Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

படத்தை திரையிடும் தொழில்நுட்பம் ஒரே மாதிரியானதாக தெரிகிறதே 
அல்லது ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

1950 முதல் 70 களில் வரை திரையில் காண்பிக்கும் ஒளிப்பட கருவிகளில் "கார்பன் ஆர்க் (Carbon Arc)" முறையில் மின்சாரம் மூலமாக குச்சிகளை எரித்து அதில் வெளிப்படும் வெள்ளை ஒளியில் ஃபிலிம் சுருளை ஓடவிட்டு படம் காண்பித்தார்கள்.

 

7eIaiedj0jyWScpgqDLk6VYuOXUQ7pDl92L3X0XlJxaI55L8ddQGLEuDfhTwCRLQU9iBa5iPPwVmQ6HbYqxdic3NdrtHH0XmMP1SBMxF  029_USA_Endres_Carbon%2520arc_profile.jpg

 

s-l400.jpg       VictorianCollections-large.jpg

 

இப்பொழுது லேசர் ஒளியில் 4K துல்லியத்தில் திரையில் காண்பிக்கும் டிஜிட்டல் ஒளிப்பட கருவிகள் சாதாரணமாக கிடைக்கின்றன.

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

அனுபவத்தை, தெரிந்தவற்றை பகிர்ந்தேன்..! உங்கள் கருத்திற்கு நன்றி.

சாராய போத்தலா..? கு.சா. அவர்களின் கூட்டாளியா..? (புதியவரா..? முதியவரா..?) :shocked::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

 

 

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்ரா பௌர்ணமி என்றால் கூடுதலான எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
ஊரில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் விசேடமாக சிவாஜிகணேசன் நடித்த சித்ரா பௌர்ணமி திரைப்படம் போடுவார்கள். அதை எத்தனை தடவை பார்த்தாலும்   திருப்பியும் அதே தினத்தில் அதே திரைப்படத்தை பார்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம். நானும் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.
இன்று சித்திரை பூரணை. இன்றைய நாளில் அந்த ஞாபகங்களும்......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஊரில் இருக்கும் போது சர்வசாரணமாகவே வாழ்ந்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மத வெறுப்புகள் ஏதுமின்றி அவரவர் மதம் சார்ந்து வாழ்ந்திருப்பார்கள். தமது மத பண்டிகைகளை வரவேற்று சந்தோசத்துடன் கொண்டாடியிருப்பார்கள். நான் ஊரில் இருந்த வரைக்கும் மத துவேசிகளை நான் காணவேயில்லை. 
அதே போல் இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 
இப்போதும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்கும் போது அந்த முஸ்லீம் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்வில் சீட்டு பிடிப்பவர்களையும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் பார்க்கும் போதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல், பணத்தோட்டம் படத்தில் வரும்,

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்

வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்

மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்

மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை குறிப்பாக யாழ் கோட்டை சண்டை காலத்தில் அசிட் விட்ட கார் பற்றரியில் (மின்சாரத்துக்கு முழு தடை சொறீலங்கா அரசால் போடப்பட்டிருந்ததோடு.. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி அதனை இயக்க முடியாமலும் ஆக்கியது. தனது சொந்த அரச திணைக்களம் மீதே அது தமிழர்கள் பகுதியில் இருக்கிறது என்பதற்காக குண்டு வீசியது இன்று சில தமிழர்கள் புகழ்ந்து தள்ளும் சிங்கள அரசு அன்று.

Sony Radio Twin Cassette Player CFS-W404L Boombox Retro ...  

இப்படி ஒரு பிளேயரில் போட்டு கேட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று வானில் பெரும் இரைச்சலோடு தாழப் பதிந்து வந்து எங்கள் வீட்டுக்கு அருகில் இரண்டு குண்டுகள் வீசியது சியாமா செட்டி விமானங்கள். SF260 Libya (cropped).jpg

அதில் ஒன்று வெறும் வளவென்றிலும்.. இன்னொன்று ஒரு வீட்டின் பின்புறமும் வீழ்ந்து வெடித்தன. 

இப்போதும்.. இந்தப் பாடலைக் கேட்கும்... போது அந்த விமான இரைச்சலும்.. அது தொடர்ந்து தந்த வெடிப்பும் அதிர்வுகளும்.. மனதோடு இயங்கக் காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நவரத்திரி பூசைக்கு நாங்கள் சிறு வயதில் நாடகம் எழுதி நடிப்பது வழக்கம். ஏதிர்பார்த்தேன் இளங்கிளியை என்னும் பாடலுக்கு நானும் எனது நண்பனும் (பொண் வேடம்) ஆட வேண்டும்.  ஒரு கட்டத்தில் அவனை தூக்கி ஆட வேண்டும், அவனோ என்னைவிட பாரம் கூட, இந்த பாட்டை கேட்கும் பொழுது , ஊர் கூடி சந்தோஷமாக கொண்டாடிய தினங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


என்னதான் நடக்கும் நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே........


யாரை நம்பி நான் பிறேந்தேன் போங்கடா போங்க.....

இந்த இருபாடல்களை கேட்கும் பொழுது என் அப்பாவின் நினைவுகள் தான் வரும், நானும் இப்படால்களை அடிக்கடி வாயில் முணுமுணுப்பதுட்டு.

அப்பா தோட்ட வேலைகள் முடித்தபின் கள்ளடித்துவிட்டுதான் வருவார், அம்மா என்னைதான் அப்பாவுடன் வயல் கிணத்திற்கு அனுப்புவா குளிக்க, நான் கிணத்தில் அள்ளி கொடுக்க அப்பா வாங்கி குளிப்பார், அப்ப இந்த இருப்பாடல்களும் தான் அவர் அதிகம் பாடுவதுண்டு.. அப்பா இல்லாவிட்டலும் இப்பவும் அந்த நினைவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தாத்தா /
ந‌ல்ல‌ திரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thangame.jpg

பாலகனாக இருக்கும்பொழுது என் ஐயா, திரையில் எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நகைச்சுவை காட்சி.

இந்த பாடலை பார்த்தவுடன், கிராமத்தில் குயவர்கள் இருக்கும் தெருப் பக்கம் செல்லும்போதெல்லாம் குறுகுறுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தெருவில் அடுக்கி வைத்திருக்கும் சுட்ட மண்கலங்களை தட்டிப் பார்த்து ஒலியைக் கேட்பதுண்டு.. அதில் ஒரு சந்தோசம்..!

வீட்டுக் குயவர், உள்ளிருந்து "யார்ரா அது..?" என்ற அதட்டலைக் கேட்டவுடன் ஒரே ஓட்டம் தான்..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நினைக்க....அதெல்லாம் ஒரு கனாக்காலம்......

60 Years of Kamalism: 10 signature Kamal Haasan films that deserved more  love from the audience at t- Cinema express

சிறு வயதுக்காலம் ஜில்லென்ற காலம்.....☃️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு காலத்திலை தென்னிந்திய திரைப்பட பாட்டுக்களும் கிந்தி பாடல்களும் இலங்கை வானொலியை அடிமையாக்கி வைத்திருந்த காலத்தில் பொப்பிசை பாடல்கள் எல்லோரையும் மிரள வைத்தது.
எல்லா தேனீர்க்கடைகளிலும் எல்லா கொண்டாட்டங்களிலும் பொப்பிசை பாடல்கள் அதிகாரம் பண்ணியது.துரையப்பா விளையாட்டரங்கில் பொப்பிசை நிகழ்ச்சி பிரமாண்டம்மாக நடந்தது. ஏ.ஈ மனோகரன்,அமுதன் அண்ணாமலை  உட்பட பல பிரபல்யங்கள் பங்குபற்றினர்.அதை இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி......

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 11:29, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

ஓய் மரமண்டை ஓணாண்டி, 😉

சும்மா போறதில்லை. புலவர்களுக்கு சந்தோசம் வந்தால் கவிவரிகள் வரவேணுமே.

டூரிங் டாக்கீஸ் பத்தியோ, அருமையான விளக்கம் தந்த நம்ம வன்னியர் பத்தி இரண்டு வரி கவிதைல சொல்லக்கூடாதா? (பிஸி எண்டால் சுவியர் உதவி கேளுங்கோ) 😀

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

...

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

உடுப்புமாத்திற அறை யன்னலில் நீக்கல் இருக்கா, ஓட்டை இருக்கா என்றுபார்க்கப்போய் ஐயர் துரத்த.... நாங்கள் கல்லு முள்ளுக் குத்துவதையும் பொருட்படுத்தாது விழுந்தடித்து ஓடியது ஒரு காலம்.  

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருதடோய்....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் சில கனவுகள்.😍  ரெலிபோன் பில்லும் எக்கச்சக்கம்....:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

34 minutes ago, ராசவன்னியன் said:

மனைவி, துணைவி மாதிரி..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆரம்பகாலங்களில் தமிழ் வானொலிகளில் மட்டுமே தென்னிந்திய பாடல் கலைஞர்களின் குரல்களை கேட்டு ரசித்திருப்போம்.நடிகர்களை திரைப்படங்களில் பார்ப்பதோடு சரி. முதன் முதலாக தென்னிந்திய கலைஞரை  பெரும் சிரமங்கள் மத்தியிலும் இலங்கைக்கு வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தியவர்கள் சுட்டிபுரம் அம்மன் கோவில் பக்தர்கள் என்றால் அது மிகையாகாது.அதன் பின்னரே ஏனைய கோவில்களுக்கும் தென்னிந்திய இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தினார்கள்.

அன்றைய தினம் சுட்டிபுரம் அம்மன் கோவில் பகுதிக்கு மக்கள் சமுத்திரம் போல் திரண்டு வந்திருந்தனர்.கார்,பஸ் என வீதி இருமருங்கிலும் நிறைந்து காணப்பட்டது. துவிச்சக்கரவண்டிகளும் ஏராளம் ஏராளம்.   அது போல் களவுகளும் ஏராளம் ஏராளம்.

சுட்டிபுரம் அம்மன் கோவில் இசைக்கச்சேரிக்கு வந்தது வேறு யாருமல்ல பக்தி பெருமான் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தான். அவர் வந்தவுடன் சுட்டிபுரம் அம்மனை தரிசித்து விட்டு மேடையில் கணீரென்ற குரலில் முதல் பாடிய பாடல் இதுதான். அந்த பாடலை இன்று கேட்டாலும் அந்த பக்திமாலைப் பொழுதுதான் ஞாபகத்திற்கு வரும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு.

எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும்.

பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

....ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

அப்படியும் சொல்லலாம்..

டெண்ட் கொட்டாய் - பெரிய வீடு

டூரிங் டாக்கீஸ் - சின்ன வீடு

55 minutes ago, Nathamuni said:

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

அவர்தான் தமிழ் வியாக்கியானங்களுக்கு முன்னோடி..!

மனைவி, துணைவி, இணைவி..கிழவி.. etc.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 19:27, Maruthankerny said:

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 

இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

 

 

On 7/4/2020 at 20:26, Eppothum Thamizhan said:

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

ஏன் நீங்கள் பாடலை கேட்கவில்லையோ ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.