Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு வயதில் சில நிகழ்வுகள் நம் மூளையில் பதிந்துவிட்டால் மரணிக்கும் வரை அந்த உணர்வுகள் மாளாது.

நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்பொழுது சில ஆசிரியர், ஆசிரியைகளைக் கண்டால் ரொம்ப பயமும் மரியாதையும் தோன்றும்.

நான் பிறந்து வளர்ந்த கிராமம் சிறியது.

ஆரம்ப பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் குறிப்பிட்ட டீச்சர் வசித்து வந்த வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். அந்த டீச்சரின் கண்டிப்பும், கற்பித்தலும் இன்றுவரை என் மனதில் பசுமையாக உள்ளது. அவரை கண்டால் பயமுண்டு. அவர் சொல்லிக்கொடுத்த விதம் ஆழமாக பதிந்ததால்தான் பின்னாளில் பொறியாளராக முடிந்தது.

இப்பொழுதும் முதிய வயதில் நான் பிறந்த கிராமத்துக்கு செல்லும்போது அவர் வசித்த வீட்டை கடக்கும்பொழுது என்னையுமறியாமல் கால்கள் தயங்கும். மனசும் கொஞ்சம் பதற்றத்தில் சலனப்படும்.

அவர் இன்னமும் வாழ்கிறாரா..?  என தெரியாது. இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த டீச்சரம்மாவின் ஞாபகமே வரும்.

 

 

Link to comment
Share on other sites

சங்கீத ரசனை பெரிதும் இல்லாத எனது பதின்ம வயதுகளின் இறுதியில் வெளிவந்த பாடல் இது. இதைப் பாடிய நித்யஶ்ரீ மகாதேவனின் கணீர்க் குரலே என்னைக் கர்நாடக சங்கீதம் பால் முதன்முதலில் ஈர்த்தது. 

இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் நானாக விரும்பிச் சென்ற முதல் கர்நாடக சங்கீதக் கச்சேரி நினைவுக்கு வருகிறது. நித்தியஶ்ரீ மகாதேவன் அவர்களின் கச்சேரி அது. 2002 ஆம் ஆண்டென நினைக்கிறேன். யாழில் அவரது முதற் கச்சேரியும் அதுவே. சரஸ்வதியே நேரில் வந்து பாடுவது போல உணர்ந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 03:27, Maruthankerny said:

 

இந்த Mere Sapno Ki Rani.. பாடல் 1969 ஆண்டு வெளிவந்த Aradhana பட பாடல்..

எனது தந்தைக்கு பிடித்தமான படம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

உண்மைதான் சிறித்தம்பி.நானும் களவாய் படம் பாத்து அடிவாங்கினது கொஞ்சம் இல்லை.
ஒருக்கால் மாமியார் வீடு படம் பார்க்க வின்சர் தியேட்டருக்கு போனனான். அப்ப ஊர் பொடியன் என்னை கண்டுட்டான்.அப்பவும் நான் அவனிட்டை கெஞ்சி மண்டாடி வீட்டை சொல்லிப்போடாதை எண்டு சொல்லி தேத்தண்ணியும் கடலை வடையும் வாங்கிக்குடுத்தனான்.
 அப்பிடியிருந்தும் அவன் முதல் வேலையாய் செய்த வேலை வீட்டை போய் அண்ணரிட்டை மாமியர்வீட்டுக்கு நான் போனதை சொன்னது தான்.அதுக்கு பிறகு பூவரசம் கேட்டியாலை விழுந்த பூசை இருக்கே எழுத வார்த்தைகள் இல்லை.நான் குளறினது அஞ்சாறு வீடு தள்ளி கேட்டிருக்கும். இந்தபாட்டு இல்லாட்டி மாமியார்வீடு  எண்ட சொல்லை கேட்டால் அந்த நன்றி கெட்ட நாயின்ரை ஞாபகம் தான் வரும்.தேத்தண்ணியும் வடையும் வாங்கிக்குடுத்தும் நன்றி விசுவாசம் இல்லாத பன்னாடைய நினைச்சால்...🤬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பாடலைக்கேட்கும் பொழுதெல்லாம்.. எனது தந்தை கூறிய சிரிக்கும் சம்பவமே நினைவிற்கு வரும்.. இப்பொழுதும் கூறுவார்..

ஆரம்பத்தில் எனது தந்தை வேலைபார்த்து வந்தது மட்டக்களப்பில், வாரக்கடைசியில் அல்லது மாதக்கடைசியில்தான் யாழ்ப்பாணம் வருவார்.. அப்படி வரும் சமயங்களில் முன்பு இருவரும் பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு திரையரங்குகளிற்கு படம் பார்க்க போவார்கள்..

என்ன படங்களுக்கு, எத்தனை படங்களுக்கு என்பதெல்லாம் அதிகம் நினைவில் இல்லை.. ஆனால் நிறம் மாறாத பூக்கள் வந்த சமயம் எனக்கு 3வயது.. வழமைபோல என்னையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்க போனார்கள், படம் முடிந்து வெளியே வந்தபோது என்னை காணவில்லையாம்..😱..நான் அப்பா என நினைத்து இன்னொருவரின் கையைபிடித்து கொண்டு வெளியே வந்துவிட்டேனாம்.. நல்ல காலம், நான் அதிக தூரம் போயிருக்கவில்லை என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்களாம்.. 

இப்பொழுதும் இதைகூறி சிரிப்பார்... அந்த நேரத்தில் இப்படி சிரித்திருக்கமாட்டார்கள்..

இப்பொழுது அம்மாவும் காலமாகிவிட்டதால் பல பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அலாதிப்பிரியம்.. 

Link to comment
Share on other sites

கோவில்கள் நிறைந்த நான் பிறந்த ஊரில் அதிகாலை கோவில் மணி ஓசையே நமக்கு அலாரம் போலாகும். அதிகாலை 4, 4:30, 5:00, 5:30 என மணியோசை ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து ஒலிக்கும். அப்போது கிடைக்கும் தெய்வீக உணர்வுநிலை மீண்டும் ஊருக்குச் சென்று அனுபவித்தால் தான் கிடைக்குமோ என்னவோ!

இந்தப் பாடல் வரிகளும், மணியோசை போன்ற கணீர் குரலை உடைய சீர்காழி கோவிந்தராஜனின் குரலும், இசையும் என்னை என்னூரின் அதிகாலை வேளைக்குக் கொண்டு செல்கின்றன. கூடவே வருவன கள்ளம்கபடமற்ற சிறுவயது நினைவுகளும், அப்பருவத்தின் கவலைகளறியா மனநிலையும் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் பாடலை கேட்டவுடன்.... வீட்டிற்கு தெரியாமல், 
களவாய்  படம் பார்க்க போய்.... அம்பிட்டு, அடி  வாங்கின  நினைவு வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் வன்னியர் எமது நாட்டில் இப்படி எதுவுமில்லை.

ஏன் ஈழத்தில் எழுத்து எழுதுதல் முடிந்த மறுநாளே திருமணம் வைத்துவிடுவார்களா..? 😉

திருமணம் நிச்சயமாகி காத்திருந்த 3 மாதங்களில், நானும் ஆர்வ மிகுதியில், வருங்கால மனைவிக்கு போன் போட்டும், ரயிலேறி நேரில் சென்று பார்க்க முயற்சித்தும் ஒன்றும் கைகூடவில்லை. இன்றும் புன்முறுவலுடன் இரைமீட்கும் இனிமையான நினைவுகள் அவை..

நட்சத்திர பொருத்தங்களின்படி கிடைத்த முகூர்த்த நாளால் காத்திருப்பு மூன்று மாதங்களாயிற்று.

மன்னிக்கவும் வன்னியர்.
நான் சாந்தி மூகூர்த்தத்தைக் குறிப்பிட்டேன்.

2 hours ago, ராசவன்னியன் said:

நகரங்களில் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் கிராமங்களில் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருந்த காலம்

நகரக் காதலை விட கிராமக் காதல் மர்மப்படம் மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

காலத்தால் அழி க்க முடியாத இசையும் வானொலி யை

காதலித்த நாட்களும் மீண்டும் வருமா ?

தொலைத்தோமா ? இழந்தோமா? பிரித்தறிய முடியாத விதியா?

Link to comment
Share on other sites

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் யாழில் எனது ஊரினதும், அயலூர்களினதும் பசுமையான தோட்டவெளிகளும், வீதிகளில் இயல்பாகக் காணும் கால்நடைகளும், பறவையினங்களும், விவசாயக் குடும்பங்களும் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக பிந்தைய 80களும், 90களுமான சமூகவலைத் தளங்களுக்கும் முன்னரான எளிமையான ஆனால் நிம்மதியான காலப்பகுதி அது.

"கொண்டாட்டம், இங்கு தென்றலுக்கும் தினம் தினம் தேரோட்டம்! அட பட்டணத்தில் இல்லை இந்த காற்றோட்டம்! அந்த நந்தவன பூவே
நாற்காலி; அதில் அமர்வேன் வண்டாட்டம்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.15 இல் இருந்து 8 மணிவரை பொங்கும் பூம் புனல் நேரத்தில் நேயர் விருப்பம் எத்தனையும் முத்துக்கள்.தேநீர்கடைகளில் பெரிய சத்தத்துடன் போட்டிருப்பார்கள்.சில பாடல்கள் வரும் போது அந்த இடங்களில் மெதுவாக சைக்கிள் ஓட்டிய காலங்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேலுமா....... இப்ப அவர் தெளிந்து இருப்பார் வன்னியன்.......!   😁

Vivek on Make a GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

 

டூரிங் டாக்கீஸின் (Touring Talkies) அமைப்புகள்..

53433064.jpg  

m_id_381242_maharashtra_touring_talkies.jpg?w=660

53433066.jpg

GaneshThiraiArangam_650_new2.jpg

GaneshThiraiArangam_750Main.jpg?itok=YGEOOAcx

1_16a0822e7e2.1878989_3436951993_16a0822e7e2_medium.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, இப்படித்தான் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து ரசித்தேன்..!

அது ஒரு கனாக் காலம், இனி திரும்ப வராது..🙄

boy.jpg

 

டூரிங் டாக்கீஸ் (Touring Talkies) என்பது ஊருக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளுக்கு அப்பால், காலி நிலத்தில் மூங்கில் கம்புகளும், பனைமர தூண்களும், தென்னங் கீற்று கிடுகுகளின் அடுக்குகளால் வேயப்பட்டு உருவாக்கப்படும் கொட்டகையாகும். இக்கொட்டகையை சுற்றி தெப்பை தட்டிகளால் வேலி அமைத்திருப்பார்கள்.

உள்ளே உட்கார்ந்து படம் பார்க்க,

'தரை டிக்கட்' என்பது ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்தது 'பெஞ்ச் டிக்கட்' என்பது மரத்தால் ஆன நீளமான இருக்கைகள் உள்ள பகுதியாகும்.

அடுத்தது 'சேர் டிக்கட்' என்பது முதல் வகுப்பு மாதிரி, உயரமாக மேடை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

கொட்டகை அமைக்கப்பட்ட பின், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் வந்து சோதனை செய்துவிட்டு, இயங்க அனுமதி அளிப்பார்கள்

இதற்கு 'டூரிங் டாக்கீஸ்' என பெயர் வரக் காரணம், இந்த கொட்டகை அமைப்பிற்கு ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளிக்கும். அடுத்து இயங்க வேண்டுமெனில், கொட்டகையை முற்றிலும் பிரித்துவிட்டு புது மூங்கில், கிடுகுகளைக்கொண்டு வேய்ந்து அனுமதிக்கு மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும்.

மழையிலும், வெயிலிலும் தொடர்ந்து இயங்குவதால் இதன் ஆயுட்காலம் கம்மி. மேலும் எளிதில் தீ பிடித்து பலத்த உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. ஆகவே இவற்றை ஊருக்கு வெளியே தள்ளி திறந்த வெளியில் தான் அமைக்க அரசு அனுமதி அளிக்கும்.

பின்னர் காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சி பெற்று, மூங்கில், கிடுகளுக்கு பதில், நீளமான சவுக்கு கட்டைகள், மற்றும் மெல்லிய ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைக் கொண்டு 'டூரிங் டாக்கீஸ்'கள் அமைக்கப்பட்டன.

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

Omaha-Theater.jpg

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

படத்தை திரையிடும் தொழில்நுட்பம் ஒரே மாதிரியானதாக தெரிகிறதே 
அல்லது ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

Record Broken Record GIF - Record BrokenRecord Vinyl GIFs

Vadivelu Introduction Comedy Scene || Ayya Movie || Vaathiyar ...

Bird

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருதடோய்....😂

பூனைக்குட்டியைக் கட்டி வளர்பதில்லை, அது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் ஒழிந்துதான் இருக்கிறது. வெளிவரும்போது காண்போர் முகத்தையும் மலர்ந்து குதூகலிக்கவும் வைக்கிறது. இதற்குச் சாட்சி எங்கள் சாமி குமாரசாமி. 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்தமிழரின்  1977 க்கு பின்னரான அரசியல் வாழ்க்கையில் முக்கிய புள்ளிகளான இந்த மூவரை தவிர வேறு எவரும் இப்போது உயிரோடு இல்லை.77ம் ஆண்டு தேர்தல் காலங்களில் இவர்களது வீர வசனங்களும் பல திரைப்பட பாடல்களும் வெற்றிக்கனிக்கு முக்கிய இடம் வகித்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குறிப்பிட்ட சினிமா பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது.

anantha-sankari 

mavai-senathirajah.jpg

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam


எனக்கு இப்போதும் இந்த மூவரின் செய்திகள் எங்கேயாவது தென்பட்டால் இந்தப் பாடல்கள் காதுக்குள் கரடுமுரடாய் ஒலிக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஒருதலை காதலியின் நினைவும் ஊர் கோவிலும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
இந்தப்படமும் பாடலும் வந்த புதிது .....அந்த நேரங்களில் கசூரினா பீச், மற்றும் கடற்கோட்டை போன்ற இடங்கள் எல்லாம் சுற்றித்திரிந்த காலங்கள் என்றும் மறக்க முடியாதவை.....!   😍
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 16:46, பிரபா சிதம்பரநாதன் said:

 

இந்த பாடலைக்கேட்கும் பொழுதெல்லாம்.. எனது தந்தை கூறிய சிரிக்கும் சம்பவமே நினைவிற்கு வரும்.. இப்பொழுதும் கூறுவார்..

ஆரம்பத்தில் எனது தந்தை வேலைபார்த்து வந்தது மட்டக்களப்பில், வாரக்கடைசியில் அல்லது மாதக்கடைசியில்தான் யாழ்ப்பாணம் வருவார்.. அப்படி வரும் சமயங்களில் முன்பு இருவரும் பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு திரையரங்குகளிற்கு படம் பார்க்க போவார்கள்..

என்ன படங்களுக்கு, எத்தனை படங்களுக்கு என்பதெல்லாம் அதிகம் நினைவில் இல்லை.. ஆனால் நிறம் மாறாத பூக்கள் வந்த சமயம் எனக்கு 3வயது.. வழமைபோல என்னையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்க போனார்கள், படம் முடிந்து வெளியே வந்தபோது என்னை காணவில்லையாம்..😱..நான் அப்பா என நினைத்து இன்னொருவரின் கையைபிடித்து கொண்டு வெளியே வந்துவிட்டேனாம்.. நல்ல காலம், நான் அதிக தூரம் போயிருக்கவில்லை என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்களாம்.. 

இப்பொழுதும் இதைகூறி சிரிப்பார்... அந்த நேரத்தில் இப்படி சிரித்திருக்கமாட்டார்கள்..

இப்பொழுது அம்மாவும் காலமாகிவிட்டதால் பல பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அலாதிப்பிரியம்.. 

அட!! பாடலைக்காணவில்லை.. நிறம் மாறாத பூக்கள் படம் பார்க்க திரையரங்குற்கு சென்றபோதுதான் இப்படி நடந்தது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

ஊசியை மாத்துங்க சார்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

பரிமளம் அண்ணிக்காக கேட்ட பாட்டுப் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

 

டூரிங் டாக்கீஸின் (Touring Talkies) அமைப்புகள்..

53433064.jpg  

m_id_381242_maharashtra_touring_talkies.jpg?w=660

53433066.jpg

GaneshThiraiArangam_650_new2.jpg

GaneshThiraiArangam_750Main.jpg?itok=YGEOOAcx

1_16a0822e7e2.1878989_3436951993_16a0822e7e2_medium.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது, இப்படித்தான் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து ரசித்தேன்..!

அது ஒரு கனாக் காலம், இனி திரும்ப வராது..🙄

boy.jpg

 

டூரிங் டாக்கீஸ் (Touring Talkies) என்பது ஊருக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளுக்கு அப்பால், காலி நிலத்தில் மூங்கில் கம்புகளும், பனைமர தூண்களும், தென்னங் கீற்று கிடுகுகளின் அடுக்குகளால் வேயப்பட்டு உருவாக்கப்படும் கொட்டகையாகும். இக்கொட்டகையை சுற்றி தெப்பை தட்டிகளால் வேலி அமைத்திருப்பார்கள்.

உள்ளே உட்கார்ந்து படம் பார்க்க,

'தரை டிக்கட்' என்பது ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள்.

அடுத்தது 'பெஞ்ச் டிக்கட்' என்பது மரத்தால் ஆன நீளமான இருக்கைகள் உள்ள பகுதியாகும்.

அடுத்தது 'சேர் டிக்கட்' என்பது முதல் வகுப்பு மாதிரி, உயரமாக மேடை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

கொட்டகை அமைக்கப்பட்ட பின், வருவாய் துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் வந்து சோதனை செய்துவிட்டு, இயங்க அனுமதி அளிப்பார்கள்

இதற்கு 'டூரிங் டாக்கீஸ்' என பெயர் வரக் காரணம், இந்த கொட்டகை அமைப்பிற்கு ஆயுட்காலம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளிக்கும். அடுத்து இயங்க வேண்டுமெனில், கொட்டகையை முற்றிலும் பிரித்துவிட்டு புது மூங்கில், கிடுகுகளைக்கொண்டு வேய்ந்து அனுமதிக்கு மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டும்.

மழையிலும், வெயிலிலும் தொடர்ந்து இயங்குவதால் இதன் ஆயுட்காலம் கம்மி. மேலும் எளிதில் தீ பிடித்து பலத்த உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. ஆகவே இவற்றை ஊருக்கு வெளியே தள்ளி திறந்த வெளியில் தான் அமைக்க அரசு அனுமதி அளிக்கும்.

பின்னர் காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சி பெற்று, மூங்கில், கிடுகளுக்கு பதில், நீளமான சவுக்கு கட்டைகள், மற்றும் மெல்லிய ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைக் கொண்டு 'டூரிங் டாக்கீஸ்'கள் அமைக்கப்பட்டன.

நிலையில்லாமல், அடிக்கடி இடம் விட்டு இடம் மாறுவதாலும், முற்றிலும் பிரிக்கப்பட்டு திரும்ப கொட்டகை அமைக்கப்படுவதாலும் இவற்றுக்கு "டூரிங் டாக்கீஸ்" (Touring Talkies) என பெயர் வந்தது.

 

நிலையான கட்டிடங்களில் இயங்கும் திரையரங்குகளின் அமைப்பே வேறு.

Omaha-Theater.jpg

தெளிவுபடுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..! 😎

நன்றி.

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 
இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நான் முதன் முதலாக பார்த்த கிந்திப்படம். அதுவும் கள்ள விடியோ தியேட்டரில்....

மட்டக்களப்பு கல்லடிக்கு அருகாமையில் ஒரு இடத்தில் இரவு ஒன்பது மணிக்கு கிந்திப்படம் போடுவதாக அறிந்தோம். நானும் மூன்று நண்பர்களும் இரண்டு சைக்கிளில் படம் பார்க்கப் போவதாக முடிவு செய்திருந்தோம். போவதற்கு முன் ஹாஜியார் கடையில் கொத்துரொட்டி சாப்பிடலாம் என ஒரு நண்பன் ஐடியா சொன்னான். ஆனால் எம்மிடம் இருக்கும் காசை கூட்டி கணக்கு பார்த்தால் காசு போதாமல் இருந்தது. எனக்கு தெரிந்த ஒராளிடம் இருபது ரூபாய் தண்டிக்கொண்டு (இன்னும் திருப்பிக்கொடுக்கவில்லை) வாய்க்கு ருசியாய் கொத்துரொட்டி சாப்பிட்டு விட்டு மிச்சக்காசுக்கு இரண்டு பிரிஸ்டல் வாங்கி ஆளுக்கு50/50 யாய் இழுத்துக்கொண்டு கல்லடி நோக்கி சைக்கிளில் கடுகதி வேகத்தில் போனோம். கல்லடி போனதும் படம் போடும் வீடு தெரியவில்லை.நேரமோ இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது. ஒழுங்கையால் செல்பவர்களை கேட்கவும் பயமாக இருந்தது.ஏனெண்டால் கள்ள வீடியோ எல்லோ??? ஏதோ நல்ல காலத்துக்கு எங்களை மாதிரி இரண்டு பேர் வர அவர்களுடன் சேர்ந்த்து படம் போடும் வீட்டை கண்டு பிடித்து படமும் பார்த்து விட்டோம்.

படம் முடிய இரவு  ஒரு மணியாகிவிட்டது.அந்த மெல்லிய குளிருக்கு தம் அடிக்கோணும் போல இருந்தாலும் கடைகள் எல்லாம் பூட்டு.....சைக்கிளை மிதித்த வண்ணம்  பார்த்த படத்தின் காட்சிகளை அசை போட்டுக்கொண்டு கல்லடி பாலத்துக்கு கிட்ட வந்த எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி!!!!!!
டேய் மச்சான் ஆமி ட்ரக் நிக்குதடா..... எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்பொச்சுது.கொஞ்ச தூரத்திலையே சைக்கிளாலை இறங்கி  சைக்கிளை  உருட்டிக்கொண்டே அமைதியாக போனோம்.எங்கை போட்டு வாறியள் எண்டு கேட்டால் என்ன பதிலை சொல்லுறதெண்டு எனக்கு யோசினை.
அதோடை கல்லடி பாலம் எண்டால் எனக்கு எப்பவும் கொஞ்ச நடுக்கம் இருக்கும்.ஆமி ட்ரக்குக்கு கிட்ட வந்தவுடனை இரண்டு ஆமி கிட்ட வந்தாங்கள்.அவங்கள் கிட்ட வந்தவுடனையே எங்களோடை வந்த ஒண்டு எல்லாத்தையும் சிங்களத்திலை உளறிக்கொட்டீட்டுது.பிறகென்ன அடுத்த நாள் காலமை 10 மணிக்குத்தான் வீடு வந்து சேர்ந்தம்.

அந்த தர்ம அடியை இப்ப நினைச்சாலும் இந்தப் பாட்டுத்தான் கண்ணுக்கை நிற்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.