கரோனா ஒழிப்பில் முன்னின்று பணியாற்றிதான் இந்த வெறுப்பை முறிக்க வேண்டும் என்கிறார். இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

வெறுப்பு அரசியலைத் திருப்பி அடிப்பதன் வழி எதிர்கொள்வதைக் காட்டிலும் இது பயனுள்ளது. நிதானமான சொற்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் வெறுப்பரசியலை எதிர்கொள்வதே ஆக்கபூர்வமானது. எதிர்த்தரப்பில் மன மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற ‘மூடநம்பிக்கை’ நம் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை. சக மனிதரில் நம்பிக்கை இழந்தால் முட்டி மோதி அழித்துக்கொள்வதைத் தவிர வேறு பாதை திறக்காது.

- கண்ணன், ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர்.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/548781-diversity-by-corona-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.