Jump to content

நிலவிற்கு மனிதன் ஏன் மீண்டும் செல்லவில்லை/Why Haven't humans Gone Back to the Moon?/science in tamil


Recommended Posts

ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ராங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார். மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர்களைப் பற்றிக் கொண்டது. விண்கலங்களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசாக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடும் போதும் ஒரு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. இது போன்ற சிக்கலான சமயங்களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடியாது. காரணம் இந்த உரையாடல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம். எனவே பேசுபவை அனைத்தும் அவதானமாகப் பேசப்பட வேண்டும். அத்துடன் இது போன்ற சிக்கலான சமயங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் அல்ட்ரின், ஹூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஹூஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது? (‘where was the S4B?)" என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்கமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது. அதற்கு "6000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறது" என்னும் பதில் ஹூஸ்டனிடமிருந்து கிடைத்தது. 'S4B' என்பது இவர்கள் பயணம் செய்த ராக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். 'அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான், தாங்கள் ஜன்னலினூடாகக் காண்கிறோமோ?' என்ற சந்தேகம் அல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காணவில்லை என்ற விடயம் கட்டுப்பாட்டு நிலையத்தின் பதிலால் மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது. காலின்ஸ், தொலைநோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால், உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் மூவரும் தூங்கச் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தில், அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். அல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தை பல பேட்டிகளில் தெளிவாக அல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும், தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார்.

 

 

     சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் அல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 'ஏலியன்கள் நிச்சயம் இருக்கின்றன' என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. அல்ட்ரினைப் போல வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் எப்போதும் பேசியதில்லை. ஆனால், தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங்கும் கண்டார் என்பதை அல்ட்ரின் உறுதிப்படுத்தினார். 'ஆம்ஸ்ட்ராங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண்டதாகவும், அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்' தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த 'மௌரிஸ் ஷட்டலின்' (Maurice Chatelain) என்பவர் 1979ம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.

 இத்துடன்  விடயம் முடிந்து விடவில்லை. 'அப்போலோ 14' விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான 'எட்கார் மிட்செல்' (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் 'சந்திர நடை' (Moon Walk) நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துக்கூறியிருக்கின்றார் ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சக்கட்டமாக 'அப்போலோ 17' சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன், ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள். முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன், "அங்கே பார்! அந்த ஒளி என்ன?" என்று அடுத்தவரிடம் அலறுவது படக்காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே 'அப்போலோ 17' இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம்தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஏன் மனிதன் மீண்டும் நிலவுக்கு செல்லவில்லை மிரளவைக்கும் உண்மைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 5:56 AM, selfywalking said:

ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.

நிலவிற்கு சென்று வந்த பலரும்...   ஏலியன்கள் இருப்பதை கண்ட போது,
நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.