Jump to content

கலையாத கனவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                             கலையாத கனவு
                                                                             ----------------------------  
என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் முதல் அன்னதானம் வரை எங்கும் மறுபுறமாக ஒரே அமர்க்களம்.  அதேவேளை ஆங்காங்கே இருந்த பௌத்த ஆலயங்களிலும் பிரித்தோதும் ஓசையுமாக இலங்கைத்தீவில் சிறீலங்கா -  தமிழீழம் என்ற தேசங்களாகியதான அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவுக்குப்பின் தொடங்கிய இந்த ஆரவாரம் மெதுவாகப் பரவித் தமிழீழ தேசத்தில் மட்டுமல்ல மலையகம் உட்பட இலங்கையில் தமிழ்மொழிபேசுவோர் வாழும் கிராமங்கள்தோறும் கொண்டாட்டமாகவே இருந்தது. 
 
கொறோனாவால் திடீரென மாற்றம் கண்ட உலகஒழுங்கும் சிறீலங்காவின் அரச ஆட்சியாளர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தோரென பல்வேறு தரப்பினர் மீதான உறுதிப்படுத்தப்பட்ட இனப்படுகொலைத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் புலமையாளர்கள் சட்டவல்லுனர்கள் பல்கலைக் கழக குமுகாயம் சிங்கள முற்போக்குச் சக்திகள் தமிழகத்தின் பல்வேறுகட்சிகள் மனித உரிமை அமைப்புகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என ஒன்றிணைந்து உலக குமுகாயத்துக்குக் கொடுத்த அழுத்தம் கரணியமாக சிங்கள அரசதரப்பு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. அதில் உள்ளக சுயநிர்ணயமும் போர்க்குற்ற விசாரணையும் அல்லது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு என்று முன்வைத்த திட்டங்களை ஏலவே பெற்ற பட்டறிவின்பாற்பட்டு ஆய்வுசெய்த புலமையாளர்கள் முதலில் வெளியசுயநிர்ணய உரிமையை அடைந்து, அதன் மூலம்; அனைத்துலக குமுகாயத்தில் ஒரு அதிகாரமுள்ள தரப்பாகி இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனை வேண்டிக்கொடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட முடிவின் வெளிப்பாடாய் ஏற்பட்டுள்ள மாற்றமே  எங்கள் சனத்தின் இந்த அமர்க்களத்துக்குக் கரணியமா என்ற வினாவோடு, அமைதியாகப் பல களமுனைகளைக் கண்ட தமிழ்மாறன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இதேநாளில் புதுக்குடியிருப்பிலே பறிகொடுத்ததை எண்ணியவாறு, தன்னோடு களத்திலே நின்று ஒரு காலையும் கண்ணையும் இழந்தும் புலம்பெயர் தமிழர்கள் சிலரது ஆதரவோடு சுயதொழில் முயற்சியாக மீன் பண்ணையமைத்து தன்போன்ற பலரையும் இணைத்துச் செயற்படும் கதிராளனின் பண்ணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை, ஏய் டமில்மாற, ஏய் டமில்மாற என்ற குரலொலி கேட்டு நித்திரையிலிருந்து திடுக்குற்று எழுந்தவன் சட்டையை அணிந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாவின் கட்சி சிங்களவர்களது வாக்குகளால் வென்று ஆட்சியமைத்து ஒரு வாரம்தானேயாகிறது என்று சிந்தித்தவாறு குடிசையின் வாசலுக்குச் செல்லவும் படைப்புலனாய்வுக்குழு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  வந்தவன் கதவைத் திறந்து „என்ன?' என்று கேட்கின்றான்.  „எங்களுக்குக் கோத்தா மாத்தயாட்டையிருந்து உத்தரவு வந்திருக்கு! உங்களைப் போன்றவர்களை மீண்டும் கைது செய்யச் சொல்லி' என்று அழைத்துச் செல்கின்றனர். அவன் சிந்தனை தான் காலையிற் கண்ட கனவைச் சுற்றிச் சுழல்கிறது. கனவுமெய்ப்படும் என்று அவன் ஆழ்மனது சொல்கிறது. 


யாவும் கற்பனை


நட்புடன்
நொச்சி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவமான உரிமைகள் இல்லாத இனத்துக்கு கனவுகள்தான் மிஞ்சும்.....நல்ல கரு நொச்சி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

சமத்துவமான உரிமைகள் இல்லாத இனத்துக்கு கனவுகள்தான் மிஞ்சும்.....நல்ல கரு நொச்சி.....!  👍

சுவியவர்களுக்கு படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. 

 பச்சைப் புள்ளிகளை வழங்கிய கள உறவுகளான கவி அருணாசலம்  காவலூர் கண்மணி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கும் எனது நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

கனவு மெய்படுவதற்கான சூழலைக் கையாளும் தலைமையின்மையும்  ஒரு ஏமாற்றமே. கனவு மெய்ப்பட ஒவ்வொரு தமிழ் அரசியல் தலைமையும்  சரியாகச்  செயற்பட்டால் சாத்தியமே. 

 மெசொபொத்தேமியா சுமேரியர், தமிழ் சிறி, காவலூர் கண்மணி,  கவி அருணாசலம்   ஆகியோருக்குப் பச்சைப் புள்ளிகளை வழங்கி ஊக்ககப்படுஇதுகின்றமைக்கும் நன்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

க‌ட‌சி த‌மிழ‌ன் இருக்கும் வ‌ர‌ த‌மிழீழ‌த்துக்கான‌ போராட்ட‌ம் தொட‌ரும் என்று ஒரு முறை த‌லைவ‌ர் சொன்ன‌து நினைவு இருக்கு /

2009ம் ஆண்டு இழ‌க்க‌ கூடாத‌ எல்லாம் இழ‌ந்து விட்டோம் , அதுங்க‌ளை காக்க‌ த‌வ‌றிய‌ பாவிக‌ள் நாங்க‌ள் 😓/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது /

1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 /

அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் /

மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் மற்றும்  பையன் ஆகியோருக்குப் பச்சைப் புள்ளிகளை வழங்கி ஊக்ககப்படுத்துகின்றமைக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 00:02, பையன்26 said:

1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது /

1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 /

அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் /

மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/

 

 

 உண்மை!

களத்திலே நின்று ஈகம் புரிந்தவர்களை எமதினம் என்றும் மறவாதிருக்கும். 

பச்சைப் புள்ளி வழங்கி உற்சாகமூட்டும் புத்தனவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.