Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

படத்தை திரையிடும் தொழில்நுட்பம் ஒரே மாதிரியானதாக தெரிகிறதே 
அல்லது ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

1950 முதல் 70 களில் வரை திரையில் காண்பிக்கும் ஒளிப்பட கருவிகளில் "கார்பன் ஆர்க் (Carbon Arc)" முறையில் மின்சாரம் மூலமாக குச்சிகளை எரித்து அதில் வெளிப்படும் வெள்ளை ஒளியில் ஃபிலிம் சுருளை ஓடவிட்டு படம் காண்பித்தார்கள்.

 

7eIaiedj0jyWScpgqDLk6VYuOXUQ7pDl92L3X0XlJxaI55L8ddQGLEuDfhTwCRLQU9iBa5iPPwVmQ6HbYqxdic3NdrtHH0XmMP1SBMxF  029_USA_Endres_Carbon%2520arc_profile.jpg

 

s-l400.jpg       VictorianCollections-large.jpg

 

இப்பொழுது லேசர் ஒளியில் 4K துல்லியத்தில் திரையில் காண்பிக்கும் டிஜிட்டல் ஒளிப்பட கருவிகள் சாதாரணமாக கிடைக்கின்றன.

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

அனுபவத்தை, தெரிந்தவற்றை பகிர்ந்தேன்..! உங்கள் கருத்திற்கு நன்றி.

சாராய போத்தலா..? கு.சா. அவர்களின் கூட்டாளியா..? (புதியவரா..? முதியவரா..?) :shocked::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

 

 

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்ரா பௌர்ணமி என்றால் கூடுதலான எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
ஊரில் சித்திரை பௌர்ணமி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் விசேடமாக சிவாஜிகணேசன் நடித்த சித்ரா பௌர்ணமி திரைப்படம் போடுவார்கள். அதை எத்தனை தடவை பார்த்தாலும்   திருப்பியும் அதே தினத்தில் அதே திரைப்படத்தை பார்ப்பதில் பலருக்கு அலாதி பிரியம். நானும் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.
இன்று சித்திரை பூரணை. இன்றைய நாளில் அந்த ஞாபகங்களும்......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஊரில் இருக்கும் போது சர்வசாரணமாகவே வாழ்ந்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மத வெறுப்புகள் ஏதுமின்றி அவரவர் மதம் சார்ந்து வாழ்ந்திருப்பார்கள். தமது மத பண்டிகைகளை வரவேற்று சந்தோசத்துடன் கொண்டாடியிருப்பார்கள். நான் ஊரில் இருந்த வரைக்கும் மத துவேசிகளை நான் காணவேயில்லை. 
அதே போல் இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 
இப்போதும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்கும் போது அந்த முஸ்லீம் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்வில் சீட்டு பிடிப்பவர்களையும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் பார்க்கும் போதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல், பணத்தோட்டம் படத்தில் வரும்,

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்

வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்

மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்

மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை குறிப்பாக யாழ் கோட்டை சண்டை காலத்தில் அசிட் விட்ட கார் பற்றரியில் (மின்சாரத்துக்கு முழு தடை சொறீலங்கா அரசால் போடப்பட்டிருந்ததோடு.. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி அதனை இயக்க முடியாமலும் ஆக்கியது. தனது சொந்த அரச திணைக்களம் மீதே அது தமிழர்கள் பகுதியில் இருக்கிறது என்பதற்காக குண்டு வீசியது இன்று சில தமிழர்கள் புகழ்ந்து தள்ளும் சிங்கள அரசு அன்று.

Sony Radio Twin Cassette Player CFS-W404L Boombox Retro ...  

இப்படி ஒரு பிளேயரில் போட்டு கேட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று வானில் பெரும் இரைச்சலோடு தாழப் பதிந்து வந்து எங்கள் வீட்டுக்கு அருகில் இரண்டு குண்டுகள் வீசியது சியாமா செட்டி விமானங்கள். SF260 Libya (cropped).jpg

அதில் ஒன்று வெறும் வளவென்றிலும்.. இன்னொன்று ஒரு வீட்டின் பின்புறமும் வீழ்ந்து வெடித்தன. 

இப்போதும்.. இந்தப் பாடலைக் கேட்கும்... போது அந்த விமான இரைச்சலும்.. அது தொடர்ந்து தந்த வெடிப்பும் அதிர்வுகளும்.. மனதோடு இயங்கக் காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் நவரத்திரி பூசைக்கு நாங்கள் சிறு வயதில் நாடகம் எழுதி நடிப்பது வழக்கம். ஏதிர்பார்த்தேன் இளங்கிளியை என்னும் பாடலுக்கு நானும் எனது நண்பனும் (பொண் வேடம்) ஆட வேண்டும்.  ஒரு கட்டத்தில் அவனை தூக்கி ஆட வேண்டும், அவனோ என்னைவிட பாரம் கூட, இந்த பாட்டை கேட்கும் பொழுது , ஊர் கூடி சந்தோஷமாக கொண்டாடிய தினங்கள் தான் ஞாபகத்திற்கு வரும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


என்னதான் நடக்கும் நடக்கடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே........


யாரை நம்பி நான் பிறேந்தேன் போங்கடா போங்க.....

இந்த இருபாடல்களை கேட்கும் பொழுது என் அப்பாவின் நினைவுகள் தான் வரும், நானும் இப்படால்களை அடிக்கடி வாயில் முணுமுணுப்பதுட்டு.

அப்பா தோட்ட வேலைகள் முடித்தபின் கள்ளடித்துவிட்டுதான் வருவார், அம்மா என்னைதான் அப்பாவுடன் வயல் கிணத்திற்கு அனுப்புவா குளிக்க, நான் கிணத்தில் அள்ளி கொடுக்க அப்பா வாங்கி குளிப்பார், அப்ப இந்த இருப்பாடல்களும் தான் அவர் அதிகம் பாடுவதுண்டு.. அப்பா இல்லாவிட்டலும் இப்பவும் அந்த நினைவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தாத்தா /
ந‌ல்ல‌ திரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thangame.jpg

பாலகனாக இருக்கும்பொழுது என் ஐயா, திரையில் எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நகைச்சுவை காட்சி.

இந்த பாடலை பார்த்தவுடன், கிராமத்தில் குயவர்கள் இருக்கும் தெருப் பக்கம் செல்லும்போதெல்லாம் குறுகுறுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தெருவில் அடுக்கி வைத்திருக்கும் சுட்ட மண்கலங்களை தட்டிப் பார்த்து ஒலியைக் கேட்பதுண்டு.. அதில் ஒரு சந்தோசம்..!

வீட்டுக் குயவர், உள்ளிருந்து "யார்ரா அது..?" என்ற அதட்டலைக் கேட்டவுடன் ஒரே ஓட்டம் தான்..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நினைக்க....அதெல்லாம் ஒரு கனாக்காலம்......

60 Years of Kamalism: 10 signature Kamal Haasan films that deserved more  love from the audience at t- Cinema express

சிறு வயதுக்காலம் ஜில்லென்ற காலம்.....☃️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு காலத்திலை தென்னிந்திய திரைப்பட பாட்டுக்களும் கிந்தி பாடல்களும் இலங்கை வானொலியை அடிமையாக்கி வைத்திருந்த காலத்தில் பொப்பிசை பாடல்கள் எல்லோரையும் மிரள வைத்தது.
எல்லா தேனீர்க்கடைகளிலும் எல்லா கொண்டாட்டங்களிலும் பொப்பிசை பாடல்கள் அதிகாரம் பண்ணியது.துரையப்பா விளையாட்டரங்கில் பொப்பிசை நிகழ்ச்சி பிரமாண்டம்மாக நடந்தது. ஏ.ஈ மனோகரன்,அமுதன் அண்ணாமலை  உட்பட பல பிரபல்யங்கள் பங்குபற்றினர்.அதை இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்ச்சி......

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 11:29, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்.. சிரமத்தைபாராது கேட்டவுடன் நேரமெடுத்து அருமையாக படங்களுடன் எழுதி விளங்கப்படுத்தி உள்ளீர்கள்.. இப்ப இந்த மரமண்டைக்கு தெளிவாகபுரிந்துவிட்டது..

பாடசாலையில் படிக்கும்போது  வாத்திமார் இப்படி சொல்லிதந்திருந்தால் நான் இப்ப இப்படி சாராயப்போத்தலுடன் இருந்திருக்கமாட்டன்..🤦🏻‍♂️

ஓய் மரமண்டை ஓணாண்டி, 😉

சும்மா போறதில்லை. புலவர்களுக்கு சந்தோசம் வந்தால் கவிவரிகள் வரவேணுமே.

டூரிங் டாக்கீஸ் பத்தியோ, அருமையான விளக்கம் தந்த நம்ம வன்னியர் பத்தி இரண்டு வரி கவிதைல சொல்லக்கூடாதா? (பிஸி எண்டால் சுவியர் உதவி கேளுங்கோ) 😀

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

...

சரி டெண்டு கொட்டாய் எண்டால் என்ன வன்னியர்? 

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

உடுப்புமாத்திற அறை யன்னலில் நீக்கல் இருக்கா, ஓட்டை இருக்கா என்றுபார்க்கப்போய் ஐயர் துரத்த.... நாங்கள் கல்லு முள்ளுக் குத்துவதையும் பொருட்படுத்தாது விழுந்தடித்து ஓடியது ஒரு காலம்.  

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருதடோய்....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் சில கனவுகள்.😍  ரெலிபோன் பில்லும் எக்கச்சக்கம்....:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

டூரிங் டாக்கீஸ், டெண்ட் கொட்டாய் ரெண்டுமே ஒன்னுதான் திரு.நாதமுனி.

மனைவி, துணைவி மாதிரி..! :)

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

34 minutes ago, ராசவன்னியன் said:

மனைவி, துணைவி மாதிரி..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆரம்பகாலங்களில் தமிழ் வானொலிகளில் மட்டுமே தென்னிந்திய பாடல் கலைஞர்களின் குரல்களை கேட்டு ரசித்திருப்போம்.நடிகர்களை திரைப்படங்களில் பார்ப்பதோடு சரி. முதன் முதலாக தென்னிந்திய கலைஞரை  பெரும் சிரமங்கள் மத்தியிலும் இலங்கைக்கு வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தியவர்கள் சுட்டிபுரம் அம்மன் கோவில் பக்தர்கள் என்றால் அது மிகையாகாது.அதன் பின்னரே ஏனைய கோவில்களுக்கும் தென்னிந்திய இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைக்கச்சேரி நடத்தினார்கள்.

அன்றைய தினம் சுட்டிபுரம் அம்மன் கோவில் பகுதிக்கு மக்கள் சமுத்திரம் போல் திரண்டு வந்திருந்தனர்.கார்,பஸ் என வீதி இருமருங்கிலும் நிறைந்து காணப்பட்டது. துவிச்சக்கரவண்டிகளும் ஏராளம் ஏராளம்.   அது போல் களவுகளும் ஏராளம் ஏராளம்.

சுட்டிபுரம் அம்மன் கோவில் இசைக்கச்சேரிக்கு வந்தது வேறு யாருமல்ல பக்தி பெருமான் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தான். அவர் வந்தவுடன் சுட்டிபுரம் அம்மனை தரிசித்து விட்டு மேடையில் கணீரென்ற குரலில் முதல் பாடிய பாடல் இதுதான். அந்த பாடலை இன்று கேட்டாலும் அந்த பக்திமாலைப் பொழுதுதான் ஞாபகத்திற்கு வரும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு.

எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும்.

பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

....ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️

இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பரிமளம் அம்மணி 'நியூஸ்' ஒன்னும் இல்லையா..?

அதையாவது விளக்கமா சொல்லித் தொலையுங்கோ...!

சுத்த போரடிக்கிறீங்களே..? :)

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

ஏனுங்க மொதலாளி சின்னவீடு பெரியவீடு எண்டும்  சொல்லலாம் இல்லீங்களா?

அப்படியும் சொல்லலாம்..

டெண்ட் கொட்டாய் - பெரிய வீடு

டூரிங் டாக்கீஸ் - சின்ன வீடு

55 minutes ago, Nathamuni said:

எல்லா விளக்கத்துக்கும், கருணாநிதி தானா?😂

அவர்தான் தமிழ் வியாக்கியானங்களுக்கு முன்னோடி..!

மனைவி, துணைவி, இணைவி..கிழவி.. etc.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 19:27, Maruthankerny said:

அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்,
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்,

இப்படியே உருண்டு ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் ...
ஒரு நயினாதீவு ஏஜெண்சி காரனை நம்பி கடன்பட்டு  கட்டிய காசையும் இழந்து 
மொழி உணவு உடை இன்றி மொஸ்கோவில் ஒரு ஒன்றரை வருடம் அகப்பட்டு கொண்டேன் 
அப்போது வயது பதின்பம் என்பதால் ஓடும் காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பெரிதாக 
மனம் அலட்டிக்கொள்வதில்லை ... இப்போதும் அப்படிதான் எதையாவது இழக்க நேர்ந்தால் அதை பற்றி 
பெரிதாக அலட்டி மனம் சுருள்வதில்லை இது ஒரு பலவீனமும் கூட இப்படியான இறுமாப்பும் பெரிதாக கூடாதுதான் ஆனால் தொட்டில் சுபாவமாக இது தொடர்கிறது. .......
எமக்கு வீடு தந்திருந்தவரின் மகள் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார் ... ஒரு நாள் அவர் ஒரு இந்தியா படம்  ஓடுகிறது என்றும் தனக்கு இந்தியா படம் விருப்பம் என்றும் என்னை தன்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றார் .......... தியேட்ட்ர் சென்று போஸ்ட்ரை பார்த்தல் நம்ம கமல் நிற்கிறார் ....... எதோ சொந்தக்காரரை பார்த்ததுபோல மகிழ்ச்சி ....படம் தொடங்கும் வரை இப்படித்தான் படத்தின் கதையும் இருக்கும் என்று தெரியவில்லை........ எனக்கும் அந்த ரசிய பெண்ணுக்கும் இருந்த மொழி பிரச்னையை பாலசந்தர் படத்தில்  தத்துரூபமாக  காட்சி ஆக்கி இருப்பார் ....... எங்கள் இருவருக்குமே எதோ எம்மை திரையில் பார்ப்பது போல   இருந்தது...... 
வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 

இந்த பாட்டை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் 
இந்த பாடல் கேட்க்கும்போதெல்லாம்  மொஸ்கோவின் வீதிகளும் கடைகளும் மெட்ரோ ரயில் பயணங்களும் 
நினைவில் வந்து வந்து போகும் 

 

 

On 7/4/2020 at 20:26, Eppothum Thamizhan said:

எனக்கும்   மனம் விட்டு அழவேண்டும்  என்று தோன்றினால் இந்தப்பாடலைத்தான் கேட்பேன், கண்ணீர் ஆறாக ஓடும்.  அற்புதமான பாடல் வரிகளும் சீர்காழியின் சிம்மக்குரலும் என்றும் திகட்டாது!!

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

ஏன் நீங்கள் பாடலை கேட்கவில்லையோ ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.