Jump to content

தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடவடிக்கைகள்

தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பினர். அவர்களுள் 615 பேரை கண்டுபிடித்துவிட்டோம். இன்னும 516 பேரை இன்னும் கண்டறிய முடியவில்லை. தமிழகத்திலிருந்து அந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களாகவே முன்வந்து தெரிவித்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். சமூகப் பரவலையும் தடுக்கலாம் என்றார்.

இந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானாவிலிருந்து 6 பேரும், ஜம்முவிலிருந்து ஒருவரும் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் டெல்லியில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 பேருக்கும், தெலுங்கானாவில் 6 பேருக்கும், அந்தமானில் 10 பேருக்கும் காஷ்மீரில் ஒருவருக்கும், தமிழகத்தில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மத கூட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 2100 வெளிநாட்டினர் கலந்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக விலகலை புறந்தள்ளிவிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இந்த 100 ஆண்டுகால பழமையான மசூதியில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் தங்கியுள்ளனர்.

எனினும் கடந்த 22-ஆம் தேதி பிரதமர் ஊரடங்கு உத்தரவை அறிவித்தவுடன் டெல்லியில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டதால் அந்த மசூதியில் தங்கியிருந்த 1,548 பேரை வெளியேற்றிவிட்டதாகவும் கொரோனா அறிகுறி இருந்த 441 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/50-coronavirus-cases-from-tamilnadu-participated-in-delhi-evet-381424.html

Link to comment
Share on other sites

 

வாணியம்பாடி அடுத்த பசீராபாத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற சுகாதார பணியாளர்களை சிறைப்பிடித்து ரகளை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணைக்காக இழுத்து சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேரை தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட சுகாதாரதுறை, சம்பந்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 150 பணியாளர்களை கொண்ட 75 இருவர் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி வாணியம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருப்பவர்களின் விவரம், வெளியூர் மற்றும் வெளினாடு சென்று வந்த விபரம், சளி, இருமல் காய்ச்சல், என பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.</p>
<p>இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து கணக்கெடுப்பு சீட்டை பறித்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டு களையும் பறித்துக் கொண்டு சிறை பிடித்ததாக கூறப்படுகின்றது.

தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்துக் கொண்டு வம்பு செய்ததால், தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டனர்.

அது மட்டுமல்லாமல் சுகாதார பணியாளர்களிடம் வம்பு செய்து விட்டு வீட்டுக்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த போது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு போலீசுடன் செல்ல மறுத்தார்.

போலீசார் முறையாக பேசி அழைத்தும் வராமல் அடம்பிடித்த அந்த இளைஞர், வீட்டில் இருந்தவர்களின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் அவரை இழுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் ஆவேசம் ஆனார்கள்..!

போலீஸ்காரர் ஒருவர், அடம்பிடித்த இளைஞரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்ததால், அந்த இளைஞர் வீதிக்கு வந்தார். அவரை அதிரடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை போலவே மேலும் ஒரு இளைஞரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சுகாதார பணியாளர்கள் தங்கள் நலனுக்காக வந்துள்ளார்கள் என்பது கூட தெரியாமல் எதிர்ப்பது, போராடுவது என அனைத்தும் கொரோனா பரவலை அதிகப்படுத்துமே தவிர கொரோனா வைரஸின், சமூக பரவலை தடுக்க உதவாது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், முன் எச்சரிக்கை கணக்கெடுப்பிற்கு தொடட்புடையவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறி வம்பு செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். 

 

https://www.polimernews.com/dnews/105722/ஒத்துழைக்க-மறுத்து-எல்லைமீறினால்-இது-தான்-நடக்கும்..!நம்ம-போலீஸ்-கெத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.